<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>featrued &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/featrued/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 03 Jan 2026 13:49:28 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>featrued &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தையிட்டியில் பதற்றம்: விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் போராட்டம் &#8211; பொலிஸார் குவிப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/tension-mounts-in-thaiyitty-as-landowners-protest-against-tissa-vihara-heavy-police-presence-reported-over-statue-installation-attempt/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Jan 2026 13:49:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Buddha Statue Installation]]></category>
		<category><![CDATA[featrued]]></category>
		<category><![CDATA[Jaffna Land Dispute]]></category>
		<category><![CDATA[Police Deployment Jaffna]]></category>
		<category><![CDATA[Thaiyitty Tissa Vihara Protest]]></category>
		<category><![CDATA[Valikamam North Conflict.]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208765</guid>

					<description><![CDATA[சட்டவிரோதமாகத் தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக, இன்று (சனிக்கிழமை) காலை முதல் காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமது பாரம்பரியத் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும், அங்கு சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். இன்றைய பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு, சிகிரியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய புத்தர் சிலை ஒன்றினை விகாரையில் நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சட்டவிரோதமாகத் தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக, இன்று (சனிக்கிழமை) காலை முதல் காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p>
<p>தமது பாரம்பரியத் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும், அங்கு சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.</p>
<p>இன்றைய பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு, சிகிரியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய புத்தர் சிலை ஒன்றினை விகாரையில் நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்றைய போராட்டம் தீவிரமடைந்துள்ளது.</p>
<p>போராட்டம் காரணமாக அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதைத் தொடர்ந்து, பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டுக் குவிக்கப்பட்டுள்ளனர். விகாரைக்கான நுழைவுப் பாதைகள் மற்றும் போராட்டப் பகுதிகளைச் சூழப் பொலிஸார் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளனர்.</p>
<p>தையிட்டி பகுதியில் வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், அங்கு திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டமைக்குத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranil-wickremesinghe-ready-to-advise-govt-on-disaster-management-no-interest-in-cabinet-positions-says-thalatha-atukorale/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Dec 2025 03:32:21 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Advisory Support.]]></category>
		<category><![CDATA[Disaster Management Advice]]></category>
		<category><![CDATA[Disaster Relief]]></category>
		<category><![CDATA[featrued]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[Thalatha Atukorale]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207572</guid>

					<description><![CDATA[நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியிலான அறிவைக் கொண்டவர். அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதில் அவர் கொண்டுள்ள ஆற்றலை நாட்டின் நன்மைக்காகப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவோ அல்லது ஐக்கிய தேசியக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியிலான அறிவைக் கொண்டவர். அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதில் அவர் கொண்டுள்ள ஆற்றலை நாட்டின் நன்மைக்காகப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளார்.</p>
<p>ரணில் விக்ரமசிங்கவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய முக்கிய உறுப்பினர்களோ தற்போதைய அரசாங்கத்தில் எந்தவிதமான அமைச்சுப் பதவிகளையோ அல்லது பொறுப்புகளையோ ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லை என்பதைத் தலதா அத்துகோரள தெளிவுபடுத்தினார்.</p>
<p>&#8220;தங்களது தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, அனர்த்த நிவாரணப் பணிகளில் அரசாங்கத்திற்குத் தேவையான களமட்ட உதவிகளை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாங்களும் தயாராக இருக்கிறோம்&#8221; என அவர் மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>அரசியல் ரீதியான வேறுபாடுகளுக்கு அப்பால், தேசிய அனர்த்தத்தின் போது அனுபவமுள்ள தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது நாட்டுக்குச் சாதகமாக அமையும் என அவர் வலியுறுத்தினார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியை வலியுறுத்த த.தே.ம.மு குழுவினர் இவ்வாரம் சென்னை பயணம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tnpf-delegation-led-by-gajendrakumar-ponnambalam-to-visit-chennai-to-seek-support-for-federal-solution-recognizing-tamil-nationhood/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2025 16:07:46 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[featrued]]></category>
		<category><![CDATA[Federalism]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Political solution]]></category>
		<category><![CDATA[Tamil National People's Front]]></category>
		<category><![CDATA[Tamil Nationhood]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207417</guid>

					<description><![CDATA[தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்கும் அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும், அதற்காகத் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (த.தே.ம.மு) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இவ்வாரம் சென்னைக்குச் செல்லவுள்ளனர். இது தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணத்தின் முக்கிய நோக்கம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்: இலங்கை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்கும் அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும், அதற்காகத் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (த.தே.ம.மு) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இவ்வாரம் சென்னைக்குச் செல்லவுள்ளனர்.</p>
<p>இது தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணத்தின் முக்கிய நோக்கம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்:</p>
<p>இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக &#8216;ஏக்கியராஜ்ய&#8217; (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பைத் திணிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.</p>
<p>தமிழ் மக்களுக்கான உண்மையான அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டுவர வேண்டும்.</p>
<p>இதற்குத் தேவையான அழுத்தங்களைச் சர்வதேச சமூகம், குறிப்பாகப் பிராந்திய வல்லரசான இந்திய அரசாங்கம், இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும். அவ்வாறான சூழலை உருவாக்குவதற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்த நோக்கத்திற்காக, தமிழக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து நிலைமைகளைத் தெளிவுபடுத்தவும், அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்ளவும் த.தே.ம.மு உயர்மட்டக் குழு சென்னை செல்கிறது.</p>
<p>இச்சந்திப்புகளில் கலந்துகொள்வதற்காகப் பின்வரும் பிரதிநிதிகள் சென்னை செல்லவுள்ளனர்:<br />
<strong>கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பாராளுமன்ற உறுப்பினர் &amp; தலைவர் &#8211; த.தே.ம.மு)</strong><br />
<strong>பொ. ஐங்கரநேசன் (தலைவர் &#8211; தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்)</strong><br />
<strong>செல்வராஜா கஜேந்திரன் (செயலாளர் &#8211; த.தே.ம.மு)</strong><br />
<strong>த. சுரேஸ் (தேசிய அமைப்பாளர்)</strong><br />
<strong>க. சுகாஷ் (சிரேஷ்ட சட்டத்தரணி &amp; உத்தியோகபூர்வ பேச்சாளர்)</strong><br />
<strong>ந. காண்டீபன் (சிரேஷ்ட சட்டத்தரணி &amp; பிரசாரச் செயலாளர்)</strong></p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/wing-commander-nirmal-siyambalapitiya-killed-in-helicopter-crash-during-flood-relief-operations-air-force-expresses-grief/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Dec 2025 05:57:38 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Air Force Helicopter Crash]]></category>
		<category><![CDATA[Bell-212]]></category>
		<category><![CDATA[DITWA Cyclone.]]></category>
		<category><![CDATA[featrued]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Flood Relief]]></category>
		<category><![CDATA[Marawila Hospital]]></category>
		<category><![CDATA[Wennappuwa]]></category>
		<category><![CDATA[Wing Commander Nirmal Siyambalapitiya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206048</guid>

					<description><![CDATA[சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறங்க முற்பட்ட இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (Wing Commander Nirmal Siyambalapitiya) உயிரிழந்துள்ளார். நேற்று (நவம்பர் 30) மாலை, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் &#8211; 212 (Bell-212) ரக ஹெலிகொப்டர் ஒன்று லுணுவில பாலத்திற்கு அருகில் உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அவசரமாகத் தரையிறங்க [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறங்க முற்பட்ட இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (Wing Commander Nirmal Siyambalapitiya) உயிரிழந்துள்ளார்.</p>
<p>நேற்று (நவம்பர் 30) மாலை, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் &#8211; 212 (Bell-212) ரக ஹெலிகொப்டர் ஒன்று லுணுவில பாலத்திற்கு அருகில் உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அவசரமாகத் தரையிறங்க முற்பட்டு அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.</p>
<p>சம்பவத்தின்போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் ஹெலிகொப்டரில் இருந்துள்ளனர். பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p>
<p>எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (வயது 41) உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>உயிரிழந்த விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p>
<p>விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p>
<p>உயிரிழந்த விமானி குறித்துச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு உருக்கமான குறிப்பில்,</p>
<p>&#8220;சின்னஞ்சிறு மகனின் அன்புக்குரிய தந்தையான நிர்மால், DITWA புயலினால் தனது உயிரை அகாலமாகப் பலியிட்ட இலங்கையர்களுடன் நேற்றைய தினம் இணைந்துகொண்டார் விலைமதிப்பற்ற இலங்கையின் விமானியாக&#8230; நாட்டின் இதயங்களில் அழியாத நினைவை வைத்துவிட்டு&#8230;&#8221;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8b-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Nov 2025 14:51:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceypetco]]></category>
		<category><![CDATA[December Prices]]></category>
		<category><![CDATA[featrued]]></category>
		<category><![CDATA[Fuel Price Revision]]></category>
		<category><![CDATA[Janaka Rajakaruna]]></category>
		<category><![CDATA[No Change]]></category>
		<category><![CDATA[Petroleum Corporation]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206035</guid>

					<description><![CDATA[&#8216;சிபெட்கோ&#8217; (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை என இன்று (நவம்பர் 30) அறிவித்துள்ளது. இதற்கமைய, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். இதன் மூலம், நவம்பர் மாதத்தில் நடைமுறையில் இருந்த அதே விலைகள் டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்து நடைமுறைக்கு வரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8216;சிபெட்கோ&#8217; (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை என இன்று (நவம்பர் 30) அறிவித்துள்ளது.</p>
<p>இதற்கமைய, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன் மூலம், நவம்பர் மாதத்தில் நடைமுறையில் இருந்த அதே விலைகள் டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்து நடைமுறைக்கு வரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
