<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Gotapaya &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/gotapaya/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 13 Aug 2022 13:32:22 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Gotapaya &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வெளியே வர வேண்டாம்! &#8211; கோட்டாவுக்கு தாய்லாந்து பணிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/dont-leave-the-room-thailand-mission-to-gota/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/dont-leave-the-room-thailand-mission-to-gota/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Aug 2022 10:42:30 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotapaya]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=59166</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாங்கொக்கில் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளனர் இதேவேளை, அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கு விசேட கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகுமாறுகோரி மிகப்பெரும் போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது. குறித்த போராட்டம் இடம்பெற்ற நிலையில், தலைமறைவாகியிருந்த கோட்டாபய ராஜபக்ச, [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாங்கொக்கில் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளனர்</p>
<p>இதேவேளை, அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கு விசேட கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>நாட்டில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகுமாறுகோரி மிகப்பெரும் போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது.</p>
<p>குறித்த போராட்டம் இடம்பெற்ற நிலையில், தலைமறைவாகியிருந்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டிலிருந்து தப்பித்து மாலைதீவு சென்றார்.</p>
<p>அங்கு தங்கியிருந்த அவர், ஒரு சில தினங்களில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் அவருக்கு சாதாரண விசாவே வழங்கியிருந்த நிலையில், இங்கிருந்து தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.</p>
<p>தாய்லாந்து அரசும் அவருக்கு தற்காலிக விசாவே வழங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.</p>
<p>முதலில் புகெட் நகரில் உள்ள விமான நிலையத்தில் கோட்டாபய வந்திறங்க முடிவு செய்திருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் அவர் பாங்காக் ராணுவ விமான தளத்தில் தரையிறங்கியுள்ளார்.</p>
<p>இங்கிருந்து பெயர் வெளியிடப்படாத தனியார் ஹோட்டலுக்கு கோட்டாபய ராஜபக்ச அழைத்து செல்லப்பட்டுள்ளார்.</p>
<p>குறித்த பகுதியில், தாய்லாந்து சிறப்பு பிரிவு பொலிஸார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர் எனவும், அவரது பாதுகாப்பு கருதி அவரை வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/dont-leave-the-room-thailand-mission-to-gota/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பெண்டோரா ஆவண விவகாரம்! ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு</title>
		<link>https://tamilnaadi.com/news/pentora-document-affair-order-issued-by-the-president/</link>
					<comments>https://tamilnaadi.com/news/pentora-document-affair-order-issued-by-the-president/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Oct 2021 05:49:21 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotapaya]]></category>
		<category><![CDATA[investigation]]></category>
		<category><![CDATA[Nirupama Rajapaksa]]></category>
		<category><![CDATA[Pandora Papers]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=14851</guid>

					<description><![CDATA[‘பெண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையூட்டல் ஆணைக்குழுவுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் அண்மையில் வெளியான, உலகில் உள்ள பெரும்புள்ளிகள் உள்ளிட்ட பலரின் மறைமுக சொத்துகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தும் பத்திரிகை, உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. குறித்த ஆவணத்தில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>‘பெண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையூட்டல் ஆணைக்குழுவுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.</p>
<p>பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் அண்மையில் வெளியான, உலகில் உள்ள பெரும்புள்ளிகள் உள்ளிட்ட பலரின் மறைமுக சொத்துகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தும் பத்திரிகை, உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p>
<p>குறித்த ஆவணத்தில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.</p>
<p>பெண்டோரா ஆவணத்தில் இலங்கையின் ஆட்சியாளர்களான ராஜபக்ஷ சகோதர்களின் நெருக்கிய உறவினரான இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டு தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.</p>
<p>இந்நிலையில்,தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/pentora-document-affair-order-issued-by-the-president/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>15 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி</title>
		<link>https://tamilnaadi.com/news/govt-vaccine-for-15-to-19-year-olds/</link>
					<comments>https://tamilnaadi.com/news/govt-vaccine-for-15-to-19-year-olds/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Oct 2021 07:58:35 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotapaya]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[Shavendra Silva]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=14347</guid>

					<description><![CDATA[நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். 12 முதல் 19 வயதிற்குட்பட்ட நாட்பட்ட நோய்களைக் கொண்ட சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட சகலருக்கு தடுப்பூசியினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை,பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீள [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.</p>
<p>12 முதல் 19 வயதிற்குட்பட்ட நாட்பட்ட நோய்களைக் கொண்ட சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.</p>
<p>இந்நிலையில், அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட சகலருக்கு தடுப்பூசியினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை,பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.</p>
<p>பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான முதல் கட்டத்துக்கான நிபந்தனைகள் நேற்று (02) சகல மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/govt-vaccine-for-15-to-19-year-olds/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
