<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Easter Attack Sri Lanka &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/easter-attack-sri-lanka/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 10 Oct 2025 09:47:08 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Easter Attack Sri Lanka &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முரணான கருத்துக்கள்.. அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/mastermind-of-the-easter-sunday-attacks/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 09:47:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[Mastermind Of The Easter Sunday Attacks]]></category>
		<category><![CDATA[NPP Government]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202232</guid>

					<description><![CDATA[உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின் போது கூறப்படாத கருத்துக்கள் குறித்து, தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று(09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குழுவின் எந்த உறுப்பினருக்கும் உள் விவாதங்களை ஊடகங்களுக்கு வெளியிட நெறிமுறை உரிமை இல்லை என்று அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார். சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவது நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் தேசிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின் போது கூறப்படாத கருத்துக்கள் குறித்து, தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று(09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>குழுவின் எந்த உறுப்பினருக்கும் உள் விவாதங்களை ஊடகங்களுக்கு வெளியிட நெறிமுறை உரிமை இல்லை என்று அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.</p>
<p>சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவது நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் தேசிய நலன்களைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p>
<p>இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அதை வழங்கியவர்கள் இருவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>எனினும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இந்தியாவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாகவோ அல்லது மூளையாகச் செயல்பட்டவர் இந்தியாவுடன் தொடர்புடையவர் என்றோ செயலாளர் ரவி செனவிரத்ன எந்த நேரத்திலும் கூறவில்லை என்பதை ஹேரத் இதன் போது தெளிவுபடுத்தினார்.</p>
<p>எனவே இந்த அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட வலுவான இராஜதந்திர உறவுகளை சேதப்படுத்தும் நோக்கில், கூறப்பட்ட முற்றிலும் தவறான கதை இது, என்றும் அவர் தமது உரையில் கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் இருக்கும் சாரா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranjith-madduma-bandara-easter-attack/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 05:54:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[National People's Power - NPP]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[Ranjith Madduma Bandara Easter Attack]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202183</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் குண்டு தாக்குதலின் முக்கிய சாட்சியாளர் சாரா.அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்,தற்போது அரசாங்கம் இந்தியாவில் இருக்கும் சாராவை இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார கூறியுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத விடயங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தில் (எதிர்க்கட்சி) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்கியது இந்தியாவே. ஆனால் இலங்கைக்கான இந்திய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதலின் முக்கிய சாட்சியாளர் சாரா.அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்,தற்போது அரசாங்கம் இந்தியாவில் இருக்கும் சாராவை இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார கூறியுள்ளார்.</p>
<p>அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத விடயங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தில் (எதிர்க்கட்சி) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தொடர்ந்து பேசிய அவர், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்கியது இந்தியாவே. ஆனால் இலங்கைக்கான இந்திய தூதுவராலயம் எந்தவித பாதுகாப்பும் அரசாங்கத்திடம் கேட்கவில்லை.ஏனென்றால் அவர்களுக்கு தாக்குதல் நடக்காது என்று தெரியும் என்பதால் ஆகும் என 2021 ஆம் ஆண்டு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.</p>
<p>தாக்குதலின் பின்னர் இந்தியாவின் வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு வந்து சாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்கிறார் என்றார். அதனால் இந்தியாவிடம் சாராவை கேட்கலாம்.</p>
<p>இந்த நாடு கத்தோலிக்க மக்களை ஏமாற்றியுள்ளது.</p>
<p>நல்லாட்சி அரசில் 700 பேரை கைது செய்தோம். உங்களுக்கு இது தொடர்பில் ஒன்றும் சொல்வதற்கில்லை.</p>
<p>மேலும், ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/easter-attack-sri-lanka-2019-5/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 08:04:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[2019 Sri Lanka Easter bombings]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka 2019]]></category>
		<category><![CDATA[Mujibur Rahman]]></category>
		<category><![CDATA[NPP Government]]></category>
		<category><![CDATA[sri lanka government]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201504</guid>

					<description><![CDATA[பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி செய்வதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் உயிர்த்த ஞாயிறு தொடர்பான முக்கிய தகவல்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சி முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி செய்வதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.</p>
<p>கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் உயிர்த்த ஞாயிறு தொடர்பான முக்கிய தகவல்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சி முயற்சிகளை மேற்கொண்டது.</p>
<p>எனினும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்ததன் மூலம் அரசாங்கம் அதற்கான வாய்ப்பை சதி செய்து தடுத்துள்ளது.</p>
<p>நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பரிந்துரைகளை மீறி சபாநாயகர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்துள்ளார்.</p>
<p>இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற பலம் இருக்கும் நிலையில் பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவாக வெற்றி கொண்டிருக்கலாம்.</p>
<p>ஆனாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் வகையிலேயே அதனை நிராகரித்து அரசாங்கம் சதி செய்துள்ளது.</p>
<p>எனினும் எதிர்வரும் நாட்களில் எந்த வழியிலாவது குறித்த தகவல்களை நாட்டு மக்களுக்கு முன்வைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல் ஆதாரங்களை அழித்த இராணுவம்! சிக்கலில் அருண ஜெயசேகர</title>
		<link>https://tamilnaadi.com/news/local/army-destroys-evidence-of-easter-attacks/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Aug 2025 17:10:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID - Sri Lanka Police]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201373</guid>

					<description><![CDATA[பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர உடனடியாக தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர், தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இராணுவம் அழித்ததாக கூறிய கருத்தையும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அருண ஜெயசேகர பதவியை விட்டு விலகி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர உடனடியாக தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p>
<p>எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர், தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இராணுவம் அழித்ததாக கூறிய கருத்தையும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,</p>
<p>“அருண ஜெயசேகர பதவியை விட்டு விலகி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.</p>
<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது அப்போதைய மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர கிழக்கு கட்டளைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஒரு குழு நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றபோது அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.</p>
<p>இந்நிலையில் இந்த விடயத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்கும், அது தொடர்பான ஆதாரங்களை அழித்ததற்கும் பின்னால் இராணுவ அதிகாரிகள் குழு இருந்ததாக கூறியிருந்தார்.</p>
<p>இதன்படி அப்போது கிழக்குத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தாக்குதலுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று குற்றம் சாட்டினார்” என தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சின்ன சஹ்ரான் கொழும்பில் கைது</title>
		<link>https://tamilnaadi.com/news/local/podi-saharan-arrested-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Jun 2025 11:41:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[kandy]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200811</guid>

					<description><![CDATA[சின்ன சஹ்ரான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபரொருவர் கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போரா பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபர், அப்பிரதேசத்தை தனது ஸ்மார்ட் போன் ஊடாக காணொளிப் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போரா பள்ளிவாசலை இலக்கு வைத்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சின்ன சஹ்ரான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபரொருவர் கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>போரா பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபர், அப்பிரதேசத்தை தனது ஸ்மார்ட் போன் ஊடாக காணொளிப் பதிவு செய்துள்ளார்.</p>
<p>இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>போரா பள்ளிவாசலை இலக்கு வைத்து நாசகார செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே அவர் குறித்த காணொளிகளைப் பதிவு செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.</p>
<p>அவரிடம் இருந்த கைத்தொலைபேசியும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் பலர் அரசாங்கத்துடன்..! தேரர் பகிரங்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/this-governement-will-not-take-any-action/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 21 May 2025 14:30:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Galagoda Aththe Gnanasara Thero]]></category>
		<category><![CDATA[This Governement Will Not Take Any Action]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197903</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் இருப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். இஸ்லாமிய கடும்போக்குவாத கொள்கையுடைய பலர் ஆளும் கட்சிக்குள் அடைக்கலம் புகுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக கடமையாற்றி வரும் முனீர் முலாபர் இஸ்லாமிய கடும்போக்குவாதத்தை ஊக்குவிக்கும் நபர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நிட்டம்புவ பகுதியில் தன்வீர் அகடமியின் பொறுப்பாளராக முனீர் கடமையாற்றி வருவதாகவும், கடவுளுக்காக உயிர்த்தானம் செய்ய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் இருப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>இஸ்லாமிய கடும்போக்குவாத கொள்கையுடைய பலர் ஆளும் கட்சிக்குள் அடைக்கலம் புகுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக கடமையாற்றி வரும் முனீர் முலாபர் இஸ்லாமிய கடும்போக்குவாதத்தை ஊக்குவிக்கும் நபர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>நிட்டம்புவ பகுதியில் தன்வீர் அகடமியின் பொறுப்பாளராக முனீர் கடமையாற்றி வருவதாகவும், கடவுளுக்காக உயிர்த்தானம் செய்ய வேண்டுமென வலியுறுத்தும் குழுவொன்றை முனீர் வழிநடத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் இஸ்லாமிய கடும்போக்குவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் மெத்தனப் போக்கினை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தம்மை கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டுமென கிழக்கு மாகாணத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களது கொள்கை ரீதியான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p>
<p>உலக அளவில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதாகவும், சிங்களவர்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்த இலங்கை மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மிகப் பெரும் பொய்யரை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்! நாமல் ராஜபக்ச</title>
		<link>https://tamilnaadi.com/news/local/namal-rajapaksha-political-statement/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Mon, 05 May 2025 14:59:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksha Political Statement]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196202</guid>

					<description><![CDATA[இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், மிகப் பெரும் பொய்யரை பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளதாக நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அம்பலப்படுத்துவதாக வாக்களித்து பதவிக்கு வந்தது. ஆனால் இதுவரை அவர்களால் அதனை மேற்கொள்ள முடியவில்லை. அதே ​நேரம் இந்த நாட்டின் மிகப் பெரும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், மிகப் பெரும் பொய்யரை பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளதாக நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அம்பலப்படுத்துவதாக வாக்களித்து பதவிக்கு வந்தது. ஆனால் இதுவரை அவர்களால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.</p>
<p>அதே ​நேரம் இந்த நாட்டின் மிகப் பெரும் பொய்யர் ஒருவரை பொதுமக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.</p>
<p>பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசாங்கத்தை நடத்திச் செல்ல முற்படும் ஜனாதிபதி ஒருவரை மக்கள் கண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம்! நாமல் பகிரங்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/namal-has-charged/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Mar 2025 07:23:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[Namal Has Charged]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=194558</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பு, புத்தர் சிலை உடைக்கப்பட்டு பல்வேறு கொலைகள் நடந்தமை தொடர்பில் அப்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த தவறியதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், &#8220;இப்போதெல்லாம், தேசிய பாதுகாப்பை அரசியல்மயமாக்க முயற்சிக்கிறோம். தேசிய பாதுகாப்பு தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இல்லாமல் தேசிய பாதுகாப்பு இல்லை. தேசிய பாதுகாப்பு பற்றி தனித்தனியாகப் பேசுவதில் அர்த்தமில்லை. உயிர்த்தஞாயிறு தாக்குதலின் மூளையாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பு, புத்தர் சிலை உடைக்கப்பட்டு பல்வேறு கொலைகள் நடந்தமை தொடர்பில் அப்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த தவறியதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>&#8220;இப்போதெல்லாம், தேசிய பாதுகாப்பை அரசியல்மயமாக்க முயற்சிக்கிறோம். தேசிய பாதுகாப்பு தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.</p>
<p>நிலையான வளர்ச்சி இல்லாமல் தேசிய பாதுகாப்பு இல்லை. தேசிய பாதுகாப்பு பற்றி தனித்தனியாகப் பேசுவதில் அர்த்தமில்லை.</p>
<p>உயிர்த்தஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் பற்றி நாம் இன்னும் பேசி வருகிறோம்.</p>
<p>அன்று தாக்குதலுக்கு முன்பு, புத்தர் சிலை உடைக்கப்பட்டு பல்வேறு கொலைகள் நடந்தன. அப்போது, ​​அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் கூறியது.</p>
<p>இந்த நிகழ்வுகளின் சங்கிலியை ஆய்வு செய்திருந்தால் உயிர்த்த தாக்குதலைத் தடுத்திருக்கலாம். இறுதியில், தேசிய பாதுகாப்பு சரிந்தது.</p>
<p>இன்றும் நாட்டில் இடம்பெறும் சம்பவங்களை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகப் பார்க்க வேண்டாம். மேலும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டால் கடந்த கால அரசாங்கங்களை நோக்கி விரல் நீட்ட வேண்டாம்” என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாதகமாக மாற்றிய ரணில்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/cardinal-malcolm-warns-anura-government/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Feb 2025 16:56:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cardinal Malcolm Ranjith]]></category>
		<category><![CDATA[Cardinal Malcolm Warns Anura Government]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=191601</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாதகமாக மாற்றிய ரணில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தனக்கு சாதகமாக மாற்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யாத நீதியையும் நியாயத்தையும் தற்போதைய அரசாங்கம் செய்யும் என்று நம்புகின்றேன் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்தைய அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் நீதி வழங்கும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாதகமாக மாற்றிய ரணில்</h4>
<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தனக்கு சாதகமாக மாற்றி முன்னாள் <a href="https://tamilnaadi.com/news/local/2025/02/10/donald-trump-11/">ஜனாதிபதி</a> ரணில் விக்ரமசிங்க ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யாத நீதியையும் நியாயத்தையும் தற்போதைய அரசாங்கம் செய்யும் என்று நம்புகின்றேன்</p>
<p>இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்தைய அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் நீதி வழங்கும் பொறுப்பை புறக்கணித்தால், அதற்கு எதிராக செயல்பட ஒருபோதும் தயங்க மாட்டேன்.</p>
<p>மறைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும்.</p>
<p>மேற்கூறிய குற்றங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
<p>வாக்குறுதியின் அடிப்படையில், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பொறுப்பான நபர்கள் பேராயரின் இல்லத்திற்கு வந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த தேர்தல் காலத்தில் அறிவித்தனர்.</p>
<p>அந்த வாக்குறுதியை நிறைவேற்ற புதிய அரசாங்கத்திற்கு போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும்.</p>
<p>ஆரம்ப கட்டத்தில் விசாரணையை நடத்திய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர் என்றும், எனவே நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.</p>
<p>குண்டுவெடிப்புகள் சஹாரன் ஹாஷிம் உட்பட ஒரு சிலரின் உத்தரவின் பேரில் நடத்தப்படவில்லை என்றும், ஆனால் அதன் பின்னால் பல வலுவான கரங்கள் இருக்கின்றன.</p>
<p>வழக்கை விசாரித்த குற்றப் புலனாய்வுத் துறையின் 21 அதிகாரிகள் விசாரணையிலிருந்து நீக்கப்பட்டு, ஆதாரங்கள் அழிக்கப்பட்டன.</p>
<p>அந்த விசாரணைகளின் முக்கிய சாட்சியான அசாத் மௌலானா மூலம், குண்டுவெடிப்பாளர்களுக்கு குண்டுகளை தயாரிப்பதற்குத் தேவையான பயிற்சி வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், அந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு பாதுகாப்பு, பணம் மற்றும் பிற வசதிகளையும் வழங்கியதாக முழு உலகிற்கும் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.</p>
<p>தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மக்களின் நம்பிக்கை இது.</p>
<p>தாக்குதல் தொடர்பில் விசாரித்த அதிகாரிகள் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையில் மீண்டும் இணைக்கப்பட்டு, சரியான வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்” என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/gotabaya-will-be-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Feb 2025 05:54:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Gotabaya Will Be Arrested]]></category>
		<category><![CDATA[Udaya Gammanpila]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=190678</guid>

					<description><![CDATA[கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் குறிவைக்கப்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். இதன்காரணமாக கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கான சாத்திப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு புதிய &#8220;தலைமை சூத்திரதாரி&#8221;யை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் ஆரம்பத்தில் உண்மையான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் குறிவைக்கப்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>இதன்காரணமாக கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கான சாத்திப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.</p>
<p>தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு புதிய &#8220;தலைமை சூத்திரதாரி&#8221;யை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>அரசாங்கம் ஆரம்பத்தில் உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்ததாக தெரிவித்த கம்மன்பில, நிர்வாகத்தில் உள்ள சில நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த ஒரு மாற்றுக் கதை உருவாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>உண்மையிலேயே பொறுப்பானவர்கள் இன்னும் நிர்வாகத்திற்குள் இருப்பதால், ஒரு புதிய பிரதான சூத்திரதாரியை உருவாக்குவதற்கான திட்டத்தில் அரசாங்கம் இப்போது ஈடுபட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு நன்மை பயக்கும் வகையில் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு ஈடர் குண்டுவெடிப்புகளைச் செய்தது என்ற தவறான கூற்றை நிறுவுவதே இதன் நோக்கம்.</p>
<p>உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர், விமானப்படையின் முன்னாள் தளபதி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆகியோர் உள்ளிட்ட மூவர் கொண்ட ஜனாதிபதி விசாரணைக் குழுவை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.</p>
<p>இலங்கையின் புலனாய்வு அமைப்புகளைக் குண்டு தாக்குதல்களுடன் இணைக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 ஆவணப்படம் செய்த குற்றச்சாட்டுகளை அந்த குழு நிராகரித்தது.</p>
<p>அரசாங்கம் அறிக்கையைப் புறக்கணித்து தவறான கதையை முன்வைக்கின்றது.</p>
<p>குறிப்பாக அரசாங்க சதித்திட்டத்தில் முக்கிய சாட்சியாகக் கூறப்படும் அசாத் மௌலானா, மோசடி மற்றும் அடையாள மோசடி உள்ளிட்ட பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.</p>
<p>மேலும், மௌலானாவின் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கட்டுப்படுத்துவதோடு புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் பெறப்படுகிறது.</p>
<p>சுரேஷ் சலேவை கைது செய்ய, மௌலானாவிடம் இருந்து ஒரு வாக்குமூலம் தேவை. ஆனால் பயணத் தடை இருக்கும் வரை, மௌலானா இலங்கைக்கு வந்து அறிக்கை அளிக்க முடியாது.</p>
<p>ஏனெனில் பயணத் தடை உள்ள ஒருவர் விமான நிலையத்திற்குள் நுழையும்போது கைது செய்யப்படுவார். எனவே, பயணத் தடையை நீக்கி, மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 127 இன் கீழ் வாக்குமூலம் அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.</p>
<p>போலி திருமணச் சான்றிதழைத் தயாரிக்க மௌலானாவுக்கு உதவிய அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார்.</p>
<p>எனவே, மௌலானா மீதான பயணத் தடையை நீக்க பொலிஸ்தரப்பு அனுமதிக்க முடியாது. இந்த சூழ்நிலையில், மௌலானாவின் வழக்கறிஞர் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தை எதிர்க்க வேண்டாம் என்று சாய்ந்தமருது பொலிஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>
<p>எனக்குக் கிடைத்த தகவலின்படி, இந்த வழக்கறிஞர் அம்பாறை பகுதியில் உள்ள ஒரு உயர் பொலிஸ் அதிகாரியால் பணியமர்த்தப்படுகிறார்.</p>
<p>அந்த அதிகாரியின் பெயர் என்னிடம் இருந்தாலும், அதை ஆதரிக்க எனக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன்.</p>
<p>அதன்படி, ஜனவரி 21 அன்று, மௌலானா மீதான பயணத் தடை பொலிஸாரிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லாமல் நீக்கப்பட்டது.</p>
<p>பொலிஸ் அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அஞ்சி, பிள்ளையானின் செல்வாக்கின் கீழ் அவர் பொலிஸில் புகார் அளித்தார்.</p>
<p>அவரது இரண்டாவது மனைவி பாத்திமா ஜெஸ்லி பெனாசிரிடமிருந்து வாக்குமூலம் பெற பொலிஸார் முயன்றனர், ஆனால் பாத்திமா முதலில் மறுத்துவிட்டார்.</p>
<p>எனினும் பின்னர் பாத்திமாவிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, அதை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (DCDB) சேமித்து வைத்தனர்.</p>
<p>இதற்கமைய தாக்குதல்கள் குறித்து ஏதேனும் போலி விசாரணையை மேற்கொள்ளுங்கள். ஆனால், மௌலானாவுக்கு எதிரான பிற குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளைத் தடுத்ததற்காக பழிவாங்கும் விதமாக, அவர் விரும்பியதைப் செய்ய அரசாங்கம் முயற்சித்தால், அது தவறு. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். என சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
