<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>europe &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/europe/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 17 Jun 2025 08:49:14 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>europe &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வரலாற்றில் முதற் தடவையாக பிரிட்டன் உளவு அமைப்புக்கு பெண் தலைவர் நியமனம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/britain-appoints-1st-female-head-of-mi6-spy-agency/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jun 2025 08:49:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200127</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடான பிரிட்டனின் உளவு அமைப்பான “எம்.ஐ.6 (MI6) “இன் தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த எம்.ஐ.6 உளவு அமைப்பின் தலைவர் பதவியை, &#8216;சி&#8217; என்று குறிப்பிடுவர். இந்தப் பதவியில் உள்ளவர் பெயர் மட்டுமே வெளியுலகுக்கு தெரியும். ஆனால், அந்த அமைப்பின் மற்ற பதவிகளில் உள்ளவர்கள் பெயர்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள சர் ரிச்சர்ட் மூரே (Sir [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐரோப்பிய நாடான பிரிட்டனின் உளவு அமைப்பான “எம்.ஐ.6 (MI6) “இன் தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இந்த எம்.ஐ.6 உளவு அமைப்பின் தலைவர் பதவியை, &#8216;சி&#8217; என்று குறிப்பிடுவர். இந்தப் பதவியில் உள்ளவர் பெயர் மட்டுமே வெளியுலகுக்கு தெரியும்.</p>
<p>ஆனால், அந்த அமைப்பின் மற்ற பதவிகளில் உள்ளவர்கள் பெயர்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள சர் ரிச்சர்ட் மூரே (Sir Richard Moore), விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், உளவு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள 47 வயதான பிளேசி மெட்ரவெலி (Blaise Metreweli) புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>&#8216;எம்.ஐ.,6&#8217;-உளவு அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில், பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p>
<p>இவர் இதற்கு முன்னர் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் எம்.ஐ.- 5 உளவு அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.</p>
<p>புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள பிளேசி மெட்ரவெலி, கடந்த 1999 முதல் உளவு அமைப்பில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கு தயாராகும் வத்திக்கான்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/vatican-prepares-to-elect-new-pope/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sat, 03 May 2025 08:57:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[Pope Francis]]></category>
		<category><![CDATA[Vatican]]></category>
		<category><![CDATA[Vatican Prepares To Elect New Pope]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196032</guid>

					<description><![CDATA[புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான பணிகளில் வத்திக்கான் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டதை உலகம் அறியும் புகைபோக்கி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ், இத்தாலியின் வத்திக்கானில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. உலக தலைவர்கள் அஞ்சலிசெலுத்திய பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாப்பரசர் பிரான்சிஸ் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான பணிகளில் வத்திக்கான் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இந்நிலையில், புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டதை உலகம் அறியும் புகைபோக்கி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ், இத்தாலியின் வத்திக்கானில் காலமானார்.</p>
<p>அவரது இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.</p>
<p>உலக தலைவர்கள் அஞ்சலிசெலுத்திய பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாப்பரசர் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது.</p>
<p>புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் பணி எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெற உள்ளது.</p>
<p>பாப்பரசரின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில் 80 வயதுக்குட்பட்ட அனைத்து கர்தினால்களும் இரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர்.</p>
<p>அவர்கள் ஒன்று கூடி இரகசியமாக நடத்தும் வாக்கெடுப்பில் , 89 கர்தினால்களின் ஆதரவை பெறுபவர், அடுத்த பாப்பரசராக தேர்வு செய்யப்படுவார்.</p>
<p>புகைபோக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளியேறும்படி சிறப்பு இரசாயனங்களைப் பயன்படுத்தி காகித வாக்குச் சீட்டுகளை ஒரு அதிகாரி எரிக்கும் போது, ஒரு பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் அறியும்.</p>
<p>பின்னர் புதிய பாப்பரசர் தோன்றி சதுக்கத்தில் உள்ள கூட்டத்தினருக்கு தனது ஆசீர்வாதத்தை வழங்குவார்.</p>
<p>அன்றைய தினம் புதிய பாப்பரசர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அந்த புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறும்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குறைந்த செலவில் விசா வசதி கொண்ட உலகின் மிக மகிழ்ச்சியான நாடு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/finland-happiest-country-in-the-world/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Feb 2025 14:30:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Beautiful country with cheap visas for expats]]></category>
		<category><![CDATA[Digital Nomad Visa]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[Finland]]></category>
		<category><![CDATA[Happiest Country in the world]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=193456</guid>

					<description><![CDATA[குறைந்த செலவிலான விசா வசதி கொண்ட உலகின் மிக மகிழ்ச்சியான நாடு குறித்து இங்கே பார்க்கலாம். தொலைதூர வேலை (Remote Working) செய்வதன் மூலம் உலகம் முழுவதும் பயணிக்க முடியும் நிலையில், குறைந்த செலவிலான மற்றும் வசதியான இடத்தை தேர்வு செய்வது சவாலாக மாறியுள்ளது. ஐரோப்பாவில் பல நாடுகள் டிஜிட்டல் நோமாட் (Digital Nomad) விசா வழங்கினாலும், அவற்றின் செலவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, போர்ச்சுகல், எஸ்டோனியா, கிரோஷியா போன்ற நாடுகளில் விசா பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>குறைந்த செலவிலான விசா வசதி கொண்ட உலகின் மிக மகிழ்ச்சியான நாடு குறித்து இங்கே பார்க்கலாம்.</p>
<p>தொலைதூர வேலை (Remote Working) செய்வதன் மூலம் உலகம் முழுவதும் பயணிக்க முடியும் நிலையில், குறைந்த செலவிலான மற்றும் வசதியான இடத்தை தேர்வு செய்வது சவாலாக மாறியுள்ளது.</p>
<p>ஐரோப்பாவில் பல நாடுகள் டிஜிட்டல் நோமாட் (Digital Nomad) விசா வழங்கினாலும், அவற்றின் செலவு அதிகரித்து வருகிறது.</p>
<p>குறிப்பாக, போர்ச்சுகல், எஸ்டோனியா, கிரோஷியா போன்ற நாடுகளில் விசா பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது.</p>
<p>ஆனால், &#8220;ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு&#8221; என்று அழைக்கப்படும் பின்லாந்து இதற்கு வித்தியாசமாக, குறைந்த வருவாய் தேவையுடன் விசா வழங்குகிறது.</p>
<p>€1,220 மாத வருமானம் இருந்தால், சுயதொழில் (Self-employment) விசா மூலம் பின்லாந்தில் வேலை செய்யலாம்.</p>
<p>இந்த விசா 6 மாதங்கள் வரை செல்லுபடியாகும், மேலும் ஒரு ஆண்டுக்கு புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது.</p>
<p>இதன் மூலம் Freelancer-கள், ஆலோசகர்கள், தொழில்முனைவோர்கள் பின்லாந்தில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும்.</p>
<p>பின்லாந்து உலகில் மிகவும் பாதுகாப்பான நாடாக (14வது இடம்) கருதப்படுகிறது. இது 10 ஆண்டுகளாக உலகின் மகிழ்ச்சியான நாடாக தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>Helsinki, Oulu, Turku போன்ற நகரங்கள் டிஜிட்டல் நோமாட்களுக்கு சிறந்த இடங்களாகும்.</p>
<p>விசா செலவு:</p>
<p>ஓன்லைன் விண்ணப்பம் &#8211; €400 (£331)</p>
<p>காகித விண்ணப்பம் &#8211; €496 (£400)</p>
<p>குறைந்த செலவில் உயர் வாழ்க்கைத்தரம் வேண்டும் என்றால், பின்லாந்து உங்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆட்டத்தை தொடங்கிய 2025 : வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் எது தெரியுமா?</title>
		<link>https://tamilnaadi.com/news/world/2025-begins-warmest-january-scientists-worried/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Feb 2025 04:28:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[2025 Begins Warmest January Scientists Worried]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[Heat wave]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=191412</guid>

					<description><![CDATA[ஆட்டத்தை தொடங்கிய 2025 : வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் எது தெரியுமா? உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம் (C3S) நேற்று (07.02.2025) வெளியிட்ட அறிக்கையின்படி ஜனவரி 2025 உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. 2025 ஜனவரியில் உலக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஆட்டத்தை தொடங்கிய 2025 : வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் எது தெரியுமா?</h4>
<p>உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது.</p>
<p>ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது.</p>
<p>ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் <a href="https://tamilnaadi.com/news/local/2024/12/01/bad-weather-and-flood-in-trincomalee/">காலநிலை</a> மாற்ற ஆய்வு நிறுவனம் (C3S) நேற்று (07.02.2025) வெளியிட்ட அறிக்கையின்படி ஜனவரி 2025 உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது.</p>
<p>2025 ஜனவரியில் உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய &#8216;லா நினோ&#8217; வளிமண்டலப் போக்கு நிலவினாலும், புவியின் வெப்பநிலை இதுவரை எந்தவொரு ஜனவரி மாதமும் இல்லாத அளவில் பதிவாகியுள்ளது.</p>
<p>2025 ஜனவரி மாதத்தில் சராசரி வெப்பநிலை, தொழில்துறை புரட்சிக்கு முன் (1850 க்கு முன்) பூமியின் சராசரி வெப்பநிலையை விட 1.75 பாகை செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.</p>
<p>1991-2000 ஜனவரி சராசரி வெப்பநிலையை விட 2025 ஜனவரி சராசரி வெப்பநிலை 0.79 பாகை செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.</p>
<p>ஆர்க்டிக் கடல் பனி ஜனவரி மாதத்திற்கான மிகக் குறைந்த அளவை எட்டியது. இது சராசரியை விட 6% குறைவாகும். &#8220;ஜனவரி 2025 விசித்திரனமான மாதம்&#8221; என்று C3S இன் துணை இயக்குநர் சமந்தா பர்கெஸ் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐரோப்பாவின் மிகப் பிரபலமான தீவு நகரமொன்றிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/world/santorini-on-alert-after-seismic-activity/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Feb 2025 12:39:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Earthquake]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[Greece]]></category>
		<category><![CDATA[Santorini On Alert After Seismic Activity]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=190614</guid>

					<description><![CDATA[ஐரோப்பாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தீவான சாண்டோரினியைச் சுற்றி நில அதிர்வுகள் அதிகரிக்கும் என்று கிரேக்க அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். அத்துடன், நான்கு துறைமுகங்களைத் தவிர்க்கவும், தங்கள் நீச்சல் குளங்களை காலி செய்யவும், உட்புற இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவும் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திங்கட்கிழமை பள்ளிகளை மூடவும் கேட்டுக்கொண்டுள்ளனர். எரிமலைத் தீவுகளான சாண்டோரினி மற்றும் அமோர்கோஸ் இடையே வெள்ளிக்கிழமை முதல் 200க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சிவில் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐரோப்பாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தீவான சாண்டோரினியைச் சுற்றி நில அதிர்வுகள் அதிகரிக்கும் என்று கிரேக்க அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.</p>
<p>அத்துடன், நான்கு துறைமுகங்களைத் தவிர்க்கவும், தங்கள் நீச்சல் குளங்களை காலி செய்யவும், உட்புற இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவும் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>மேலும் திங்கட்கிழமை பள்ளிகளை மூடவும் கேட்டுக்கொண்டுள்ளனர். எரிமலைத் தீவுகளான சாண்டோரினி மற்றும் அமோர்கோஸ் இடையே வெள்ளிக்கிழமை முதல் 200க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சிவில் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>
<p>இதனிடையே, நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கையில், இந்த நிலஅதிர்வுகள் எரிமலை செயல்பாடுகளுடன் தொடர்புடையவை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் பிப்ரவரி 3 ஆம் திகதி பள்ளிகளை மூடுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>மேலும், சாண்டோரினியில் உள்ள மக்கள் அம்மௌடி, ஆர்மெனி, கோர்போஸ் மற்றும் முக்கியமாக பயணக் கப்பல்களுக்கு சேவை செய்யும் ஃபிரா துறைமுகத்திலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>சாண்டோரினியின் பல துறைமுகங்கள் செங்குத்தான பாறை முகங்களால் சூழப்பட்டுள்ள ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே, ஏதென்ஸில், பிரதமர் Kyriakos Mitsotakis இந்த விவகாரம் குறித்து அவசரக் கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.</p>
<p>சாண்டோரினி பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மக்களுக்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு,</p>
<p>காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிறப்பு பேரிடர் மீட்புப் பிரிவுகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ரிக்டர் அளவில் 6 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கத்திற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர் ஒருவர் கணித்துள்ளார். சாண்டோரினி பகுதியில் ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் சுற்றுலா செல்கின்றனர்.</p>
<p>கிறிஸ்துவுக்கு முன்னர் 1,600ல் ஏற்பட்ட மிக மோசமான எரிமலை வெடிப்பால், இந்த தீவு தற்போதைய உருமாற்றத்தை எட்டியதாக கூறுகின்றனர். கடைசியாக 1950ல் இப்பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உக்ரைனின் முக்கிய நகரத்தை இலக்கு வைத்த ரஷ்ய ஏவுகணைகள்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/russian-missile-attack-on-ukraine/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Feb 2025 06:16:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[Russian Missile Attack On Ukraine]]></category>
		<category><![CDATA[Russo-Ukrainian War]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=190332</guid>

					<description><![CDATA[தீவிரமடைந்துவரும் உக்ரைன் &#8211; ரஷ்ய போரில் இரு தரப்புக்குமிடையே தற்போது தாக்குதல் நகர்வுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிதத்திலிருந்து சுமார் 22 பேர் மீட்கப்பட்டதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளது. குறித்த தாக்குதலானது, உக்ரைனின், பொல்டாவா நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், உக்ரைன் இராணுவமும் பதிலுக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தீவிரமடைந்துவரும் உக்ரைன் &#8211; ரஷ்ய போரில் இரு தரப்புக்குமிடையே தற்போது தாக்குதல் நகர்வுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.</p>
<p>இதன்படி இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p>
<p>இந்த தாக்குதலை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிதத்திலிருந்து சுமார் 22 பேர் மீட்கப்பட்டதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.</p>
<p>குறித்த தாக்குதலானது, உக்ரைனின், பொல்டாவா நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>எனினும், உக்ரைன் இராணுவமும் பதிலுக்கு ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.</p>
<p>இதில் ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் 9 ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம்! ஒப்புதல் அளித்துள்ள பிரித்தானிய நிறுவனங்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/200-companies-in-the-uk-offer-4-day-work-weeks/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jan 2025 13:22:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[200 Companies In The Uk Offer 4 Day Work Weeks]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=189716</guid>

					<description><![CDATA[வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்தவகையில், பிரித்தானியா வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.</p>
<p>அந்தவகையில், பிரித்தானியா வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.</p>
<p>இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன.</p>
<p>இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் பிரித்தானியாவில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பிரித்தானியாவை சேர்ந்த 200 நிறுவனங்கள் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தி உள்ளன.</p>
<p>இந்த 200 நிறுவனங்களில் மொத்தமாக 5000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.</p>
<p>வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20% அமெரிக்க படைகள் வெளியேற்றம்: டிரம்பின் புதிய திட்டம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/trump-reduce-us-military-presence-in-europe/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jan 2025 14:43:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[Trump Reduce Us Military Presence In Europe]]></category>
		<category><![CDATA[United States of America]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=189245</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20% அமெரிக்க படைகள் வெளியேற்றம்: டிரம்பின் புதிய திட்டம் ஐரோப்பாவில் அமெரிக்க படைகளின் இருப்பை டிரம்ப் குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவ படையின் இருப்பை(presence) 20% வரை குறைக்க அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்து கிட்டத்தட்ட 20,000 அமெரிக்க ராணுவ வீரர்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திரும்ப பெற திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஐரோப்பிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20% அமெரிக்க படைகள் வெளியேற்றம்: டிரம்பின் புதிய திட்டம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/10/10/foreigners-arrested-in-katunayake-airport-today/">ஐரோப்பாவில்</a> அமெரிக்க படைகளின் இருப்பை டிரம்ப் குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>அமெரிக்க ராணுவ படையின் இருப்பை(presence) 20% வரை குறைக்க <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" target="_blank" rel="noopener">அமெரிக்காவின்</a> புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>அதன்படி, ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்து கிட்டத்தட்ட 20,000 அமெரிக்க ராணுவ வீரர்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திரும்ப பெற திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.</p>
<p>ஐரோப்பிய ராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள் காட்டி இத்தாலிய செய்தி நிறுவனமான ANSA தெரிவித்துள்ள தகவலில், இந்த முடிவு தற்போது உள்ள படைகளில் 20% குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும் ஐரோப்பாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ படைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் நிதி வழங்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆனால் அமெரிக்க படைகளை பராமரிப்பதற்காக எவ்வளவு தொகை ஐரோப்பிய நாடுகளிடம் வாங்கலாம் என்பதை யூகிப்பது மிக விரைவான நடவடிக்கை என்றும் ANSA தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் இரகசிய நகர்வு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/world/russia-next-plan-against-european-countries/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/russia-next-plan-against-european-countries/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jan 2025 07:38:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[russia]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=187607</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் இரகசிய நகர்வு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மேற்கு நாடுகள் மீதான தாக்குதலின் அடுத்த கட்டத்தில் ஐரோப்பாவில் (Europe) பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பயங்கரவாத தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடலாம் என முன்னணி பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய (Russia) படையெடுப்பை அடுத்து ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை தொடர்ந்து ஆதரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் மறைமுக போரில் ஐரோப்பாவின் அப்பாவி பொதுமக்கள் பலியாக வாய்ப்புள்ளது என குறித்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் இரகசிய நகர்வு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h4>
<p>மேற்கு நாடுகள் மீதான தாக்குதலின் அடுத்த கட்டத்தில் ஐரோப்பாவில் (Europe) பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பயங்கரவாத தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடலாம் என முன்னணி பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>ரஷ்ய (Russia) படையெடுப்பை அடுத்து ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை தொடர்ந்து ஆதரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் மறைமுக போரில் ஐரோப்பாவின் அப்பாவி பொதுமக்கள் பலியாக வாய்ப்புள்ளது என குறித்த நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>போலந்துக்கு (Poland) எதிராக வான்வழியாக பயங்கரவாதச் செயல்களை ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள நிலையிலேயே மேற்படி இதன் பின்னணியை விளக்கியுள்ளார்.</p>
<p><a href="https://tamilnaadi.com/news/world/2025/01/17/russia-warns-of-concerns-uk-military-bases-ukraine/">பிரித்தானியாவின்</a> (United Kingdom) பர்மிங்காமில் உள்ள ஒரு கிடங்கில் பொதி ஒன்று திடீரென தீப்பிடித்த சம்பவத்தை குறிப்பிட்டு போலந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>ஜேர்மனி மற்றும் போலந்தில் உள்ள சரக்கு விமானங்களிலும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p>
<p>பிரித்தானிய உளவு அமைப்புகலும் CIA ஐயும் இந்த திட்டத்தை ரஷ்யாவே முன்னெடுத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதுடன் ரஷ்யா திட்டவட்டமாக இதனை மறுத்துள்ளது.</p>
<p>முன்னதாக பனிப்போர் காலகட்டம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத இயக்கங்களுக்கு ரஷ்யா நிதியுதவி அளித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள குறித்த நிபுணர், தற்போது இந்த விமானப் பொதி திட்டங்களுடன் பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ரஷ்யாவின் சதி மீண்டும் திரும்பியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஐரோப்பா முழுவதும் ரஷ்ய அரசு பயங்கரவாத தாக்குதல்கள் விரைவில் அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ள அவர் ஐரோப்பாவில் ரஷ்ய நாசவேலைகள் குறித்து நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகள் பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகளின் எச்சரிக்கைகள் சரி என்பதற்கான தொடர்ச்சியான சான்றுகள் இருந்த போதிலும், யாரும் இன்னும் அவற்றைக் கேட்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என குறித்த நிபுணர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/russia-next-plan-against-european-countries/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சிரியா மக்களின் புகலிடக்கோரிக்கை : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/syrian-people-asylum-request/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Dec 2024 08:49:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[Syria]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=181219</guid>

					<description><![CDATA[சிரியா மக்களின் புகலிடக்கோரிக்கை : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி அறிவிப்பு சிரியா (Syria) மக்களின் புகலிடக் கோர்க்கை விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்ட நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2011 இல் சிரியாவில் வெடித்த உள்நாட்டுப் போரினால் ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்த நிலையில் இது பல ஐரோப்பிய நாடுகளின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சிரியா மக்களின் புகலிடக்கோரிக்கை : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி அறிவிப்பு</h4>
<p>சிரியா (Syria) மக்களின் புகலிடக் கோர்க்கை விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்ட நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>கடந்த 2011 இல் சிரியாவில் வெடித்த உள்நாட்டுப் போரினால் ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்த நிலையில் இது பல ஐரோப்பிய நாடுகளின் அரசியலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.</p>
<p>தற்போது அசாத்தின் கொடுங்கோலாட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, வன்முறையில் இருந்து தப்பி ஓடியவர்களில் பலர் நாடு திரும்பலாமா என்று யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>சிரியாவின் நிலை மிக வேகமாக மாறிவரும் சூழலில், பல நாடுகள் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்தியுள்ளன.</p>
<p>சிரியா மக்களின் புகலிடக்கோரிக்கை : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி அறிவிப்பு | Syrian People Asylum Request<br />
ஆஸ்திரியாவில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் தற்போது சிரியா மக்களை வெளியேற்றுவது குறித்து திட்டம் வகுத்து வருகிறது.</p>
<p>ஆனால் பிரித்தானியா அப்படியான ஒரு முடிவுக்கு வரவில்லை என்றாலும், விண்ணப்பங்களை பரிசீப்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.</p>
<p>அதுமட்டுமின்றி, பல எண்ணிக்கையிலான சிரியா மக்கள் சொந்த நாடு திரும்புவதை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>சிரியா மக்களுக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வந்த நாடான ஜேர்மனி தற்போது, முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.</p>
<p>நோர்வே, இத்தாலி, டென்மார்க், கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் சிரிய அகதிகள் மீதான முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளன.</p>
<p>அத்தோடு, இதேபோன்ற முடிவை விரைவில் எடுக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ள நிலையில் 2019 இல் மட்டும் பிரித்தானியாவில் 48,000 சிரியா மக்கள் வசித்து வந்தனர்.</p>
<p>இதில் பெரும்பாலானோர் அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள் அல்ல, 2011 இல் இந்த எண்ணிக்கை வெறும் 9,200 என இருந்துள்ளதுடன் 2011 மற்றும் 2021 இற்கு இடையில், கிட்டத்தட்ட 31,000 சிரியா மக்களுக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் அளிக்கப்பட்டது.</p>
<p>2011 இல் வெடித்த உள்நாட்டுப் போருக்கு பின்னர் 14 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதுடன் அதில் சரிபாதி பேர்கள், சிரியாவின் பாதுகாப்பான பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.</p>
<p>சுமார் 5.5 மில்லியன் மக்கள் துருக்கி, லெபனான், ஈராக், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர்.</p>
<p>2021 இல் வெளியான தரவுகளின் அடிப்படையில் சுமார் ஒரு மில்லியன் சிரிய மக்கள் அகதிகளாகவும் புகலிடக்கோரிக்கையாளர்களாகவும் ஐரோப்பா நடுகளில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இதில் 59 சதவிகித சிரிய மக்களை ஜேர்மனி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் 11 சதவிகித மக்களை ஸ்வீடன் ஏற்றுக்கொள்ள, எஞ்சிய ஐரோப்பிய நாடுகள் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான மக்களை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
