<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Interview &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/interview/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 12 Apr 2022 10:25:04 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Interview &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>Beast &#8211; தளபதி தரிசனம் நாளை! &#8211; கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்</title>
		<link>https://tamilnaadi.com/entertainment/beast-from-tomorrow/</link>
					<comments>https://tamilnaadi.com/entertainment/beast-from-tomorrow/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Apr 2022 10:25:04 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு]]></category>
		<category><![CDATA[aniruth]]></category>
		<category><![CDATA[beast song]]></category>
		<category><![CDATA[cinema]]></category>
		<category><![CDATA[Interview]]></category>
		<category><![CDATA[nelson]]></category>
		<category><![CDATA[Nelson Dilipkumar]]></category>
		<category><![CDATA[pooja hegde]]></category>
		<category><![CDATA[royal car ride]]></category>
		<category><![CDATA[stalin]]></category>
		<category><![CDATA[sun pictures]]></category>
		<category><![CDATA[sun tv]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[thalapathy]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=45543</guid>

					<description><![CDATA[Beast &#8211; பைனல் ஆ அந்த தினம் இன்னும் ஒரு நாள்ல வரப்போது மக்களே! யெஸ்! எல்லாரோட எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கும் தளபதியோட பீஸ்ட் திரைப்படம் இன்னும் ஒரே நாள்ல திரைக்கு வர இருக்கும் சூழ்நிலையில அந்த படம் மற்றும் நம்ம தளபதி தொடர்பான பல விசயங்கள பத்திதான் நாம இந்த தொகுப்பில பாக்கப்போறோம். பீஸ்ட் திரைப்படத்துக்கான விதம் விதமான ப்ரோமோஷன் நடவடிக்கைகள் எல்லாமே போய்ட்டிருக்கு. அதாவது சன் பிக்சர்ஸ் ப்ரொடக்சன் மூலமா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Beast &#8211; பைனல் ஆ அந்த தினம் இன்னும் ஒரு நாள்ல வரப்போது மக்களே!</p>
<p>யெஸ்! எல்லாரோட எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கும் தளபதியோட பீஸ்ட் திரைப்படம் இன்னும் ஒரே நாள்ல திரைக்கு வர இருக்கும் சூழ்நிலையில அந்த படம் மற்றும் நம்ம தளபதி தொடர்பான பல விசயங்கள பத்திதான் நாம இந்த தொகுப்பில பாக்கப்போறோம்.</p>
<p>பீஸ்ட் திரைப்படத்துக்கான விதம் விதமான ப்ரோமோஷன் நடவடிக்கைகள் எல்லாமே போய்ட்டிருக்கு. அதாவது சன் பிக்சர்ஸ் ப்ரொடக்சன் மூலமா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி அனிருத் இசையமைக்குற இந்த படத்துக்கான ட்ரைலர் அண்மையில் வெளிவந்து பலத்த வரவேற்பை பெற்றிருக்கு.<br />
அதே நேரம் பல ப்ரோமோ வீடியோக்களும் தொடர்ச்சியா ரிலீஸ் ஆகிட்டிருக்கு.</p>
<p>இந்த வரிசையில யாருமே எதிர்பார்க்காத ஒரு ஏற்பாட்டை செய்து அனைவரையும் அசத்தியிருக்காங்க படக்குழு. ஆமாம் மக்களே இந்த வருஷம் வழக்கமா விஜய் படத்துக்கு நடாத்தப்படுற ஓடியோ லோன்ச் நடத்த முடியாம போயிருக்கு என்றும் அதற்க்கு காரணங்கள் சொல்லப்பட்டு அந்தக் காரணங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதும் உங்கள் எல்லாருக்குமே தெரியும் .</p>
<p>ஆனாலும் ஒரு தளபதி படத்துக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவான எதிர்பார்ப்பு அந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால் தளபதி ரசிகர்களை சந்திக்கும் ஒரு முக்கியமான தருணத்துக்கும் இருக்கும். இன்னும் சொல்லப்போனா இப்படியான ஒரு தருணத்துக்காக ரசிகர்கள் வருஷம் முழுக்கவே காத்திருப்பார்கள் என்பதுதான் உண்மை.</p>
<p>இப்படியான சந்தர்ப்பத்தில, இசை வெளியீட்டு விழா நடத்தப்பட முடியாமல் போன ஒரு ஏமாற்றத்தை வேறு ஒரு வழி மூலமா ஈடுகட்டியிருக்காங்க படக்குழு. அது என்ன என்றால், ஏறக்குறைய 10 வருசத்துக்கு பிறகு தளபதி விஜையுடைய நேர்காணல் ஒன்றை ஏற்படு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்காங்க.<br />
வழக்கமாவே தளபதியோட பொதுத்தளப் பேச்சுக்கள் மக்களுக்கு உற்ச்சாகம் வழங்கக்கூடிய ஒரு விஷயமா இருக்கும். அதுக்கு சற்றுமே குறைவில்லாம இந்த நேர்காணலும் அமைஞ்சிருக்குற அதேநேரம், காமடிக்கும், கலாய்க்கும் அண்மைக்காலமா பெயர்போன படத்தோட இயக்குனர் நெல்சன் இந்த நேர்காணலை செய்திருக்கிறார்கள் என்பது இந்த நேர்காணலை மேலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கு.</p>
<p>சன் குழுமத்தோட தலைவர் தயாரிப்பாளர் கலாநிதிமாறனை, தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் அவரது அலுவலகத்தில் வைத்து சந்திப்பதுடன் இந்த நேர்காணல் ஆரம்பிச்சு மூவருக்கும் இடையிலான அளவலாவல் இசை பின்னணியுடன் கோர்த்து வழங்கப்படுவதை தொடர்ந்து நெல்சன் மற்றும் தளபதி ஆகியோர் நேர்காணல் களத்துக்கு செல்கின்றனர்.</p>
<p>வழக்கமான நேர்காணல் நடைமுறைகளில் இருந்து சற்றே விலகி கொஞ்சமாக தூவப்பட்ட எள்ளல் பாணியில் ஆரம்பிக்கும் இந்த நேர்காணலில் பல்வேறு வகையான விடயங்கள் குறித்த கேள்விகள் மற்றும் மனம் திறந்த பதில்கள் என்பவற்றை ரசிகர்களுக்கு கொண்டுசேர்த்திருக்கிறது.</p>
<p>குறிப்பா, விஜயினுடைய நடிப்பு கதை தேர்வுகள், அவருடைய கடவுள்நம்பிக்கை, உணவு முறை மற்றும் சுற்றுலா திட்டங்கள் என விஜயினுடைய தனிப்பட்ட வட்டத்திற்கு வெளியில் இருக்கும் அனைவருமே அறிந்துகொள்ள ஆசைப்படும் விடயங்களை நேர்காணலின் ஆரம்பத்தில் தொட்டுப் போகும் இயக்குனர் நெல்சன், அதற்கான பதில்களை விஜயின் முகம் கோணாத வகையில் பெற்றுக்கொண்டிருப்பது கலகலப்பாக அமைந்திருக்கிறது.</p>
<p>நேர்காணல்கள் மற்றும் பொது மேடைகளில் அரசியல் குறித்த யாரேனும் நபர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு வெகுவாகவே இயல்புடையவர் விஜய். தானாக முன்வந்து சில அரசியல் கருத்துக்களை இசை வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் முன்வைக்கும் விஜய் அது குறித்த கேள்விகளை வெளிப்படையாகவே மறுத்துவிடுவது இயல்பு.</p>
<p>ஆனால் விஜய் தளபதி யில் இருந்து தலைவன் எனும் அந்தஸ்துக்கு செல்கின்றமை. கடந்த தமிழக உள்ளுராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் விஜயின் பெயர் மற்றும் புகைப்படங்கள் ஆதரவாளர்களினால் பயன்படுத்தப்பட்டமை போன்ற விடயங்களுக்கு லாவகமாகவே பதிலை பெற்றுக்கொண்டிருந்தார் நெல்சன். அதுமட்டுமல்லாமல் விஜய் மனமுவந்து அதற்கான பத்திகளை வழங்க முன்வந்திருந்தமை சிறப்பு.</p>
<p>இவற்றோடு சேர்த்து, விஜயின் மகனின் திரை வருகை, தளபதி 66 க்கான புதிய அப்டேட் என பல முடிச்சுக்களை அவிழ்க்க காலம் கொடுத்திருக்கும் இந்த நேர்காணலில் தான் படக்குழுவின் குறிப்பிட்ட சில நபர்களோடு சேர்த்து காரில் உலா வந்த காணொளியினை ரசிகர்களுக்கு ரிலீஸ் பண்ணுங்கள் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள் என விஜய் கூறியமை மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என்றே கூற வேண்டும்.</p>
<p>இவ்வாறு 10 வருடங்களுக்கு பிறகு தளபதியின் நேர்காணலை பார்க்கும் வாய்ப்பை பெற்ற ரசிகர்கள் அது குறித்து பேச்சுக்கள் ஓயும் முன்னரே பீஸ்ட் திரைப்படத்தை திரையில் காணும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள். அப்படிப் பார்த்தால் தொடர்ச்சியாக தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மிகுந்த நாட்களே. பீஸ்ட் வெற்றிபெற நாமும் வாழ்த்துகிறோம்.</p>
<p>#Beast #thalapathy</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/entertainment/beast-from-tomorrow/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிரபாகரனை விடுவிக்குமாறு ‘உயர்மட்ட’ அழுத்தம்! &#8211;  பிரபாகரனை கைதுசெய்த பொலிஸ் அதிகாரி &#8216;பகீர்&#8217; தகவல்கள்!</title>
		<link>https://tamilnaadi.com/articles/socked-information-released-by-the-police-officer-who-first-arrested-prabhakaran/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/socked-information-released-by-the-police-officer-who-first-arrested-prabhakaran/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Dec 2021 01:00:17 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[Indika Ramanayake]]></category>
		<category><![CDATA[Interview]]></category>
		<category><![CDATA[lankadeepa]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Pirabhaaran]]></category>
		<category><![CDATA[Piyaratne Weerasena]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=28773</guid>

					<description><![CDATA[&#160; &#160; &#160; நன்றி &#8211; ‘லங்காதீப’ வார இதழ் நேர்காணல் &#8211; இந்திகா ராமநாயக்க தமிழாக்கம் &#8211; ஆர்.சனத் &#160; &#160; &#160; &#160; “ பிரபாகரனை கைது செய்து, நான் சிறையில் அடைத்தேன். மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து அவரை கொண்டுசெல்ல முற்பட்டனர். மறுபுறத்தில் பிரபாகரனை விடுவிக்குமாறு அரச தரப்பில் இருந்தும் கடும் அழுத்தம். எனினும், நான் அவரை விடுவிக்கவில்லை. இறுதியில் அப்போது வட மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p><img fetchpriority="high" decoding="async" class="size-medium wp-image-28775 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-13-at-1.37.59-AM-288x300.jpeg" alt="WhatsApp Image 2021 12 13 at 1.37.59 AM" width="288" height="300" title="பிரபாகரனை விடுவிக்குமாறு ‘உயர்மட்ட’ அழுத்தம்! - பிரபாகரனை கைதுசெய்த பொலிஸ் அதிகாரி &#039;பகீர்&#039; தகவல்கள்! 2" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-13-at-1.37.59-AM-288x300.jpeg 288w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-13-at-1.37.59-AM.jpeg 358w" sizes="(max-width: 288px) 100vw, 288px" /></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>நன்றி &#8211; ‘லங்காதீப’ வார இதழ்<br />
நேர்காணல் &#8211; இந்திகா ராமநாயக்க<br />
தமிழாக்கம் &#8211; ஆர்.சனத்</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>“ பிரபாகரனை கைது செய்து, நான் சிறையில் அடைத்தேன். மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து அவரை கொண்டுசெல்ல முற்பட்டனர். மறுபுறத்தில் பிரபாகரனை விடுவிக்குமாறு அரச தரப்பில் இருந்தும் கடும் அழுத்தம். எனினும், நான் அவரை விடுவிக்கவில்லை. இறுதியில் அப்போது வட மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கே வந்து பிரபாகரனை அழைத்துச்சென்றுவிட்டார். அதன்பிறகே அவர் தலைமையில் புலிகள் அமைப்பு தலைதூக்கியது.”</strong></p>
<p>இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனை முதன் முதலில் கைது செய்த, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஓய்வுநிலை) பியரத்ன வீரசேன தெரிவித்துள்ளார்.</p>
<p>1957 ஆம் ஆண்டில் உப பொலிஸ் பரிசோதகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 40 வருடங்கள் அத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். குறிப்பாக 1980 முதல் 85 வரை அவர் கிளிநொச்சி பொலிஸ் தலைமையகத்தில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.</p>
<p>வவுனியாவிலிருந்து கிளிநொச்சிவரை பிரபாகரன் தன்னுடன் காரில் பயணித்துள்ளார் எனக்கூறும் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, பிரபாகரன் நன்றாகவே சிங்களம் கதைப்பாரென்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.</p>
<p>பிரபாகரனின் செயற்பாடுகள் தொடர்பில் அப்போதைய அரச மேல் மட்டத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தும் காத்திரமான நடவடிக்கை இடம்பெறவில்லையென சுட்டிக்காட்டும் அவர், முக்கியமான சில விடயங்களையும் அம்பலப்படுத்தியுள்ளார்.</p>
<p>&#8216;லங்காதீப&#8217; வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியுள்ள விடயங்களில் முக்கியமான அம்சங்கள் வருமாறு,</p>
<p><em><strong>புலிகள் அமைப்பின் முதல் கொள்ளை</strong></em></p>
<p>&#8221; அன்று LTTE அமைப்பு இருக்கவில்லை. தமிழ்ப் பயங்கரவாதிகளாகவே அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். அவ்வமைப்பிடம் நிதி பலம் இருக்கவில்லை. இதனால் அமைப்பை கட்டியழுப்புதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அவர்கள் ஒவ்வொரு இடங்களில்கூடி ஆட்களை திரட்டியதுடன், நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.</p>
<p>அக் காலப்பகுதியில் அவர்களின் குழுவில் நூறு பேர்கூட இருக்கவில்லை. அதேபோல அவர்கள் மக்களை துன்புறுத்தியமை தொடர்பிலோ, குற்றம் இழைத்தனர் என்றோ எந்தவொரு முறைப்பாடும் பதிவாகவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நிதி பலத்தை அதிகரிக்கும் நோக்கில் அவர்கள் முதலாவது கொள்ளையில் ஈடுபட்டனர். இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதி எனக்கு சரியாக நினைவில் இல்லை.</p>
<p>கிளிநொச்சி, துணுக்காய் பகுதியில் அமைந்திருந்த கூட்டுறவு நிலையத்தில் அந்த கொள்ளை இடம்பெற்றது. அது பெரிய நிலையம். நாளாந்தம் அதிக பணம் வரும். மூன்று வாரங்களுக்கு ஒருமுறையே பணத்தை வங்கிக்கு அனுப்புவார்கள். அது தொடர்பில் நன்கு அறிந்து வைத்திருந்து, வேன் செல்லும்போதுதான் கொள்ளை இடம்பெற்றது.</p>
<p>இக் கொள்ளைச் சம்பவம் பேசுபொருளாக மாறியது. பலரும் அது தொடர்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அப்போது பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த அனா செனவிரத்ன, என்னுடன் இது சம்பந்தமாக கதைத்தார். &#8221; இது பாரிய பிரச்சினை. எனவே, இந்த கொள்ளைக் கும்பலை கூடிய விரைவில் கைது செய்ய வேண்டும்.&#8221;- என்றார்.</p>
<p>இதன் பிரகாரம் விசாரணை &#8211; தேடுதல் நடவடிக்கைக்காக மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.</p>
<p>கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளை மையப்படுத்தி இம் மூன்று குழுக்களும் அமைக்கப்பட்டன. அவை எனது ஆலோசனையின் பிரகாரம் செயற்பட்டன.</p>
<p>மூன்று குழுக்களும் கூட்டாக இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் பிரகாரம் இரண்டு வாரங்களுக்குள் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர்வரை எம்மால் கைது செய்யக்கூடியதாக இருந்தது. அவர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் நிதியையும் மீளப் பெறக்கூடியதாக இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்றது. சந்தேக நபர்கள் &#8216;பி&#8217; அறிக்கை ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p>
<p>பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் குறித்த வழக்கு நடவடிக்கைக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியாகவும் நான் செயற்பட்டேன்.</p>
<p><em><strong>பிரபாகரனுடனான முதல் சந்திப்பு</strong></em></p>
<p>இந்த வழக்குக்காக நான் பல தடவைகள் வவுனியா நீதிமன்றத்துக்கு சென்றுள்ளேன். அவ்வாறு செல்லும்போது ஒரு நாள் முதன்முறையாக பிரபாகரனை சந்தித்தேன். அக் காலப்பகுதியில் பிரபாகரன் தொடர்பில் தகவல்கள் இருந்தாலும் அவர் பெருமளவில் பிரபல்யமடைந்திருக்கவில்லை. குற்றம் தொடர்பில் அவருக்கு எதிராக ஒரு முறைப்பாடுகூட கிடைக்கப்பெறவில்லை. இக்கொள்ளை சம்பவத்தை பிரபாகரனே வழி நடத்தினார் என தகவல் பதிவானாலும் அவரை கைதுசெய்யுமளவுக்கு சாட்சி இருக்கவில்லை.</p>
<p>பிரபாரனின் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் அவரை எனக்கு தெரியவில்லை. நீதிமன்ற வளாகத்தில் வைத்துதான் நீதிமன்ற அதிகாரி ஒருவர் அடையாளம் காட்டினார். மரத்தின்கீழ் இளைஞர்கள் சிலருடன் நின்றுகொண்டிருந்தார். வழக்கு விசாரணையை அவதானிக்க வந்திருக்கக்கூடும்.</p>
<p>அப்போது நான் பிரபாகரனின் அருகிலேயே சென்றேன். &#8221; வழக்குடன் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வந்தீர்களா&#8221; என தமிழ் மொழியில் வினவினேன்.</p>
<p>“ இந்த வழக்கில் எமது பொடியன்கள் உள்ளனர். அவர்களை சந்திக்க வந்தோம்.&#8221; &#8211; என பிரபாகரன் சிங்களத்தில் பதிலளித்தார். பிரபாகரனுக்கு நன்றாக சிங்களம் கதைக்க முடியும். அவர் கூறியதை கேட்ட பிறகு மீண்டும் நீதிமன்றம் சென்றேன்.</p>
<p>வழக்கு விசாரணையின் பின்னர், காரில் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் நோக்கி புறப்பட தயாரானேன். நீதிமன்ற நுழைவாயிலில் வைத்து எனக்கு பிரபாகரனை மீண்டும் சந்திக்க கிடைத்தது.</p>
<p>&#8221; நான் கிளிநொச்சி செல்கின்றேன். நீங்களும் போகின்றீர்களா&#8221; என வினவினேன். அவர் ஆம் என்றார். அப்படியானால் காரில் ஏறுமாறு கூறினேன். அவரும் ஏறினார்.</p>
<p>பயணத்தின் நடுவில் விசேடமாக எதுவும் கதைக்கப்படவில்லை. &#8221; எங்கே இருக்கின்றீர்கள் என நான் கேட்க, கிளிநொச்சியில் என பதில் வந்தது. நான் காரை செலுத்தியதால் கதையில் நாட்டம் காட்டவில்லை. பிரபாகரனும் வீணாக கதையளக்கும் நபர் கிடையாது.</p>
<p>மாங்குளம் பகுதியில் வாகனத்தை நிறுத்தி, தேநீர் குடிப்பமா என தமிழில் கேட்டேன், அதற்கு அவரும் தலையாட்ட, இருவருக்கும் தேநீர் &#8216;ஓடர்&#8217; செய்தேன்.</p>
<p>அப்பகுதியில் இராணுவ முகாமொன்று இருந்தது. அதன் பிரதானியாக கொப்பேகடுவ செயற்பட்டார். அவரை எனக்கு நன்கு தெரியும். இருவருக்குமிடையில் நல்லுறவு காணப்பட்டது. அவரை சந்தித்து, பிரபாகரன் என்னுடன்தான் இருக்கிறார், தேநீர் அருந்துகிறார் எனக் குறிப்பிட்டேன்.</p>
<p>&#8216;அவருக்கு எதையும் செய்துவிட வேண்டாம்&#8217; என அவர் கூறினார். பிரபாகரன் தொடர்பில் சந்தேகம் இருந்ததால் நான் எதையாவது செய்துவிடுவேன் என அவர் நினைத்திருக்கலாம்.</p>
<p>&#8220;சேர் நான் ஒன்றும் செய்யமாட்டேன். உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே அது பற்றி அறிவித்தேன்.&#8221; &#8211; என அவருக்கு பதிலளித்தேன்.</p>
<p>அப்போது பிரபாகரனுக்கு இந்தியாவுடன் தொடர்பு இருந்தது. இராணுவ புலனாய்வு பிரிவு இதை கண்டறிந்திருந்தது.</p>
<p>தேநீர் அருந்திவிட்டு கிளிநொச்சி நோக்கி புறப்பட்டோம். கிளிநொச்சி சந்தியில் பிரபாகரன் இறங்கினார். நான் பொலிஸ் நிலையம் நோக்கி சென்றேன்.</p>
<p><em><strong>இசை நிகழ்ச்சிமூலம் நிதி திரட்டல்</strong></em></p>
<p>இந்த சம்பவம் இடம்பெற்று சில மாதங்களுக்கு பிறகு அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக, தென்னிந்தியாவிலிருந்து மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பாடகர்களை அழைத்துவந்து இசை நிகழ்ச்சி நடத்தினர். அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.</p>
<p>இசைக்குழுவில் 20 பேர்வரை இருந்தனர். யாழிலுள்ள ஹோட்டலொன்றிலேயே அவர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் அங்கிருப்பது தெரியவந்த பிறகு நான் ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு பிரபாகரனை கண்டேன். கதைப்பதற்கு செல்லவில்லை. அவரும் வரவில்லை. அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அறிவதே எனது தேவையாக இருந்தது.</p>
<p>கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மைதானத்தில் இசைநிகழ்ச்சியை நடத்தினர். பெருமளவானோர் பங்கேற்றனர். பெருமளவு நிதியும் திரட்டினர். இதற்கு கொப்பேகடுவவையும் அழைத்திருந்தனர். அவரும் வருகை தந்திருந்தார். ஆனால் அங்கிருந்து விரைவில் சென்றுவிட்டார்.</p>
<p>புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பயங்கரவாத செயலுக்காகவே அவர்கள் இதனை நடத்துகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது. எனவே, புலனாய்வாளர்களை ஈடுபடுத்தி இது தொடர்பில் நாம் விசாரணைளை ஆரம்பித்திருந்தோம்.</p>
<p>அக் காலப்பகுதியில் முஸ்லிம் அதிகாரி ஒருவரே கிளிநொச்சி புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்டார். அவர் திறமையான அதிகாரி. அவரின் பெயர் நினைவில் இல்லை. தமிழ் பயங்கரவாதிகள் 40-50 பேரின் படங்களை அவர் என்னிடம் ஒப்படைத்தார்.</p>
<p><em><strong>பிரபாகரன் குறித்து ஜே.ஆரிடம் முறைப்பாடு</strong></em></p>
<p>சீஆர் புத்தகமொன்றை எடுத்து, ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொருவரின் படத்தை ஒட்டி நபர்கள் தொடர்பான விபரங்களை எழுதினேன். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அனா செனவிரத்னவுக்கும் அறிவித்தேன். இது தொடர்பில் கதைப்பதற்காக மாதம் ஒருமுறை அவர் கிளிநொச்சிக்கு வருவார்.</p>
<p>இச்சம்பவம் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு தெரியப்படுத்த நான் தீர்மானித்தேன். இதற்கு பொலிஸ்மா அதிபரின் அனுமதியும் கிடைத்தது.</p>
<p>ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஜனாதிபதி செயலாளரிடம் நேரம் கோரினேன். வாய்ப்பு வழங்கப்பட்டது.</p>
<p>ஜனாதிபதியை சந்தித்து நிலைமையை தெளிவுபடுத்தினேன், சேர், இவர்கள் ஏதோவொரு வேலைக்கு தயாராகின்றனர் எனக் குறிப்பிட்டு, படங்கள் சகிதம் புத்தகத்தை வழங்கினேன்.</p>
<p>அவர் மகிழ்வுடன் அதனை ஏற்றார். எனக்கு குளிர்பானமும் வழங்கினார். தகவல்களை வழங்கிய பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். நான் வழங்கிய தகவல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.</p>
<p>உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும், அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது உள்ளது. அன்று நான் ஜே.ஆர் ஜயவர்தனவுக்கு எல்லா தகவல்களையும் வழங்கினேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் புலிகள் தலைதூக்கியிருக்கமாட்டர்.</p>
<p>இதற்கிடையில் வடக்கை மையப்படுத்தி அவர்கள் குழுவாக செயற்பட்டனர். புளொட், ஈபிஆர்எல்எப், ஈரோஸ், ரெலோ, எல்ரீரீஈ மற்றும் ஈபிடிபி என குழுக்கள் அமைத்து செயற்பட்டனர். இக் குழுக்களுக்கு தலைவர்கள் இருந்தனர். எல்ரீரீஈ அமைப்பின் தலைவராக பிரபாகரன் நியமிக்கப்பட்டிருந்தார். வடக்கின் அதிகாரத்தைக் கைப்பற்ற முற்பட்டனர். இக் காலப்பகுதியில் இவர்களால் மக்களுக்கு துன்புறுத்தலென எந்த முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லை. இக்காலப்பகுதியில் நான் பிரபாகரனை மீண்டும் சந்திக்கவில்லை.</p>
<p><em><strong>பிரபாகரன் கைதும் சுற்றிவளைப்பும்</strong></em></p>
<p>அந்த காலத்தில் எனது பொலிஸில் அதிகளவு தமிழ் அதிகாரிகள் பணியாற்றினர். பிரபாகரன் உள்ளிட்டவர்களை அவர்கள் எதிர்த்தனர். சிறு குழுக்களின் செயற்பாடுகளால் பயங்கரவாதம் தலைதூக்க ஆரம்பித்தது. பிரபாகரனும் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபல்யமடைந்திருந்தார்.</p>
<p>பிடியாணை கிடைத்ததும், தமிழ் பொலிஸ் அதிகாரிகளால்,கிளிநொச்சி நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இருக்கையில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிரபாகரன் பொலிஸ் நிலையம் கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
<p>இது தொடர்பான தகவல் வெளியானதும், அவரை அழைத்து செல்ல சிலர் பொலிஸ் நிலையம் வந்தனர். பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் எல்லா இடங்களிலும் பரவியது. அவரை விடுதலை செய்யுமாறு அரச மற்றும் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து எனக்கு அழுத்தங்கள் வந்தன. நான் விடுவிக்கவில்லை. ஏனெனில் பிணை வழங்குமாறு பிடியாணையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நான் எனது கடமையையே செய்தேன்.</p>
<p>பொலிஸ்மா அதிபர் அனா செனவிரத்ன சட்டத்தின் பிரகாரம் செயற்படும் நபர். அந்த காலத்து பொலிஸுக்கு தற்போது போன்று அழுத்தம் இருந்தில்லை. பிடியாணையின் பிரகாரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அவர் எனக்கு ஆலோசனை வழங்கினார்.</p>
<p>மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்துவிட்டனர். நாலா புறங்களில் இருந்தும் எனக்கு தொலைபேசி அழைப்புகள். கடும் மன அழுத்தத்துக்கு உள்ளானேன். முடியாத கட்டத்தில் பொலிஸ் நிலையத்திலிருந்து இரகசியமாக வெளியேறி மாங்குளம் சென்றேன். கொப்பேகடுவவை சந்திக்கவே அங்கு சென்றேன்.</p>
<p>அதற்கிடையில் சம்பவம் குறித்து அவரும் அறிந்து வைத்திருந்தார். நான் அவரை சந்தித்து,&#8221; சேர் பிரபாகரன் எனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார். எதிர்காலத்தில் எமக்கு பெரும் பிரச்சினை தரக்கூடிய நபர் அவர். நான் முடித்துவிடவா&#8221; என கேட்டேன்.</p>
<p>&#8221; உனக்கு பைத்தியமா, பைத்தியத்தனமான செயலில் ஈடுபட வேண்டாம். நீ அவ்வாறு செய்தால் உன்னை தொங்கவிட்டுவிடுவார்கள், கை வைக்காதே. பொலிஸ்மா அதிபர் கூறியதுபோல் செயற்படு&#8221; என கொப்பேகடுவ எனக்கு ஆலோசனை வழங்கினார்.</p>
<p>அங்கிருந்து மீண்டும் பொலிஸ் நிலையம் வந்தேன். அங்கு குவிந்திருந்தவர்கள் இருக்கவில்லை. பொலிஸாரும் மௌனம் காத்தனர். என்ன நடந்தது என வினவினேன்.</p>
<p><em><strong>புலிகளிடமிருந்து வந்த மரண ஓலை!</strong></em></p>
<p>&#8221; சேர், டிஐஜி சேர் வந்தார், அரச உயர் அதிகாரிகள் கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு பிரபாகரனை அழைத்துச்சென்றுவிட்டார்.&#8221; &#8211; என பதில் வந்தது.</p>
<p>நான் அந்த குறிப்பை வாசித்தேன். பிரபாகரனை கொண்டுசெல்வதாக யாழ். டிஐசி அதில் எழுதியிருந்தார். அந்த டிஐஜி தமிழர். அவர் இவ்வாறு விடுவித்து அழைத்துச்சென்ற பிரபாகரனை அதன் பிறகு நான் காணவில்லை. அவர் காட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் தலைமையில் புலிகள் அமைப்பு தலைதூக்க ஆரம்பித்தது. அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன.</p>
<p>எனது பெயர் குறிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு கடிதமொன்று வந்தது. புலிகளால் அது அனுப்பட்டிருந்தது. பாரிய போஸ்டர். அது மரண ஓலை என்றுகூட சொல்லலாம்.</p>
<p>இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக கொழும்பிலிருந்து பொலிஸ் குழுவொன்று கிளிநொச்சி நோக்கி வந்தது. முருகண்டி பகுதியில் வைத்து அவர்கள் கொல்லப்பட்டனர்.</p>
<p>பிரபாகரன் கைது விவகாரத்தில் நான் அரசின் உத்தரவை மீறிவிட்டதாககூறி, பணியில் இருந்து என்னை இடைநிறுத்தினர். பதவி உயர்வு தடுக்கப்பட்டது. பழிவாங்கல் தொடர்ந்தது. இதனால் உதவி பொலிஸ் அத்தியட்சகராகவே ஓய்வு பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.</p>
<p>#Artical #Pirabhakaran</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/socked-information-released-by-the-police-officer-who-first-arrested-prabhakaran/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>100,000 காணித் துண்டுகள் &#8211; மன்னாரில் நேர்முகத் தேர்வு</title>
		<link>https://tamilnaadi.com/news/one-lakh-plots-of-land-interviewed-in-mannar-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/</link>
					<comments>https://tamilnaadi.com/news/one-lakh-plots-of-land-interviewed-in-mannar-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Oct 2021 15:44:37 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Applications]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Interview]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=18973</guid>

					<description><![CDATA[இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்துக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த இளையோருக்கு நேர்முகத் தேர்வு கடந்த வியாழக்கிழமை முதல் இடம் பெற்று வருகின்றது. விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் அடிப்படையில் அவர்களால் மேற்கொள்ளவுள்ள சுயதொழில் தொடர்பான திட்டமுன்மொழிவு மற்றும் நிதி விவரம் தொடர்பான ஆவணங்கள் குறித்த நேர்முகத் தேர்வில் கோரப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிக அனுபவங்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்துக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த இளையோருக்கு நேர்முகத் தேர்வு கடந்த வியாழக்கிழமை முதல் இடம் பெற்று வருகின்றது.</p>
<p>விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் அடிப்படையில் அவர்களால் மேற்கொள்ளவுள்ள சுயதொழில் தொடர்பான திட்டமுன்மொழிவு மற்றும் நிதி விவரம் தொடர்பான ஆவணங்கள் குறித்த நேர்முகத் தேர்வில் கோரப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் மேலதிக அனுபவங்கள் உட்பட சுயதொழில் முயற்சி தொடர்பான பின்புலங்கள் தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நேர்முகத் தேர்வுக்கு ஒரே தடவையில் பல நூற்றுக்கணக்கானவர்களை அழைத்தமையால் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளித்தோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/one-lakh-plots-of-land-interviewed-in-mannar-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கூட்டமைப்பின் தலைமை பதவிக்கு எனக்கு தகுதியுண்டு – சுமந்திரன் எம்.பி.</title>
		<link>https://tamilnaadi.com/news/local/i-am-eligible-for-the-leadership-of-the-federation-sumanthiran-mp/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/i-am-eligible-for-the-leadership-of-the-federation-sumanthiran-mp/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Oct 2021 10:37:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Interview]]></category>
		<category><![CDATA[leadership]]></category>
		<category><![CDATA[M.A. Sumanthiran]]></category>
		<category><![CDATA[Sampanthan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=16174</guid>

					<description><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் அந்தத் தலைமைப் பதவிக்கு எனக்கு தகுதி உண்டு இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சம்பந்தனின் தலைமைப் பதவியை அவருக்குப் பிறகு பெற்றுக்கொள்ள சுமந்திரன் தகுதியானவரா என்று கேட்டபோது, “தகுதியானவரா என்று கேட்டால் ஆம் என்பேன்” என்று அவர் பதிலளித்திருக்கின்றார். அவரின் பேட்டியின் சில பகுதிகளை கேள்வி &#8211; [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் அந்தத் தலைமைப் பதவிக்கு எனக்கு தகுதி உண்டு</p>
<p>இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.<br />
கொழும்பு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>சம்பந்தனின் தலைமைப் பதவியை அவருக்குப் பிறகு பெற்றுக்கொள்ள சுமந்திரன் தகுதியானவரா என்று கேட்டபோது, “தகுதியானவரா என்று கேட்டால் ஆம் என்பேன்” என்று அவர் பதிலளித்திருக்கின்றார்.</p>
<p>அவரின் பேட்டியின் சில பகுதிகளை கேள்வி &#8211; பதில் வடிவில் இங்கே தருகின்றோம்.</p>
<p><strong>கேள்வி:-</strong> தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கும், மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும் சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பினர் உயர்மட்டத்துக்குச் செல்வதற்கான நோக்கம் என்ன?</p>
<p><strong>பதில்:-</strong> அதற்குப் பிரதான காரணம் நாம் முன்னர் நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்தோம். ஆனால், எந்தப் பயனும் இல்லை. அதன் காரணமாக மக்கள் அங்கும் இங்கும் அலை மோதினர்.</p>
<p><strong>கேள்வி:</strong>&#8211; அப்படி என்றால் நல்லாட்சி அரசில் சிதைவு ஏற்பட்டதா?<br />
<strong>பதில்:</strong>&#8211; அந்தச் சிதைவின் தாக்கம் எம்மையும் தாக்கியது.</p>
<p><strong>கேள்வி</strong>:- அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியது சுமந்திரன் அல்லவா?<br />
<strong>பதில்</strong>:- சுமந்திரன் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.</p>
<p><strong>கேள்வி:</strong>&#8211; சுமந்திரன் பிரச்சினைகளை விற்றுப் பிழைக்கின்றாரா?<br />
<strong>பதில்</strong>:- அவ்வாறு கூற முடியாது. நாம் அப்படி செயற்படுவதும் இல்லை.</p>
<p><strong>கேள்வி</strong>:- சுமந்திரன் தனிப்பட்ட விளையாட்டொன்றை விளையாடுகின்றாரா? அதாவது தான் ஒரு தேசிய அரசியல்வாதி என்ற வகையிலான தனிப்பட்ட விளையாட்டொன்றை விளையாடுகின்றாரா?<br />
<strong>பதில்</strong>:- அதனை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.</p>
<p><strong>கேள்வி</strong>:- சம்பந்தனின் தலைமைப் பதவியை அவருக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள சுமந்திரன் தகுதியுடையவரா?<br />
<strong>பதில்:</strong>&#8211; தகுதியானவரா என்று கேட்டால் ஆம் என்பேன்.</p>
<p><strong>கேள்வி</strong>:- எதற்காக இந்தியாவின் வெளிவிவகார செயாலாளர் இலங்கை வந்தார்?<br />
<strong>பதில்</strong>:- அவர் புதிதாக நியமிக்கப்பட்டவர். ஆகவே, அயல் நாடுகளுக்கு விஜயம் செய்வது சாதாரணமான விடயமாகும்.</p>
<p><strong>கேள்வி</strong>:- அப்படியாயின் கதவையடைத்துக்கொண்டு நீங்கள் பேசியது என்ன?<br />
<strong>பதில்</strong>:- நாம் கதவை அடைத்துக்கொண்டு பேசவில்லை.</p>
<p><strong>கேள்வி</strong>:- அப்படியானால் பேசிய விடயங்களை கூறினீர்களா?<br />
<strong>பதில்:</strong>&#8211; ஆம், பேச்சு முடிந்தவுடன் நாம் பேசிய விடயங்களை வெளியில் வந்து தெரிவித்தோம்.</p>
<p><strong>கேள்வி</strong>:- கூட்டமைப்பின் தேர்தல் வாக்குளை வேறொரு இடத்தில் கொண்டு சென்று வைப்பதற்கான நிலை தென்படுகின்றதா?<br />
<strong>பதில்:-</strong> இல்லை. அவ்வாறானதொரு நிலை இல்லை.</p>
<p><strong>கேள்வி</strong>:- தேசியத் தலைவர் ஒருவர் இன்று இல்லையா?<br />
<strong>பதில்:</strong>&#8211; ஆம் இல்லை.</p>
<p><strong>கேள்வி</strong>:- எதிர்க்கட்சி என்ற ஒன்று இன்று இல்லையா?<br />
<strong>பதில்:</strong>&#8211; ஆம் இல்லை.</p>
<p><strong>கேள்வி</strong>:- உங்களுக்குத் தென்படவில்லையா?<br />
<strong>பதில்</strong>:- இப்போது எமக்குத் தென்படவில்லை. ஆகவே, நாம் அதனை உருவாக்க வேண்டும்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/i-am-eligible-for-the-leadership-of-the-federation-sumanthiran-mp/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மறுக்கப்பட்டு வரும் பெண்கள் உரிமைகள்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/womens-rights-being-denied/</link>
					<comments>https://tamilnaadi.com/news/womens-rights-being-denied/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Sep 2021 22:57:40 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Interview]]></category>
		<category><![CDATA[kabul]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[Taliban]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[சையது ஷக்ருல்லா ஹஷீமி]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>
		<category><![CDATA[பேட்டி]]></category>
		<category><![CDATA[மந்திரி]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8116</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கையகப்படுத்தியுள்ள நிலையில், தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருவதோடு பெண்களுக்கு பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்க பல்வேறு கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன , பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக போராட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . இந்நிலையில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி ., பெண்கள் மந்திரிகளாக முடியாது. பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கையகப்படுத்தியுள்ள நிலையில், தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருவதோடு பெண்களுக்கு பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை</p>
<p>விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்க பல்வேறு கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன , பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக போராட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .</p>
<p>இந்நிலையில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி ., பெண்கள் மந்திரிகளாக முடியாது. பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். பெண்கள் மந்திரி ஆவது அவர்கள் கழுத்தில் சுமக்க முடியாத ஒன்றை வைப்பது போன்றதாகும் &#8211; என்று ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் .</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/womens-rights-being-denied/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
