<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>crimes &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/crimes/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 22 Feb 2022 06:14:15 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>crimes &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு அரசாங்க அமைச்சர்களே சாட்சி!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/government-ministers-are-witnesses-to-war-crimes/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/government-ministers-are-witnesses-to-war-crimes/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Feb 2022 06:12:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cent]]></category>
		<category><![CDATA[crimes]]></category>
		<category><![CDATA[former]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[leader]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[ministers]]></category>
		<category><![CDATA[National]]></category>
		<category><![CDATA[parliamentarian]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[Prabhakaran]]></category>
		<category><![CDATA[sivajilingam]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[statement]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[war]]></category>
		<category><![CDATA[witnesses]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39740</guid>

					<description><![CDATA[இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு அரசாங்க அமைச்சர்களே சாட்சியென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிவருகின்றார்கள். இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு அரசாங்க அமைச்சர்களே சாட்சியென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.</p>
<p>யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிவருகின்றார்கள்.</p>
<p>இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.</p>
<p>அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும்.</p>
<p>2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரத்திற்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி குண்டர்களினால் சுட்டும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரணதண்டனை தீர்ப்பு நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டது.</p>
<p>பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இது முதல் தடவை அல்ல.</p>
<p>அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா என்பதற்கு பதில் கூறவேண்டும்.</p>
<p>இறுதியுத்தத்தின்போது பிரபாகரனின் படம் என காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள் இலங்கை பூராகவும் பவனியாக கொண்டு சென்றிருப்பீர்கள்.</p>
<p>ஆனால் தற்போது குறித்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள்.</p>
<p>சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்திற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது? அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத்பென்சேகா,பிரபாகரன் ஒரு வீரன் கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதை கூறுகின்றார்.</p>
<p>படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக்கூறியுள்ளார்.</p>
<p>அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். சரணடைவது என்றால் ஆயுதங்கள் இல்லாமல் தான் சரணடைவது.</p>
<p>அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோமென ஒரு சிலர் கூறினார்கள்.எங்கு புதைத்தோம் யார் புதைத்தது என்பது கூறப்படவில்லை.</p>
<p>இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலை கரைத்துவிட்டோம் எறிந்துவிட்டோம் என்றார்கள்.ஒரு போர் வீரனது உடலுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்பது மரபு.</p>
<p>பிரபாகரனது இறப்புத் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையே அரசாங்கங்கள் கூறிவருகின்றது.</p>
<p>பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக கருணாவையும் தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள்.</p>
<p>ஒருவர் கொல்லப்பட்டால் குறித்தநபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் மரண விசாரணை நடைபெறவில்லை.</p>
<p>உலங்கு வானூர்தி மூலம் கருணாவை கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட வைத்திய அதிகாரியை கூட்டிச்சென்று மரண சான்றிதழை வழங்கவில்லை.</p>
<p>இந்தியாவிற்கு ஒரு நீதிமன்ற சான்றிதழை வழங்கியுள்ளீர்கள் இதனைவிட ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை.</p>
<p>அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.</p>
<p>பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும் அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை வரலாறு கூறும்.</p>
<p>அதனை விடுத்து சரணடைந்தார் சடலத்தை எடுத்தோம் புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை.</p>
<p>பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடன் பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும்.</p>
<p>பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோம் &#8211; என்றார்.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/government-ministers-are-witnesses-to-war-crimes/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் இனி பாலியல் குற்றங்களுக்குத் தனி நீதிமன்று!</title>
		<link>https://tamilnaadi.com/news/india/no-more-separate-courts-for-sex-crimes-in-india/</link>
					<comments>https://tamilnaadi.com/news/india/no-more-separate-courts-for-sex-crimes-in-india/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Oct 2021 17:09:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Courts]]></category>
		<category><![CDATA[crimes]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=17995</guid>

					<description><![CDATA[இந்தியாவில் பாலியல் குற்றங்களை விசாரிக்க இனி தனியான நீதிமன்று அமைக்கப்பட வேண்டுமென, இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, குற்றவியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய இந்திய மத்திய அரசாங்கம், பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதில் காலதாமதம் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அவ்வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாநிலங்களிலும் இது குறித்த விசாரணைகளுக்கு விரைவு நீதிமன்றத்தை நிர்மாணிக்க வேண்டும் என, மாநில அரசாங்கங்களுக்கு, மத்திய அரசாங்கம் அறிவித்தல் வழங்கியுள்ளது. இந்நீதிமன்றங்களை மத்திய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் பாலியல் குற்றங்களை விசாரிக்க இனி தனியான நீதிமன்று அமைக்கப்பட வேண்டுமென, இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>கடந்த 2018ஆம் ஆண்டு, குற்றவியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய இந்திய மத்திய அரசாங்கம், பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதில் காலதாமதம் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்தது.</p>
<p>இந்நிலையில் அவ்வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாநிலங்களிலும் இது குறித்த விசாரணைகளுக்கு விரைவு நீதிமன்றத்தை நிர்மாணிக்க வேண்டும் என, மாநில அரசாங்கங்களுக்கு, மத்திய அரசாங்கம் அறிவித்தல் வழங்கியுள்ளது.</p>
<p>இந்நீதிமன்றங்களை மத்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#india</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/india/no-more-separate-courts-for-sex-crimes-in-india/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
