<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Humanitarian Crisis &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/humanitarian-crisis/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 07 Dec 2025 18:05:50 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Humanitarian Crisis &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அனர்த்த நிவாரணத்தில் பாரபட்சமா? உள்நாட்டுப் பகுதிகளுக்கு உதவிகள் தாமதம் &#8211; மக்கள் வேதனை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/disaster-relief-delay-alleged-in-hinterlands-tamil-speaking-areas-report-no-aid-victims-demand-urgent-mechanism/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Dec 2025 18:05:50 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Disaster Relief Delay]]></category>
		<category><![CDATA[Government Neglect]]></category>
		<category><![CDATA[Grama Niladhari]]></category>
		<category><![CDATA[Humanitarian Crisis]]></category>
		<category><![CDATA[Naulapitiya]]></category>
		<category><![CDATA[Relief Distribution]]></category>
		<category><![CDATA[Tamil-Speaking Areas]]></category>
		<category><![CDATA[Yatiyantota]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206554</guid>

					<description><![CDATA[நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு, அவை தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனினும், பாதிக்கப்பட்ட பல தமிழ் மொழி பேசுவோர் வாழும் உள்நாட்டுப் பகுதிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 7) மாலை 5 மணி வரையிலும் எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை என அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நகரங்களிலிருந்து பல [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு, அவை தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.</p>
<p>எனினும், பாதிக்கப்பட்ட பல தமிழ் மொழி பேசுவோர் வாழும் உள்நாட்டுப் பகுதிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 7) மாலை 5 மணி வரையிலும் எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை என அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p>
<p>நகரங்களிலிருந்து பல கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அரசாங்கம் இதுவரையிலும் கவனிக்கவில்லை என்றும், அதற்கான பொறிமுறையை அவசரமாக ஏற்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர்.</p>
<p>ஆகக் குறைந்தது, கிராம சேவகர் கூடத் தங்களுடையப் பிரதேசங்களை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து வேதனைப்படுகின்றனர்.</p>
<p>நாலவப்பிட்டிய மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே மேற்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.</p>
<p>இங்கு இனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்றபோதிலும், நிவாரணப் பணிகள் பின்தங்கிய பகுதிகளுக்குக் கிடைப்பதில் உள்ள தாமதமே இந்த வேதனைக்குக் காரணமாக உள்ளது.</p>
<p>ஆகையால், பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பான மிகச் சரியான தகவல்களைப் பெற்று, அந்த மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகளை உடனடியாகக் கிடைப்பதற்கான வழிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என நாமும் உரிய தரப்பினரின் கவனத்துக்கு இந்தச் செய்தியின் ஊடாகக் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சூடான் உள்நாட்டுப் போர்: 2.5 ஆண்டுகளாகத் தொடரும் மோதல் – ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரு மாதத்தில் 23 குழந்தைகள் பலி!</title>
		<link>https://tamilnaadi.com/news/sudan-civil-war-23-children-died-in-one-month-due-to-malnutrition-in-kordofan-region/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Nov 2025 17:34:51 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Child Mortality.]]></category>
		<category><![CDATA[displacement]]></category>
		<category><![CDATA[Humanitarian Crisis]]></category>
		<category><![CDATA[Kordofan]]></category>
		<category><![CDATA[Malnutrition Deaths]]></category>
		<category><![CDATA[RSF]]></category>
		<category><![CDATA[Sudan Civil War]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205639</guid>

					<description><![CDATA[ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். (RSF) எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் போக்கு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டுப் போராக வெடித்தது. 2.5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த உள்நாட்டுப் போரால் நாட்டில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரின் காரணமாகச் சுமார் 1.5 கோடி பேர் (15 மில்லியன்) தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். (RSF) எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் போக்கு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டுப் போராக வெடித்தது. 2.5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த உள்நாட்டுப் போரால் நாட்டில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p>
<p>உள்நாட்டுப் போரின் காரணமாகச் சுமார் 1.5 கோடி பேர் (15 மில்லியன்) தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறினர்.</p>
<p>இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவானது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியின்றித் தவித்து வருகின்றனர்.</p>
<p>உணவுப் பற்றாக்குறை மற்றும் நெருக்கடியின் காரணமாக அங்குள்ள கோர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று சூடான் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட காஸா சிறுமி: சவக்கிடங்கில் 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/12-year-old-gaza-girl-declared-dead-found-alive-after-eight-hours-in-the-morgue-following-israeli-airstrike/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 16:31:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gaza Attack]]></category>
		<category><![CDATA[Humanitarian Crisis]]></category>
		<category><![CDATA[Israeli Airstrike]]></category>
		<category><![CDATA[Medical Error]]></category>
		<category><![CDATA[Morgue Rescue]]></category>
		<category><![CDATA[Raghad al-Assar]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=204869</guid>

					<description><![CDATA[காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயதுச் சிறுமி, சுமார் எட்டு மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஸாவின் மத்தியப் பகுதியில் உள்ள ராகத் அல் அஷார் (Raghad al-Assar) என்ற அந்தச் சிறுமியின் வீடு, இஸ்ரேலியத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் ராகத்தின் இரண்டு சகோதரிகள் உட்படச் சிலர் உயிரிழந்தனர். ராகத் பலத்த காயங்களுடன் உயிருக்குப் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயதுச் சிறுமி, சுமார் எட்டு மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>காஸாவின் மத்தியப் பகுதியில் உள்ள ராகத் அல் அஷார் (Raghad al-Assar) என்ற அந்தச் சிறுமியின் வீடு, இஸ்ரேலியத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது.</p>
<p>இந்தத் தாக்குதலில் ராகத்தின் இரண்டு சகோதரிகள் உட்படச் சிலர் உயிரிழந்தனர். ராகத் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p>
<p>மருத்துவமனையில் அவர் &#8216;உயிரிழந்துவிட்டார்&#8217; என்று அறிவிக்கப்பட்டு, மற்ற உடலங்களுடன் சவக்கிடங்கில் வைக்கப்பட்டார்.</p>
<p>சுமார் எட்டு மணி நேரத்திற்குப் பின்னர், ராகத்தின் உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் தயாரானபோது, ராகத் உயிருடன் இருப்பது தெரியவந்தது.</p>
<p>காஸாவில் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ராகத் அல் அஷார் குறித்த தகவல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு குழந்தை சவக்கிடங்கிலிருந்து மீட்கப்பட்ட நிகழ்வு, போரின் மத்தியில் சுகாதார அமைப்புகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சந்திக்கும் சவால்களையும், துயரங்களையும் வெளிப்படுத்துவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
