<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>featuradtamilnaadi &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/featuradtamilnaadi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 17 Sep 2022 17:03:40 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>featuradtamilnaadi &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>டி20 உலக கோப்பை தொடர்! இலங்கை அணி அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/sports/t20-world-cup-series/</link>
					<comments>https://tamilnaadi.com/news/sports/t20-world-cup-series/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kisha]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Sep 2022 17:03:26 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[cricket]]></category>
		<category><![CDATA[featuradtamilnaadi]]></category>
		<category><![CDATA[T20 world Cup]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=61983</guid>

					<description><![CDATA[ஆஸ்திரேலியாவில் 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் திகதி முதல் நவம்பர் 13-ம் திகதி வரை நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், டி 20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து, யுஏஇ ஆகிய அணிகளுடன் மோத வேண்டும். டி20 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆஸ்திரேலியாவில் 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் திகதி முதல் நவம்பர் 13-ம் திகதி வரை நடக்கிறது.</p>
<p>டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.</p>
<p>இந்நிலையில், டி 20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து, யுஏஇ ஆகிய அணிகளுடன் மோத வேண்டும்.</p>
<h2>டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி விவரம்:</h2>
<ul>
<li>தசுன் ஷனகா (கேப்டன்)</li>
<li>தனுஷ்க குணதிலகா</li>
<li>பதும் நிசாங்கா</li>
<li>குசால் மெண்டிஸ்</li>
<li>சரித் அசலங்கா</li>
<li>பானுகா ராஜபக்சே</li>
<li>தனஞ்சய டி சில்வா</li>
<li>வனிந்து ஹசரங்கா</li>
<li>மகேஷ் தீக்சனா</li>
<li>ஜெப்ரி வாண்டர்சே</li>
<li>சாமிக்க கருணரத்னா</li>
<li>தில்ஷான் மதுசாங்க</li>
<li>பிரமோத் மதுஷன்</li>
<li>துஷ்மந்த சமீரா</li>
<li>லஹிரு குமாரா.</li>
</ul>
<h2>காத்திருப்பு வீரர்கள்</h2>
<ul>
<li>அஷேன் பண்டாரா</li>
<li>பிரவீன் ஜெயவிக்ரமா</li>
<li>தினேஷ் சண்டிமால்</li>
<li>பினுர பெர்னாண்டோ</li>
<li>நுவனிது பெர்னாண்டோ</li>
</ul>
<p>#t20worldcup #Cricket</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/sports/t20-world-cup-series/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சர்வக்கட்சி அரசமைப்பதற்கான பேச்சுகள் தீவிரம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/talks-to-form-an-all-party-government-are-intense/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/talks-to-form-an-all-party-government-are-intense/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Jul 2022 04:14:23 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[featuradtamilnaadi]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Peramuna]]></category>
		<category><![CDATA[sjb]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=55363</guid>

					<description><![CDATA[சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகளை ஓரணியில் திரட்டி &#8211; பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடனேயே இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.ஜே.வி.பி. உறுப்பினர்களைதவிர, எதிரணி மற்றும் சுயாதீன அணிகளின் 37 உறுப்பினர்கள்வரை இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகித்தல், 19 ஐ மீள செயற்படுத்தல் உட்பட முக்கிய சில விடயங்களை நிறைவேற்றுவதற்காகவே சர்வக்கட்சி அரசு அமையவுள்ளது. இதற்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகளை ஓரணியில் திரட்டி &#8211; பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.</p>
<p>பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடனேயே இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.</p>
<p>நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.ஜே.வி.பி. உறுப்பினர்களைதவிர, எதிரணி மற்றும் சுயாதீன அணிகளின் 37 உறுப்பினர்கள்வரை இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.</p>
<p>அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகித்தல், 19 ஐ மீள செயற்படுத்தல் உட்பட முக்கிய சில விடயங்களை நிறைவேற்றுவதற்காகவே சர்வக்கட்சி அரசு அமையவுள்ளது.</p>
<p>இதற்கு ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இன்றும் பேச்சுகள் தொடரவுள்ளன.</p>
<p>ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் சர்வக்கட்சி அரசமைப்பதற்கான 113 என்ற அறுதிப்பெரும்பான்மையை பெறலாம். எனவே, மொட்டு கட்சி உறுப்பினர்களுடனும் சந்திப்புகள் இடம்பெறவுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/talks-to-form-an-all-party-government-are-intense/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>புலிகளிடம் சுருட்டிய பணம் மற்றும் நகைகளே ராஜபக்சக்களின் பெருந்தொகை சொத்துக்களுக்கு காரணம்! &#8211; ஸ்ரீதரன் எம்பி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-money-and-jewelery-rolled-over-to-the-ltte-are-the-reason-for-the-rajapaksas-huge-fortunes-sreedharan-mp/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-money-and-jewelery-rolled-over-to-the-ltte-are-the-reason-for-the-rajapaksas-huge-fortunes-sreedharan-mp/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Apr 2022 16:41:50 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[featuradtamilnaadi]]></category>
		<category><![CDATA[rajapaksa]]></category>
		<category><![CDATA[Sivagyanam Sritharan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=47473</guid>

					<description><![CDATA[தமிழீழ விடுதலை புலிகளிடம் சுருட்டிய பெருமளவு பணம் மற்றும் நகைகளே இன்று வெளிவந்திருக்கும் ராஜபக்சக்களின் பெருந்தொகை சொத்துக்களுக்கு காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கட்சி அங்கத்தவர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். தோல்வியுற்ற ஒரு பதவியை இழந்த அரசாக இந்த நாட்டினுடைய ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக பதவி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழீழ விடுதலை புலிகளிடம் சுருட்டிய பெருமளவு பணம் மற்றும் நகைகளே இன்று வெளிவந்திருக்கும் ராஜபக்சக்களின் பெருந்தொகை சொத்துக்களுக்கு காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.</p>
<p>யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கட்சி அங்கத்தவர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.</p>
<p>தோல்வியுற்ற ஒரு பதவியை இழந்த அரசாக இந்த நாட்டினுடைய ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக பதவி விலக வேண்டும். இது சிங்கள &#8211; தமிழ் &#8211; இஸ்லாமிய மக்களின் ஏகோபித்த குரலாகக் காணப்படுகின்றது. இவர்கள் இந்த நாட்டினுடைய சொத்துக்களை முடக்கி இந்த நாட்டு மக்களை தெருவுக்கு கொண்டு வந்து பொருளாதார ரீதியாக மக்களை அவல நிலைக்கு உள்ளாக்கினர்.</p>
<p>காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி வடகிழக்கிலும் விலைவாசி ஏற்றம் காரணமாக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>குறிப்பாக 2008 &#8211; 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் இருந்து பெறப்பட்ட தங்க நகைகள், பணங்கள், விடுதலைப் புலிகளுடைய சொத்துக்கள், விடுதலைப் புலிகளுடைய வெளிநாட்டு சொத்துக்கள் ஆகியவற்றை அபகரித்து இன்றும் தன்வசம் வைத்திருந்த வெளிநாடுகளில் முதலீடு செய்கின்ற ராஜபக்ச குடும்பத்தின் உடைய சொத்து விபரங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.</p>
<p>இதனைவிட இலங்கையினுடைய நிலங்களையும் வளங்களையும் விற்பனை செய்து சொத்துக்களை அபகரித்து இலங்கையிலே இருக்கின்ற அனைத்து சமூகங்களையும், குறிப்பாக சிங்கள &#8211; தமிழ் &#8211; முஸ்லிம் மக்களை தெருவுக்குக் கொண்டு வந்து தன்னுடைய குடும்பத்தை பணத்தால் பெருக்கி வைத்திருக்கக் கூடியநிலையில் ஹக்கர்ஸ் என்று சொல்லப்படுகின்ற இணையத்தள ஊடுருவிகள் பல நாட்டுத் தலைவர்களின் உடைய சொத்து விபரங்களை ஆராய்ந்து வரும் நிலையில் தகவல்கள் வெளியாகி வருகின்றது.</p>
<p>இது உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால் சில உண்மைத் தன்மையான விவரங்களோடு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆகவே நான் நினைக்கின்றேன் இன்னும் ஒரு சில வாரங்களில் இது முழுமையாக வெளிவந்த பின்னர் அவர்களே அதற்குரிய விடைகளை முன்வைப்பார்கள். ராஜபக்சக்களே தங்களது அனைத்துக் கொள்ளைகளையும் வெளியிடுவார்கள்.</p>
<p>சீனியில் எவ்வளவு கொள்ளை அடித்தார்கள், பாம் ஒயிலில் எவ்வளவு கொள்ளை அடித்தார்கள், நிலங்களை விற்று எவ்வளவு கொள்ளை அடித்தார்கள், விடுதலைப் புலிகளின் சொத்துக்களை தங்களுடைய வசமாக்கி எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-money-and-jewelery-rolled-over-to-the-ltte-are-the-reason-for-the-rajapaksas-huge-fortunes-sreedharan-mp/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
