<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Helicopter Crash &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/helicopter-crash/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 15 Jun 2025 16:37:05 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Helicopter Crash &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியாவில் மீண்டும் ஒரு உலங்குவானூர்தி விபத்து! பயணித்த அனைவரும் பலி.. உடல்கள் மீட்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Jun 2025 16:37:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Accident]]></category>
		<category><![CDATA[Helicopter Crash]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Uttarakhand Helicopter Crash]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200059</guid>

					<description><![CDATA[புதிய இணைப்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்து 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விபத்தில் இறந்த எழுவரின் உடலையும் மீட்டுள்ளனர். கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சீரற்ற காலநிலையின் காரணமாக விமானியால் உலங்குவானூர்தியை இயக்க முடியாமல் போயுள்ளது. கவுரிகுந்த் என்ற பகுதி மீது உலங்குவானூர்தி பறந்து கொண்டிருந்த பொழுது மேலும் லெ்ல முடியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்ததால் நிலைமையை விமானியால் சமாளிக்க இயலவில்லை. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதிய இணைப்பு<br />
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்து 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.</p>
<p>உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விபத்தில் இறந்த எழுவரின் உடலையும் மீட்டுள்ளனர்.</p>
<p>கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சீரற்ற காலநிலையின் காரணமாக விமானியால் உலங்குவானூர்தியை இயக்க முடியாமல் போயுள்ளது.</p>
<p>கவுரிகுந்த் என்ற பகுதி மீது உலங்குவானூர்தி பறந்து கொண்டிருந்த பொழுது மேலும் லெ்ல முடியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்ததால் நிலைமையை விமானியால் சமாளிக்க இயலவில்லை.</p>
<p>சிறிது நேரத்தில் அந்த உலங்குவானூர்தி சிறிய மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, உலங்குவானூர்தி தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் பயணித்த எழுவரும் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>முதலாம் இணைப்பு<br />
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் &#8211; கவுரிகுந்த் அருகே இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இன்று காலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கி பயணித்த உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.</p>
<p>இதில் ஏழு பேர் பயணித்திருந்த நிலையில் ஐவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.</p>
<p>எனினும், தற்போது அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.</p>
<p>இந்த உலங்குவானூர்தி காணாமல் போனதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அறிவித்திருந்த நிலையில், தற்போது உலங்குவானூர்தி விபத்திற்குள்ளானதாக உத்தரகாண்ட் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p>
<p>இந்த உலங்குவானூர்தியில், ஒரு விமானி உள்ளிட்ட ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இந்த விமான விபத்திற்கு சீரற்ற காலநிலை ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இதேவேளை, கடந்த 12ஆம் திகதி குஜராத்தின் &#8211; அகமதாபாத்தில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்து உலக விமானப் போக்குவரத்துத் துறையை உலுக்கியிருந்தது.</p>
<p>இதில், விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்திருந்த நிலையில், ஒருவர் மாத்திரம் உயிர் பிழைத்திருந்ததுடன் ஏனைய அனைவரும் உயிரிழந்திருந்தனர்.</p>
<p>இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியதுடன், விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் என்று மொத்தம் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இவ்வாறான நிலையில், மீண்டும் இன்று காலை இந்தியாவில் இடம்பெற்ற இந்த உலங்குவானூர்தி விபத்து ஒருவித அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>12 பேருடன் பயணித்த பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்து</title>
		<link>https://tamilnaadi.com/news/local/bell-212-helicopter-has-crashed/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 09 May 2025 07:53:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bell 212 Helicopter Has Crashed]]></category>
		<category><![CDATA[Helicopter Crash]]></category>
		<category><![CDATA[Sri Lanka Air Force]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196650</guid>

					<description><![CDATA[ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். சிலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p>
<p>உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.</p>
<p>விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>சிலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p>
<p>இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உதிரி பாகம் கூட கிடைக்காத பழைய ஹெலிகாப்டர்., ஈரான் ஜனாதிபதியின் உயிரைப் பறித்த முக்கிய காரணி</title>
		<link>https://tamilnaadi.com/news/world/iranian-president-ebrahim-raisi/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 21 May 2024 05:48:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bell 212 helicopter]]></category>
		<category><![CDATA[Ebrahim Raisi helicopter crash]]></category>
		<category><![CDATA[ebrahim raisi president]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Helicopter Crash]]></category>
		<category><![CDATA[iran]]></category>
		<category><![CDATA[iran helicopter crash]]></category>
		<category><![CDATA[iran news]]></category>
		<category><![CDATA[iran president]]></category>
		<category><![CDATA[iran president dead]]></category>
		<category><![CDATA[iran president death news]]></category>
		<category><![CDATA[iran president ebrahim raisi]]></category>
		<category><![CDATA[iran president ebrahim raisi helicopter crash]]></category>
		<category><![CDATA[iran president helicopter]]></category>
		<category><![CDATA[iran president helicopter convoy]]></category>
		<category><![CDATA[iran president helicopter crash]]></category>
		<category><![CDATA[iran president update news]]></category>
		<category><![CDATA[iranian president]]></category>
		<category><![CDATA[Iranian President Ebrahim Raisi]]></category>
		<category><![CDATA[iranian president helicopter crash]]></category>
		<category><![CDATA[irans president ebrahim raisi]]></category>
		<category><![CDATA[president ebrahim raisi]]></category>
		<category><![CDATA[president of iran helicopter crash]]></category>
		<category><![CDATA[ஈரான் ஜனாதிபதியின் உயிரைப் பறித்த காலாவதியான Bell 212 ஹெலிகாப்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=140835</guid>

					<description><![CDATA[உதிரி பாகம் கூட கிடைக்காத பழைய ஹெலிகாப்டர்., ஈரான் ஜனாதிபதியின் உயிரைப் பறித்த முக்கிய காரணி ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) பயன்படுத்திய பெல் 212 ஹெலிகாப்டர் (Bell 212 helicopter) மிகவும் பழமையானது என தெரியவந்துள்ளது. இந்த பெல் 212 ஹெலிகாப்டர் 1960களில் தயாரிக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் ஈரானிய புரட்சிக்கு முன்னர் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1960-களில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>உதிரி பாகம் கூட கிடைக்காத பழைய ஹெலிகாப்டர்., ஈரான் ஜனாதிபதியின் உயிரைப் பறித்த முக்கிய காரணி</h4>
<p>ஈரான் <a href="https://tamilnaadi.com/news/world/2024/05/21/un-security-council-s-tribute-to-iran-s-president/">ஜனாதிபதி</a> இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) பயன்படுத்திய பெல் 212 ஹெலிகாப்டர் (Bell 212 helicopter) மிகவும் பழமையானது என தெரியவந்துள்ளது.</p>
<p>இந்த பெல் 212 ஹெலிகாப்டர் 1960களில் தயாரிக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் ஈரானிய புரட்சிக்கு முன்னர் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>1960-களில் இருந்து இயங்கி வரும் அந்த ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை கண்டுபிடிப்பது கடினம்.</p>
<p>உதிரி பாகங்கள் கிடைக்காததே ஹெலிகாப்டர் கீழே விழுந்ததற்கு காரணம் என அமெரிக்க ராணுவ ஆய்வாளர் செட்ரிக் லைடன் தெரிவித்துள்ளார்.</p>
<p>பெல் 212 ஹெலிகாப்டர் ஷா ஆட்சியில் ஈரானில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1976-இல் வணிக பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்டது.</p>
<p>அந்த ஹெலிகாப்டரை அமெரிக்க ராணுவமும் பயன்படுத்தியது. 1960 முதல் பயன்பாட்டில் உள்ள ஹெலிகாப்டர்களுக்கு தற்போது உதிரி பாகங்கள் இல்லை என்று ராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>வடமேற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக நிலவும் வானிலையும் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது. அடர்ந்த பனி, மழை மற்றும் குளிர் காலநிலை காரணமாக ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.</p>
<p>பெல் ஹெலிகாப்டர் நிறுவனம் இப்போது Bell Textron என்று அழைக்கப்படுகிறது.</p>
<p>பெல் 212 ஹெலிகாப்டர் 1960-இல் கனேடிய இராணுவத்திற்காக உருவாக்கப்பட்டது. இது UH-1 Iroquois-க்கு மேம்படுத்தப்பட்டதாக உருவாக்கப்பட்டது. புதிய வடிவமைப்பில் இரண்டு டர்போ என்ஜின்கள் உள்ளன.</p>
<p>1971-ஆம் ஆண்டில், பெல் ஹெலிகாப்டர் அமெரிக்க மற்றும் கனேடிய இராணுவத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.</p>
<p>பெல் 212 ஒரு பயன்பாட்டு ஹெலிகாப்டர் என்று அழைக்கப்படுகிறது. இது எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். இது பயணிகள், வான்வழி தீ அணைப்பு, சரக்கு மற்றும் ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.</p>
<p>ஆனால் ஈரானில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மொடல் அரசு பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p>
<p>பெல் 212 ஹெலிகாப்டர் ஜப்பான் கடலோர காவல்படை, அமெரிக்க பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு துறை ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிறது. தாய்லாந்தின் தேசிய காவல்துறையும் இதைப் பயன்படுத்துகிறது.</p>
<p>ஆனால், ஈரான் அரசிடம் எத்தனை பெல் 212 ஹெலிகாப்டர்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் கமாண்ட் விமானப்படை மற்றும் கடற்படையிடம் 10 ஹெலிகாப்டர்கள் உள்ளன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈரானில் 50 நாட்களுக்குள் தேர்தல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/who-is-next-president-in-iran-raisi-to-mokhber/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 20 May 2024 08:01:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ebrahim Raisi]]></category>
		<category><![CDATA[ebrahim raisi president]]></category>
		<category><![CDATA[Helicopter Crash]]></category>
		<category><![CDATA[iran]]></category>
		<category><![CDATA[iran helicopter accident]]></category>
		<category><![CDATA[iran helicopter crash]]></category>
		<category><![CDATA[iran news]]></category>
		<category><![CDATA[iran president]]></category>
		<category><![CDATA[iran president death]]></category>
		<category><![CDATA[iran president ebrahim raisi]]></category>
		<category><![CDATA[iran president helicopter]]></category>
		<category><![CDATA[iran president helicopter accident]]></category>
		<category><![CDATA[iran president helicopter crash]]></category>
		<category><![CDATA[iran president missing]]></category>
		<category><![CDATA[irani president]]></category>
		<category><![CDATA[iranian president helicopter crash]]></category>
		<category><![CDATA[irans president ebrahim raisi]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<category><![CDATA[president of iran helicopter crash]]></category>
		<category><![CDATA[Who Is Next President In Iran Raisi To Mokhber]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=140636</guid>

					<description><![CDATA[ஈரானில் 50 நாட்களுக்குள் தேர்தல்! ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, துணை ஜனாதிபதி முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு அஜர்பைஜானி எல்லையில் உள்ள மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்து இருப்பது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உடன் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஈரானில் 50 நாட்களுக்குள் தேர்தல்!</h4>
<p>ஈரானிய ஜனாதிபதி<a href="https://tamilnaadi.com/news/world/2024/05/20/iran-president-ebrahim-raisi-dies-helicopter-crash/"> இப்ராஹிம் ரைசி</a> ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, துணை ஜனாதிபதி முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என தெரியவந்துள்ளது.</p>
<p>ஞாயிற்றுக்கிழமை இரவு அஜர்பைஜானி எல்லையில் உள்ள மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்து இருப்பது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>மேலும் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உடன் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>கடும் பனிமூட்டம் காரணமாக ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டர் மலை உச்சியில் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையில் 69 வயது துணை ஜனாதிபதி முகமது மொக்பர் ஈரான் நாட்டின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்று தெரியவந்துள்ளது.</p>
<p>நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனியுடன் நெருக்கிய தொடர்பு இருப்பதுடன், முகமது மொக்பர் அரசியல் அனுபவமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>50 நாட்களுக்கு தேர்தல் இதற்கிடையில் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணிகளை 50 நாட்களுக்குள் நடத்தி முடிக்கும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்கு தேர்ந்தெடுக்கும் பணிகளை முகமது மொக்பர், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப், நாட்டின் உச்சநீதிமன்ற தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி ஆகியோர் அடங்கிய கவுன்சில் குழு மேற்கொண்டு வருகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
