<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Indika Liyanage &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/indika-liyanage/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 01 Dec 2025 15:03:07 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Indika Liyanage &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் &#8211; பரீட்சை ஆணையாளர் நாயகம்!</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/g-c-e-a-l-exams-postponed-new-dates-to-be-announced-as-officials-review-schedule-amidst-severe-weather/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Nov 2025 18:59:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Exam Security]]></category>
		<category><![CDATA[Examination Postponement]]></category>
		<category><![CDATA[GCE A/L Exams]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Indika Liyanage]]></category>
		<category><![CDATA[Nalaka Kalubandara]]></category>
		<category><![CDATA[Severe Weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205978</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (G.C.E. A/L) கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து இன்று (நவம்பர் 27) ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்னவின் பங்கேற்புடன் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கல்விச் செயலாளர் நாலக்க களுவெவ, இலங்கைப் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (G.C.E. A/L) கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து இன்று (நவம்பர் 27) ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.</p>
<p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்னவின் பங்கேற்புடன் இந்தக் கூட்டம் நடைபெற்றது.</p>
<p>கல்விச் செயலாளர் நாலக்க களுவெவ, இலங்கைப் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
<p>உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் எந்தவித சிரமமும் இன்றிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். அனர்த்த முகாமைத்துவ நிலையம், விமானப்படை, வளிமண்டலவியல் திணைக்களம் போன்ற அனைத்து ஆதரவு நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து செயற்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.</p>
<p>கலந்துரையாடலைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பின்வரும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த பாடங்களுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.</p>
<p>வானிலை சீராக இருந்தால், பரீட்சை திங்கட்கிழமை (டிசம்பர் 01) முதல் அசல் அட்டவணையின்படியே நடைபெறும்.</p>
<p>ஒத்திவைக்கப்பட்ட போட்டிப் பரீட்சைகள் நவம்பர் 29ஆம் திகதி நடத்தப்படவிருந்த பதிவாளர் நாயகம் திணைக்கள சேவையில் I ஆம் வகுப்பின் III ஆம் தரத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>
<p>நவம்பர் 30ஆம் திகதி நடத்தப்படவிருந்த தொழில்நுட்பம் சாராத பிரிவின் III ஆம் தரத்தில் உள்ள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களின் முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்றும் (27) நாளையும் (28) மூடப்பட்டிருக்கும். பாடசாலைத் தவணையின் எஞ்சிய பகுதி தொடங்கும் திகதி ஊடகங்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படும்.</p>
<p>பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை மூடுவது தொடர்பான அதிகாரம் அந்தந்த துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களின் விடைத்தாள்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன என்றும், மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் எந்தவிதமான அநாவசிய பயத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
