<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>International Monetary Fund &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/international-monetary-fund/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 23 May 2025 08:18:35 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>International Monetary Fund &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>துறைமுக நகருக்கான வரிச்சலுகை: சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம்..!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/imf-conditions-to-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 23 May 2025 08:18:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[imf Sri lanka]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=198130</guid>

					<description><![CDATA[துறைமுக நகருக்காக வரிச்சலுகைகளை ரத்துச் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட துறைமுக நகரில் (போர்ட்சிட்டி) முதலீடு செய்வோருக்கு தீர்வை வரி மற்றும் சுங்க வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறு வரிவிலக்கு அளிப்பதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வரி வருமானத்தை ஈட்டிக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கான வரிச்சலுகையை ரத்துச் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>துறைமுக நகருக்காக வரிச்சலுகைகளை ரத்துச் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>கொழும்பில் சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட துறைமுக நகரில் (போர்ட்சிட்டி) முதலீடு செய்வோருக்கு தீர்வை வரி மற்றும் சுங்க வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.</p>
<p>எனினும் அவ்வாறு வரிவிலக்கு அளிப்பதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வரி வருமானத்தை ஈட்டிக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கான வரிச்சலுகையை ரத்துச் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது.</p>
<p>இதன் காரணமாக போர்ட் சிட்டியில் முதலீடு செய்வதற்கான எதிர்கால முதலீட்டாளர்களைத் தேடிக் கொள்வதில் அரசாங்கத்துக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையுடன் IMF விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள உடன்பாடு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/imf-eff-fourth-review-for-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 23 May 2025 07:49:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Economy of Sri Lanka]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<category><![CDATA[Ministry of Finance Sri Lanka]]></category>
		<category><![CDATA[sri lanka government]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=198063</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) நான்காவது மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாட்டை விரைவில் எட்ட எதிர்பார்க்கிறோம் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இதற்கான IMF ஒப்பந்தங்களை இலங்கை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதன் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசக் சுட்டிக்காட்டியுள்ளார். வாராந்திர IMF முடிவு-தகவல் ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். மேலும், தொடர்புடைய ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) நான்காவது மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாட்டை விரைவில் எட்ட எதிர்பார்க்கிறோம் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.</p>
<p>இதற்கான IMF ஒப்பந்தங்களை இலங்கை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதன் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசக் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>வாராந்திர IMF முடிவு-தகவல் ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.</p>
<p>மேலும், தொடர்புடைய ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கை நிறைவுக்கு கொண்டு வர வேண்டிய இரண்டு முக்கிய விடயங்களை ஜூலி கோசக் எடுத்துரைத்தார்.</p>
<p>அதேவேளை, செலவு-மீட்பு மின்சார விலை நிர்ணயத்தை மீட்டெடுக்கவும், தானியங்கி மின்சார விலை சரிசெய்தல் பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்யவும் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக மேலும் கூறினார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கத்தை சிக்கலுக்குள் தள்ளிய IMF ஒப்பந்தம்..! அதிகரிக்கவுள்ள வரிச்சுமை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lankan-economic-situation-on-imf-agreement/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Feb 2025 15:41:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Economy of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<category><![CDATA[Sri Lankan Economic Situation On Imf Agreement]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=191714</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தை சிக்கலுக்குள் தள்ளிய IMF ஒப்பந்தம்..! அதிகரிக்கவுள்ள வரிச்சுமை இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1 சதவீத இலக்கு வருவாயை அடைவது சவாலாக மாறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் துணை ஆளுநர் டபிள்யூ. ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களால் அரசாங்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அரசாங்கத்தை சிக்கலுக்குள் தள்ளிய IMF ஒப்பந்தம்..! அதிகரிக்கவுள்ள வரிச்சுமை</h4>
<p>இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1 சதவீத இலக்கு வருவாயை அடைவது சவாலாக மாறியுள்ளதாக <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/03/central-bank-announcement-8/">இலங்கை மத்திய வங்கி</a>யின் (CBSL) முன்னாள் துணை ஆளுநர் டபிள்யூ. ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களால் அரசாங்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் நான்காவது தவணையை இழக்காமல் இருக்கவும், ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை அடையவும் அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், &#8220;ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட இரண்டு காரணிகளால் அதன் வரவு &#8211; செலவு கொள்கை வகுப்பில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>ஒன்று, முந்தைய அரசாங்கத்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்பட்ட கடன் ஒப்பந்தத்தை எந்த திருத்தமும் இல்லாமல் செயல்படுத்த <a href="https://www.president.gov.lk/ta/" target="_blank" rel="noopener">ஜனாதிபதி</a> ஒப்புக்கொண்டுள்ளார்.</p>
<p>இரண்டாவது, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சற்று முன்பு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மாற்றச் சட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான வரவு &#8211; செலவு திட்டத்தை தயாரிக்கும் போது சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் பல அளவுகோல்களை நிறைவேற்ற வேண்டும்.</p>
<p>சர்வதேச நாணய நிதியம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டத்தின் கீழ் உள்ள தேவைகளில் ஒன்று, இலங்கை 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1 சதவீத அரசாங்க வருவாயைப் பெற வேண்டும் என்பதாகும். இது சுமார் 5.5 ட்ரில்லியன் ரூபா ஆகும். அது அரசாங்கத்திற்கு ஒரு பெரிய இலக்கு.</p>
<p>எனவே, மக்கள் மீது புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படாமல், அரசாங்கம் இந்த நிலையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அரசாங்கத்தால் இந்த நிலையை அடைய முடியாவிட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு வழங்கப்படாது. இது பொருளாதார மாற்றச் சட்டத்திற்கும் இணங்காததாக இருக்கும்.</p>
<p>அது மாத்திரமன்றி, முந்தைய அரசாங்கத்தால் சர்வதேச நாணய நிதியத்திற்கு சில சர்ச்சைக்குரிய வரிகள் முன்மொழியப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சொத்து வரி. இப்போது இந்த வரி தற்போதைய அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்படும் வருவாய் இழப்பு காரணமாக அதே வருவாயை உயர்த்த புதிய வரியை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும்.</p>
<p>ஆகையால், இந்தக் காரணங்களால், வரவு &#8211; செலவு திட்டத்தில் மக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்க முடியாது, ஏனெனில் அது அதன் வரவு &#8211; செலவு திட்ட கொள்கையை சர்வதேச நாணய நிதியம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டத்தின் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஐ.எம்.எப் பிரதிநிதிகள்</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/imf-representatives-and-cbsl-officers-discussion/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Nov 2024 06:52:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[CBSL]]></category>
		<category><![CDATA[Dollars]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=177234</guid>

					<description><![CDATA[மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஐ.எம்.எப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு முதலாவதாக மத்திய வங்கி (CBSL) அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த பிரதிநிதிகள் இன்று (18) மத்திய வங்கி பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களை சந்திப்பதற்கும் இந்த குழு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலின் நிறைவில், குறித்த பிரதிநிதிகள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஐ.எம்.எப் பிரதிநிதிகள்</h4>
<p>இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு முதலாவதாக <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/15/services-of-central-bank-officers-suspended/">மத்திய வங்கி</a> (CBSL) அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>அதன்படி, குறித்த பிரதிநிதிகள் இன்று (18) மத்திய வங்கி பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களை சந்திப்பதற்கும் இந்த குழு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பான கலந்துரையாடலின் நிறைவில், குறித்த பிரதிநிதிகள் குழு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு, விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பான முன்னேற்றம் குறித்து கருத்து வெளியிடவுள்ளனர்.</p>
<p>விரிவாக்கப்பட்ட <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D" target="_blank" rel="noopener">கடன்</a> வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (17) நாட்டை வந்தடைந்தது.</p>
<p>இந்த விஜயத்தின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் நான்காவது தவணை இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.</p>
<p>சர்வதேச நாணய நிதியம் நான்கு வருட கால நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/anura-on-debt-restruction/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Nov 2024 05:23:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Anura On Debt Restruction]]></category>
		<category><![CDATA[Economy of Sri Lanka]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=176320</guid>

					<description><![CDATA[இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார். இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது, இன்னும் ஒரு சிறிய தொகை மட்டுமே இறுதி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை</h4>
<p>இலங்கையின் <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/10/sri-lanka-general-election-2024-20/">கடன்</a> மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.</p>
<p>கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.</p>
<p>இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது, இன்னும் ஒரு சிறிய தொகை மட்டுமே இறுதி செய்ய எஞ்சியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எதிர்கால கடமைகளை நிர்வகிப்பதற்கான கணக்கீடுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதால், இதன்படி, 2028 ஆம் ஆண்டளவில், மறுசீரமைக்கப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p>
<p>இதற்கிடையில், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த மதிப்பாய்வு 2025 ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் முடிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறப்பான பாதையில் செல்லும் இலங்கை: விரைவில் மூன்றாவது மதிப்பாய்வுக்கு தயாராகும் ஐஎம்எப்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/imf-appreciates-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Oct 2024 03:39:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Economy of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Imf Appreciates Sri Lanka]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=173120</guid>

					<description><![CDATA[சிறப்பான பாதையில் செல்லும் இலங்கை: விரைவில் மூன்றாவது மதிப்பாய்வுக்கு தயாராகும் ஐஎம்எப் இலங்கை சில கடின வெற்றிகளுக்கு வழிவகுத்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் நீண்ட தூரம் சிறப்பாக பயணித்து விட்டதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மூன்றாவது மதிப்பாய்வை விரைவில் மேற்கொள்ளமுடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஸ்ணா சீனிவாசன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஒருமித்த கருத்தை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சிறப்பான பாதையில் செல்லும் இலங்கை: விரைவில் மூன்றாவது மதிப்பாய்வுக்கு தயாராகும் ஐஎம்எப்</h4>
<p>இலங்கை சில கடின வெற்றிகளுக்கு வழிவகுத்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் நீண்ட தூரம் சிறப்பாக பயணித்து விட்டதாக <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/05/imf-warns-of-uncertainties-lanka/">சர்வதேச நாணய நிதியம்</a> தெரிவித்துள்ளது.</p>
<p>இந்தநிலையில், மூன்றாவது மதிப்பாய்வை விரைவில் மேற்கொள்ளமுடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.</p>
<p>நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஸ்ணா சீனிவாசன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஒருமித்த கருத்தை எட்டமுடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்தநிலையில், கடினமாக வென்ற ஆதாயங்களை புதிய அரசாங்கம் திட்டத்தின் கீழ் பாதுகாக்கவும், கட்டியெழுப்பவும் சர்வதேச நாணய நிதியம் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>கடன் மறுசீரமைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கை உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனும், தனியார் கடன் வழங்குனர்களுடனும் உடன்பாடுகளை எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பணவீக்கத்துக்கு எதிரான போரில் வெற்றி! மத்திய கிழக்கு போரினால் அபாயம் &#8211; ஐஎம்எப்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/imf-says-danger-rises-because-of-war/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Oct 2024 07:31:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Imf Says Danger Rises Because Of War]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<category><![CDATA[Israel-Hamas War]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=172553</guid>

					<description><![CDATA[பணவீக்கத்துக்கு எதிரான போரில் வெற்றி! மத்திய கிழக்கு போரினால் அபாயம் &#8211; ஐஎம்எப் உலகின் சில நாடுகளில் விலை அழுத்தங்கள் நீடித்தாலும், பணவீக்கத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சித் துறையின் இயக்குநருமான பியர் ஒலீவியர் கோலீஞ்சஸ்( Pierre-Olivier Gourinchas )இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மொத்தப் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பணவீக்கத்துக்கு எதிரான போரில் வெற்றி! மத்திய கிழக்கு போரினால் அபாயம் &#8211; ஐஎம்எப்</h4>
<p>உலகின் சில நாடுகளில் விலை அழுத்தங்கள் நீடித்தாலும், பணவீக்கத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சித் துறையின் இயக்குநருமான பியர் ஒலீவியர் கோலீஞ்சஸ்( Pierre-Olivier Gourinchas )இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அடுத்த ஆண்டு இறுதிக்குள் மொத்தப் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் குறையும் என்றும் அவர் எதிர்வை வெளியிட்டுள்ளார்.</p>
<p>2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பணவீக்கம் 9.4 சதவீதமாக உயர்ந்த நிலையிலேயே தற்போதைய சரிவு உணரப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்த பணவீக்கம் போக்கு 3.2 சதவீதமாக நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை <a href="https://tamilnaadi.com/news/local/2024/07/08/if-salary-increased-inflation-will-raise/">பணவீக்கம்</a> பற்றிய நற்செய்தி இருந்தபோதிலும், எதிர்மறையான அபாயங்கள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>பிராந்திய மோதல்களின் அதிகரிப்பு, குறிப்பாக மத்திய கிழக்கில், பொருட்களின் சந்தைகளுக்கு கடுமையான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ள பிட்ச்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/satisfied-with-sri-lanka-s-new-government/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Oct 2024 05:25:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<category><![CDATA[Satisfied With Sri Lanka S New Government]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[world bank]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=169765</guid>

					<description><![CDATA[இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ள பிட்ச் இலங்கையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகள், கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அபாயங்களை குறைப்பதாக சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்தமை, 2024 செப்டம்பரில் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பை செயல்படுத்த இணங்கியமை என்பனவே, கடன் மறுசீரமைப்பு செயல்துறையின் அபாயங்களை குறைப்பதாக பிட்ச் நிறுவனம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ள பிட்ச்</h4>
<p>இலங்கையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகள், <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/10/satisfied-with-sri-lanka-s-new-government/">கடன் </a>மறுசீரமைப்பு செயல்முறையின் அபாயங்களை குறைப்பதாக சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்தமை, 2024 செப்டம்பரில் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பை செயல்படுத்த இணங்கியமை என்பனவே, கடன் மறுசீரமைப்பு செயல்துறையின் அபாயங்களை குறைப்பதாக பிட்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திநாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டமையானது, இலங்கை தொடர்பான கொள்கையில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>இலங்கையின் வெளிநாட்டு நாணயத்தை தாமதப்படுத்தக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கூறுகளுக்கு சவால்களை ஏற்படுத்தும் அபாயத்தை அது, எழுப்பியிருந்தது.</p>
<p>எவ்வாறாயினும்,முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைளுக்கு புதிய அரசாங்கத்தின் அணுகுமுறை அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பில்லை என்று பிட்ச் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>இந்தநிலையில், இலங்கையின் மொத்த பொது அரச கடன் விகிதம் 2022 இல் சுமார் 116வீதத்தில் இருந்து 2028 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 103வீதமாக படிப்படியாக குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-review-may-be-delayed/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Oct 2024 08:58:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Review May Be Delayed]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=169272</guid>

					<description><![CDATA[இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வரை தாமதமாகும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகம், சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய முயற்சிக்கும் அதேநேரம், இலங்கை பொதுமக்கள் மீதான சுமையை குறைப்பதற்கான வழிகளைத் தேடுவரே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்</h4>
<p>இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வரை தாமதமாகும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.</p>
<p>அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகம், <a href="https://www.bbc.com/tamil/sri-lanka-62753741" target="_blank" rel="noopener">சர்வதேச நாணய நிதியத்தின்</a> நோக்கங்களை பூர்த்தி செய்ய முயற்சிக்கும் அதேநேரம், இலங்கை பொதுமக்கள் மீதான சுமையை குறைப்பதற்கான வழிகளைத் தேடுவரே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.</p>
<p>இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் விதிமுறைகளில் உள்ள வரி சீர்திருத்தங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை ஜனாதிபதி நோக்கமாகக் கொண்டுள்ளார்.</p>
<p>அத்துடன், சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளில் சிலவற்றை, குறிப்பாக வரி அதிகரிப்புகளை பிற்போட்டு, அதன் மூலம், பொருளாதார நெருக்கடியுடன் போராடும் குடிமக்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை குறைக்கவும் அநுர நிர்வாகம் முயற்சிக்கிறது.</p>
<p>சர்வதேச நாணய நிதிய பணியாளர்களின் இலங்கை பயணத்தின் முடிவில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு விஜயம் : அரசாங்கத்தின் நிலைப்பாடு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/high-level-delegation-of-the-imf-visits-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Oct 2024 09:24:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[High Level Delegation Of The Imf Visits Sri Lanka]]></category>
		<category><![CDATA[International Monetary Fund]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு விஜயம் : அரசாங்கத்தின் நிலைப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=168379</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு விஜயம் : அரசாங்கத்தின் நிலைப்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, இன்று (01) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath), கருத்து வெளியிட்டுள்ளார். ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் புதிய பொருளாதாரக் குழு ஆகியோரை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பதற்காக குறித்த குழு ஒக்டோபர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு விஜயம் : அரசாங்கத்தின் நிலைப்பாடு</h4>
<p>சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, இன்று (01) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath), கருத்து வெளியிட்டுள்ளார்.</p>
<p>ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/02/call-the-president-brother-dont-like-excellency/">ஜனாதிபதி</a> அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் புதிய பொருளாதாரக் குழு ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.</p>
<p>இந்த சந்திப்பதற்காக குறித்த குழு ஒக்டோபர் இரண்டாம் திகதி முதல் நான்காம் திகதி வரை கொழும்புக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.</p>
<p>இந்தநிலையில், இந்த சந்திப்பின் போது, நாட்டின் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்கள் மாத்திரமே இடம்பெறும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>அததோடு, கட்டமைப்பு தொடர்பான மேலதிக கலந்துரையாடல் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்கில் இடம்பெறும் எனவும் அவர் நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, சர்வதேச நாணய பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
