<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>galle &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/galle/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 10 Dec 2025 10:03:30 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>galle &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை: மின்னல் அபாயம் குறித்து கவனம் தேவை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/severe-thunderstorm-warning-issued-for-western-sabaragamuwa-and-southern-provinces-public-advised-to-take-precautions/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 10:03:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Lightning Safety]]></category>
		<category><![CDATA[Matara]]></category>
		<category><![CDATA[Meteorological Department]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa]]></category>
		<category><![CDATA[Severe Weather]]></category>
		<category><![CDATA[Thunderstorm Warning]]></category>
		<category><![CDATA[western province]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206819</guid>

					<description><![CDATA[மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது.</p>
<p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. திறந்தவெளிகளிலும், உயரமான மரங்களின் கீழும் தங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காலி பியதிகமவில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: நிவாரண உதவி எடுத்துச் சென்ற வாகனம் பாதிப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/car-carrying-flood-relief-collides-with-train-at-piyadigama-railway-crossing-in-galle-no-injuries-reported/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Dec 2025 16:57:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood Relief Vehicle]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[No Casualties.]]></category>
		<category><![CDATA[Piyadigama]]></category>
		<category><![CDATA[Railway Accident]]></category>
		<category><![CDATA[Train Collision]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206696</guid>

					<description><![CDATA[காலி மாவட்டத்தின் பியதிகம புகையிரதக் கடவை ஒன்றில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ள நிவாரண உதவிகளைக் கொண்டு சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காலி புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் இந்தக் கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் வாகனச் சேதம் ஏற்பட்ட போதிலும், கார் சாரதி உட்பட யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என எமது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>காலி மாவட்டத்தின் பியதிகம புகையிரதக் கடவை ஒன்றில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>வெள்ள நிவாரண உதவிகளைக் கொண்டு சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காலி புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் இந்தக் கார் மோதியுள்ளது.</p>
<p>இந்த விபத்தில் வாகனச் சேதம் ஏற்பட்ட போதிலும், கார் சாரதி உட்பட யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தாயும் மூன்று வயது மகனும் சடலமாக மீட்பு – குடும்பத் தகராறில் கொலை-தற்கொலையா என சந்தேகம்</title>
		<link>https://tamilnaadi.com/news/mother-kills-son-and-takes-her-own-life/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Oct 2025 05:08:01 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Sri Lanka Police Investigation]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203518</guid>

					<description><![CDATA[காலி &#8211; படபொல, கஹட்டபிட்டிய, பொல்லுன்னாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த மூன்று வயது சிறுவனின் சடலமும், கயிற்றில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்கள் இன்று (27) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக படபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட வீட்டில் வசிக்கும் லகிது சம்பத் என்ற மூன்று வயது மற்றும் ஆறு மாத சிறுவன் மற்றும் சிறுவனின் தாயான இருணி நெத்யா தில்ருக்ஷி ஆகியோரே [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>காலி &#8211; படபொல, கஹட்டபிட்டிய, பொல்லுன்னாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த மூன்று வயது சிறுவனின் சடலமும், கயிற்றில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த சடலங்கள் இன்று (27) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக படபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட வீட்டில் வசிக்கும் லகிது சம்பத் என்ற மூன்று வயது மற்றும் ஆறு மாத சிறுவன் மற்றும் சிறுவனின் தாயான இருணி நெத்யா தில்ருக்ஷி ஆகியோரே என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>வீட்டில் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்ட பெண், தனது மகனை கொன்றுவிட்டு, பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>உயிரிழந்த பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பியதாகவும், அவர் திருமணமானவராக இருந்தபோதிலும், தனது கணவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை மற்றும் தற்கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.</p>
<p>சம்பவம் குறித்து படபொல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு: தொற்றால் குழந்தை மரணம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/omicron-covid-variant-spreading-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 31 May 2025 17:19:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[COVID-19 Vaccine]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Hospitals in Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=198942</guid>

					<description><![CDATA[ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமிக்ரோன் வைரஸ் துணை திரிபுகளான LF.7 மற்றும் XFG ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணர் ஜூட் ஜெயமஹா தெரிவித்துள்ளார். நாட்டின் பல மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டாக்டர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>ஓமிக்ரோன் வைரஸ் துணை திரிபுகளான LF.7 மற்றும் XFG ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணர் ஜூட் ஜெயமஹா தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டின் பல மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜூட் ஜெயமஹா குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எனினும் இந்த கோவிட் மாறுபாடு குறித்து தேவையற்ற அச்சம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.</p>
<p>கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நோயாளிகள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p>இதனால் முகக் கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>கொவிட் வைரஸின் புதிய வகைகள் அவ்வப்போது பரவுகின்றன, மேலும் இது தொடர்பாக சுகாதாரத் துறை தொடர்ந்து விழிப்புடன் இருப்பதால், தேவையற்ற அச்சம் வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, காலி தேசிய மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த ஒன்றரை மாத குழந்தையும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.​​</p>
<p>குழந்தையின் உயிரியல் மாதிரி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் இது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.</p>
<p>எனினும் ஆசியாவில் தற்போது பரவி வரும் புதிய திரிபாக இந்த வைரஸ் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மருத்துவர் ஒருவரின் தவறான செயற்பாடு! மூடிமறைக்க பொய் முறைப்பாடு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/doctor-s-misconduct-in-galle/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 23 May 2025 08:12:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=198087</guid>

					<description><![CDATA[தனக்குக் கீழ் பணியாற்றும் யுவதியொருவரிடம் தவறாக நடக்க முயன்று சிக்கிய மருத்துவர் ஒருவர், பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பம் தன்னிடம் கப்பம் கோருவதாக போலி முறைப்பாடு செய்துள்ளார். காலி, கராப்பிட்டிய மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், உணவடுன பிரதேசத்தில் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். அத்துடன், குறித்த மருத்துவ சிகிச்சை நிலையத்துடன் இணைந்தாக வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குவற்கான வாடகை அறைகளும் உள்ளன. இந்நிலையில், குறித்த மருத்துவர் தனது மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் யுவதியொருவரை மருத்துவ [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தனக்குக் கீழ் பணியாற்றும் யுவதியொருவரிடம் தவறாக நடக்க முயன்று சிக்கிய மருத்துவர் ஒருவர், பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பம் தன்னிடம் கப்பம் கோருவதாக போலி முறைப்பாடு செய்துள்ளார்.</p>
<p>காலி, கராப்பிட்டிய மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், உணவடுன பிரதேசத்தில் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.</p>
<p>அத்துடன், குறித்த மருத்துவ சிகிச்சை நிலையத்துடன் இணைந்தாக வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குவற்கான வாடகை அறைகளும் உள்ளன.</p>
<p>இந்நிலையில், குறித்த மருத்துவர் தனது மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் யுவதியொருவரை மருத்துவ நிலையத்துடன் இணைந்த வாடகை அறையொன்றுக்குள் வைத்து தவறான முறைக்குட்படுத்த முயன்றுள்ளார்.</p>
<p>மருத்துவர் ஒருவரின் தவறான செயற்பாடு! மூடிமறைக்க பொய் முறைப்பாடு | Doctor S Misconduct In Galle</p>
<p>அவர்கள் மருத்துவரைத் தேடிவந்து சண்டையிட்ட போது, தனக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக முப்பத்தி ஐந்து இலட்சம் தந்து பிரச்சினையை சமாதானமாக முடித்துக் கொள்ள விரும்புவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>பாதிக்கப்பட்ட யுவதியின் தரப்பும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது.</p>
<p>எனினும், மருத்துவர் சார்பில் முதற்கட்டமாக வழங்கப்படுவதாக வாக்களித்த ஐந்து இலட்சம் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட யுவதியின் பெற்றோர் சென்றிருந்த நிலையில், அவர்கள் தன்னிடம் கப்பம் கோருவதாக தெரிவித்து பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார்.</p>
<p>யுவதியின் பெற்றோர் தற்போது ஹபராதுவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காலியில் ஆட்சியை நிலைநாட்ட ஆரம்பமாகியுள்ள அதிகாரப் போராட்டம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/power-struggle-to-establish-rule-in-galle/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 13 May 2025 07:26:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Power Struggle To Establish Rule In Galle]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197048</guid>

					<description><![CDATA[காலி மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை ஈர்க்கும் வகையில், பிரதான அரசியல் கட்சிகள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 17 ஆசனங்களை வென்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் 19 ஆசனங்களை வென்றதன் காரணமாக மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதில் அதிகாரப் போராட்டம் உருவாகியுள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியில், காலி மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>காலி மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை ஈர்க்கும் வகையில், பிரதான அரசியல் கட்சிகள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>காலி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 17 ஆசனங்களை வென்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் 19 ஆசனங்களை வென்றதன் காரணமாக மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதில் அதிகாரப் போராட்டம் உருவாகியுள்ளது.</p>
<p>இவ்வாறான ஒரு பின்னணியில், காலி மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>பதவிப் பங்கீடு தொடர்பாக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காலிமுகத்திடலில் அரசியல் நிகழ்வு! அநுர அரசுக்கு எதிராக ரணில் கடும் விமர்சனம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/political-event-galle-face-ranil-criticizes-gvnt/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 03:59:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Political Event Galle Face Ranil Criticizes Gvnt]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=195791</guid>

					<description><![CDATA[கொழும்பு, காலிமுகத்திடலை அரசியல் நிகழ்வுக்குப் பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசு அந்த வாக்குறுதியை மீறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, &#8220;நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும் கிடையாது. ஓரிரு விளக்கமளிக்கும் கூட்டங்களில்தான் பங்கேற்று வருகின்றேன். அப்படியிருந்தம் ஊர் முழுதும் என்னைத்தான் ஆளுங்கட்சியினர் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைப் பாராட்டுகின்றனர். இப்படியொரு தேர்தலை நான் கண்டதில்லை. அதேபோல், மே முதலாம் திகதியன்று காலிமுகத்திடலில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு, காலிமுகத்திடலை அரசியல் நிகழ்வுக்குப் பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசு அந்த வாக்குறுதியை மீறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,</p>
<p>&#8220;நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும் கிடையாது. ஓரிரு விளக்கமளிக்கும் கூட்டங்களில்தான் பங்கேற்று வருகின்றேன்.</p>
<p>அப்படியிருந்தம் ஊர் முழுதும் என்னைத்தான் ஆளுங்கட்சியினர் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைப் பாராட்டுகின்றனர்.</p>
<p>இப்படியொரு தேர்தலை நான் கண்டதில்லை. அதேபோல், மே முதலாம் திகதியன்று காலிமுகத்திடலில் பேரணியை நடத்துவதற்கு அநுர அரசு தீர்மானித்துள்ளது.</p>
<p>காலிமுகத்திடலில் தேர்தல் பரப்புரைகளையோ அல்லது அரசியல் நிகழ்வுகளையோ நடத்துவதில்லை என்று கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அரசின் இந்த நடவடிக்கை தவறானது&#8221; என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வீட்டில் வளர்த்த நாயால் பறிபோன உயிர் &#8211; மருத்துவர்கள் எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/school-boy-dies-of-rabies-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Apr 2025 07:41:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Hospitals in Sri Lanka]]></category>
		<category><![CDATA[School Boy Dies Of Rabies In Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=195561</guid>

					<description><![CDATA[காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர் 24 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டி, மாணவனின் முகத்தில் கீறிய நிலையில், தரையில் வீழ்ந்தமையால் ஏற்பட்ட காயம் என பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். எனினும் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னர், 24 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.</p>
<p>உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர் 24 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>கடந்த மாதம் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டி, மாணவனின் முகத்தில் கீறிய நிலையில், தரையில் வீழ்ந்தமையால் ஏற்பட்ட காயம் என பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.</p>
<p>எனினும் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னர், 24 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.</p>
<p>மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p>
<p>வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி முறையாகப் போடுவதும், விலங்கு கடித்தாலோ அல்லது கீறப்பட்டாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மூன்று மடங்கு அதிகரிக்கும் மின் கட்டணம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/electricity-price-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Apr 2025 07:31:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Electricity Price In Sri Lanka]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Vajira Abeywardena]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=195544</guid>

					<description><![CDATA[இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார். காலியில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரம் பற்றிய எனது புரிதலின் படி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் நாடு வீழ்ச்சியடையும். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் பட்சத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் இலங்கையை கவனித்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.</p>
<p>காலியில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>பொருளாதாரம் பற்றிய எனது புரிதலின் படி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் நாடு வீழ்ச்சியடையும்.</p>
<p>இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் பட்சத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் இலங்கையை கவனித்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த கிளி &#8211; சிக்கிய பெருந்தொகை தங்க நகை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/parrot-helps-police-to-arrest-a-thief-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Feb 2025 13:29:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[gold]]></category>
		<category><![CDATA[Parrot Helps Police To Arrest A Thief In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=194212</guid>

					<description><![CDATA[பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த கிளி &#8211; சிக்கிய பெருந்தொகை தங்க நகை காலி(Galle), கரந்தெனிய பிரதேசத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட கிளி உரிமையாளரை காட்டிக்கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளியின் நடத்தையை ஆராய்ந்ததன் மூலம், தங்க நகைகளை திருடிய 38 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் அவர் கைது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த கிளி &#8211; சிக்கிய பெருந்தொகை தங்க நகை</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/world/2024/12/30/israeli-prime-minister-netanyahu-undergoes-surgery/">காலி</a>(Galle), கரந்தெனிய பிரதேசத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட கிளி உரிமையாளரை காட்டிக்கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.</p>
<p>கிளியின் நடத்தையை ஆராய்ந்ததன் மூலம், தங்க நகைகளை திருடிய 38 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சந்தேக நபரான பெண்ணின் கணவர் கறுவா வெட்டச் சென்றிருந்தபோது, ​​வீட்டின் அலமாரியில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை யாரோ திருடிச் சென்றதாக அந்தப் பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.</p>
<p>அதற்கமைய கணவர் கரந்தெனிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்த செல்லப் பிராணியான கிளி, திருட்டு நடந்த அறையின் வாசற்படியில் தங்கிப் பழகியிருப்பது கண்டறியப்பட்டது.</p>
<p>அந்த இடத்தில் தினமும் தங்கும் கிளி அங்கே இருப்பதாலும், வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாததாலும், இந்தத் திருட்டு குடியிருப்பாளரால் செய்யப்பட்டிருக்கலாம் எனவும், பொலிஸாரை தவறாக வழிநடத்த இது பயன்படுத்தப்படுவதாகவும் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>பணம் வைக்கப்பட்டிருந்த அலமாரியில் மிளகாய் தூள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சமையலறையில் இருந்த மிளகாய் தூளுடன் அலமாரியில் இருந்த மிளகாய் தூளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, ​​இரண்டு வகையான மிளகாய் தூள்களும் ஒரே மாதிரியானவை என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>திருட்டு நடந்த நேரத்தில் சந்தேக நபரான பெண்ணும் அவரது சிறுவயது மகனும் மட்டுமே வீட்டில் தங்கியிருந்தனர். எனவே, சந்தேகத்தின் அடிப்படையில், திருட்டு தொடர்பாக பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p>
<p>மேலும், திருட்டு செய்ததாக அவர் ஒப்புக்கொள்ளாததால், அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய மோப்ப நாய் பிரிவிலிருந்து ஒரு நாயின் உதவியையும் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>அதற்கமைய, திருட்டு நடந்த வீட்டின் அலமாரியை பொலிஸ் நாய் இரண்டு முறை மோப்பம் பிடித்த பிறகு, அவர் தான் திருட்டைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
