<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Fisheries Minister I Chandrasekara Jaffna &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/fisheries-minister-i-chandrasekara-jaffna/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 17 Apr 2026 11:44:37 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Fisheries Minister I Chandrasekara Jaffna &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!</title>
		<link>https://tamilnaadi.com/news/thaiyitty-vihara-land-survey-halted-after-monks-objection/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 12:39:08 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Fisheries Minister I Chandrasekara Jaffna]]></category>
		<category><![CDATA[Jinthota Nandaram Thero Police Complaint]]></category>
		<category><![CDATA[Land Survey Measurement Postponed]]></category>
		<category><![CDATA[Northern Province Sri Lanka Land Issues.]]></category>
		<category><![CDATA[Palaly Police Thaiyitty Vihara]]></category>
		<category><![CDATA[Thaiyitty Vihara Land Dispute 2026]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=216533</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், விகாராதிபதியின் எதிர்ப்பு மற்றும் பொலிஸ் முறைப்பாட்டைத் தொடர்ந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்தக் காணிப் பிரச்சினை மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களான 17 பேரின் காணிகளை இன்றைய தினம் அளவீடு செய்வதற்கு கடந்த 11-ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்டச் செயலர் ம. பிரதீபன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், விகாராதிபதியின் எதிர்ப்பு மற்றும் பொலிஸ் முறைப்பாட்டைத் தொடர்ந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்தக் காணிப் பிரச்சினை மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.</p>
<p>தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களான 17 பேரின் காணிகளை இன்றைய தினம் அளவீடு செய்வதற்கு கடந்த 11-ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்டச் செயலர் ம. பிரதீபன் ஆகியோர் தீர்மானித்திருந்தனர். இருப்பினும், விகாரை காணியைச் சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயற்சிப்பதாகக் கூறி, தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் நேற்றைய தினம் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.</p>
<p>அறிவிக்கப்பட்டபடி இன்று காலை 9 மணிக்குப் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களும் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளும் விகாரைப் பகுதிக்கு வருகை தந்தனர். விகாரைப் பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததால் அங்கு ஒரு பதற்றமான சூழல் நிலவியது. இருப்பினும், காணி அளவீட்டுக்கு அழைப்பு விடுத்த கடற்றொழில் அமைச்சர், மாவட்டச் செயலர் அல்லது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் எவரும் காலை 9:30 மணி வரை அவ்விடத்திற்கு வருகை தரவில்லை என உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p>
<p>காலை 10 மணியளவில் அவ்விடத்திற்கு வருகை தந்த மாவட்டச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், காணி அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று வருகை தர வேண்டியுள்ளதாகத் தெரிவித்தனர். இதன் காரணமாக, இன்னும் ஒரு மாத காலப்பகுதிக்குள் மீண்டும் அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்கள் அங்கிருந்து சென்றனர்.</p>
<p>அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் காணி உரிமையாளர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் ஊடகங்களிடம் கூறுகையில்:</p>
<p><strong>&#8220;கடந்த பெப்ரவரி 17-ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் விகாராதிபதியும் கலந்துகொண்டார். ஆனால் பாதிக்கப்பட்ட எங்களை அந்தக் கூட்டத்திற்கு அழைக்கவில்லை. நாம் காணி அளவீட்டுக்கு இன்று முழுமையாகச் சம்மதித்தோம். ஆனால் பிக்குவின் தலையீட்டால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைக்கு யார் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பது இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.&#8221;</strong></p>
<p>கடந்த மூன்று மாதங்களாக கொழும்பில் நடைபெற்ற மூன்று முக்கிய கூட்டங்களின் அறிக்கைகள் கூடத் தமக்கு வழங்கப்படவில்லை என்றும், குறுகிய கால அறிவிப்பை வழங்கிவிட்டு இன்று அமைச்சரோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ சமூகமளிக்காதது தங்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
