<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Court order &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/court-order/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 14 Dec 2025 12:39:46 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Court order &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நீதிமன்ற உத்தரவில் அடைக்கப்பட்ட வெள்ளைப் புறா கடத்தல்: தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் கைது!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/zoo-employee-arrested-for-allegedly-smuggling-white-pigeon-housed-under-court-order-from-dehiwala-national-zoo/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Dec 2025 12:39:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Animal Custody]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[Dehiwala Police.]]></category>
		<category><![CDATA[Dehiwala Zoo]]></category>
		<category><![CDATA[White Pigeon Smuggling]]></category>
		<category><![CDATA[Zoo Employee Arrest]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207186</guid>

					<description><![CDATA[நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைப் புறாவை, அதனை அடைத்து வைத்திருந்த விலங்குகளுக்குப் பொறுப்பான ஊழியர் ஒருவர், புறா உணவுடன் மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள சாலையில் எடுத்துச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த வெள்ளைப் புறாவை அந்த ஊழியர் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்ல முயன்றுள்ளார். இது தொடர்பாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் புகார் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையிலுள்ள [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைப் புறாவை, அதனை அடைத்து வைத்திருந்த விலங்குகளுக்குப் பொறுப்பான ஊழியர் ஒருவர், புறா உணவுடன் மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள சாலையில் எடுத்துச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த வெள்ளைப் புறாவை அந்த ஊழியர் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.</p>
<p>இது தொடர்பாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையிலுள்ள கௌடான பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிருகக்காட்சிசாலைத் துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கார்த்தியின் &#8216;வா வாத்தியார்&#8217; படத்துக்கு திடீர் தடை: ரூ. 21.78 கோடி கடன் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</title>
		<link>https://tamilnaadi.com/entertainment/court-bans-karthis-vaa-vaathiyar-release-over-rs-21-78-crore-loan-dispute-with-producer-gnanavel-raja/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 16:45:00 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[December 12 Release.]]></category>
		<category><![CDATA[Financial Dispute]]></category>
		<category><![CDATA[Gnanavel Raja]]></category>
		<category><![CDATA[karthi]]></category>
		<category><![CDATA[Nalan Kumarasamy]]></category>
		<category><![CDATA[Release Ban]]></category>
		<category><![CDATA[Vaa Vaathiyar]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206891</guid>

					<description><![CDATA[இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து, வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த &#8216;வா வாத்தியார்&#8217; திரைப்படத்திற்கு நீதிமன்றம் தற்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைக் கடனாகப் பெற்றிருந்தார். அந்தக் கடன்தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து ரூபாய் 21.78 கோடியாக செலுத்த வேண்டியுள்ளது. வழக்கு: இந்த முழுத் தொகையையும் செலுத்தாமல் &#8216;வா வாத்தியார்&#8217; திரைப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து, வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த &#8216;வா வாத்தியார்&#8217; திரைப்படத்திற்கு நீதிமன்றம் தற்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.</p>
<p>தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைக் கடனாகப் பெற்றிருந்தார்.</p>
<p>அந்தக் கடன்தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து ரூபாய் 21.78 கோடியாக செலுத்த வேண்டியுள்ளது.</p>
<p>வழக்கு: இந்த முழுத் தொகையையும் செலுத்தாமல் &#8216;வா வாத்தியார்&#8217; திரைப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.</p>
<p>இந்த வழக்கு விசாரணையின்போது, ஞானவேல் ராஜா தரப்பு வழக்கறிஞர், ரூபாய் 3.75 கோடியை உடனடியாகச் செலுத்துவதாகவும், மீதமுள்ள தொகைக்குச் சொத்து ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>இந்த வாதத்தைக் கவனத்தில் கொண்ட நீதிபதி, &#8220;பல முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் கடனைச் செலுத்த எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை&#8221; எனக் கூறினார்.</p>
<p>இதன் விளைவாக, முழுத் தொகையையும் செலுத்தும் வரை &#8216;வா வாத்தியார்&#8217; திரைப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>
<p>இந்தத் திடீர் தடையால், டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகவிருந்த &#8216;வா வாத்தியார்&#8217; திரைப்படத்தின் ரிலீஸில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக நடந்தவர்களுக்கு முன்னிலையாகுமாறு அறிவித்தல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/notice-to-those-who-went-against-the-court-order-to-appear/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/notice-to-those-who-went-against-the-court-order-to-appear/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Mon, 22 May 2023 02:29:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chavacheri]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=76486</guid>

					<description><![CDATA[நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக நடந்தவர்களுக்கு முன்னிலையாகுமாறு அறிவித்தல்! சாவகச்சேரி நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையில் நடந்து கொள்வதாக தெரிவித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திலகராணி ஆகியோரை இன்றையதினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில்  முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி தனியாரால் அபகரிக்கப்பட்ட தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதியை மீட்டுத் தருமாறு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக நடந்தவர்களுக்கு முன்னிலையாகுமாறு அறிவித்தல்!</h4>
<p>சாவகச்சேரி நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையில் நடந்து கொள்வதாக தெரிவித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திலகராணி ஆகியோரை இன்றையதினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில்  முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த 12ஆம் தேதி தனியாரால் அபகரிக்கப்பட்ட தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதியை மீட்டுத் தருமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாக கிராம மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p>
<p>குறித்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து சாவகச்சேரி பிரதேசபை கொடிகாமம் பொலிஸாரோடு இணைந்து பிரதேச சபையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தனியாரால் அபகரிக்கப்பட்டிருந்த குறித்த வீதியை அளவீடு செய்து எல்லை வேலிகளை அகற்றி பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விட்டிருந்தனர்.</p>
<p>இந்நிலையிலேயே தனியாரால் சாவகச்சேரி நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளனர்.</p>
<p>18.01.2021 ஆம் திகதி சாவகச்சேரி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையிலும் சேயற்பட்டதாக தெரிவித்து அது தொடர்பாக ஆராய்வதற்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>#srilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/notice-to-those-who-went-against-the-court-order-to-appear/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விக்கிரகங்களை  அதே இடத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-court-ordered-to-keep-the-idols-in-the-same-place/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-court-ordered-to-keep-the-idols-in-the-same-place/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Apr 2023 06:12:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[idols in the same place!]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[vedukunaari]]></category>
		<category><![CDATA[Vedukunari Adilingeswarar Temple]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=74787</guid>

					<description><![CDATA[வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை பொலிஸார் எடுத்துச்சென்றுள்ள விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. குறித்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், காவல் நிலையத்தில் உள்ள அனைத்து திருவுருவச்சிலைகளும் பூசாரியிடம் ஒப்படைக்க [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>அதேவேளை பொலிஸார் எடுத்துச்சென்றுள்ள விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.</p>
<p>குறித்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், காவல் நிலையத்தில் உள்ள அனைத்து திருவுருவச்சிலைகளும் பூசாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அங்கு பூசை வழிபாடுகள் அனைத்தும் செய்ய முடியும் எனவும் தொல்பொருள் உத்தியோகத்தர்கள் எந்த தடங்கலும் செய்ய முடியாது எனவும் உத்தரவிட்டது என்றார்.</p>
<p>மேலும்  இன்று வியாழக்கிழமை அனைத்து திருவுருவச் சிலைகளும் அங்கு பிரதிஸ்டை செய்து பூசை வழிபாடுகள் அனைத்தும் நடைபெறும் என்றார்.</p>
<p>#srilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-court-ordered-to-keep-the-idols-in-the-same-place/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகள்! &#8211; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</title>
		<link>https://tamilnaadi.com/news/order-to-provide-security-for-threatened-political-prisoners/</link>
					<comments>https://tamilnaadi.com/news/order-to-provide-security-for-threatened-political-prisoners/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Oct 2021 06:56:29 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[prisoners]]></category>
		<category><![CDATA[rohan ratwatte]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=14617</guid>

					<description><![CDATA[இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலுக்குள்ளான 08 சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, குறித்த அரசியல் கைதிகளுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளா் நாயகத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளாா். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை, தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலுக்குள்ளான 08 சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p>
<p>இதற்கமைய, குறித்த அரசியல் கைதிகளுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளா் நாயகத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளாா்.</p>
<p>கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p>
<p>இதனை, தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கைது செய்யுமாறு கோரி குற்ற விசாரணை பிரிவில் சிறை கைதிகளை பாதுகாக்கும் குழு முறைப்பாடு செய்துள்ளது.</p>
<p>லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் சட்டம் செயற்படுத்தப்பட்டு அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என கைதிகள் பாதுகாப்பு குழு குறிப்பிட்டிருந்தது.</p>
<p>இதற்கமைய, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/order-to-provide-security-for-threatened-political-prisoners/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் விளக்கமறியல்</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/re-interpretation-to-rishad-bathiudeen/</link>
					<comments>https://tamilnaadi.com/uncategorized/re-interpretation-to-rishad-bathiudeen/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Oct 2021 06:35:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[COVID deaths]]></category>
		<category><![CDATA[Rizad]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=13714</guid>

					<description><![CDATA[சிறுமி ஹிசாலினியின் வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த 16 வயதுடைய மலையக சிறுமி ஹிசாலினி தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 14 ஆம் திகதி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறுமி ஹிசாலினியின் வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த 16 வயதுடைய மலையக சிறுமி ஹிசாலினி தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p>
<p>குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>குறித்த சம்பவத்தில் 5 ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/uncategorized/re-interpretation-to-rishad-bathiudeen/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இளவரசர் பிலிப்பின் உயில் &#8211; 90 ஆண்டுகள் சீல் வைக்க உத்தரவு!    .</title>
		<link>https://tamilnaadi.com/news/will-of-prince-philip/</link>
					<comments>https://tamilnaadi.com/news/will-of-prince-philip/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 23:52:30 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[britain]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[Elizabeth]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[londan]]></category>
		<category><![CDATA[prince philip]]></category>
		<category><![CDATA[seal]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10138</guid>

					<description><![CDATA[பிரித்தானிய ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிரித்தானிய இளவரசர் பிலிப் எழுதி வைத்த உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டும் என என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் பிலிப், கடந்த ஏப்ரல் மாதம் தந்து 99 ஆவது வயதில் மரணித்தார். மறைந்த இளவரசர் பிலிப், தனது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கௌரவத்துக்காக உயில் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படவேண்டும் என விரும்பினார். அரச குடும்பத்தின் கண்ணியத்தை காப்பதற்காக இளவரசர் பிலிப்ஸ் எழுதிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானிய ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிரித்தானிய இளவரசர் பிலிப் எழுதி வைத்த உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டும் என என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>பிரித்தானிய இளவரசர் பிலிப், கடந்த ஏப்ரல் மாதம் தந்து 99 ஆவது வயதில் மரணித்தார்.</p>
<p>மறைந்த இளவரசர் பிலிப், தனது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கௌரவத்துக்காக உயில் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படவேண்டும் என விரும்பினார்.</p>
<p>அரச குடும்பத்தின் கண்ணியத்தை காப்பதற்காக இளவரசர் பிலிப்ஸ் எழுதிய உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டுமென லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>மேலும் உயிலின் நகலை பதிவு செய்யவோ,நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/will-of-prince-philip/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
