<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Gnanasara Thero Court Case Update &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/gnanasara-thero-court-case-update/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 24 Feb 2026 15:26:45 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Gnanasara Thero Court Case Update &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நாட்டின் பாதுகாப்பிற்கு முன்வருவது பிக்குகளின் கடமை! &#8211; ஞானசார தேரர் அதிரடி முழக்கம்.</title>
		<link>https://tamilnaadi.com/news/gnanasara-thero-says-protecting-nation-is-monks-duty/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Feb 2026 15:26:45 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[BBS Statement on National Security.]]></category>
		<category><![CDATA[Bodu Bala Sena Press Meet]]></category>
		<category><![CDATA[Buddhist Monks in Politics Sri Lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Galagoda Aththe Gnanasara Thero 2026]]></category>
		<category><![CDATA[Gnanasara Thero Court Case Update]]></category>
		<category><![CDATA[Political Freedom for Monks]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=213065</guid>

					<description><![CDATA[பௌத்த பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள் அல்ல என்றும், நாட்டின் பாதுகாப்பிற்காக முன்வருவது அவர்களின் வரலாற்று ரீதியான கடமை என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதகுருமார்கள் சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதைக் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் பிக்குகள் வீதிக்கு வந்து போராடிய வரலாறு இலங்கைக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பௌத்த பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள் அல்ல என்றும், நாட்டின் பாதுகாப்பிற்காக முன்வருவது அவர்களின் வரலாற்று ரீதியான கடமை என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதகுருமார்கள் சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதைக் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் பிக்குகள் வீதிக்கு வந்து போராடிய வரலாறு இலங்கைக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>தமக்கு எதிராகப் பல அரசியல் வழக்குகள் திட்டமிட்டுத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகத் தனது வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டு, நீதிமன்றத்தின் ஊடாகத் தமக்குள்ள அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய சட்ட ரீதியான நெருக்கடிகள் மூலம் உண்மையான தகவல்களைச் சமூகத்திற்குக் கொண்டு செல்ல முடியாத ஒரு சூழலை அரசாங்கம் உருவாக்கி வருவதாக அவர் கவலை வெளியிட்டார். தன் மீதான ஒடுக்குமுறை என்பது ஒட்டுமொத்தப் பௌத்த பிக்குகளின் குரலை நசுக்கும் ஒரு முயற்சியே என அவர் வர்ணித்தார்.</p>
<p>செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து அரசாங்கமும் ஏனைய சில தரப்பினரும் முன்னெடுத்து வரும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளைத் தனது பொதுபல சேனா அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார். பிக்குகளின் கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தர்மத்தைப் பாதுகாக்கவும் நாட்டை நல்வழிப்படுத்தவும் பிக்குகள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்றும் ஞானசார தேரர் மேலும் வலியுறுத்தினார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
