<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>East News &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/east-news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 16 Jun 2022 07:25:13 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>East News &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மட்டு. ஏறாவூர் வாவியில் மீனவரின் சடலம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/batticaloa-eravur-fishermans-body/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/batticaloa-eravur-fishermans-body/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2022 06:58:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[East News]]></category>
		<category><![CDATA[Eravur]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Fisherman's body]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=53301</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு, ஏறாவூர் &#8211; ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து மீனவர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை மீட்கப்பட்ட இந்தச் சடலம் ஆறுமுகத்தான்குடியிருப்பு துரைச்சாமி வீதியை அண்டி வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை ஸ்ரீதரன் (வயது &#8211; 51) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். வழமை போன்று தனியாகவே வாவியில் இரவு நேர மீன்பிடிக்குச் செல்லும் இவர் இரவுச் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு நேற்று மாலை தோணியில் வாவிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். எனினும், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு, ஏறாவூர் &#8211; ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து மீனவர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>இன்று காலை மீட்கப்பட்ட இந்தச் சடலம் ஆறுமுகத்தான்குடியிருப்பு துரைச்சாமி வீதியை அண்டி வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை ஸ்ரீதரன் (வயது &#8211; 51) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.</p>
<p>வழமை போன்று தனியாகவே வாவியில் இரவு நேர மீன்பிடிக்குச் செல்லும் இவர் இரவுச் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு நேற்று மாலை தோணியில் வாவிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.</p>
<p>எனினும், இன்று காலை அவரது சடலம் வாவியில் மிதப்பதைக் கண்டு சக மீனவர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளனர்.</p>
<p>நேற்று மாலை வாவியில் பலத்த காற்று வீசியது எனத் தெரிவிக்கும் மீனவர்கள் அதன் காரணமாக தோணி கவிழ்ந்து மீனவர் வாவியில் வீழ்ந்து மூழ்கியிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கின்றனர்.</p>
<p>இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/batticaloa-eravur-fishermans-body/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அம்பாறையில் விழிப்பூட்டல் வேலைத்திட்டம் தீவிரம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ampara-awareness/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/ampara-awareness/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2022 06:17:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[ampara]]></category>
		<category><![CDATA[Awareness]]></category>
		<category><![CDATA[Ayesha]]></category>
		<category><![CDATA[East News]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=53293</guid>

					<description><![CDATA[களுத்துறை மாவட்டம், பண்டாரகம பிரதேசத்தில் அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து &#8216;பிள்ளைகளைப் பாதுகாப்போம்&#8217; என்கின்ற விழிப்பூட்டல் வேலைத்திட்டம் சமூக சேவைக்கான நட்புறவு ஒன்றியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பிள்ளைகளுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை ஒன்றியம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் கல்முனையில் தரம் 07, 08 மாணவர்களுக்கு ஒன்றியத்தால் நடத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சிறப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>களுத்துறை மாவட்டம், பண்டாரகம பிரதேசத்தில் அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து &#8216;பிள்ளைகளைப் பாதுகாப்போம்&#8217; என்கின்ற விழிப்பூட்டல் வேலைத்திட்டம் சமூக சேவைக்கான நட்புறவு ஒன்றியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பிள்ளைகளுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை ஒன்றியம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.</p>
<p>அந்தவகையில் கல்முனையில் தரம் 07, 08 மாணவர்களுக்கு ஒன்றியத்தால் நடத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சிறப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>
<p>இதில் ஒன்றியத்தின் தலைவர் ஏ. றோஸான் முஹம்மத் வளவாளராகக் கலந்துகொண்டு பேசியபோது,</p>
<p>&#8220;தற்போது நாடு பூராவும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் கூடுதலாக இடம்பெற்று வருகின்றன. படுகொலைகள்கூட இடம்பெற்றுள்ளன. தற்கொலைகளும் நடக்கின்றன. சிறுவர் சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல் சிறுவர்கள் மிகுந்த சுய விழிப்புடன் செயற்பட வேண்டும்&#8221; &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/ampara-awareness/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கோட்டா &#8211; ரணில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. பிரசாரம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/gota-ranil-government-jvp-campaign/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/gota-ranil-government-jvp-campaign/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jun 2022 15:49:36 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[Campaign]]></category>
		<category><![CDATA[East News]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gota - Ranil Government]]></category>
		<category><![CDATA[JVP]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=52216</guid>

					<description><![CDATA[&#8220;நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசும் வேண்டாம்; மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்சவின் நிர்வாகமும் வேண்டாம் என மக்கள் சார்பாக கோரிக்கை விடுகின்றேன்&#8221; என்று மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பில் தெருத் தெருவாகப் பிரசாரம் செய்து வருகின்றது. ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும், ஜே.வி.பியின் பிரச்சாரகர்களும், அதன் ஏறாவூர் அமைப்பாளர் புஹாரி தலைமையிலான அணியினரும் ஏறாவூர் நகர கடைத் தெருக்களில் மக்களை விழிப்புணர்வூட்டும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தெருக்களில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசும் வேண்டாம்; மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்சவின் நிர்வாகமும் வேண்டாம் என மக்கள் சார்பாக கோரிக்கை விடுகின்றேன்&#8221; என்று மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பில் தெருத் தெருவாகப் பிரசாரம் செய்து வருகின்றது.</p>
<p>ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும், ஜே.வி.பியின் பிரச்சாரகர்களும், அதன் ஏறாவூர் அமைப்பாளர் புஹாரி தலைமையிலான அணியினரும் ஏறாவூர் நகர கடைத் தெருக்களில் மக்களை விழிப்புணர்வூட்டும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.</p>
<p>தெருக்களில் கால்நடையாகச் சென்ற இக்குழுவினர் “வனப்புமிக்க தேசம் அழகான வாழ்க்கை மற்றும் அன்பு மிக்க மக்களே” என விளிக்கும் இரு கையேடுகளை மக்களுக்கு விநியோகித்தனர்.</p>
<p>அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி,</p>
<p>&#8220;கோட்டா மற்றும் ரணில் தலைமையிலான நிர்வாகத்தால் இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்த்துவிட முடியாது. அதனால் இவர்கள் ஒதுங்கிக்கொண்டு மக்களாட்சியை நிறுவதற்கு இடம்கொடுக்க வேண்டும். மக்களால் விரும்பப்பட்ட தலைவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே மக்கள் சார்பாக எமது கோரிக்கையாகும்.</p>
<p>இவர்கள் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் வரை இந்த நாட்டுக்கு விமோசனம் இருக்காது. கொள்ளையடிக்கின்ற அரசுக்கு உதவி அளிக்க சர்வதேச நாடுகள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்வர வாய்ப்பில்லை.</p>
<p>இவர்கள் மக்களால் வெறுக்கப்பட்ட மக்கள் நிராகரித்த தலைவர்கள். இவர்களால் மக்கள் தொடர்ந்தும் வதைப்பட முடியாது.</p>
<p>கோட்டா ஆட்சிக்கு வரும்போது பருப்பு ஒரு கிலோ 65 ரூபா; இப்போது 535 ரூபா. தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 160 ரூபா; இப்போது 800 ரூபா. அன்று சீமெந்து ஒரு பைக்கற் 850 ரூபா; இப்போது 3,200 ரூபா. சமையல் எரிவாயு அன்று 1,400 ரூபா; இப்போது 5,200 ரூபா. பாண் ஒரு இறாத்தல் 50 ரூபா; இப்போது 160 ரூபா.</p>
<p>விலைகளே அதிகரித்திருக்கின்றன. ஆனால், சம்பளம் அன்று கோட்டா இருக்கும்போது கிடைத்த அதே சம்பளமும் அதை விடக் குறைந்த வருமானமுமே மக்களுக்கு கிடைக்கின்றது. எனவே, இந்த நிலைமையை மாற்ற வேண்டும். இதற்காக்க மக்கள் அனைவரும் அணிதிரளுங்கள்&#8221; &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/gota-ranil-government-jvp-campaign/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நஸீரின் ஏறாவூர் காரியாலயமும் வீடும் தீக்கிரை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/nasirs-eravur-office-and-house-on-fire/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/nasirs-eravur-office-and-house-on-fire/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Wed, 11 May 2022 04:08:49 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[East News]]></category>
		<category><![CDATA[Eravur]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[House]]></category>
		<category><![CDATA[Nasir]]></category>
		<category><![CDATA[office]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=49699</guid>

					<description><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் காரியாலயமும் அவரது வீடும் நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது தம்பியின் உணவகமும் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் நேற்றிரவு முதல் பொலிஸ், இராணுவத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் காரியாலயமும் அவரது வீடும் நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், அவரது தம்பியின் உணவகமும் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதையடுத்து குறித்த பகுதியில் நேற்றிரவு முதல் பொலிஸ், இராணுவத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/nasirs-eravur-office-and-house-on-fire/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
