<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Diaspora Tamils &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/diaspora-tamils/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 08 Sep 2022 16:59:31 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Diaspora Tamils &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/diaspora-tamils-should-be-firm-in-their-demand-for-an-international-investigation/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/diaspora-tamils-should-be-firm-in-their-demand-for-an-international-investigation/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Sep 2022 16:59:31 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Diaspora Tamil Organizations]]></category>
		<category><![CDATA[Diaspora Tamils]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=61174</guid>

					<description><![CDATA[சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரச படைகளினால் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மேற் கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கும் அதன் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்கும் அமைவாகவே விசாரிக்கப்பட வேண்டும் இதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் மாறாக குற்றம் இழைத்த தரப்பான இலங்கையை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>இலங்கை அரச படைகளினால் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மேற் கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கும் அதன் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்கும் அமைவாகவே விசாரிக்கப்பட வேண்டும் இதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் மாறாக குற்றம் இழைத்த தரப்பான இலங்கையை உள்ளக விசாரணையில் விசாரித்தல் என்பது பாதிக்கப்பட்ட தரப்பை ஏமாற்றும் செயல் ஆகும்.</p>
<p>சர்வதேச நியமங்களுக்கு அமைவான குற்றங்களை அதற்கான சட்டங்கள் இல்லாத நீதித்துறைக் கொண்ட இலங்கையின் நீதித் துறையில் விசாரித்தல் என்பது நீதியானது அல்ல அத்துடன் குற்றம் இழைத்த தரப்பே தாங்களை தாங்கள் விசாரித்தல் உலக ஒழுங்கில் மிகவும் வேடிக்கையான விடயம்.</p>
<p>எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியை வழங்கவும் மீள் நிகழாமையை உறுதி செய்யவும் பரிகார நீதியை பாதிக்கப்பட்ட இனம் பெற்றுக் கொள்ளவும் மிகப் பொருத்தமான பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் விசாரணைப் பொறிமுறையே ஏற்புடையது.</p>
<p>ஆகவே பாதிக்கப்பட்ட தரப்பைச் சார்ந்த தாயக புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டும் என்ற கோரிக்கையை மனிதவுரிமைப் பேரவையில் அங்கம் பெறும் கோ குறூப் நாடுகளின் பிரதி நிதிகளிடமும் அதனை வழி நடத்தும் நாடுகளிடமும் முன் வைத்து ஒரே நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் .</p>
<p>உள்ளக நீதி விசாரணை என்பதை பாதிக்கப்பட்ட தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் தொடர்ந்து தமிழர் தரப்பு உறுதி செய்ய வேண்டும் இத காலத்தின் கட்டாயம் அதுவே சர்வதேச நீதிக்கான கதவுகளைத் திறக்கும் &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/diaspora-tamils-should-be-firm-in-their-demand-for-an-international-investigation/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஒளிவு மறைவு இன்றி ஒன்றிணையுங்கள்! &#8211; புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/unite-without-fading-calling-diaspora-tamils/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/unite-without-fading-calling-diaspora-tamils/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Sep 2022 06:02:14 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Diaspora Tamils]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[vijayathasa rajapaksa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=60366</guid>

					<description><![CDATA[&#8221; பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண தேசிய ரீதியில் இணையுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு எம்மால் முன்னெடுக்கப்படும் நகர்வு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். இதில் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது. &#8221; இவ்வாறு நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். இன, மத, மற்றும் மொழி ரீதியாக காணப்படும் பிளவை &#8211; மோதல் தடுப்பதன் மூலம் கிராமிய மட்டத்தில் சமாதானத்தை உருவாக்க அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8221; பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண தேசிய ரீதியில் இணையுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு எம்மால் முன்னெடுக்கப்படும் நகர்வு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். இதில் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது. &#8221;</p>
<p>இவ்வாறு நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.</p>
<p>இன, மத, மற்றும் மொழி ரீதியாக காணப்படும் பிளவை &#8211; மோதல் தடுப்பதன் மூலம் கிராமிய மட்டத்தில் சமாதானத்தை உருவாக்க அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.</p>
<p>&#8221; இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள் மற்றும் யுத்தத்தின் பின்னர் உருவான ஏனைய பிரச்சினைகளுக்காக தீர்வை காண்பது, அதனை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வது என்பவற்றை தேசிய பொறிமுறை மூலம் நம்பிக்கையான கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.</p>
<p>தற்போது கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் டயஸ்போராக்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளேன். கலந்துரையாடல் மூலம் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இன, மத மற்றும் மொழி ரீதியாக மோதல்கள் ஏற்படுவதை தடுத்து மக்களிடையே ஒற்றுமை,நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சட்ட கட்டமைப்பு ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.&#8221; &#8211; எனவும் அமைச்சர் கூறினார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/unite-without-fading-calling-diaspora-tamils/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>புலம்பெயர் தமிழர்களும் உதவ வேண்டும்! &#8211; ரணில் அழைப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/diaspora-tamils-should-also-help-ranil/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/diaspora-tamils-should-also-help-ranil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Tue, 24 May 2022 04:46:04 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Diaspora Tamils]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Help]]></category>
		<category><![CDATA[ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=51234</guid>

					<description><![CDATA[நாட்டின் தற்போதைய பொருளாதார குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- &#8220;நாடு தற்போதைய நிலைமையில் மிகப் பெரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்தநிலையில் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம். அந்தக் குழுக்களுடன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் தற்போதைய பொருளாதார குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.</p>
<p>கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.</p>
<p>அவர் மேலும் தெரிவித்ததாவது:-</p>
<p>&#8220;நாடு தற்போதைய நிலைமையில் மிகப் பெரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்தநிலையில் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம்.</p>
<p>மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம். அந்தக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எவரும் உதவிகளைச் செய்யலாம்.</p>
<p>வெளிநாட்டில் இருப்பவர்கள் மாத்திரம் அல்ல உள்நாட்டில் இருப்பவர்களும் உதவிகளைச் செய்ய முடியும்&#8221; &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/diaspora-tamils-should-also-help-ranil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>புலம்பெயர் தமிழர்கள் மீதான தடைகள் விரைவில் விலகுமா? &#8211; மீள்பரிசீலனை செய்வதாக அரசு அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/will-the-ban-on-tamils-in-the-diaspora-be-lifted-soon/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/will-the-ban-on-tamils-in-the-diaspora-be-lifted-soon/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Mar 2022 07:46:40 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Barriers]]></category>
		<category><![CDATA[Diaspora Tamil Organizations]]></category>
		<category><![CDATA[Diaspora Tamils]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[gl peiris]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=43532</guid>

					<description><![CDATA[புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மீள்பரிசீலனை செய்யப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்ய வரவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பிலும் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது ராஜபக்ச அரசு ஆட்சிக்கு வந்ததும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மீள்பரிசீலனை செய்யப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.</p>
<p>இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.</p>
<p>புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்ய வரவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பிலும் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது ராஜபக்ச அரசு ஆட்சிக்கு வந்ததும் தடைகளை விதித்திருந்தது. இந்தநிலையில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு நாட்டுக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு நாட்டுக்குள் வருவது?என்று கொழும்புச் செய்தியாளர் ஒருவர், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.</p>
<p>&#8220;புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அரசு மீள் பரிசீலனை செய்யத் தயாராக இருக்கின்றது. கூட்டமைப்புடனான சந்திப்பின்போதும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது&#8221; என்று பீரிஸ் குறிப்பிட்டார்.</p>
<p>#SriLankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/will-the-ban-on-tamils-in-the-diaspora-be-lifted-soon/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>புலம்பெயர் தமிழர்களுடன் பேச நான் தயார்! &#8211; அமெரிக்க தூதுக்குழுவிடம் கோட்டா உறுதி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/i-am-ready-to-talk-to-tamils-in-the-diaspora/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/i-am-ready-to-talk-to-tamils-in-the-diaspora/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Mar 2022 20:17:27 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Diaspora Tamils]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Negotiation]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=42966</guid>

					<description><![CDATA[அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், இன்று முற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் ஜனாதிபதி, திருமதி நூலண்ட்டிடம் தெரிவித்தார். அது பற்றி தனது பாராட்டைத் தெரிவித்த உதவிச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.</p>
<p>இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,</p>
<p>இன்று முற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் ஜனாதிபதி, திருமதி நூலண்ட்டிடம் தெரிவித்தார்.</p>
<p>அது பற்றி தனது பாராட்டைத் தெரிவித்த உதவிச் செயலாளர், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.</p>
<p>புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தான் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.</p>
<p>அமெரிக்காவின் பசுமைத் தொழிநுட்பத்தை இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தவும், சைபர் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமதி நூலண்ட் தெரிவித்தார்.</p>
<p>இந்நாட்டின் கல்வி வசதிகள் தொடர்பில் அவதானம் செலுத்திய உதவிச் செயலாளர், தனியார் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதன் மூலம், உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டினார்.</p>
<p>கொரோனாத் தொற்றுநோய் மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளால், இந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைத் தணிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்ல தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.</p>
<p>அந்தத் தீர்மானம் தொடர்பாகவும், அதேபோன்று உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் திருத்தத்துக்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் திருமதி நூலண்ட் பாராட்டினார்.</p>
<p>உதவிச் செயலாளர் டொன் லூ, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சன்ங், தலைமை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி, அரசியல் அதிகாரி ஜெஃப் செனின், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர் &#8211; என்றுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/i-am-ready-to-talk-to-tamils-in-the-diaspora/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
