<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Devananda &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/devananda/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 08 Mar 2022 15:29:16 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Devananda &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பெண்கள் தலை நிமிரும் காலம் வந்துவிட்டது &#8211; டக்ளஸ்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/area/the-time-has-come-for-women-to-shave-their-heads-douglas/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/area/the-time-has-come-for-women-to-shave-their-heads-douglas/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Mar 2022 15:29:16 +0000</pubDate>
				<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[community]]></category>
		<category><![CDATA[democratic]]></category>
		<category><![CDATA[Devananda]]></category>
		<category><![CDATA[Douglas]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[history]]></category>
		<category><![CDATA[men]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[rights]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[struggle]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[women]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=40993</guid>

					<description><![CDATA[&#160; போராட்ட வரலாற்றிலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன். பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றும் நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றுகயைிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>போராட்ட வரலாற்றிலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன்.</p>
<p>பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றும் நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றுகயைிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்போது அவர் மேலும் கூறுகையில் &#8211;</p>
<p>இன்று உலக மகளிர் தினமாகும். இந்த பெருமை மிக்க நாளில் பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் இந்தப் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கான தன்னை துறைசார் அமைச்சர் அழைத்து இந்த தேசிய திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிப்போம் என கேட்டிருந்தார். அதற்கு நான் எமது யாழ் மாவட்டத்தின் இந்த பாடசாலையை முன்மொழிந்திருந்தேன்.</p>
<p>அதனடிப்படையில் இன்று அந்த பாடசாலை மாணவர்களினதும் கல்விச் சமூகத்தினதும் கனவு நனவாக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை எமது உரிமைப் போராட்ட காலகட்டங்களிலும் சரி அதன் பின்னரான ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவும் சில சமயங்களில் அதற்கு சற்று அதிகமாகவும் கொடுத்து வந்திருக்கின்றேன்.</p>
<p>அதேபோன்று ஆயுதப் போராட்ட களமுனையில் முதல் வீரகாவியமான பெண்ணாகவும் எனது சகோதரியான மதிவதனி என்றும் இயற்பெயர் கொண்ட சோபா வரலாற்றில் பதிவாகியுள்ளார்.</p>
<p>அதுமட்டுமல்லாது எனக்கும் கட்சிக்கும் மின நெருக்கமான மனித உரிமை சட்டத்தரணியுயான மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமானவர்களையும் வன்முறையாளர்களினால் இழந்திருக்கின்றேன்.</p>
<p>ஆனபடியால் எனக்கு இந்த போராட்டத்தின் வலிகள் நன்கு தெரியும். அதனால்தான் இந்த போராட்டத்தின் அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் நானும் ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூற வேண்டும் என்றதனடிப்படையில் அதற்கான தார்மீக பொறுப்பேற்று எமது மக்களின் மீள் எழுச்சிக்கு என்னாலான சேவைகளை தொடர்ந்து செய்துவருகின்றேன்.</p>
<p>அதேபோன்று எமது மக்களும் எனது அரசியல் பலத்தை பலப்படுத்துவதும் அவசியமாகும் அதனூடாகவே இன்றும் பலவகையான பலனை மக்கள் அடையமுடியும் என்றும் நம்புகின்றேன்.</p>
<p>இதேவேளை 72 களில் தரப்படுத்தலுக்கு எதிராக நாம் போராடியிருந்தோம். அதன்பின்னர் பல வருடங்கள் கழித்து நான் அமைச்சராக இருந்தபோது ஸ்ரான்லி வீதியில் 400 முதல் 500 பேர் என்னை வந்து சந்தித்து தரப்படுத்லினூடாக தமக்கான பல்கலை நுழைவை ஏற்படுத்தி தருமாறு கோரியிருந்தனர்.</p>
<p>நான் அதை ஏற்று அன்றைய ஜனாதிபதியுடன் பேசி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.</p>
<p>ஆனாலும் அன்று தரப்படுத்தலை எதிர்த்த நாம் அதன்பின்னர் அதை வேண்டும் என கோரியமையானது எமது தமிழ் மக்களின் அன்றைய அரசியல் தலைவர்கள் விட்ட தவறாகவும் அவர்கள் எமது மக்களுக்கு ஏற்படுத்திய தோல்வியாகவுமே அதை நான் பார்க்கின்றேன்.</p>
<p>இதேவேளை தற்போது எமது மக்கள் மத்தியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இதை நாம் தான் இங்குள்ள அரசுடன் பேசி தீர்வுகாணவேண்டும்.</p>
<p>அதைவிடுத்து பாரத பிரதமருக்கு கடிதமெழுதுகின்றனர். 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் அதுதான் எமது பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்ப புள்ளி என நான் கடந்து 30 வருடங்களுக்கு முன்பிருந்து வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.</p>
<p>எனது இந்த தீர்க்கதரிசனமிக்க கூற்றை 30 வருடங்களுக்கு முன்னர் இன்று ஏற்றுக்கொண்டது போல ஏற்றிருந்தால் இத்தனை அழிவுகளையும் துயரங்களையும் எமது மக்கள் கண்டிருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.</p>
<p>யாதும் ஊரே யாவருரும் கேளிர் என்பதே எனது நிலைப்பாடு. அந்தவகையில் இனியாவது எமது மக்கள் சரியானது எது சரியாவனவர்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.</p>
<p>அந்தவகையில் இது பெண்களுக்கான தனித்துவத்தை அடையாளப்படுத்தும் கல்லூரி என்பது மட்டுமல்லாது பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தையும் நாம் உருவாக்குவோம் .</p>
<p>தேசிய பாடசாலையாக தரமுயர்ந்துள்ள மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையின் கல்விச் சமூகத்துக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/area/the-time-has-come-for-women-to-shave-their-heads-douglas/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாரம்பரிய தொழில் செய்யும் காணிகளை யாரும் அபகரிக்க முடியாது &#8211; டக்ளஸ்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/no-one-can-usurp-traditional-industrial-land-douglas/</link>
					<comments>https://tamilnaadi.com/news/no-one-can-usurp-traditional-industrial-land-douglas/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Mar 2022 12:02:11 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[continuing]]></category>
		<category><![CDATA[Devananda]]></category>
		<category><![CDATA[Douglas]]></category>
		<category><![CDATA[farmed]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[fished]]></category>
		<category><![CDATA[lands]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[prevented]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[traditionally]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=40538</guid>

					<description><![CDATA[பாரம்பரியமாக மீன்பிடி , விவசாயம் மேற்கொள்ளும் காணிகளில் தொடர்ந்து குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள யாரும் தடைசெய்ய முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதேநேரம் வன ஜீவராசிகள் அல்லது வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களில் குறித்த பாரம்பரிய விவசாய நிலங்களும் மீன்பிடி நிலைகளும் காணப்படுமாயின் சம்ந்தப்பட்ட திணைக்களங்களின் அனுமதியைப் பெற்று தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாரம்பரியமாக மீன்பிடி , விவசாயம் மேற்கொள்ளும் காணிகளில் தொடர்ந்து குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள யாரும் தடைசெய்ய முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேநேரம் வன ஜீவராசிகள் அல்லது வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களில் குறித்த பாரம்பரிய விவசாய நிலங்களும் மீன்பிடி நிலைகளும் காணப்படுமாயின் சம்ந்தப்பட்ட திணைக்களங்களின் அனுமதியைப் பெற்று தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள், மக்களின் விவசாய நிலங்களை விடுவிப்பது தொடர்பாக துறைசார் அமைச்சர் சி.பி. இரத்நாயக்கா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.</p>
<p>இதன்போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்போது அவர் மேலும் கூறுகையில்,</p>
<p>குறித்த பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள முடியாமற்போகும் நிலை காணப்பட்டால் அது தொடர்பில் அனுமதிகள் மற்றும் சட்டரீதியான தேவைப்பாடகளை கறித்த பிரதேச செயலரூடாக மேற்கொண்டு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.</p>
<p>அதேநேரம் இத்தகைய பகுதிகளில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள செல்லும் போது வீதிகள் குறித்த அசௌகரியங்கள் இருக்குமானாலும் அவற்றையும் இனங்கண்டு பிரதேச செயலர் தமக்கு தகவல்களை வழங்கவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்பதாக வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் இலக்குகளையும் மக்களின் வாழ்வியல் எதிர்பார்ப்புக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் சமந்தப்பட்ட அமைச்சினால் நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள &#8216;வனக் கிராம்&#8217; எனும் திட்டத்தினை மருதங்கேணி, மணற்காடு பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும் என்று அமைச்சர் சி.பி.இரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், குறித்த கிராமத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளையும் உருவாக்குவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.</p>
<p>குறித்த நிகழ்வின்போது மாவட்ட அரச அதிபர்கள், துறைசார் அதிகாரிகள் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/no-one-can-usurp-traditional-industrial-land-douglas/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மக்களை மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளியவன் பிரபாகரன் &#8211; கரித்துக்கொட்டிய டக்ளஸ்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/it-was-prabhakaran-who-pushed-the-people-into-a-very-bad-situation-the-charred-douglas/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/it-was-prabhakaran-who-pushed-the-people-into-a-very-bad-situation-the-charred-douglas/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Feb 2022 17:41:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[calendar]]></category>
		<category><![CDATA[Coconut]]></category>
		<category><![CDATA[cyanide]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Devananda]]></category>
		<category><![CDATA[Douglas]]></category>
		<category><![CDATA[Fisheries]]></category>
		<category><![CDATA[inauguration]]></category>
		<category><![CDATA[Manipay]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[Prabhakaran]]></category>
		<category><![CDATA[saddened]]></category>
		<category><![CDATA[Societies]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39688</guid>

					<description><![CDATA[பிரபாகரன் இறந்ததற்காக நான் வேதனையடைகிறேன். ஏனென்றால் அவன் மற்றவர்களுக்கு சயனட்டை கொடுத்து சாகடித்துவிட்டு, தான் சலண்டர் ஆகி செத்துவிட்டது தான் எனக்கு ஒரு வேதனை. அதைவிட வேறு எந்த வேதனையும் எனக்கு இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று மானிப்பாயில் பனை தென்னை கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியின் அலுவலக திறப்புவிழாவிலே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிரபாகரன் எத்தனையோ தடவை என்னை கொல்வதற்கு முயற்சித்தான். அவனால் அது முடியாது. நான் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரபாகரன் இறந்ததற்காக நான் வேதனையடைகிறேன். ஏனென்றால் அவன் மற்றவர்களுக்கு சயனட்டை கொடுத்து சாகடித்துவிட்டு, தான் சலண்டர் ஆகி செத்துவிட்டது தான் எனக்கு ஒரு வேதனை.</p>
<p>அதைவிட வேறு எந்த வேதனையும் எனக்கு இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.</p>
<p>இன்று மானிப்பாயில் பனை தென்னை கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியின் அலுவலக திறப்புவிழாவிலே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>பிரபாகரன் எத்தனையோ தடவை என்னை கொல்வதற்கு முயற்சித்தான். அவனால் அது முடியாது.</p>
<p>நான் அப்பவே வெளிப்படையாக சொன்னான் எங்களுடைய மக்களது பிரச்சினைகளை தீர்க்க முன்னர் என்னை யாராலும் கொல்ல முடியாது என்று.</p>
<p>நான் பிரபாகரனை பழிவாங்க முயற்சிக்கவில்லை. எனது ஒரு கண்ணை பிரபாகரன் எடுத்துவிட்டான்.</p>
<p>இன்று இந்த மக்களை மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளியவன் பிரபாகரன். என்னுடைய நெருக்கமான உறவுகளை காணாமல் ஆக்கியவன். ஆகையால் என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது &#8211; என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/it-was-prabhakaran-who-pushed-the-people-into-a-very-bad-situation-the-charred-douglas/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஊடகங்களுக்கு சமூக அக்கறை தேவையாம் &#8211; சொல்வது டக்ளஸ்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/the-media-needs-social-concern-says-douglas/</link>
					<comments>https://tamilnaadi.com/news/the-media-needs-social-concern-says-douglas/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2022 09:26:55 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[affected]]></category>
		<category><![CDATA[Amendment]]></category>
		<category><![CDATA[Bureau]]></category>
		<category><![CDATA[Devananda]]></category>
		<category><![CDATA[Douglas]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[focused]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[information]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[people]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39626</guid>

					<description><![CDATA[போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரினால் வதைபட்ட மக்களின் வாழ்வியலை பற்றியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தன்னால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வந்த13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுப்படுத்தி வந்தால் பாரிய அழிவுகளை தடுத்திருக்க முடியும் எனவும் தெரிவித்தார். அரசாங்க தகவல் வெளியீட்டுப் பணியகத்தின் கிளை காரியாலயத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வெகுஜன ஊடக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரினால் வதைபட்ட மக்களின் வாழ்வியலை பற்றியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>தன்னால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வந்த13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுப்படுத்தி வந்தால் பாரிய அழிவுகளை தடுத்திருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.</p>
<p>அரசாங்க தகவல் வெளியீட்டுப் பணியகத்தின் கிளை காரியாலயத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
<p>வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், யாழ் மாவட்ட மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்ப பயனளிக்கும் வகையில் தகவல் வெளியீட்டு பணியகத்தினை ஆரம்பித்து வைத்தமைக்காக வெகுஜன ஊடகத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.</p>
<p>அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லுறவு வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதிலும் அர்த்தபூர்வமான செயற்பாடுகளை வெளிப்படுத்துகின்ற அமைச்சர் டளஸ் அழகப்பெரும.</p>
<p>2013 ஆம் ஆண்டு மாத்தறை மாவட்டத்தில் சேர் பொன்னம்பலம் மாவத்தை என்று வீதிக்கு பெயர் சூட்டியதையும் நினைவுபடுத்தினார்.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/the-media-needs-social-concern-says-douglas/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மிகப்பெரும் பொருளாதார மையமாக மயிலிட்டியை மாற்றுவேன் &#8211; டக்ளஸ் சபதம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/i-will-make-mylitty-the-biggest-economic-hub-douglas-vows/</link>
					<comments>https://tamilnaadi.com/news/i-will-make-mylitty-the-biggest-economic-hub-douglas-vows/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Feb 2022 07:42:30 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Andhra fishermen]]></category>
		<category><![CDATA[Devananda]]></category>
		<category><![CDATA[Douglas]]></category>
		<category><![CDATA[economic]]></category>
		<category><![CDATA[Establish]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Fisheries]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[Mylitty port]]></category>
		<category><![CDATA[Northern]]></category>
		<category><![CDATA[significance]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39552</guid>

					<description><![CDATA[இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக மிளிர்ந்த மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் உருவாக்கி தரப்படும் என்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் (17) இராஜாங்க அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து புனரமைப்பு பணிகளை அங்குரார்ப்பனம் செய்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக மிளிர்ந்த மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் உருவாக்கி தரப்படும் என்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் (17) இராஜாங்க அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.</p>
<p>இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து புனரமைப்பு பணிகளை அங்குரார்ப்பனம் செய்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்</p>
<p>இலங்கையின் முதன்மையான துறைமுகமான இந்த துறைமுகம் இலங்கையின் மின்பிடித் துறையில் மூன்றில் ஒரு பங்கை வகித்திருந்தது.</p>
<p>ஆனாலும் கடந்தகாலத்தில் நாட்டில் நடைபெற்ற வன்முறை அழிவு யுத்தம் காரணமாக துரதிஸ்டவசமாக அதில் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிட்டது.</p>
<p>ஆனாலும் அந்த பாதிப்பிலிருந்து இந்த துறைமுகத்தை தூக்கி நிறுத்தும் முகமாகவே அதன் அபிவிருத்திக்கான இரண்டாம் கட்டட பணிகளை ஆரம்பித்துள்ளோம்.</p>
<p>இதற்காக மாண்புமிகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களுக்கும் எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் விசேடமாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.</p>
<p>மேலும் இந்த மயிலிட்டி துறைமுதுகத்தை மட்டுமல்லாது வடக்கில் மேலும் பருத்தித்துறை துறைமுகம், மன்னார் பேசலை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் துறைமுகம் ஆகிய மூன்று துறைமுகங்களையும் அமைப்பது தொடர்பிலும் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p>அத்துறைமுகங்களையும் இந்த அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும் கடந்தகாலத்தில் பருத்தித்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டும் இருந்தன.</p>
<p>ஆனாலும் அம்முயற்சி சரியாக கையாளப்படாமையால் அது கைவிடப்பட்டவிட்டது.</p>
<p>ஆனால் நாம் ஆட்சி பொறுப்பை ஏற்றதபின் அந்த துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பான முயற்சியை தீவிரமாக முன்னெடுத்துவருகின்றோம். அது விரைவில் கைகூடும் எனவும் நம்புகிறேன்.</p>
<p>அதேநேரம் இந்த மயிலிட்டி துறைமுகத்தின் முதலாம் கட்ட ஆபிவிருத்தி பணிகளின்போது பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என கடற்றொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.</p>
<p>இதேநேரம் குறித்த துறைமுகத்தை கட்டும்போது அப்பிரதேசத்தின் கடற்றொழில் அமைப்ர்களுடன் கலந்துரையாடித்தான் அமைப்பது வழமை.</p>
<p>அதேபோன்றே இங்குள்ள கடற்றொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடி முதலாவது கட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன்.</p>
<p>ஆனால் தற்போது எமது அரசாங்கத்தால் அதன் இரண்டாம் கட்ட பணிகள் முன்றாம் கட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது கடந்தகாலத்தில் விடப்பட்ட அனைத்து குறைபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு நவீனத்தவத்துடன் கூடியதாக நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதிபடக் கூறுகின்றேன்.</p>
<p>இதேவேளை எமது கடற்றொழிலாளர்கள் பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கடந்தகாலத்தில் நாட்டில் நடைபெற்ற வன்முறை காரணமாக பலமான பொருளாதார கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.</p>
<p>அதுமட்டுமல்லாது கடந்தகால தமிழ். தலைவர்கள் என கூறப்பட்டவர்களால் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தாது தவறவிட்டப்பட்டதால் அதிக துன்பங்களையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்.</p>
<p>அந்தவகையில் அவற்றை தீர்க்க முகமாகவே எமது நிகழ்கால எதிர்கால செயற்பாடுகள் அமையும் என்றும் தெரிவித்தார்.</p>
<p>இதேவேளை இந்த மயிலிட்டி பிரதேசத்தில் தற்போது 60 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.</p>
<p>மேலும் சுமார் 100 முதல் 125 ஏக்கர் நிலங்களை விரைவில் கட்டம் கட்டமாக விடுவிக்கவும் நான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.</p>
<p>அந்தவகையில் எமது மக்கள் குறிப்பாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதுடன், இந்த வரலாற்று மிக்க துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் பொருளாதார ஈட்டலுக்கான வளங்களுடன் செயற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்படுத்துவேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜனந்த சந்திரசோம தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன், இந்திய தூதரக பிரதி தூதர் ராஜேஸ் நடராஜ், கடற்படையின் வடக்கு பிரதானி, மாவட்ட செயலாளர் மகேசன் மற்றும் துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/i-will-make-mylitty-the-biggest-economic-hub-douglas-vows/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
