<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Dinesh Gunawardena &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/dinesh-gunawardena/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 29 Nov 2024 13:52:00 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Dinesh Gunawardena &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகும் அநுர அரசாங்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranil-may-be-summoned-to-cid/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Nov 2024 13:52:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID - Sri Lanka Police]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[Dr Ramesh Pathirana]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Ranil May Be Summoned To Cid]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[sri lanka government]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=179044</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) ஆகியோர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்தினை இறக்குமதி செய்ததாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு(Kehaliya Rambukwella) எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்காக இவர்கள் அழைக்கப்படக் கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறித்த, இம்யூனோகுளோபுலின் மருந்து மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் அமைச்சரவைப் பத்திரத்தை அங்கீகரித்த முன்னாள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) ஆகியோர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்தினை இறக்குமதி செய்ததாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு(Kehaliya Rambukwella) எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்காக இவர்கள் அழைக்கப்படக் கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>குறித்த, இம்யூனோகுளோபுலின் மருந்து மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் அமைச்சரவைப் பத்திரத்தை அங்கீகரித்த முன்னாள் அமைச்சர்கள் எட்டு பேர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>முன்னாள் அமைச்சர்களான, பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, ரமேஷ் பத்திரன, விஜேதாச ராஜபக்ச, நளின் பெர்னாண்டோ உள்ளிட்டவர்கள் இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலையில், இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவைக்கு தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் விரைவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய பட்டியல் ஆசனம் : எரிவாயு சிலிண்டருக்குள் இழுபறி</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/cylinder-list-mp-nomination-delayed/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Nov 2024 06:29:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka election updates]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=177235</guid>

					<description><![CDATA[தேசிய பட்டியல் ஆசனம் : எரிவாயு சிலிண்டருக்குள் இழுபறி எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை நீடிப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின்படி புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்துள்ளன. புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(dinesh gunawardena) மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தேசிய பட்டியல் ஆசனம் : எரிவாயு சிலிண்டருக்குள் இழுபறி</h4>
<p>எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை நீடிப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின்படி புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்துள்ளன.</p>
<p>புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் முன்னாள் <a href="https://tamilnaadi.com/uncategorized/2024/11/16/new-prime-minister-discussion-in-anura-government/">பிரதமர்</a> தினேஷ் குணவர்தன(dinesh gunawardena) மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகமாக இருந்த ஷர்மிளா பெரேரா(Sharmila Perera) ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.</p>
<p>எனினும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரு பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் தொடர்பில் இதுவரையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் கொழும்பில் கூட்டம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranil-wickremesinghe-special-meeting-in-colombo/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Oct 2024 08:33:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe Special Meeting In Colombo]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=170616</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் கொழும்பில் கூட்டம்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினரின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அலுவலகத்தில் (14.10.2024) இடம்பெறவுள்ளது. இதன்போது பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் மற்றும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் கொழும்பில் கூட்டம்!</h4>
<p>முன்னாள் ஜனாதிபதி<a href="https://tamilnaadi.com/news/local/2024/10/04/ranil-is-a-supporter-who-admires-anura-kumara/"> ரணில் விக்ரமசிங்க</a> தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினரின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.</p>
<p>இந்த கூட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அலுவலகத்தில் (14.10.2024) இடம்பெறவுள்ளது.</p>
<p>இதன்போது பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் மற்றும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p>
<p>மேலும் கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் வெளியான தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sampandan-has-left-the-opposition-bungalow/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Oct 2024 10:04:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Rajavarothiam Sampanthan]]></category>
		<category><![CDATA[Sampandan Has Left The Opposition Bungalow]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=168504</guid>

					<description><![CDATA[சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் வெளியான தகவல் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் வழங்குவதற்கான முடிவினை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் வெளியான <strong>தகவல்</strong></h4>
<p><strong>முன்னாள்</strong> எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/22/sri-lanka-presidential-election-2024-57/">கொழும்பு</a> 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.</p>
<p>இந்த வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் வழங்குவதற்கான முடிவினை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதித்துறை மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை மீண்டும் அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அன்றைய முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு அண்மையில் கையளித்த போதிலும், ஆட்சி மாற்றத்துடன் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.</p>
<p>இதற்கமைய, தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்தது.</p>
<p>இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராகி மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றி இருந்தார். எனினும் சம்பந்தன் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து இருக்க வாய்ப்பளித்தார்.</p>
<p>இதன்பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சம்பந்தன் தலைவராக இருக்கும் வரை அந்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள்,ஊழியர்களின் சம்பளம் என்பன அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>2017ஆம் ஆண்டு அந்த வீட்டின் பராமரிப்பு பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய ஜனாதிபதியாக அநுரகுமார: பதவி விலகவுள்ள பிரதமர் மற்றும் அமைச்சர்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/prime-minister-dinesh-gunawardena-to-step-down/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Sep 2024 07:54:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[Prime Minister Dinesh Gunawardena To Step Down]]></category>
		<category><![CDATA[sri lanka parliament]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=166373</guid>

					<description><![CDATA[புதிய ஜனாதிபதியாக அநுரகுமார: பதவி விலகவுள்ள பிரதமர் மற்றும் அமைச்சர்கள் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் இன்று பதவியிலிருந்து விலகவுள்ளனர். இதன்படி தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவர்களது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>புதிய ஜனாதிபதியாக அநுரகுமார: பதவி விலகவுள்ள பிரதமர் மற்றும் அமைச்சர்கள்</h4>
<p>புதிய <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/24/35-canditate-lose-deposit-in-presidential-race/">ஜனாதிபதியாக</a> அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>தற்போதைய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் இன்று பதவியிலிருந்து விலகவுள்ளனர்.</p>
<p>இதன்படி தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவர்களது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p>
<p>எவ்வாறாயினும், புதிய <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF#:~:text=%E0%AE%89.%20%E0%AE%A4%E0%AF%8A.%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20(President%20of%20Sri%20Lanka;%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D:" target="_blank" rel="noopener">ஜனாதிபதி</a> தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவைக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட அநுர! அறிவிக்கப்படும் தொடர் பதவி விலகல்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/two-governors-have-resigned-from-their-positions/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Sep 2024 07:53:51 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[sl presidential election]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024]]></category>
		<category><![CDATA[Two Governors Have Resigned From Their Positions]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=166367</guid>

					<description><![CDATA[ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட அநுர! அறிவிக்கப்படும் தொடர் பதவி விலகல்கள் நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தநிலையில், தற்போது இரண்டு மாகாணங்களின் ஆளுநர்கள் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இதன்படி, இதன்படி வடமத்திய மாகாண ஆளுநர் மகிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட அநுர! அறிவிக்கப்படும் தொடர் பதவி விலகல்கள்</h4>
<p>நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/24/chamber-of-commerce-demands-new-president-2/">ஜனாதிபதியாக</a> அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>இந்தநிலையில், தற்போது இரண்டு மாகாணங்களின் ஆளுநர்கள் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.</p>
<p>இதன்படி, இதன்படி வடமத்திய மாகாண ஆளுநர் மகிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.</p>
<p>முன்னதாக நேற்றைய தினம் தென் மாகாண ஆளுனர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஆளுநர் பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதேவேளை, <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9#:~:text=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%20%28Dinesh%20Gunawardena%3B%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%3A%20%E0%B6%AF%E0%B7%92%E0%B6%B1%E0%B7%9A%E0%B7%82%E0%B7%8A%20%E0%B6%9C%E0%B7%94%E0%B6%AB%E0%B7%80%E0%B6%BB%E0%B7%8A%E0%B6%B0%E0%B6%B1%3B%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A,%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%201983%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D." target="_blank" rel="noopener">பிரதமர் தினேஸ் குணவர்தன</a> தான் பதவி விலகலை இன்று காலை அறிவித்துள்ளார்.</p>
<p>இந்த நிலையில், புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்க தரப்பின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டு மக்களிடம் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/how-can-sajith-win-the-election/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Sep 2024 10:55:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[How Can Sajith Win The Election]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=165488</guid>

					<description><![CDATA[நாட்டு மக்களிடம் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள்! நாட்டில் ஏனையோருக்கு வாக்களித்து பரிசோதிப்பதற்கான சோதனைக் காலம் இதுவல்ல என்பதால் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,&#8221;நாட்டில் நெருக்கடிகள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சஜித் பிரேமதாச பயந்து ஓடினார். மறுபுறம் அநுரகுமார திஸாநாயக்கவால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நாட்டு மக்களிடம் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள்!</h4>
<p>நாட்டில் ஏனையோருக்கு வாக்களித்து பரிசோதிப்பதற்கான சோதனைக் காலம் இதுவல்ல என்பதால் மக்கள் <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/20/security-has-been-increased-in-sri-lanka/">ஜனாதிபதி</a> ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>
<p>கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் குறிப்பிடுகையில்,&#8221;நாட்டில் நெருக்கடிகள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சஜித் பிரேமதாச பயந்து ஓடினார். மறுபுறம் அநுரகுமார திஸாநாயக்கவால் ஒரு சட்டத்தைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாது.</p>
<p>இவ்வாறானவர்களுக்கு வாக்களித்து பரிசோதித்து பார்க்க வேண்டாம். காரணம் இது பரிசோதனைக்கான காலம் அல்ல.</p>
<p>எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து மீண்டும் அவரிடம் நாட்டைக் கையளிக்க வேண்டும்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.</p>
<p>அந்த சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாச போட்டியிடுவதாகக் கூறினாலும், பின்னர் டலஸ் அழகப்பெருமவே களமிறக்கப்பட்டார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் கூட தன்னால் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிந்துகொண்டு தான், அன்று சஜித் பின்வாங்கினார்.</p>
<p>அவ்வாறான ஒருவரால் எவ்வாறு நாட்டு மக்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியும்?</p>
<p>மறுபுறம் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 3 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார். அவரால் எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும்?&#8221; என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்யவுள்ள தென்கொரியா!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/south-korea-plans-energy-farming-investment/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Aug 2024 11:45:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[South Korea Plans Energy Farming Investment]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=160232</guid>

					<description><![CDATA[இலங்கையில் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்யவுள்ள தென்கொரியா! இலங்கையின் (Sri lanka) எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்வதற்கு தென்கொரியா (South Korea) இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய மக்கள் குடியரசின் முன்னணி தொழில் முயற்சியாளர் ஒருவருக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் (Dinesh Gunawardena) இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மீன்பிடி, சுகாதாரம் மற்றும் நிர்மாணத் துறைகளில் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படும் புதிய தொழில்நுட்பத்தில் சாத்தியமான முதலீடுகள் குறித்தும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கையில் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்யவுள்ள தென்கொரியா!</h4>
<p>இலங்கையின் (Sri lanka) <a href="https://tamilnaadi.com/news/local/2024/01/09/renewable-energy-opportunities-north-of-sri-lanka/">எரிசக்தி</a> மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்வதற்கு தென்கொரியா (South Korea) இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தென்கொரிய மக்கள் குடியரசின் முன்னணி தொழில் முயற்சியாளர் ஒருவருக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் (Dinesh Gunawardena) இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p>
<p>மீன்பிடி, சுகாதாரம் மற்றும் நிர்மாணத் துறைகளில் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படும் புதிய தொழில்நுட்பத்தில் சாத்தியமான முதலீடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, அவுஸ்திரேலியாவின் (Australia) யுனைடெட் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனத்தின் கீழ் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.</p>
<p>இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (<a href="https://en.wikipedia.org/wiki/Kanchana_Wijesekera" target="_blank" rel="noopener">Kanchana Wijesekera</a>)தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால் இவரே பிரதமர்..! வஜிர அபேவர்தன பகிரங்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/president-ranil-wins-dinesh-prime-minister/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/president-ranil-wins-dinesh-prime-minister/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Aug 2024 08:02:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=159984</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால் இவரே பிரதமர்..! வஜிர அபேவர்தன பகிரங்கம் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் (Ranil Wickremesinghe) வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றிபெற்ற போது, ​​பிரேமதாசவே தொடர்ந்தும் பிரதமராக இருந்தார். 1999ஆம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால் இவரே பிரதமர்..! வஜிர அபேவர்தன பகிரங்கம்</h4>
<p>இந்த ஆண்டு நடைபெறவுள்ள <a href="https://tamilnaadi.com/news/local/2024/08/23/president-ranil-wins-dinesh-prime-minister/">ஜனாதிபதி</a> தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் (Ranil Wickremesinghe) வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.</p>
<p>1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றிபெற்ற போது, ​​பிரேமதாசவே தொடர்ந்தும் பிரதமராக இருந்தார்.</p>
<p>1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றிபெற்ற போது மறைந்த <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95#:~:text=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%28%E0%AE%AE%E0%AF%87%205%2C%201933%20-%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2027%2C,%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%20%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.%20%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D." target="_blank" rel="noopener">ரத்னசிறி விக்ரமநாயக்க</a> பிரதமராக இருந்தார்.</p>
<p>1999 இல் குமாரதுங்க தனது இரண்டாவது அமைச்சரவையை அமைத்த பின்னரும் விக்ரமநாயக்க பிரதமராகத் தொடர்ந்தார்.</p>
<p>எனவே, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவிக்கு வரும் ஜனாதிபதியின் கீழ் வரும் பிரதமர், அதே பதவியில் தொடர்வது வழமையாகும் என்று அபேவர்த்தன கூறியுள்ளார்</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/president-ranil-wins-dinesh-prime-minister/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/dinesh-gunawardana-speech/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/dinesh-gunawardana-speech/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Aug 2024 08:11:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardana Speech]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=159263</guid>

					<description><![CDATA[புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் புதிய அரசியல் அணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardana) தெரிவித்துள்ளார். மல்வத்து மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நல்லாசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/08/20/109-rupees-per-person-gazette-published/">ஜனாதிபதி</a> தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் புதிய அரசியல் அணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardana) தெரிவித்துள்ளார்.</p>
<p>மல்வத்து மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நல்லாசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.</p>
<p>அவர் மேலும் கூறுகையில்,</p>
<p>&#8220;அரசைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்கிய பெரும்பான்மையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மேற்கொண்ட தீர்மானத்தை நிராகரித்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.</p>
<p>அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரண்டு வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது சரியான பாதையில் முன்னேற்றம் கண்டு வருகின்றது.</p>
<p>இந்த வெற்றியை மேலும் பாதுகாப்பதற்கும் முன்னெடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். இப்போதே உள்ளூராட்சி முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைகோர்த்து வருகின்றனர்.</p>
<p>இதனால் அடுத்த தேர்தலில் வேட்புமனு கிடைக்காமல் போய்விடுமோ என்று யாரும் பயப்பட வேண்டாம். அவர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தலுக்கு நாம் இடமளிக்க மாட்டோம். புதிய அரசியல் சக்தியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அதற்காக, எனது முழு ஒத்துழைப்பையும் ஆசிகளையும் வழங்குகின்றேன்” என கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/dinesh-gunawardana-speech/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
