<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Douglas Devananda &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/douglas-devananda/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 10 Jun 2025 17:48:55 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Douglas Devananda &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மண்டைதீவு கடலில் உயிரிழந்த 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a8/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 17:48:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=199686</guid>

					<description><![CDATA[1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) அஞ்சலி செலுத்தியுள்ளார். 1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர். இந்தநிலையில் குறித்த நினைவிடத்திற்கு சென்ற ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) அஞ்சலி செலுத்தியுள்ளார்.</p>
<p>1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர்.</p>
<p>இந்தநிலையில் குறித்த நினைவிடத்திற்கு சென்ற ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டக்ளசின் இறுதி முடிவு.. சிவீகேவை அழைக்கும் கருணா</title>
		<link>https://tamilnaadi.com/news/local/douglas-final-decision-karuna-calls-cvk/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 17:33:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Karuna Amman]]></category>
		<category><![CDATA[M.A. Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=199684</guid>

					<description><![CDATA[நேற்றைய தினம் ஊடகங்களில் பெரும்பாலும் வெளியாகியிருந்த செய்திகளில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுக்கும் தீர்மானத்தை பொறுத்து தான் வன்னியில் அதனுடைய பிரதிபலிப்புக்கள் வெளிப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தாக கூறப்பட்டது. தமிழரசு கட்சியின் பதில் தலைலர், சிவீகே சிவஞானத்தின் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பில் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஊடக பேச்சாளர் சுரேன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். குறித்த சந்திப்பின் போது, தற்போது கஜேந்திரகுமார் கூட்டணியின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நேற்றைய தினம் ஊடகங்களில் பெரும்பாலும் வெளியாகியிருந்த செய்திகளில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுக்கும் தீர்மானத்தை பொறுத்து தான் வன்னியில் அதனுடைய பிரதிபலிப்புக்கள் வெளிப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தாக கூறப்பட்டது.</p>
<p>தமிழரசு கட்சியின் பதில் தலைலர், சிவீகே சிவஞானத்தின் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பில் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஊடக பேச்சாளர் சுரேன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.</p>
<p>குறித்த சந்திப்பின் போது, தற்போது கஜேந்திரகுமார் கூட்டணியின் நிலைமைகள் தொடர்பிலும் அவர்களிடம் உள்ள கருத்துக்கள் தொடர்பிலும் செல்வம் அடைக்கலநாதன் உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>மேலும், தற்போதைய சூழ்நிலையில், சுமந்திரனின் கூற்றுப்படி பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சி அமைப்போம் என செல்வம் அடைக்கலநாதன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டக்ளஸின் ஆதரவை நாடும் தமிழ்கட்சிகள்! இன்று இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-politician/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 12:54:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Sri Lankan Tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=199360</guid>

					<description><![CDATA[ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்குச் சின்னக் கட்சியும்), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள் சின்னக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்த் தேசியப் பேரவையும் கொள்கை ரீதியாக தங்களுக்கு இடையில் கூட்டு அமைத்து உடன்பாடு கண்டிருக்கின்றன எனப் பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மேற்படி தரப்புக்கள் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காக ஆதரவு கேட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பியின்) தலைவர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்குச் சின்னக் கட்சியும்), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள் சின்னக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்த் தேசியப் பேரவையும் கொள்கை ரீதியாக தங்களுக்கு இடையில் கூட்டு அமைத்து உடன்பாடு கண்டிருக்கின்றன எனப் பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சூழ்நிலையில், மேற்படி தரப்புக்கள் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காக ஆதரவு கேட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பியின்) தலைவர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.</p>
<p>யாழ். சுன்னாகம் &#8211; கந்தரோடையில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இல்லத்தில், பெரும்பாலும் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பங்குபற்றுவார் எனத் தெரியவந்துள்ளது.</p>
<p>&#8221;சித்தார்த்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நேற்று செவ்வாய்க்கிழமை என்னைத் தேடி வந்து எங்கள் யாழ். அலுவலகத்தில் சந்திக்க விரும்பினர். இல்லை, நான் உங்களை வந்து சந்திக்கின்றேன் என்று பதிலளித்து அங்கு சென்று சந்திக்க இருக்கின்றேன்.</p>
<p>என்னவாயினும் அவர்கள் என் பழைய நண்பர்கள். எங்களுக்குள் தொடர்புகள் இருக்கின்றனதானே?&#8221; &#8211; என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில், மேற்படி சங்கு &#8211; சைக்கிள் கூட்டணியின் வேறு பிரமுகர்கள் பங்குபற்றுவார்களா என்பது தெரியவில்லை.</p>
<p>கொள்கை ரீதியில் சங்கும் சைக்கிள் தரப்பும் ஒன்றிணைந்து விட்டமையால் சைக்கிள் தரப்பின் இணக்கத்தோடுதான் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகத்தை அமைக்க ஆதரவு கேட்கும் இந்த முயற்சியை சித்தார்த்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் முன்னெடுக்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோரும் ஈ.பி.டி.பி!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/epdp-claims-tamil-eelam-treasury-jewels/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sat, 31 May 2025 17:20:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[Eelam People's Democratic Party]]></category>
		<category><![CDATA[gold]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=198950</guid>

					<description><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, அவ்வாறு அடைவு வைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தங்களுடைய கட்சி உறுப்பினர்களிடமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக மையத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p>
<p>அத்தோடு, அவ்வாறு அடைவு வைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தங்களுடைய கட்சி உறுப்பினர்களிடமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.</p>
<p>யாழ். ஊடக மையத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.</p>
<p>இவை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி தங்க நகைகள் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டது.</p>
<p>இறுதிக் காலகட்டத்தில் அப்போதைய சந்தைப் பெறுமதிப்படி சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் இருந்ததாக சொல்லப்படுகின்ற போதிலும், அந்தளவு நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை.</p>
<p>அதேபோன்று, நகைகளை அடைவு வைத்தவர்கள் அனைவரும் தற்போது இருக்கின்றார்கள் என்பதற்கோ, இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதோ எதிர்பார்க்க முடியாதது.</p>
<p>எனவே, யாதார்தத்தினை புரிந்து கொண்டு நகைகளை அடைவு வைத்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, அவர்கள் அடைவு வைத்த தங்க நகைகளுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.</p>
<p>அடைவு நகை விவகாரத்தினை தேர்தல் வாக்குறுதியாக கடந்து செல்லாமல் விரைவான நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>மேலும், மாகாண சபைக்கான அதிகாரங்கள் சூட்சுமமான முறையில் மீளப் பெறுப்படும் செயற்பாடு தொடருகின்ற நிலையில் அது தடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் ஒன்றிணைய தயார்: டக்ளஸ்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/local-elections-election-speech-for-do/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Mar 2025 05:45:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Local Elections Election Speech For Do]]></category>
		<category><![CDATA[Local government Election]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=194645</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் ஒன்றிணைய தயார்: டக்ளஸ் தமிழ் மக்களின் நலனுக்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமது கட்சி தமிழ் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை தலைமை தாங்கிய இயக்கங்களின் ஒன்றிணைவு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் ஒன்றிணைய தயார்: டக்ளஸ்</h4>
<p>தமிழ் மக்களின் நலனுக்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமது கட்சி தமிழ் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான <a href="https://tamilnaadi.com/news/local/2023/07/01/douglas-fisherman-problems/">டக்ளஸ் தேவானந்தா</a> (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.</p>
<p>எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை தலைமை தாங்கிய இயக்கங்களின் ஒன்றிணைவு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் நலன் சார்ந்து எனது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன் என்பது யாவரும் அறிந்த விடயம்.</p>
<p>தமிழ் மக்களின் அரசியல் அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதே எனது அரசியல் அவா. துரதிஷ்டவசமாக பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் தமிழ் கட்சிகளின் ஒத்துழைப்பு உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் மக்களுக்கான தீர்வினை எட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.</p>
<p>தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை தமிழ் கட்சிகள் ஓரணியில் எதிர்கொள்வதா அல்லது தேர்தலின் பின்னர் ஓரணியில் செயற்படுவதா என்ற விவாதம் இடம்பெற்று வருகின்றது.</p>
<p>உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் எதிர்கொள்வது தொடர்பில் என்னுடன் சிலர் பேசினார்கள். அது நட்பு நீதியாக இடம்பெற்ற தவிர உத்தியோபூர்வமாக பேசுவதற்கோ கலந்துரையாடுவதற்கோ எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.</p>
<p>உள்ளூராட்சி மன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒற்றுமை என்கின்ற விடயம் தமிழ் மக்களின் நலன் சார்ந்து கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை அல்லது ஒன்றிணைவு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் : டக்ளஸ் சந்தேகம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jan 2025 17:37:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=188562</guid>

					<description><![CDATA[யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் : டக்ளஸ் சந்தேகம் யாழில் (Jaffna) அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றப்பட்ட பின்னணியில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இருக்குமோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் : டக்ளஸ் சந்தேகம்</h4>
<p>யாழில் (Jaffna) அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றப்பட்ட பின்னணியில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இருக்குமோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான<a href="https://tamilnaadi.com/uncategorized/2024/11/18/douglas-devananda-on-epdp-election-loss/"> டக்ளஸ் தேவானந்தா</a> (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது.</p>
<p>கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட வேளையில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் (Manmohan Singh), தலைமையிலான அரசாங்கத்திடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே குறித்த கலாசார மையத்தினை இந்தியா எமக்கு அளித்திருக்கின்றது.</p>
<p>யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் அதனை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் அனைத்தும் எம்மாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்ததன. இவ்வாறான பின்னணியிலேயே குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>உலகப் பொதுமறையான திருக்குறளை எமக்களித்த திருவள்ளுவர் எமது மதிப்பிற்குரியவர். அவரையும் அவருடைய ஆளுமையையும் போற்றிப் புகழ்வதில் தமிழர்கள் யாருமே பின்நிற்கப் போவதில்லை.</p>
<p>கடந்த காலங்களில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை எமது மக்கள் ஆர்வத்துடனும் பெருமிதத்துடன் பிதிஷ்டை செய்து பராமரித்து வருகின்றனர்.</p>
<p>எனினும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான &#8216;யாழ்ப்பாணம்&#8217; என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்குமோ என்ற நியாயமான சந்தேகத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்தி இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.</p>
<p>இவ்வாறான சந்தேகங்கள், இந்த நாட்டிலே புரையோடிப் போய் இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசியமான தேசிய நல்லிணக்க முயற்சிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வகையில், இதனுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கையின் தற்போதைய புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் போன்றோர் பெயர் மாற்றப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்“ என தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கு கடலில் இந்திய இழுவைப்படகுகளுக்கு அனுமதி : டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/entertainment/cinema/douglas-issues-allowing-indian-trawlers-north-sea/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Dec 2024 16:46:08 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[Indian fishermen]]></category>
		<category><![CDATA[Ramalingam Chandrasekar]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=181282</guid>

					<description><![CDATA[வடக்கு கடலில் இந்திய இழுவைப்படகுகளுக்கு அனுமதி : டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு இந்திய(india) இழுவைமடி படகுகள் இலங்கையின் (sri lanka)வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கும் எந்தவகையான திட்டமும் கடந்த காலங்களில் தம்மிடம் இருந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா(douglas devananda), தற்போதைய பலவீனங்களை மறைக்கும் வகையில் கடற்றொழிலாளர்களை திசை திருப்ப முயற்சிக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தினையும் வெளிப்படுத்தியுள்ளாார். வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்த தற்போதைய கடற்றொழில் அமைச்சர், இந்திய இழுவைப் படகுகளுக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வடக்கு கடலில் இந்திய இழுவைப்படகுகளுக்கு அனுமதி : டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு</h4>
<p>இந்திய(india) இழுவைமடி படகுகள் இலங்கையின் (sri lanka)வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கும் எந்தவகையான திட்டமும் கடந்த காலங்களில் தம்மிடம் இருந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் <a href="https://tamilnaadi.com/news/world/2024/12/12/minister-killed-in-afghanistan-bomb-blast/">அமைச்சர்</a> டக்ளஸ்தேவானந்தா(douglas devananda), தற்போதைய பலவீனங்களை மறைக்கும் வகையில் கடற்றொழிலாளர்களை திசை திருப்ப முயற்சிக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தினையும் வெளிப்படுத்தியுள்ளாார்.</p>
<p>வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்த தற்போதைய கடற்றொழில் அமைச்சர், இந்திய இழுவைப் படகுகளுக்கு அனுமதி வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் சிந்தனையை தற்போதைய அரசாங்கம் கைவிட்டு விட்டதாக கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.</p>
<p>இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது வளங்களை அழிக்கின்ற இழுவைமடி தொழில் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே 90 ஆம் ஆண்டுகளில் இருந்து தன்னுடைய உறுதியான நிலைப்பாடாக இருந்து வருவதாகவும், கடற்றொழில் அமைச்சராக தான் செயற்பட்ட காலப்பகுதியில் கடற்றொழில் அமைச்சின் நிலைப்பாடும் அவ்வாறே இருந்தது எனவும் தெரிவித்தார்.</p>
<p>இந்நிலையில், உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வெளியிடப்படுவதானது, ஆழமான சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்பாக கடற்றொழிலாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.</p>
<p>தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை(anura kumara dissanayake) சந்தித்தபோதும், இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தமையையும் சுட்டிக்காட்டினார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் மக்களின் உணர்வுகளை பரீட்சிக்க கூடாது! டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/13th-amendment-law-letter-from-douglas-to-anura/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 12:38:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=179488</guid>

					<description><![CDATA[தமிழ் மக்களின் உணர்வுகளை பரீட்சிக்க கூடாது! டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம் மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கான முயற்சி தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas devananda) வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுக்கு டக்ளஸ் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, &#8220;தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தமிழ் மக்களின் உணர்வுகளை பரீட்சிக்க கூடாது! டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்</h4>
<p>மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கான முயற்சி <a href="https://tamilnaadi.com/news/local/2024/12/03/13th-amendment-law-letter-from-douglas-to-anura/">தமிழ்</a> மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas devananda) வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுக்கு டக்ளஸ் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, &#8220;தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு என்பது, இதுவரை காலமும் கௌரவமான அரசியல் உரிமைகளை இந்த நாட்டிலே பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கிடைத்துள்ள சிறிதளவான பரிகாரமாகவே நோக்கப்படுகின்றது.</p>
<p>மாகாணசபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான தீர்வை காண முடியும் என்பதை ஈ.பி.டி பி. கட்சியினாராகி நாமும் கடந்த 35 வருடங்ளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம்.</p>
<p>கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டத்தினை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் நாம் மேற்கொணாடிருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.</p>
<p>குறிப்பாக 2010 &#8211; 2015 காலப் பகுதியிலும் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அப்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.</p>
<p>இந்த நிலையில், அரசாங்கத்தின் அங்கமாக நாம் இருந்தபோதிலும், ஆளும் தரப்பில் அப்போதிருந்த தென்னிலங்கையை சேர்ந்த முற்போக்காளர்களான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து எமது ஆட்சேபனையை வெளிப்படுத்திய நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.</p>
<p>அண்மையில் சிநேகபூர்வமாக உங்களை சந்தித்த வேளையிலும், 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும், அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமான பொறிமுறையாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.</p>
<p>அத்துடன், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்களின் கணிசமான ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்ற நிலையில், அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.</p>
<p>இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிந்திப்பதற்கு முன்னர் தற்போதைய அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.</p>
<p>எனவே, உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டின் அடிப்படையிலும், தேர்தல் காலத்தில் எமது மக்களுக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாப்பதோடு மாகாணசபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்&#8221; என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈபிடிபியிலிருந்து வெளியேறினார் முன்னாள் எம்.பி திலீபன்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/former-mp-thileepan-quits-epdp/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 13:03:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[Eelam People's Democratic Party]]></category>
		<category><![CDATA[vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=178523</guid>

					<description><![CDATA[ஈபிடிபியிலிருந்து வெளியேறினார் முன்னாள் எம்.பி திலீபன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (Eelam People&#8217;s Democratic Party) வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று (25) அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஈபிடிபியிலிருந்து வெளியேறினார் முன்னாள் எம்.பி திலீபன்</h4>
<p>ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (Eelam People&#8217;s Democratic Party) <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/03/court-order-on-vavuniya-dual-murder-suspect/">வவுனியா</a> மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று (25) அறிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p>
<p>ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன்.</p>
<p>மேலும், 2020இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன். தற்போது நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.</p>
<p>இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுகிறேன்.</p>
<p>இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.</p>
<p>இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன் என்றுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சம்பந்தன் குடும்பத்தினருக்கும் டக்ளஸுக்கும் பறந்த எழுத்து மூல அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/two-tamil-ministers-not-hand-over-govt-bungalows/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Nov 2024 05:55:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[R. Sampanthan]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=177953</guid>

					<description><![CDATA[சம்பந்தன் குடும்பத்தினருக்கும் டக்ளஸுக்கும் பறந்த எழுத்து மூல அறிவிப்பு மறைந்த இரா.சம்பந்தனின் (R. Sampanthan) மகளுக்கும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் (Douglas Devananda) உடனடியாக அரசாங்க பங்களாக்களை ஒப்படைக்குமாறு நீதித்துறை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது குறித்த அறிவிப்பானது, எழுத்து மூலம் இன்று (20) விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் பங்களா கடந்த 12ஆம் திகதி கையளிக்கப்படும் என அவரின் மகள் அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்த போதும் இன்று [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சம்பந்தன் குடும்பத்தினருக்கும் டக்ளஸுக்கும் பறந்த எழுத்து மூல அறிவிப்பு</h4>
<p>மறைந்த இரா.சம்பந்தனின் (<a href="https://en.wikipedia.org/wiki/R._Sampanthan" target="_blank" rel="noopener">R. Sampanthan</a>) மகளுக்கும் முன்னாள் அமைச்சருமான<a href="https://tamilnaadi.com/news/local/2023/07/01/douglas-fisherman-problems/"> டக்ளஸ் தேவானந்தா</a>விற்கும் (Douglas Devananda) உடனடியாக அரசாங்க பங்களாக்களை ஒப்படைக்குமாறு நீதித்துறை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது</p>
<p>குறித்த அறிவிப்பானது, எழுத்து மூலம் இன்று (20) விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>சம்பந்தனின் பங்களா கடந்த 12ஆம் திகதி கையளிக்கப்படும் என அவரின் மகள் அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்த போதும் இன்று (20) வரை அது கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அவர் இறந்த பிறகு, சம்பந்தனின் குடும்ப உறுப்பினர்கள் அந்த பங்களாவில் தொடர்ந்து தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வரையில் அவருக்கு அந்த பங்களாவை வழங்க அப்போதைய அரசாங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.</p>
<p>இதேவேளை, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இன்னும் அரசாங்க பங்காளவொன்றில் தங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
