<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Iranian Navy &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/iranian-navy/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 14 Mar 2026 15:56:45 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Iranian Navy &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஈரானிய போர்க்கப்பல் மீதான தாக்குதல்: &#8220;தகுந்த பதில் வழங்கப்படும்&#8221; &#8211; ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/iran-army-chief-vows-retaliation-over-iris-dena-warship-attack/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Mar 2026 15:56:45 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Amir Hatami]]></category>
		<category><![CDATA[Indian Ocean incident]]></category>
		<category><![CDATA[Iranian Navy]]></category>
		<category><![CDATA[IRIS Dena attack]]></category>
		<category><![CDATA[Maritime Security]]></category>
		<category><![CDATA[US-Iran conflict]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=214496</guid>

					<description><![CDATA[இந்தியப் பெருங்கடலில் வைத்து ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான நவீன போர்க்கப்பலான &#8216;ஐரிஸ் டேனா&#8217; (IRIS Dena) மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, &#8220;தகுந்த பதில் வழங்கப்படும்&#8221; என ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 4 ஆம் திகதி, இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு ஈரான் திரும்பிக்கொண்டிருந்த போதே, இந்தத் தாக்குதல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்டது. நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில், சர்வதேசக் கடல் பகுதியில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p data-path-to-node="1">இந்தியப் பெருங்கடலில் வைத்து ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான நவீன போர்க்கப்பலான &#8216;ஐரிஸ் டேனா&#8217; (IRIS Dena) மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, &#8220;தகுந்த பதில் வழங்கப்படும்&#8221; என ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 4 ஆம் திகதி, இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு ஈரான் திரும்பிக்கொண்டிருந்த போதே, இந்தத் தாக்குதல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்டது. நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில், சர்வதேசக் கடல் பகுதியில் அமைதிப் பயணத்தில் இருந்த தங்கள் கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.</p>
<p data-path-to-node="2">இந்தத் துரதிர்ஷ்டவசமான தாக்குதலில் சுமார் 87 ஈரானிய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட வீரர்களின் அர்ப்பணிப்பும், &#8216;ஐரிஸ் டேனா&#8217; கப்பலின் பெயரும் ஈரானியக் கடற்படை வரலாற்றில் தைரியத்தின் அடையாளமாகத் திகழும் என்று குறிப்பிட்ட தளபதி ஹதாமி, இந்தச் செயலுக்கு ஈரானின் கடற்படை நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார். தங்களின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், கடற்படை வலிமையை மேலும் மேம்படுத்துவதிலும் ஈரான் உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p data-path-to-node="3">இந்தச் சம்பவம் சர்வதேச ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் காலி கடற்பரப்பிற்கு அருகே இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, கடலில் இருந்து மீட்கப்பட்ட உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை ஈரானுக்குக் கொண்டு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. அதேவேளையில், அமெரிக்கா இந்தத் தாக்குதல் குறித்துத் தனது அதிகாரபூர்வமான விளக்கத்தை அளித்துள்ளது. ஈரானியக் கப்பல்கள் அப்பகுதியில் இருந்த சூழல் குறித்து அமெரிக்கத் தரப்பு கருத்துகளைத் தெரிவித்திருந்தாலும், இந்தத் தாக்குதல் மத்திய கிழக்குத் தாண்டிய போரின் தீவிரத்தை இந்தியப் பெருங்கடல் வரை கொண்டு வந்துள்ளது.</p>
<p data-path-to-node="4">இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தனது இராணுவத் தரப்பில் இருந்து உரிய பதிலடியைக் கொடுக்கும் எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இரு தரப்புக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தத் தாக்குதல் நிகழ்வு பிராந்தியப் பாதுகாப்பில் புதிய கவலைகளை உருவாக்கியுள்ளது. ஈரான் இராணுவத் தலைமையகம், தனது இறையாண்மைக்கும் வீரர்களுக்கும் இழைக்கப்பட்ட இந்த அநீதிக்குத் தக்க பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.</p>
<p data-path-to-node="5">
<p data-path-to-node="6">
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எண்ணைக்கப்பலை சிறைப்பிடித்தது ஈரான்!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/the-iranian-navy-captured-the-oil-ship/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/the-iranian-navy-captured-the-oil-ship/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Apr 2023 11:53:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iranian Navy]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=74900</guid>

					<description><![CDATA[அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணைக்கப்பல் குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நகருக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் 24 இந்திய சிப்பந்திகள் உள்ளிட்ட ஊழியர்கள் இருந்தனர். அந்த கப்பல் ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஈரான் கடற்படை வீரர்கள் அமெரிக்க எண்ணைக்கப்பலை சிறைப்பி டித்தனர். ஈரான் கடற்பகுதிக்குள் கப்பல் நுழைந்ததாக கூறி அந்நாடு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்கா [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணைக்கப்பல் குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நகருக்கு சென்று கொண்டு இருந்தது.</p>
<p>இந்த கப்பலில் 24 இந்திய சிப்பந்திகள் உள்ளிட்ட ஊழியர்கள் இருந்தனர். அந்த கப்பல் ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.</p>
<p>அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஈரான் கடற்படை வீரர்கள் அமெரிக்க எண்ணைக்கப்பலை சிறைப்பி டித்தனர். ஈரான் கடற்பகுதிக்குள் கப்பல் நுழைந்ததாக கூறி அந்நாடு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.</p>
<p>இதற்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. தங்கள் நாட்டு கப்பல் சர்வதேச எல்லையில் பயணித்த போது ஈரான் சிறை பிடித்து உள்ளதாகவும், இது சர்வதேச சட்டம், மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலை தன்மைக்கு எதிரானது,இதனால் உடனடியாக எண்ணை கப்பலை ஈரான் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளது.</p>
<p>முதலில் ஈரான் துணை ராணுவம் தான் கப்பலை கைப்பற்றியதாக தகவல் வெளியானது. பின்னர் தான் ஈரான் இந்த செயலில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது. இந்த நிலையில் பெர்சியன் கடற்பகுதியில் ஈரான் நாட்டு கப்பலுடன் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று மோதியதாகவும், இந்த சம்பவத்தில் ஈரான் சிப்பந்திகள் காயம் அடைந்ததாகவும், பலர் மாயமாகி விட்டதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.</p>
<p>ஆனால் ஈரான் நாட்டு கப்பல் மீது எந்த கப்பல் மோதியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஈரான் கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வணிகத்துக்காக பயன்படுத்தப்பட்டு வரும் 5 கப்பல்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>ஏற்கனவே அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கும் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் ஈரான் கடற்படை அமெரிக்க எண்ணைக்கப்பலை சிறை பிடித்துள்ளது மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.<br />
<b>#world</b></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/the-iranian-navy-captured-the-oil-ship/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
