<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Government of India &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/government-of-india/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 30 Sep 2025 06:36:17 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Government of India &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வேண்டுமென்றே தாமதமாக சென்ற விஜய்.. வெளியான பரபரப்பு தகவல்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/vijay-tvk-karur-stampede-namakkal-rally-police/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 06:36:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[karur]]></category>
		<category><![CDATA[Namakkal]]></category>
		<category><![CDATA[Thamizhaga Vetri Kazhagam]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[Vijay Tvk Karur Stampede Namakkal Rally Police]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201459</guid>

					<description><![CDATA[கரூரில் நடந்த தவெக கட்சியின் பேரணிக்கு முன்னர் நாமக்கல்லில் நடந்த விஜய்யின் கூட்டத்தில் அசாதாரண சூழல் குறித்து எச்சரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளப்படவில்லை என தமிழ்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பேரணி, கடந்த சனிக்கிழமை கரூரில் இடம்பெற்றிருந்த நிலையில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பில் தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு முன்னதாக நாமக்கல்லில் இடம்பெற்ற தவெகவின் பேரணி குறித்து தமிழ்நாட்டு பொலிஸார் தகவல்களை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கரூரில் நடந்த தவெக கட்சியின் பேரணிக்கு முன்னர் நாமக்கல்லில் நடந்த விஜய்யின் கூட்டத்தில் அசாதாரண சூழல் குறித்து எச்சரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளப்படவில்லை என தமிழ்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>தமிழக வெற்றிக் கழகத்தின் பேரணி, கடந்த சனிக்கிழமை கரூரில் இடம்பெற்றிருந்த நிலையில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.</p>
<p>இச்சம்பவம் தொடர்பில் தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு முன்னதாக நாமக்கல்லில் இடம்பெற்ற தவெகவின் பேரணி குறித்து தமிழ்நாட்டு பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p>
<p>அதன்படி, நாமக்கல்லில் இடம்பெற்ற கூட்டத்திற்கு விஜய் வேண்டுமென்றே தாமதமாக வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>கரூருக்கு முன்னதாக நாமக்கல்லில் நடைபெற்ற பிரசாரத்திலும் பலர் மயக்கம் அடைந்ததாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>நாமக்கல் கூட்டத்திற்கு, சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு விஜய் வருவார் என கூறிவிட்டு பிற்பகல் 2.45 மணிக்குத்தான் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>அதன் காரணமாக, விஜய் காலை 8.45 மணிக்கு வந்துவிடுவார் என நினைத்து ஏராளமான மக்கள் காலை முதலே குறித்த இடத்தில் கூடியதாகவும் கூறப்படுகின்றது.</p>
<p>அது மாத்திரமன்றி, நாமக்கல்லில் ஆங்காங்கே பேருந்தை நிறுத்தி விஜய் வேண்டும் என்றே தாமதம் செய்தார் எனவும் விஜய் கால தாமதம் செய்ததால் கட்டுக்கு அடங்காமல் கூட்டம் கூடி பொலிஸாருக்கு கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>விஜய் காலதாமதம் செய்தால் கூட்டத்தில் மக்களுக்கு மூச்சுத்திணறல், கொடுங்காயம், உயிரிழப்பு ஏற்படும் என்று பொலிஸார் எச்சரித்தும் தவெகவின் கொள்கை பரப்பு செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதனை கண்டுக்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதம் செய்ததாகவும் நாமக்கல்லில் இடம்பெற்ற விஜய்யின் பேரணி தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் தமிழ் நாட்டு பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இவ்விடயம் தற்போது தமிழ்நாட்டை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ள கரூர் பேரணியின் 41பேர் உயிரிழப்பு விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/selvam-adaikalanathan-met-deputy-high-commissioner/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jul 2025 18:22:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Selvam Adaikalanathan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201125</guid>

					<description><![CDATA[இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் (01) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், மாந்தை மேற்கு பிரதே சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார், வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், மன்னார் நகர சபை உறுப்பினர் செபமாலை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் (01) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.</p>
<p>குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், மாந்தை மேற்கு பிரதே சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார், வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், மன்னார் நகர சபை உறுப்பினர் செபமாலை ஆரோக்கியநாதன் பிகிறாடோ, மன்னார் பிரதேச சபை உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p>குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், காங்கேசன்துறையில் கப்பல் கட்டுவதற்கு சிறிய நிலையம் ஒன்றை அமைத்தல், மன்னாரில் நவீன முறையில் விளையாட்டு மைதானம் அமைத்தல், மாந்தை மேற்கில் உள்ளக விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்தல், மன்னார் பிரதேச சபை பிரிவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தேவையான உதவிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p>
<p>இதன்போது தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோளை இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி ஏற்றுக் கொண்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/india-pakistan-ceasefire-extended-till-may-18/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 16 May 2025 06:29:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[India Pakistan Ceasefire Extended Till May 18]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Pakistan India]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197441</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானும் இந்தியாவும், 2025 மே 18 வரை தற்போதைய போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இணங்கியதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் டார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டார், இரண்டு நாடுகளின் இராணுவத்தினரும் முன்னதாகவே தொடர்பு கொண்டு, போர் நிறுத்தத்தை நீடிக்கும் முடிவை எட்டியதாகவும், அதைத் தொடர்ந்து அரசியல் உரையாடலைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் முதலில் மே 10 முதல் மே 12 வரை நீடிக்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. பின்னர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானும் இந்தியாவும், 2025 மே 18 வரை தற்போதைய போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இணங்கியதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் டார் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டார், இரண்டு நாடுகளின் இராணுவத்தினரும் முன்னதாகவே தொடர்பு கொண்டு, போர் நிறுத்தத்தை நீடிக்கும் முடிவை எட்டியதாகவும், அதைத் தொடர்ந்து அரசியல் உரையாடலைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p>
<p>போர் நிறுத்த ஒப்பந்தம் முதலில் மே 10 முதல் மே 12 வரை நீடிக்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. பின்னர் அது மே 14 வரை நீடிக்கப்பட்டது, இப்போது மே 18 வரை நீடிக்கப்பட்டது என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>போர் நிறுத்தத்தை பராமரிப்பதில் இதுவரை இராணுவ அளவிலான தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தநிலையில் மே 18 க்குப் பின்னர், விரிவான அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்று டார் கூறியுள்ளார்.</p>
<p>இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரில் அமைந்துள்ள பஹல்காமில் கடந்த மாதம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 ஆம் திகதி அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள பல இலக்குகள் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்திய போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்தன.</p>
<p>இதனையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான சண்டையைத் தொடர்ந்து, மே 10 அன்று இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போர்நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து மீள் எழுப்பப்படும் ஓபரேஷன் சிந்தூர் விவகாரம்.. இந்திய அரசியல் தரப்பின் கோரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/world/india-pakistan-ceasefire-rahul-gandhi-writes-to-pm/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 12 May 2025 04:51:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India Pakistan Ceasefire Rahul Gandhi Writes To Pm]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196970</guid>

					<description><![CDATA[இந்திய &#8211; பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கிய கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் ஓபரேஷன் சிந்தூர் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் முதலில் போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்பதையும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஓபரேஷன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய &#8211; பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கிய கடிதம் எழுதியுள்ளார்.</p>
<p>குறித்த கடிதத்தில் ஓபரேஷன் சிந்தூர் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் முதலில் போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்பதையும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஓபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முதன்முதலில் அறிவித்த இன்றைய போர்நிறுத்தம் குறித்து மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம் என ராகுல் காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், இது எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமது கூட்டு உறுதியை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் தீவிரமாகவும் விரைவாகவும் பரிசீலிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் காந்தி பதிவு செய்துள்ளார்.</p>
<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும், ஓபரேஷன் சிந்தூரின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தும் அரசாங்கம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.</p>
<p>முக்கியமான இந்த இரண்டு கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. இந்த இரண்டு கூட்டங்களிலும், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்க அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவை உறுதியளித்தன.</p>
<p>இந்தியா &#8211; பாகிஸ்தான் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் முன்னேற்றமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரு தரப்பினரும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அறிவித்தார்.</p>
<p>இதனையடுத்து அமெரிக்க வெளிவிவகரா செயலாளர் மார்கோ ரூபியோ போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்த இரு அறிவிப்புகளுக்கும் பின்னர், சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி போர் நிறுத்தம் தொடர்பில் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டெல்லி விமான சேவையில் பாதிப்பு.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/world/india-pak-war-ceasefire-delhi-airport/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 11 May 2025 13:16:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India Pak War Ceasefire Delhi Airport]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196872</guid>

					<description><![CDATA[இந்திய (India) &#8211; பாகிஸ்தான் (Pakistan) போர் பதற்றம் காரணமாக புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து சீராக நடப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிஉயர் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு விமான நிலைய நிர்வாக சேவை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விமான நிலையம், &#8220;வளர்ந்து வரும் வான்வெளி இயக்கவியல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய (India) &#8211; பாகிஸ்தான் (Pakistan) போர் பதற்றம் காரணமாக புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து சீராக நடப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆனால், அதிஉயர் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு விமான நிலைய நிர்வாக சேவை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விமான நிலையம், &#8220;வளர்ந்து வரும் வான்வெளி இயக்கவியல் மற்றும் சிவில் விமானப் பாதுகாப்பு பணியகத்தால் கட்டளையிடப்பட்ட அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகளின் வெளிச்சத்தில், விமான அட்டவணைகளில் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் நீண்ட காத்திருப்பு நேரங்கள் இருக்கலாம்&#8221; என்று கூறியுள்ளது.</p>
<p>எனவே, பயணிகள் முன்கூட்டிய திட்டமிடலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தாமதங்களைச் சமாளிக்க பயணிகள் முன்கூட்டியே வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய &#8211; பாகிஸ்தான் போரில் புதிய திருப்பம்.. பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/india-pakistan-ceasefire-india-attack/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 11 May 2025 13:11:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[India Pakistan Ceasefire India Attack]]></category>
		<category><![CDATA[India World]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196858</guid>

					<description><![CDATA[இந்தியாவுடன் ஆக்கபூர்வமான ராஜதந்திரத்தில் ஈடுபட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் தகராறு உட்பட அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான வழிகளில் தீர்க்க விரும்புவதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்நிறுத்தம் உடன்பட்ட சில மணிநேரங்களில் வெளியிடப்பட்ட நீண்ட எழுத்துப்பூர்வ அறிக்கை, அண்மைய நாட்களில் இஸ்லாமாபாத்தின் நடவடிக்கைகள் மற்றும் நோக்கங்களை விளக்கவும் தெளிவுபடுத்தவும் முயன்றது. &#8220;இந்தியாவின் வெளிப்படையான ஆக்கிரமிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை எதிர்கொண்ட போதிலும், பாகிஸ்தான் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவுடன் ஆக்கபூர்வமான ராஜதந்திரத்தில் ஈடுபட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.</p>
<p>ஜம்மு-காஷ்மீர் தகராறு உட்பட அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான வழிகளில் தீர்க்க விரும்புவதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்நிறுத்தம் உடன்பட்ட சில மணிநேரங்களில் வெளியிடப்பட்ட நீண்ட எழுத்துப்பூர்வ அறிக்கை, அண்மைய நாட்களில் இஸ்லாமாபாத்தின் நடவடிக்கைகள் மற்றும் நோக்கங்களை விளக்கவும் தெளிவுபடுத்தவும் முயன்றது.</p>
<p>&#8220;இந்தியாவின் வெளிப்படையான ஆக்கிரமிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை எதிர்கொண்ட போதிலும், பாகிஸ்தான் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்தது.</p>
<p>இருப்பினும், அதன் மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது&#8221; என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றம் ஏற்படுவதைத் தடுப்பதில் சர்வதேச சமூகம் தனது பங்கை ஆற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் மீண்டும் வன்முறையில் பாகிஸ்தான்.. இந்தியா முன்வைக்கும் கடுமையான குற்றச்சாட்டு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/india-pak-war-understanding-deal-india-blames-pak/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 11 May 2025 13:11:17 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India Pak War Understanding Deal India Blames Pak]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196857</guid>

					<description><![CDATA[இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் சற்று முன்னர் வெளியிட்ட கருத்தில், &#8220;கடந்த சில மணிநேரங்களாக, இன்று மாலையில் நாங்கள் அடைந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வருகிறது. இது இன்று எட்டப்பட்ட தீர்மானத்தை மீறுவதாகும். எனவே, இந்தியாவின் ஆயுதப் படைகள் பொருத்தமான பதிலடியை அளித்து வருகின்றன&#8221; என்று மிஸ்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும், &#8220;இந்த மீறல்களை நிவர்த்தி செய்வதற்கும், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் சற்று முன்னர் வெளியிட்ட கருத்தில்,</p>
<p>&#8220;கடந்த சில மணிநேரங்களாக, இன்று மாலையில் நாங்கள் அடைந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வருகிறது. இது இன்று எட்டப்பட்ட தீர்மானத்தை மீறுவதாகும்.</p>
<p>எனவே, இந்தியாவின் ஆயுதப் படைகள் பொருத்தமான பதிலடியை அளித்து வருகின்றன&#8221; என்று மிஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், &#8220;இந்த மீறல்களை நிவர்த்தி செய்வதற்கும், நிலைமையை தீவிரமாகவும் பொறுப்புடனும் கையாளுவதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொள்கிறது&#8221; என்று மிஸ்ரி தெரிவித்துள்ளார்.</p>
<p>காஷ்மீரில் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர்நிறுத்த மீறல்களை வலுவாகக் கையாள இந்திய இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>அத்துடன், மிஸ்ரியின் குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் இன்னும் பகிரங்கமாக பதிலளிக்காத நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இன்று இது தொடர்பில் உரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய &#8211; பாகிஸ்தான் போர் பதற்றம்: இந்தியாவின் 32 விமான நிலையங்கள் மூடல்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/india-pak-war-32-indian-airports-are-closed/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 10 May 2025 15:12:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India Pak War 32 Indian Airports Are Closed]]></category>
		<category><![CDATA[Indian Army]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196792</guid>

					<description><![CDATA[இந்திய- பாகிஸ்தான் போர் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகிறது இந்தியாவின் எல்லையோர நகரங்கள் மீது பாகிஸ்தானின் தொடர்ந்தும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அந்த ட்ரோன்களை தாம் வானிலேயே தகர்த்து வருவதாக இந்தியா தெரிவித்து வருகிறது. இதன்படி பாகிஸ்தான் இந்தியாவின் காஸ்மீர் முதல் குஜராத் வரையிலான மாநிலங்களின் பல நகரங்களை நோக்கி தமது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக,பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இன்று அதிகாலை இந்திய இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய- பாகிஸ்தான் போர் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகிறது இந்தியாவின் எல்லையோர நகரங்கள் மீது பாகிஸ்தானின் தொடர்ந்தும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அந்த ட்ரோன்களை தாம் வானிலேயே தகர்த்து வருவதாக இந்தியா தெரிவித்து வருகிறது.</p>
<p>இதன்படி பாகிஸ்தான் இந்தியாவின் காஸ்மீர் முதல் குஜராத் வரையிலான மாநிலங்களின் பல நகரங்களை நோக்கி தமது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக,பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இன்று அதிகாலை இந்திய இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் உள்ள நுர்கான், முரித், ரபிக் விமான தளங்களை இந்திய இராணுவம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் மூலமாக தாக்கியுள்ளது.</p>
<p>இதனை பாகிஸ்தானும் உறுதிப்படுத்தியுள்ளது தமது, மூன்று விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகக் பாகிஸ்தான் கூறியுள்ளது.</p>
<p>அதில் ஒன்று தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகரில் உள்ள இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் உள்ளது என்றும் பாகிஸ்தானிய இராணுவம் அறிவித்துள்ளது.</p>
<p>இந்தநிலையில் இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு எதிராக தமது தாக்குதல்களுக்காக காத்திருக்குமாறு பாகிஸ்தானின் இராணுவப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.</p>
<p>இதற்கிடையில் பஞ்சாப்பில் அமைந்துள்ள அமிர்தசரஸ், பொற்கோவில் மீதான பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை இந்திய இராணுவம்; முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அமிர்தசரஸ் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள முக்கிய நகரம் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பை இந்திய இராணுவம் வழங்கி வருகிறது. இதற்கிடையில் பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக, எல்லை மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களை மூட, இந்திய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது</p>
<p>2025 மே 9 முதல் மே 15 காலை 5.29 மணி வரை இந்த விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேவேளை பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக காஸ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய எல்லையோர மாநில மக்கள் பாதுகாப்புக்கருதி பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.</p>
<p>ஜம்மு: காஸ்மீரின் பாராமுல்லாவில் இருந்து குஜராத்தின் கட்ச் பகுதி வரை, 26 இந்திய நகரங்களை குறி வைத்து, பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையங்கள் மீது பாகிஸ்தானின் தாக்குதல்..இந்தியாவின் அதிரடி நகர்வு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/india-pak-war-awantipora-air-base-attack/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 10 May 2025 08:29:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India Pak War Awantipora Air Base Attack]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196713</guid>

					<description><![CDATA[இந்தியாவின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபோரா விமான தளத்தின் மீது பாகிஸ்தான் நடத்த முற்பட்ட ட்ரோன் தாக்குதலை இந்தியா தடுத்துள்ளது. பாகிஸ்தான் இராணுவம் ஸ்ரீநகர் மற்றும் தென் காஷ்மீரின் அவந்திபோரா விமான தளத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இருப்பினும், இந்தியா தனது அதிநவீன வான்வழி பாதுகாப்பு அமைப்புக்கள் மூலம் இந்த முயற்சியை வெற்றிகரமாக தடுத்து விட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை, ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபோரா விமான தளத்தின் மீது பாகிஸ்தான் நடத்த முற்பட்ட ட்ரோன் தாக்குதலை இந்தியா தடுத்துள்ளது.</p>
<p>பாகிஸ்தான் இராணுவம் ஸ்ரீநகர் மற்றும் தென் காஷ்மீரின் அவந்திபோரா விமான தளத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது.</p>
<p>இருப்பினும், இந்தியா தனது அதிநவீன வான்வழி பாதுகாப்பு அமைப்புக்கள் மூலம் இந்த முயற்சியை வெற்றிகரமாக தடுத்து விட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இன்று மாலை, ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பல இடங்களில் வெடிப்பு சத்தங்கள் எழுந்துள்ளன.</p>
<p>அத்துடன், சைரன் ஒலியும் ஒலிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின்தடையும் நடைமுறைபடுத்தப்பட்டது.</p>
<p>இந்த தாக்குதல் கடந்த மூன்று நாட்களில் பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பாரிய முயற்சியாகும்.</p>
<p>வெள்ளிக்கிழமை மட்டும் இந்தியாவிலுள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்ரீநகர், பரமுல்லா, ஜம்மு, நாக்ரோட்டா, பத்தான்கோட், ஜைசல்மேர், பார்மர் உள்ளிட்டவை அடங்கும்.</p>
<p>கடந்த சில நாட்களில் 36 இடங்களில் பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களை இந்திய இராணுவம் தடுத்து, பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.</p>
<p>பாகிஸ்தான் பக்க எல்லைப் பகுதிகளில் மூன்று நாட்களாக மோதி தாக்குதல் மற்றும் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.</p>
<p>இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் &#8211; ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து பல்வேறு வழிகளில் இந்திய இராணுவ கட்டிடங்களை குறிவைத்து தாக்க முயன்றாலும், இந்தியா அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.</p>
<p>அதேவேளை, பாதுகாப்பு காரணமாக இந்தியா தற்காலிகமாக 24 விமான நிலையங்களை மே 150ஆம் திகதி காலை வரை மூடியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா &#8211; பாகிஸ்தான் : 2025 சக்தி வாய்ந்த இராணுவத்தை கொண்ட நாடு இதுதான்..!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/india-vs-pakistan-military-strength-2025-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 08:45:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India Vs Pakistan Military Strength 2025 In Tamil]]></category>
		<category><![CDATA[Jammu And Kashmir]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196311</guid>

					<description><![CDATA[ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான விரிசில் பாரிய போராக மாறும் தருவாயில் உள்ளது. போர் ஒன்று உருவாகும் பட்சத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ பலம் மிக முக்கியமான ஒரு விடயமாகும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு, இந்தியா உலக இராணுவ தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளதுடன், பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் செயல்பாட்டில் இராணுவ வீரர்கள் 1.46 மில்லியனும், இருப்பில் 1.15 மில்லியன் வீரர்களும் உள்ள நிலையில், பாகிஸ்தானின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான விரிசில் பாரிய போராக மாறும் தருவாயில் உள்ளது.</p>
<p>போர் ஒன்று உருவாகும் பட்சத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ பலம் மிக முக்கியமான ஒரு விடயமாகும்.</p>
<p>அந்த வகையில், 2025ஆம் ஆண்டு, இந்தியா உலக இராணுவ தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளதுடன், பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது.</p>
<p>இந்தியாவின் செயல்பாட்டில் இராணுவ வீரர்கள் 1.46 மில்லியனும், இருப்பில் 1.15 மில்லியன் வீரர்களும் உள்ள நிலையில், பாகிஸ்தானின் இராணுவம் 654,000 வீரர்களுடன், 500,000 துணை வீரர்களையும் கொண்டுள்ளது.</p>
<p>அத்துடன், இந்தியா 2026 நிதியாண்டில் $79 பில்லியன் என்ற வலுவான பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை ஒதுக்கியுள்ளதுடன், பாகிஸ்தான் வெறும் $7.6 பில்லியன் மட்டுமே ஒதுக்கியுள்ளது.</p>
<p>இந்தியா 4,200க்கும் மேற்பட்ட யுத்த டாங்கிகளை வைத்திருப்பதுடன் அந்த அளவில் பாதியாக பாகிஸ்தான் 2,627 டாங்கிகளை வைத்துள்ளது.</p>
<p>இதேவேளை, பாகிஸ்தானின் கவச வாகனங்களை விடவும் இந்தியா மூன்று மடங்கு கவச வாகனங்களை வைத்திருக்கின்ற நிலையில், அந்த எண்ணிக்கை 148,594 ஆக பதிவாகியுள்ளது.</p>
<p>இந்தியா 2,229 இராணுவ விமானங்களை இயக்குகிறது, அதில் 513 போர் விமானங்கள் அடங்கும், பாகிஸ்தானிடம் 1,399 விமானங்களும், 328 போர் விமானங்களும் உள்ளன.</p>
<p>அத்தோடு, இந்தியா 899 உலங்குவானூர்திகளை கொண்டுள்ளதுடன், 6 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களும் உள்ளன, இதேவேளை, பாகிஸ்தானிடம் 373 உலங்குவானூர்திகளும் 4 எரிபொருள் நிரப்பும் விமானங்களும் உள்ளன.</p>
<p>இந்தியாவின் கடற்படையில் 293 கப்பல்களும், 2 விமானம் தாங்கிக் கப்பல்களும், 18 நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன.பாகிஸ்தானின் கடற்படையில் 121 கப்பல்களும், 8 நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன.</p>
<p>அத்துடன், இந்தியா 5,200 கி.மீ. சென்று துல்லியமாக தாக்கக் கூடிய அக்னி-V போன்ற ஏவுகணைகளை வைத்துள்ளதுடன், அக்னி-VI மேம்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது.</p>
<p>இதேவளை, பாகிஸ்தான் சுமார் 2,750 கி.மீ. சென்று தாக்கக்கூடிய ஷாஹீன்-III ஏவுகணையை வைத்திருப்பதுடன், சீனா மற்றும் பெலாரஸின் தொழில்நுட்ப ஆதரவுடன் மேலும் அதன் வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியில் உள்ளது.</p>
<p>ஆண்டுதோறும் இந்தியாவில் 24 மில்லியன் இளைஞர்கள் ராணுவ வயதை அடைகிறார்கள், இது அதன் ஆட்சேர்ப்பு திறனை வலுப்படுத்துவதுடன், அதன் 2.5 மில்லியன் துணை ராணுவம் உள்நாட்டு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்த்து வருகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
