<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Fast Unto Death Colombo &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/fast-unto-death-colombo/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 31 Jan 2026 15:05:03 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Fast Unto Death Colombo &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஐந்தாவது நாளாகத் தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 18:29:01 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Fast Unto Death Colombo]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Presidential Secretariat Protest.]]></category>
		<category><![CDATA[School Development Officers Protest 2026]]></category>
		<category><![CDATA[Sri Lanka Education News.]]></category>
		<category><![CDATA[Teacher Service Inclusion Demand]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=211575</guid>

					<description><![CDATA[தங்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தைச் சேர்ந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தங்களை, ஆசிரியர் சேவைக்குள் உடனடியாக உள்வாங்குமாறு வலியுறுத்தி இந்த உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 26 ஆம் திகதி சத்தியாக்கிரகமாகத் தொடங்கிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தங்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தைச் சேர்ந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தங்களை, ஆசிரியர் சேவைக்குள் உடனடியாக உள்வாங்குமாறு வலியுறுத்தி இந்த உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
<p>கடந்த ஜனவரி 26 ஆம் திகதி சத்தியாக்கிரகமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், அதிகாரிகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காததால் அன்றே &#8216;சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக&#8217; மாற்றப்பட்டது.</p>
<p>இன்று இந்தப் போராட்டம் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p>
<p>உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரில் இதுவரை மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உத்தியோகத்தர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.</p>
<p>எஞ்சியிருந்த இருவரில் ஒருவரின் உடல்நிலை இன்று காலை மோசமடைந்ததை அடுத்து, அவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>தற்போது ஒரு உத்தியோகத்தர் மாத்திரம் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசாங்கம் இது குறித்து இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதம்: ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jan 2026 16:21:15 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Fast Unto Death Colombo]]></category>
		<category><![CDATA[Sri Lanka Education News.]]></category>
		<category><![CDATA[Teacher Development Officers Protest 2026]]></category>
		<category><![CDATA[Teacher Service Permanent Appointment]]></category>
		<category><![CDATA[Viraj Manaranga]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=211210</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பாடசாலை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க இது குறித்துக் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் ஒருவரின் உடல்நிலை இன்று மிக மோசமடைந்ததால், அவர் அவசர சிகிச்சைக்காகத் தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை, [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இலங்கை பாடசாலை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க இது குறித்துக் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் ஒருவரின் உடல்நிலை இன்று மிக மோசமடைந்ததால், அவர் அவசர சிகிச்சைக்காகத் தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p>
<p>கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை, ஆசிரியர் சேவையில் (Teacher Service) உள்வாங்கி நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p>
<p>ஆரம்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அடையாளச் சத்தியாக்கிரகப் போராட்டமாகத் தொடங்கிய இந்த நடவடிக்கை, அரசாங்கத்திடமிருந்து முறையான தீர்வு கிடைக்காத காரணத்தினால் தற்போது சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.</p>
<p>தங்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஏனைய உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
