<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Divisional Secretariats &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/divisional-secretariats/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 27 Jan 2022 09:06:20 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Divisional Secretariats &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நுவரெலியாவில் 5 பிரதேச செயலகங்கள் நிறுவாமைக்கு காரணம் என்ன?</title>
		<link>https://tamilnaadi.com/news/what-is-the-reason-for-setting-up-5-divisional-secretariats-in-nuwara-eliya/</link>
					<comments>https://tamilnaadi.com/news/what-is-the-reason-for-setting-up-5-divisional-secretariats-in-nuwara-eliya/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jan 2022 09:06:20 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[a former Member of Parliament]]></category>
		<category><![CDATA[Cabinet decision]]></category>
		<category><![CDATA[Chief Coordinator]]></category>
		<category><![CDATA[Divisional Secretariats]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[M. Tilakaraj]]></category>
		<category><![CDATA[non-implementation]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Upcountry Political Forum]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=37003</guid>

					<description><![CDATA[நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல், நிறுத்தப்பட்டுள்ளமையானது உச்சபட்ச பாரபட்சமாகும். எனவே, புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடையும் வரை நாம் ஓயமாட்டோம்.&#8221; &#8211; என்று மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் சூளுரைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நுவரெலியா மாவட்டம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல், நிறுத்தப்பட்டுள்ளமையானது உச்சபட்ச பாரபட்சமாகும்.</p>
<p>எனவே, புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடையும் வரை நாம் ஓயமாட்டோம்.&#8221; &#8211; என்று மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் சூளுரைத்துள்ளார்.</p>
<p>நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நுவரெலியா மாவட்டம் முழுவதும் கையொப்பம் திரட்டும் பணி கடந்த 25 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது.</p>
<p>இதற்கு நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியில் இருந்தும் பல தரப்பினரும் ஆதரவையும், தமது ஒருமைப்பாட்டையும் தெரிவித்துவருகின்றனர்.</p>
<p>இந்நிலையில் ஹட்டன் நகரிலும் இன்று (27.01.2022) கையொப்பம் திரட்டப்பட்டது. இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கமைப்பாளரான எம். திலகராஜ் கூறியவை வருமாறு,</p>
<p>&#8221; சனத்தொகைக்கு ஏற்பட அல்லாது, அநீதியான முறையிலேயே நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சுமார் 3 தசாப்தங்களாக சமூகத்தில் கருத்தாடல்கள் இடம்பெற்றுவந்தன.</p>
<p>எனினும், இது தொடர்பில் 2016 ஒக்டோபரில் என்னால் நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.</p>
<p>அந்த பிரேரணைமீதான விவாதத்தின்போது பதிலளித்து உரையாற்றிய அப்போதைய துறைசார் அமைச்சர் வஜீர அபேவர்தன, நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆக உள்ள பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p>
<p>இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை 2018 ஆம் ஆண்டு அவர் முன்வைத்தார். அமைச்சரவை அனுமதியின் பின்னர் புதிய பிரதேச செயலகங்கள் தொடர்பில் 2019 இல் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.</p>
<p>அந்த வர்த்தமானி அறிவித்தலில் நுவரெலியாவில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களும், காலியில் 3 பிரதேச செயலகங்களும் நிறுவப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.</p>
<p>இதன்படி காலி மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நுவரெலியா மாவட்டத்துக்கான பிரதேச செயலகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.</p>
<p>இதற்கு பதிலாக இரண்டு உப செயலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது நுவரெலியா மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.</p>
<p>எனவேதான் எமக்கு பிரதேச செயலகங்களே வேண்டும் என வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.</p>
<p>மூன்று நாட்கள் கையொப்பங்கள் திரட்டப்பட்டன. மாவட்டம் கடந்த ஆதரவும் எமக்கு கிட்டியது. அந்தவகையில் நாளை தினம் (28) நுவரெலியா</p>
<p>மாவட்ட செயலாளரிடம் ,கையெழுத்து திரட்டப்பட்ட ஆவணம் கையளிக்கப்படும். ஜனாதிபதி,</p>
<p>பிரதமர் உட்பட அரசின் கவனம் அதன்மூலம் ஈர்க்கப்படும். புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை உருவாக்கிக்கொள்ளும்வரை நாம் ஓயப்போவதில்லை.&#8221; &#8211; என்றார்.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/what-is-the-reason-for-setting-up-5-divisional-secretariats-in-nuwara-eliya/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நீங்கள் திருமணம் செய்துவிட்டீர்களா? &#8211; உங்களுக்கொரு நற்செய்தி!!</title>
		<link>https://tamilnaadi.com/news/are-you-married-good-news-for-you/</link>
					<comments>https://tamilnaadi.com/news/are-you-married-good-news-for-you/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Jan 2022 11:35:20 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[application form]]></category>
		<category><![CDATA[Commissioner General of Lands]]></category>
		<category><![CDATA[D. Ranawaka]]></category>
		<category><![CDATA[Distribute]]></category>
		<category><![CDATA[Divisional Secretariats]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Land Reforms Commission to]]></category>
		<category><![CDATA[low-income]]></category>
		<category><![CDATA[married]]></category>
		<category><![CDATA[Ministry of Lands and Land Development]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=32672</guid>

					<description><![CDATA[&#160; புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளர் ஆர். டி. ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இதற்கான விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.</p>
<p>காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளர் ஆர். டி. ரணவக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இதற்கான விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/are-you-married-good-news-for-you/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தேசிய தரப்படுத்தலில் யாழ் மாவட்டம் முதலாம் இடம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/jaffna-district-ranks-first-in-national-rankings/</link>
					<comments>https://tamilnaadi.com/news/jaffna-district-ranks-first-in-national-rankings/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Dec 2021 04:25:39 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[competition]]></category>
		<category><![CDATA[district]]></category>
		<category><![CDATA[Divisional Secretariats]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[National]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=28598</guid>

					<description><![CDATA[யாழ் மாவட்ட செயலகம் 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. அத்தோடு பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 14 பிரதேச செயலகங்களும் வெற்றியீட்டியுள்ளன. பொதுமக்கள் சேவை வழங்கலில் சிறந்து விளங்கியமைக்கான அங்கீகாரமாக இதனை கருதுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இனிவரும் காலங்களிலும் அரச திணைக்களங்கள் வினைத்திறனாக சேவையாற்றும் என அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை இப்போட்டித் தொடரில் கடந்த 2016 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ் மாவட்ட செயலகம் 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.</p>
<p>அத்தோடு பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 14 பிரதேச செயலகங்களும் வெற்றியீட்டியுள்ளன.</p>
<p>பொதுமக்கள் சேவை வழங்கலில் சிறந்து விளங்கியமைக்கான அங்கீகாரமாக இதனை கருதுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.</p>
<p>இனிவரும் காலங்களிலும் அரச திணைக்களங்கள் வினைத்திறனாக சேவையாற்றும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>அதேவேளை இப்போட்டித் தொடரில் கடந்த 2016 ஆம் ஆண்டு 3 ஆம் இடத்தையும், 2018 ஆம் ஆண்டு 2 ஆவது இடத்தையும் யாழ் மாவட்ட செயலகம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/jaffna-district-ranks-first-in-national-rankings/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
