<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>hemanda herath &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/hemanda-herath/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 04:53:04 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>hemanda herath &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரப் பணிப்பாளர்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/health-director-warns-people/</link>
					<comments>https://tamilnaadi.com/news/health-director-warns-people/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Nov 2021 12:14:04 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Covid19]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hemanda herath]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=24455</guid>

					<description><![CDATA[அறிகுறிகள் இன்றி பரவும் கொவிட் தொற்று சமூகத்தில் காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று(26) கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார். சுகாதாரத் துறையால் தினமும் தற்போது 5,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால் நோய்த்தொற்றுடையவர்கள் நோய்த்தொற்றுக்குப் பிறகு மட்டுமே சுகாதாரத் துறையில் கண்டறியப்படுகிறார்கள் என்றும் வைரஸ் தொற்று ஏற்படாதிருக்க ஒவ்வொருவரும் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அறிகுறிகள் இன்றி பரவும் கொவிட் தொற்று சமூகத்தில் காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று(26) கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>சுகாதாரத் துறையால் தினமும் தற்போது 5,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் செய்யப்படுகின்றன.</p>
<p>ஆனால் நோய்த்தொற்றுடையவர்கள் நோய்த்தொற்றுக்குப் பிறகு மட்டுமே சுகாதாரத் துறையில் கண்டறியப்படுகிறார்கள் என்றும் வைரஸ் தொற்று ஏற்படாதிருக்க ஒவ்வொருவரும் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.</p>
<p>கொவிட் மரணங்களின் அதிகரிப்பு நோயாளர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்பதையே பிரதிபலிப்பதாக விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/health-director-warns-people/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/fall-in-deaths-sri-lanka-at-risk/</link>
					<comments>https://tamilnaadi.com/news/fall-in-deaths-sri-lanka-at-risk/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Sep 2021 21:50:29 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hemanda herath]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[warning\]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தொற்றாளர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8167</guid>

					<description><![CDATA[மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை! கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதும் நாட்டில் நாளாந்தம் 2000 &#8211; 3000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, நூற்றுக்கும் அதிகமான மரணங்களும் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கிறது. இந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை!</h4>
<p>கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போதும் நாட்டில் நாளாந்தம் 2000 &#8211; 3000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, நூற்றுக்கும் அதிகமான மரணங்களும் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கிறது.</p>
<p>இந்த அறிகுறி நாடு இன்னும் அபாய நிலைமையில் காணப்படுவதை தெளிவாகக் காட்டுகிறது.</p>
<p>எனவே கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது.</p>
<p>எதிர்வரும் சில நாகளுக்கும் இதேபோன்று நூற்றுக்கும் அதிக மரணங்கள் பதிவாகும் நிலைமையே காணப்படும்.</p>
<p>ஆகவே ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு திறக்கப்பட்டால் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து விலகக்கூடாது என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/fall-in-deaths-sri-lanka-at-risk/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://tamilnaadi.com/news/disabling-the-country-will-not-control-the-epidemic/</link>
					<comments>https://tamilnaadi.com/news/disabling-the-country-will-not-control-the-epidemic/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Sep 2021 14:07:33 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hemanda herath]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=5873</guid>

					<description><![CDATA[நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! &#8211; சுகாதார அமைச்சு நாட்டை முடக்குவதனால் மட்டும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது, இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டை முடக்குவதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் முடக்கம் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! &#8211; சுகாதார அமைச்சு</h4>
<p>நாட்டை முடக்குவதனால் மட்டும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது, இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என <a href="http://www.health.gov.lk/moh_final/tamil/" target="_blank" rel="noopener">சுகாதார அமைச்சு</a> குறிப்பிட்டுள்ளது.</p>
<p>தற்போது அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டை முடக்குவதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் முடக்கம் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வழியில் மாத்திரமே உதவும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.</p>
<p>சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றாவிடில் நாட்டை முடக்குவது அர்த்தமற்றதாகிவிடும் என்று குறிப்பிட்ட அவர், வீதிகளில் தற்போது பயணிக்கும் வாகனங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/disabling-the-country-will-not-control-the-epidemic/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
