<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Education Reform Sri Lanka. &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/education-reform-sri-lanka/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 05 Jan 2026 15:25:50 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Education Reform Sri Lanka. &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிள்ளைகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன: கல்விச் சீர்திருத்த குளறுபடிகள் குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/sajith-premadasa-slams-government-over-educational-reforms-demands-independent-inquiry-into-obscene-mishandling-and-lack-of-online-safety/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 15:25:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[COPPA Sri Lanka]]></category>
		<category><![CDATA[Education Ministry Criticism.]]></category>
		<category><![CDATA[Education Reform Sri Lanka.]]></category>
		<category><![CDATA[Online Privacy for Children]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa News 2026]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=209012</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்த முன்னெடுப்புகள் முறையாகத் திட்டமிடப்படாமல் &#8220;ஆபாசமாக்கப்பட்டுள்ளதாக&#8221; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மீரிகம பகுதியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்காவின் COPPA, ஐக்கிய இராச்சியத்தின் Children’s Code மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் GDPR போன்ற சட்டங்கள் பிள்ளைகளின் இணையவழிப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஆனால், இலங்கையின் புதிய சீர்திருத்தத்தில் இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகள் எவையும் உள்வாங்கப்படவில்லை. முறையான கலந்துரையாடல்கள் இன்றி, &#8216;White Paper&#8217; [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்த முன்னெடுப்புகள் முறையாகத் திட்டமிடப்படாமல் &#8220;ஆபாசமாக்கப்பட்டுள்ளதாக&#8221; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மீரிகம பகுதியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>அமெரிக்காவின் COPPA, ஐக்கிய இராச்சியத்தின் Children’s Code மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் GDPR போன்ற சட்டங்கள் பிள்ளைகளின் இணையவழிப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஆனால், இலங்கையின் புதிய சீர்திருத்தத்தில் இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகள் எவையும் உள்வாங்கப்படவில்லை.</p>
<p>முறையான கலந்துரையாடல்கள் இன்றி, &#8216;White Paper&#8217; அல்லது &#8216;Green Paper&#8217; போன்ற ஆவணங்களை முன்வைக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதால் கல்வித் திட்டம் இன்று ஆபாசமாகியுள்ளது. இதற்குப் பிரதமரும், கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும்.</p>
<p>புதிய சீர்திருத்தத்தில் வரலாறு பாடத்தைக் கட்டாயப் பாடமாக்காமல் இருப்பது மற்றொரு பாரிய தவறு என அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் வெறும் பதவி விலகல்கள் தீர்வாகாது. தவறு எங்கு நடந்தது? யார் பொறுப்பேற்பது? என்பது குறித்து வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p>
<p>தன்னிச்சையாகவும் &#8220;தலைக்கனமாகவும்&#8221; முடிவுகளை எடுக்காமல், கல்வியலாளர்கள் மற்றும் சமூகத்தின் கருத்துக்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்.தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அவசியமானதுதான், ஆனால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.</p>
<p>&#8220;எமது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க வளம் மாணவ வளம். அவர்களின் உரிமைகளை மீறும் செயலுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது&#8221; என அவர் இதன்போது வலியுறுத்தினார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தரம் 6 புத்தகப் பிரச்சினைக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என இராதாகிருஷ்ணன் சாடல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/v-radhakrishnan-distributes-learning-materials-to-500-students-in-kotagala-demands-pm-harini-amarasuriya-take-responsibility-for-grade-6-textbook-error-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Jan 2026 16:39:34 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Education Reform Sri Lanka.]]></category>
		<category><![CDATA[Grade 6 Textbook Issue]]></category>
		<category><![CDATA[Kotagala School Supply Donation]]></category>
		<category><![CDATA[Malaiyaha Makkal Munnani]]></category>
		<category><![CDATA[V. Radhakrishnan MP]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208921</guid>

					<description><![CDATA[மலையகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பாவின் ஏற்பாட்டில், கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (04) கொட்டகலை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உபகரணங்களை விநியோகித்தார். பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொட்டகலை வர்த்தக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மலையகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பாவின் ஏற்பாட்டில், கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (04) கொட்டகலை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.</p>
<p>குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.</p>
<p>நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உபகரணங்களை விநியோகித்தார்.</p>
<p>பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொட்டகலை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.</p>
<p>நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் ஏற்பட்டுள்ள பாரதூரமான தவறு குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்தார்.</p>
<p>&#8220;தரம் 6 பாடப் புத்தக விவகாரமானது மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது. இதற்கான முழுப் பொறுப்பையும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய ஏற்றுக் கொள்ள வேண்டும்.&#8221; என அவர் வலியுறுத்தினார்.</p>
<p>மலையக மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த இவ்வாறான உதவிகள் தொடர வேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
