<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Drone Attack &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/drone-attack/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 03 Dec 2025 15:58:16 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Drone Attack &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இஸ்ரேல் &#8211; ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!</title>
		<link>https://tamilnaadi.com/news/israel-hamas-war-death-toll-nears-70100-gaza-health-ministry-reports-amidst-ceasefire-violations/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 17:42:57 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Body Recovery.]]></category>
		<category><![CDATA[Ceasefire Violation]]></category>
		<category><![CDATA[Drone Attack]]></category>
		<category><![CDATA[Gaza Death Toll]]></category>
		<category><![CDATA[Israel-Hamas Conflict]]></category>
		<category><![CDATA[Palestine Casualties]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206170</guid>

					<description><![CDATA[இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 10ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த போதிலும், அவ்வப்போது இஸ்ரேல் வீரர்கள் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் மட்டும் 352 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது போர் பதற்றம் சற்றுத் தணிந்துள்ளதால், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணிகள் தீவிரமாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.</p>
<p>ஒக்டோபர் 10ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த போதிலும், அவ்வப்போது இஸ்ரேல் வீரர்கள் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.</p>
<p>போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் மட்டும் 352 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p>
<p>தற்போது போர் பதற்றம் சற்றுத் தணிந்துள்ளதால், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கணக்கிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையில் பெரும்பகுதி, இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட உடல்கள் மூலமே உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தெற்கு காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (நவம்பர் 30) நடத்திய ட்ரோன் தாக்குதலில் 11 வயது மற்றும் 8 வயதுடைய இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்தத் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நெதர்லாந்து விமான நிலையங்களில் ஆளில்லா விமானங்கள் அச்சுறுத்தல்: விமான சேவை தடை!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/drone-threat-halts-flights-at-eindhoven-airport-after-incidents-over-volkel-airbase-in-the-netherlands/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 10:49:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airspace Violation]]></category>
		<category><![CDATA[Drone Attack]]></category>
		<category><![CDATA[Eindhoven Airport]]></category>
		<category><![CDATA[Netherlands Drones]]></category>
		<category><![CDATA[security threat]]></category>
		<category><![CDATA[Volkel Airbase]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205673</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் (Drones) பறப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சூழலில், நெதர்லாந்தில் உள்ள விமான நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நெதர்லாந்தின் வோல்கெல் விமான நிலையத்தின் வான் பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்புப் படையினர் முயற்சித்த நிலையில், குறித்த ஆளில்லா விமானங்கள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் (Drones) பறப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சூழலில், நெதர்லாந்தில் உள்ள விமான நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.</p>
<p>நெதர்லாந்தின் வோல்கெல் விமான நிலையத்தின் வான் பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்புப் படையினர் முயற்சித்த நிலையில், குறித்த ஆளில்லா விமானங்கள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இதனையடுத்து, ஐன்ட்ஹோவன் (Eindhoven) விமான நிலையத்தின் வான் பகுதியிலும் சில ஆளில்லா விமானங்கள் பறந்தன.</p>
<p>இதன் காரணமாகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விமானச் சேவை சில மணி நேரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>குறித்த பகுதியில் ஆளில்லா விமானங்கள் தொடர்ச்சியாகப் பறந்தமையால் அப்பகுதியில் அச்சநிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.</p>
<p>இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் இராணுவ அதிகாரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் (Ruben Brekelmans) தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்த அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
