<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>gotaphaya rajapaksa &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/gotaphaya-rajapaksa/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 19 Mar 2023 10:00:00 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>gotaphaya rajapaksa &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கோட்டாவை விரட்டியது பெண்களே!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/gotta-chased-away-girls/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/gotta-chased-away-girls/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Mar 2023 10:00:00 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[hirunika-premachandra]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=71039</guid>

					<description><![CDATA[&#8220;ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் &#8211; ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்&#8221; என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, &#8221; ஶ்ரீலங்கா [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் &#8211; ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்&#8221; என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார்.</p>
<p>தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>அவர் மேலும் கூறியவை வருமாறு,</p>
<p>&#8221; ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியாது. ஏனெனில் தோல்வி உறுதியாகியுள்ளது. அதனால்தான் தேர்தலை பிற்போடும் முயற்சியில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது.</p>
<p>தேர்தல் இல்லை என்பதற்காக நாம் ஒரு அடியேனும் பின்வாங்கிவிடக்கூடாது. அவ்வாறு நடந்தால் ஏனையக் கட்சிகள் இரு அடி முன்நோக்கி நகரக்கூடும். எமது பிரச்சாரத்தை தொடர வேண்டும். நாளொன்றுக்கு 5 புதிய வாக்காளர்களையாவது நாம் எம்பக்கம் இழுக்க வேண்டும்.</p>
<p>ரணில் விக்கிரமசிங்க எந்நேரத்தில் எந்த முடிவை எடுப்பார் என்றும் தெரியாது. சிலவேளை அவசர தேர்தலொன்றுக்கு செல்லாம். தேர்தல் இல்லையென நாம் ஒதுங்கியிருந்தால் அவ்வேளையில் எமக்கு சிக்கல் ஏற்படும். எனவேதான் தயார் நிலையில் இருக்குமாறு கோருகின்றேன்.</p>
<p>ரணில் விக்கிரமசிங்கவை தமிழ், முஸ்லிம் மக்களும் நம்பினர். ஆனால் ராஜபக்சக்களை காப்பாற்றப்போய் அவர் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார். தற்போது மக்கள் மனம் வென்ற ஒரே தலைவர் சஜித் பிரேமதாசதான். அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. வாங்கும் சம்பளத்தை மக்களுக்கே வழங்கிவருகின்றார்.</p>
<p>கோட்டாபய ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பு உள்ளிட்ட பெண்களே விரட்டினர். ரணிலையும் விரட்டுவதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். அதுமட்டுமல்ல சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி கதிரையில் பெண்கள் சக்தியே அமர வைக்கும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.&#8221; &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/gotta-chased-away-girls/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கோட்டாவுக்கு அழைப்பாணை!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/invitation-to-gotta/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/invitation-to-gotta/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 09:12:50 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=66625</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, டிசெம்பர் 16 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை பிறப்பித்துள்ளது. மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ், பொதுமன்னிப்பு வழங்கியமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, டிசெம்பர் 16 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை பிறப்பித்துள்ளது.</p>
<p>மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ், பொதுமன்னிப்பு வழங்கியமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p>
<p>இதன்போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/invitation-to-gotta/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அரசியல் ஆதாயத்துக்காக சுதந்திரக் கட்சி பயன்படுத்தப்படுகிறது!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/independence-party-is-being-used-for-political-gain/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/independence-party-is-being-used-for-political-gain/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 09:08:42 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chandirika bandaranayakke kumarathunga]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[rajapaksa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=66623</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்வதற்கு ராஜபக்ச குழாம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே 2019 ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுகளை நான் நம்புகிறேன். எனினும், இந்த விஷயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றார். #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்வதற்கு ராஜபக்ச குழாம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>
<p>ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே 2019 ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது.<br />
தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.</p>
<p>அந்த குற்றச்சாட்டுகளை நான் நம்புகிறேன். எனினும், இந்த விஷயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/independence-party-is-being-used-for-political-gain/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாட்டை மீட்டெடுக்க ராஜக்சக்கள் இடமளிக்கார்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-rajaschas-will-give-way-to-restore-the-country/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-rajaschas-will-give-way-to-restore-the-country/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Oct 2022 15:30:52 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Basil Rajapaksa]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[Kumara Welgama]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=64149</guid>

					<description><![CDATA[மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ள காரணத்தால், ராஜக்சக்கள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினம் என்று புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார். ராஜபக்சக்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் எதிர்பார்த்த உதவிகள் இதுவரை கிடைக்கப்பெறாததால் எதிர்வரும் வருடம் மேலும் நெருக்கடிகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார். தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான திறமை இருந்தாலும் ராஜக்சக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ள காரணத்தால், ராஜக்சக்கள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினம் என்று புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.</p>
<p>ராஜபக்சக்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் எதிர்பார்த்த உதவிகள் இதுவரை கிடைக்கப்பெறாததால் எதிர்வரும் வருடம் மேலும் நெருக்கடிகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.</p>
<p>தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான திறமை இருந்தாலும் ராஜக்சக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.</p>
<p>ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும், ஆனால் அதற்கு ராஜபக்சர்கள் இடமளிக்க கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.</p>
<p>ராஜபக்ஷர்கள் நெருங்கினால், எந்த நேரத்திலும் ஜனாதிபதி ரணில் பின்வாங்க நேரிடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-rajaschas-will-give-way-to-restore-the-country/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நெருக்கடி நிலைக்கு பொருளாதார நிபுணர்களே காரணம்!!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/economists-are-responsible-for-the-crisis/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/economists-are-responsible-for-the-crisis/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Oct 2022 17:10:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[economic crisis]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahindananda Aluthgamage]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=63127</guid>

					<description><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு பொருளாதார நிபுணர்கள் வழங்கிய தவறான ஆலோசனையினாலேயே பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், கோட்டாபய ராஜபக்ச நல்லெண்ண அடிப்படையில் மக்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கியதாகவும் ஆனால் அது மோசமான பக்கமாக மாறிவிட்டது எனவும் குறிப்பிட்டார். &#160; #srilankanews]]></description>
										<content:encoded><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு பொருளாதார நிபுணர்கள் வழங்கிய தவறான ஆலோசனையினாலேயே பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது.</p>
<p>இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>மேலும், கோட்டாபய ராஜபக்ச நல்லெண்ண அடிப்படையில் மக்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கியதாகவும் ஆனால் அது மோசமான பக்கமாக மாறிவிட்டது எனவும் குறிப்பிட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>#srilankanews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/economists-are-responsible-for-the-crisis/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ராஜபக்சக்களுக்கு எதிரான மனு விசாரணைக்கு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/petition-hearing-against-the-rajapaksas/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/petition-hearing-against-the-rajapaksas/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Oct 2022 09:29:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Basil Rajapaksa]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=63053</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இவர்களுக்கு எதிராக குறித்த இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, நீச்சல் சாம்பியன் ஜூலியன் போலிங் உள்ளிட்டோரால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இவர்களுக்கு எதிராக குறித்த இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p>
<p>இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, நீச்சல் சாம்பியன் ஜூலியன் போலிங் உள்ளிட்டோரால் அதில் ஒரு அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்ட்டிருந்ததுடன், மற்றைய மனுவை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் மஹீம் மெண்டிஸ் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்திருந்தனர்.</p>
<p>இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>#srilankanews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/petition-hearing-against-the-rajapaksas/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அயோமா ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல்! &#8211; சந்தேக நபருக்கு பிணை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/threat-to-ayoma-rajapaksa-bail-for-suspect/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/threat-to-ayoma-rajapaksa-bail-for-suspect/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Sep 2022 04:59:23 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ayoma Rajapaksa]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=62632</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல் விடுத்து 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். கொலன்னாவ, சாலமுல்ல, லக்சட செவன பகுதியைச் சேர்ந்த கணேசன் ஜெகன் என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபத்த ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல் விடுத்து 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>கொலன்னாவ, சாலமுல்ல, லக்சட செவன பகுதியைச் சேர்ந்த கணேசன் ஜெகன் என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபத்த ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் எஸ். கே. சேனாரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.</p>
<p>தாம் வேறு ஒருவரிடமிருந்து 4 இலட்சம் ரூபாவை பெற்றதாகவும், அதனை பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசி இலக்கத்தை ஊகித்து இந்த அழைப்பை மேற்கொண்டதாகவும் சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p>
<p>வழக்கு விசாரணை அடுத்த மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/threat-to-ayoma-rajapaksa-bail-for-suspect/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கோட்டா போன்ற ஒருவரை வரலாற்றில் காண முடியாது!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/no-one-like-gota-can-be-found-in-history/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/no-one-like-gota-can-be-found-in-history/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Sep 2022 05:41:55 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahindananda Aluthgamage]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=62143</guid>

					<description><![CDATA[&#8221; கோட்டாபய ராஜபக்ச போன்ற ஒரு அரச தலைவரை வரலாற்றில் இனி கண்டுபிடிக்க முடியாமல்போகும். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள் அது தொடர்பில் கவலையடையும் காலம் வரும்.&#8221; இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, &#8221; அரசாங்க நிதியில் இருந்து ஒரு சதம்கூட களவாடாத தலைவர்தான் கோட்டாபய ராஜபக்ச. அவரது ஆட்சி காலத்தில் பாதாள குழு வெளியில் தலைகாட்டவில்லை. போராட்டக்களை ஒடுக்க [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8221; கோட்டாபய ராஜபக்ச போன்ற ஒரு அரச தலைவரை வரலாற்றில் இனி கண்டுபிடிக்க முடியாமல்போகும். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள் அது தொடர்பில் கவலையடையும் காலம் வரும்.&#8221;</p>
<p>இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,</p>
<p>&#8221; அரசாங்க நிதியில் இருந்து ஒரு சதம்கூட களவாடாத தலைவர்தான் கோட்டாபய ராஜபக்ச. அவரது ஆட்சி காலத்தில் பாதாள குழு வெளியில் தலைகாட்டவில்லை. போராட்டக்களை ஒடுக்க கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் நடத்தவில்லை. ஜனாதிபதிக்கான செலவீனங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.</p>
<p>இப்படியானதொரு அரச தலைவரை இனி கண்டுபிடிப்பது கடினம். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள், அந்த முடிவு தொடர்பில் மரணிக்கும் தருவாயிலாவது கவலை அடைவார்கள்.</p>
<p>கோட்டாபய ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். இனி அரசியலுக்குள் வரும் எண்ணம் அவருக்கு இல்லை.&#8221; &#8211; என்றார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/no-one-like-gota-can-be-found-in-history/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து</title>
		<link>https://tamilnaadi.com/news/local/former-president-congratulates-the-sri-lankan-cricket-team/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/former-president-congratulates-the-sri-lankan-cricket-team/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Sep 2022 08:41:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[cricket]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[sports]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=61460</guid>

					<description><![CDATA[ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை 8 ஆம் திகதியே டுவிட்டரில் கடைசியாக பதிவிட்டிருந்தார் கோட்டாபய ராஜபக்ச. ஜுலை 9 மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் நாட்டைவிட்டு தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச, அண்மையில்தான் நாடு திரும்பினார். இந்நிலையிலேயே ஜுலை 8 ஆம் திகதிக்கு பிறகு, முதன்முதலில் நேற்று டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p>
<p>தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த ஜுலை 8 ஆம் திகதியே டுவிட்டரில் கடைசியாக பதிவிட்டிருந்தார் கோட்டாபய ராஜபக்ச.</p>
<p>ஜுலை 9 மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் நாட்டைவிட்டு தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச, அண்மையில்தான் நாடு திரும்பினார்.</p>
<p>இந்நிலையிலேயே ஜுலை 8 ஆம் திகதிக்கு பிறகு, முதன்முதலில் நேற்று டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார் கோட்டா.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/former-president-congratulates-the-sri-lankan-cricket-team/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ராஜபக்ச குடும்பத்தவருக்கு அமைச்சு பதவி!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/rajapaksa-family-government-ministry-position/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/rajapaksa-family-government-ministry-position/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Sep 2022 08:03:36 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Basil Rajapaksa]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Samal Rajapaksa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=61210</guid>

					<description><![CDATA[மக்கள் எழுச்சியால் பதவிகளை துறந்து, தீவிர செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜபக்சக்கள் மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷசீந்ர ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மக்கள் எழுச்சியால் ஜனாதிபதி பதவியை துறந்து நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளார். பாதுகாப்பு உட்பட அவருக்கான அனைத்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மக்கள் எழுச்சியால் பதவிகளை துறந்து, தீவிர செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜபக்சக்கள் மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷசீந்ர ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.</p>
<p>மக்கள் எழுச்சியால் ஜனாதிபதி பதவியை துறந்து நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளார். பாதுகாப்பு உட்பட அவருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துகொடுத்துள்ளது.</p>
<p>பிரதமர் பதவியை துறந்த மஹிந்த ராஜபக்சவும், செயற்பாட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.</p>
<p>அதேபோல நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவியை வழங்குமாறு ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/rajapaksa-family-government-ministry-position/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
