<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Department of Examinations &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/department-of-examinations/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 05 Jan 2026 15:27:56 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Department of Examinations &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உயர்தரப் பரீட்சை: நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை !</title>
		<link>https://tamilnaadi.com/news/a-l-exams-2025-tuition-classes-and-seminars-banned-from-midnight-tomorrow-exams-to-resume-on-january-12/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 15:27:56 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Department of Examinations]]></category>
		<category><![CDATA[Education News 2026.]]></category>
		<category><![CDATA[Exam Seminars Prohibited]]></category>
		<category><![CDATA[GCE A/L Exam 2025]]></category>
		<category><![CDATA[Tuition Class Ban Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=209014</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை (06) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை பின்வரும் செயற்பாடுகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. பரீட்சார்த்திகளுக்காக நடத்தப்படும் தனியார் மேலதிக வகுப்புகள் (Tuition Classes). பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள். மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை (06) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>நாளை நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை பின்வரும் செயற்பாடுகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. பரீட்சார்த்திகளுக்காக நடத்தப்படும் தனியார் மேலதிக வகுப்புகள் (Tuition Classes).</p>
<p>பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள். மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல். பரீட்சை வினாக்களை ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது துண்டுப் பிரசுரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வெளியிடுதல்.</p>
<p>எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவுகளை மீறிச் செயற்பட்டால், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p>
<p>2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை.</p>
<p>நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயர்தரப் பரீட்சை: பொருளியல் வினாத்தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு – CID விசாரணைக்கு உத்தரவு!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Nov 2025 16:54:24 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[A/L Examination 2025]]></category>
		<category><![CDATA[CID Investigation]]></category>
		<category><![CDATA[Department of Examinations]]></category>
		<category><![CDATA[Economics Paper Leak]]></category>
		<category><![CDATA[Social Media Allegations.]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205632</guid>

					<description><![CDATA[நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் (Economics) பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் (Department of Examinations) பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகக் கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் (Economics) பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>பரீட்சைகள் திணைக்களத்தின் (Department of Examinations) பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகக் கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன.</p>
<p>இது குறித்துப் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இருப்பினும், சமூக ஊடகங்களில் பரவிய தகவலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரிப் பரீட்சைகள் திணைக்களம் CID-யிடம் முறைப்பாடு செய்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-revision-of-the-question-paper-has-begun/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-revision-of-the-question-paper-has-begun/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Apr 2023 14:03:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Department of Examinations]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=74213</guid>

					<description><![CDATA[உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் பரீட்சைகள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.</p>
<p>யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>அதேபோல், சிங்களம் மற்றும் ஆங்கிள மொழிமூல பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் போதிய அளவில் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அந்த பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-revision-of-the-question-paper-has-begun/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பரீட்சை திணைக்கள இணையத்தை ஹக் செய்த மாணவன் கைது</title>
		<link>https://tamilnaadi.com/news/local/student-arrested-for-hacking-exam-departments-website/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/student-arrested-for-hacking-exam-departments-website/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Sep 2022 08:15:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Department of Examinations]]></category>
		<category><![CDATA[hack]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[website]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=61224</guid>

					<description><![CDATA[பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹக் செய்த காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். மாணவர் இணையத்தளத்தை ஹக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, அதனை தனியான இணையப் web portal இல் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஏறக்குறைய 270,000 மாணவர்களின் தரவுகளை திருடி அவர்களின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தினை போல தான் தனியான இணையத்தளத்தை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹக் செய்த காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.</p>
<p>மாணவர் இணையத்தளத்தை ஹக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, அதனை தனியான இணையப் web portal இல் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>சந்தேக நபர் ஏறக்குறைய 270,000 மாணவர்களின் தரவுகளை திருடி அவர்களின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தினை போல தான் தனியான இணையத்தளத்தை அமைத்திருந்தார்.<br />
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தந்திரோபாய ரீதியாக டெலிகிராம் குழுவிற்குள் நுழைந்து அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.</p>
<p>குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவரின் இணையப் web portal ஹக் செய்த பின்னர், அதனை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 5,000 மாணவர்கள் குழுவைக் கொண்ட டெலிகிராம் குழுவிற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p>
<p>சந்தேக நபர் காலியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p>
<p>அந்த மாணவர் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்காக அரசாங்க இணையத்தளத்தை ஹக் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>இந்த மாணவனின் பெற்றோர் ஆசிரியர்கள். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் இருப்பதாக குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. சகோதரிகளில் ஒருவர் பல்கலைக்கழகத்திலும், மற்றைய சகோதரி உயர்தர வகுப்பிலும் படித்து வருகின்றனர்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/student-arrested-for-hacking-exam-departments-website/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>O/L பரீட்சை திகதியில் மாற்றம் எதுவுமில்லை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/no-change-in-o-l-exam-date/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/no-change-in-o-l-exam-date/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Wed, 11 May 2022 08:57:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[date]]></category>
		<category><![CDATA[Department of Examinations]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[O/L exam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=49774</guid>

					<description><![CDATA[ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையில் பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவரும் நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்படி திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையில் பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவரும் நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/no-change-in-o-l-exam-date/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முடிவுத்திகதி இன்றாம்- விண்ணப்பித்து விட்டீர்களா?</title>
		<link>https://tamilnaadi.com/news/local/closing-date-today-have-you-applied/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/closing-date-today-have-you-applied/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 09:23:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Applications]]></category>
		<category><![CDATA[Commissioner of Examinations]]></category>
		<category><![CDATA[Department of Examinations]]></category>
		<category><![CDATA[Dharmasena]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[gce]]></category>
		<category><![CDATA[official website]]></category>
		<category><![CDATA[Ordinary Level Examination]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=37987</guid>

					<description><![CDATA[2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இன்றுடன் நிறைவடைகிறது. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் என்.டீ.தர்மசேன தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவலால், கடந்த டிசம்பரில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவிருந்த போதிலும், அது இந்த வருடம் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இன்றுடன் நிறைவடைகிறது.</p>
<p>பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் என்.டீ.தர்மசேன தெரிவித்தார்.</p>
<p>நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவலால், கடந்த டிசம்பரில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவிருந்த போதிலும், அது இந்த வருடம் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.<br />
#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/closing-date-today-have-you-applied/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான அதிரடி அறிவிப்பு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/action-notice-for-gce-advanced-level-students/</link>
					<comments>https://tamilnaadi.com/news/action-notice-for-gce-advanced-level-students/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jan 2022 07:53:40 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[admission cards]]></category>
		<category><![CDATA[Advanced Level 2021 examination]]></category>
		<category><![CDATA[announcement]]></category>
		<category><![CDATA[Department of Examinations]]></category>
		<category><![CDATA[Department of Examinations of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Exam Number]]></category>
		<category><![CDATA[examination centers]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[islandwide.]]></category>
		<category><![CDATA[issued]]></category>
		<category><![CDATA[National Identity Card Number]]></category>
		<category><![CDATA[school and private candidates]]></category>
		<category><![CDATA[special]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[very]]></category>
		<category><![CDATA[www.donets.lk]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=36916</guid>

					<description><![CDATA[க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் அதி விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.donets.lk என்ற இணையதளத்திற்கு சென்று சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் அனுமதி அட்டையின் நகலை நீங்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[
<p>க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் அதி விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.<br /><br />அதன்படி இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />அதனை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.donets.lk என்ற இணையதளத்திற்கு சென்று சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் அனுமதி அட்டையின் நகலை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.<br /><br />அதேபோல் அனுமதி அட்டையில் பெயர் ,பாடம் மற்றும் மொழி ஆகியவற்றினையும் ஆன்லைன் மூலம் திருத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />க.பொ.த உயர்தர 2021 பரீட்சை பெப்ரவரி 7 முதல் மார்ச் 5 வரை நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 439 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.<br /><br />#SrilankaNews<br /><br /><br /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/action-notice-for-gce-advanced-level-students/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
