<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>community &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/community/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 08 Mar 2022 15:29:16 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>community &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பெண்கள் தலை நிமிரும் காலம் வந்துவிட்டது &#8211; டக்ளஸ்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/area/the-time-has-come-for-women-to-shave-their-heads-douglas/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/area/the-time-has-come-for-women-to-shave-their-heads-douglas/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Mar 2022 15:29:16 +0000</pubDate>
				<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[community]]></category>
		<category><![CDATA[democratic]]></category>
		<category><![CDATA[Devananda]]></category>
		<category><![CDATA[Douglas]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[history]]></category>
		<category><![CDATA[men]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[rights]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[struggle]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[women]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=40993</guid>

					<description><![CDATA[&#160; போராட்ட வரலாற்றிலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன். பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றும் நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றுகயைிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>போராட்ட வரலாற்றிலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன்.</p>
<p>பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றும் நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றுகயைிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்போது அவர் மேலும் கூறுகையில் &#8211;</p>
<p>இன்று உலக மகளிர் தினமாகும். இந்த பெருமை மிக்க நாளில் பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் இந்தப் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கான தன்னை துறைசார் அமைச்சர் அழைத்து இந்த தேசிய திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிப்போம் என கேட்டிருந்தார். அதற்கு நான் எமது யாழ் மாவட்டத்தின் இந்த பாடசாலையை முன்மொழிந்திருந்தேன்.</p>
<p>அதனடிப்படையில் இன்று அந்த பாடசாலை மாணவர்களினதும் கல்விச் சமூகத்தினதும் கனவு நனவாக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை எமது உரிமைப் போராட்ட காலகட்டங்களிலும் சரி அதன் பின்னரான ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவும் சில சமயங்களில் அதற்கு சற்று அதிகமாகவும் கொடுத்து வந்திருக்கின்றேன்.</p>
<p>அதேபோன்று ஆயுதப் போராட்ட களமுனையில் முதல் வீரகாவியமான பெண்ணாகவும் எனது சகோதரியான மதிவதனி என்றும் இயற்பெயர் கொண்ட சோபா வரலாற்றில் பதிவாகியுள்ளார்.</p>
<p>அதுமட்டுமல்லாது எனக்கும் கட்சிக்கும் மின நெருக்கமான மனித உரிமை சட்டத்தரணியுயான மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமானவர்களையும் வன்முறையாளர்களினால் இழந்திருக்கின்றேன்.</p>
<p>ஆனபடியால் எனக்கு இந்த போராட்டத்தின் வலிகள் நன்கு தெரியும். அதனால்தான் இந்த போராட்டத்தின் அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் நானும் ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூற வேண்டும் என்றதனடிப்படையில் அதற்கான தார்மீக பொறுப்பேற்று எமது மக்களின் மீள் எழுச்சிக்கு என்னாலான சேவைகளை தொடர்ந்து செய்துவருகின்றேன்.</p>
<p>அதேபோன்று எமது மக்களும் எனது அரசியல் பலத்தை பலப்படுத்துவதும் அவசியமாகும் அதனூடாகவே இன்றும் பலவகையான பலனை மக்கள் அடையமுடியும் என்றும் நம்புகின்றேன்.</p>
<p>இதேவேளை 72 களில் தரப்படுத்தலுக்கு எதிராக நாம் போராடியிருந்தோம். அதன்பின்னர் பல வருடங்கள் கழித்து நான் அமைச்சராக இருந்தபோது ஸ்ரான்லி வீதியில் 400 முதல் 500 பேர் என்னை வந்து சந்தித்து தரப்படுத்லினூடாக தமக்கான பல்கலை நுழைவை ஏற்படுத்தி தருமாறு கோரியிருந்தனர்.</p>
<p>நான் அதை ஏற்று அன்றைய ஜனாதிபதியுடன் பேசி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.</p>
<p>ஆனாலும் அன்று தரப்படுத்தலை எதிர்த்த நாம் அதன்பின்னர் அதை வேண்டும் என கோரியமையானது எமது தமிழ் மக்களின் அன்றைய அரசியல் தலைவர்கள் விட்ட தவறாகவும் அவர்கள் எமது மக்களுக்கு ஏற்படுத்திய தோல்வியாகவுமே அதை நான் பார்க்கின்றேன்.</p>
<p>இதேவேளை தற்போது எமது மக்கள் மத்தியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இதை நாம் தான் இங்குள்ள அரசுடன் பேசி தீர்வுகாணவேண்டும்.</p>
<p>அதைவிடுத்து பாரத பிரதமருக்கு கடிதமெழுதுகின்றனர். 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் அதுதான் எமது பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்ப புள்ளி என நான் கடந்து 30 வருடங்களுக்கு முன்பிருந்து வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.</p>
<p>எனது இந்த தீர்க்கதரிசனமிக்க கூற்றை 30 வருடங்களுக்கு முன்னர் இன்று ஏற்றுக்கொண்டது போல ஏற்றிருந்தால் இத்தனை அழிவுகளையும் துயரங்களையும் எமது மக்கள் கண்டிருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.</p>
<p>யாதும் ஊரே யாவருரும் கேளிர் என்பதே எனது நிலைப்பாடு. அந்தவகையில் இனியாவது எமது மக்கள் சரியானது எது சரியாவனவர்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.</p>
<p>அந்தவகையில் இது பெண்களுக்கான தனித்துவத்தை அடையாளப்படுத்தும் கல்லூரி என்பது மட்டுமல்லாது பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தையும் நாம் உருவாக்குவோம் .</p>
<p>தேசிய பாடசாலையாக தரமுயர்ந்துள்ள மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையின் கல்விச் சமூகத்துக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/area/the-time-has-come-for-women-to-shave-their-heads-douglas/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அறிகுறி இல்லாத தொற்றாளர்களே சமூகத்தில் அதிகம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/symptomatic-infections-are-more-common-in-the-community/</link>
					<comments>https://tamilnaadi.com/news/symptomatic-infections-are-more-common-in-the-community/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Feb 2022 13:55:08 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[community]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[guidelines]]></category>
		<category><![CDATA[hygienic]]></category>
		<category><![CDATA[infections]]></category>
		<category><![CDATA[press conference]]></category>
		<category><![CDATA[Symptoms]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=38848</guid>

					<description><![CDATA[சமூகத்தில் எந்தவித அறிகுறிகளும் இல்லாத கொரோனா தொற்றாளர்களே அதிகமாக காணப்படுவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சமூகத்தில் கொவிட் அறிகுறிகளை காட்டும் தொற்றாளர்களை விட எவ்வித அறிகுறிகளையும் கொண்டிராத கொவிட் தொற்றாளர்களே அதிகளவில் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதிலிருந்து தவறும் பட்சத்தில் கொவிட் தொற்று மேலும் பரவலடைந்து நிலைமை மோசமடைவதற்கு வழிவகுக்கக்கூடும். இதேவேளை முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட நபர்கள் மூன்றாவது தடுப்பூசியையும் கட்டாயம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சமூகத்தில் எந்தவித அறிகுறிகளும் இல்லாத கொரோனா தொற்றாளர்களே அதிகமாக காணப்படுவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இது தொடர்பில் ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>சமூகத்தில் கொவிட் அறிகுறிகளை காட்டும் தொற்றாளர்களை விட எவ்வித அறிகுறிகளையும் கொண்டிராத கொவிட் தொற்றாளர்களே அதிகளவில் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.</p>
<p>சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதிலிருந்து தவறும் பட்சத்தில் கொவிட் தொற்று மேலும் பரவலடைந்து நிலைமை மோசமடைவதற்கு வழிவகுக்கக்கூடும்.</p>
<p>இதேவேளை முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட நபர்கள் மூன்றாவது தடுப்பூசியையும் கட்டாயம் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டுமென அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.</p>
<p>இதன் காரணமாக அனைவரும் ஒன்றிணைந்து முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்றார்.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/symptomatic-infections-are-more-common-in-the-community/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சமூக அபிவிருத்தியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் &#8211; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்</title>
		<link>https://tamilnaadi.com/news/female-local-body-members-should-show-more-interest-in-community-development-former-member-of-parliament-tilakaraj/</link>
					<comments>https://tamilnaadi.com/news/female-local-body-members-should-show-more-interest-in-community-development-former-member-of-parliament-tilakaraj/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Nov 2021 17:59:46 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[community]]></category>
		<category><![CDATA[development]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[leadership]]></category>
		<category><![CDATA[local government]]></category>
		<category><![CDATA[participation]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[Power]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Upcountry]]></category>
		<category><![CDATA[women]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=24502</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு எனும் 2018ஆம் ஆண்டு முதலான ஏற்பாடு நடைமுறைக்கு வந்ததை அடுத்து, இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த தெரிவு முறையில் குறைபாடுகள் உள்ளபோதும் பெண்கள் தமது தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்த இந்த ஏற்பாடு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பௌதீக அபிவிருத்தி விடயங்களைக் காட்டிலும் உள்ளுர் மட்டத்தில் சமூக அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் பெண் உறுப்பினர்கள் ஆர்வம் காட்டுதல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு எனும் 2018ஆம் ஆண்டு முதலான ஏற்பாடு நடைமுறைக்கு வந்ததை அடுத்து,</p>
<p style="text-align: justify;">இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">அந்த தெரிவு முறையில் குறைபாடுகள் உள்ளபோதும் பெண்கள் தமது தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்த இந்த ஏற்பாடு வாய்ப்பாக அமைந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பௌதீக அபிவிருத்தி விடயங்களைக் காட்டிலும் உள்ளுர் மட்டத்தில் சமூக அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் பெண் உறுப்பினர்கள் ஆர்வம் காட்டுதல் அவசியம் .</p>
<p style="text-align: justify;">முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">சேர்ச் கபோர் கொமன் கிரவுன்ட்ஸ் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் &#8216;பெண்களின் கற்றல் மற்றும் தலைமைத்துவம்&#8217; எனும் தொனிப்பொருளில் மாநாடு ஒன்றை அண்மையில் நடாத்தி இருந்தது.</p>
<p style="text-align: justify;">தலவத்துகொட கிராண்ட் மொனார்ச் விருந்தக மண்டபத்தில் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">இம் மாநாட்டில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தலைமை நிர்வாகி ஜென்னி கொரியா நியூன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">பெண் தலைமைத்துவ ஆர்வலர்கள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருந்த இந்த மாநாட்டில்</p>
<p style="text-align: justify;">நாடு முழுவதிலும் இருந்து பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டடனர்.</p>
<p style="text-align: justify;">அவர்களது செயற்பாட்டு தளங்களையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.</p>
<p style="text-align: justify;">இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,</p>
<p style="text-align: justify;">பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் சுமார் 25 பேர் அளவில் செயற்பட்டோம். அதில் பெண் அரசியல் பங்கேற்பை உறுதி செய்வது ஓர் அம்சம் ஆகும்.</p>
<p style="text-align: justify;">அதேபோல மதிப்பாய்வு சம்பந்தமான கொள்கை மற்றும் சட்ட உருவாக்கத்தைச் செய்வதிலும் எமது பங்களிப்பு இருந்தது.</p>
<p style="text-align: justify;">உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும்.</p>
<p style="text-align: justify;">பெண் உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சி மன்றத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு நடைமுறை 2018 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் அவர்களின் அரசியல் பங்களிப்புக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">அது குறித்த மதிப்பாய்வு ஒன்றின் அவசியம் இருக்கிறது. அதன் அடிப்படையில் அதனை விரிவுபடுத்தவும் வேண்டி உள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆண் உறுப்பினர்கள் பௌதீக அபிவிருத்தியிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.</p>
<p style="text-align: justify;">அபிவிருத்தி வேலைகளைச் செய்யும் ஒப்பந்தக்கார்ர்களாகவே அவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அல்லது ஒப்பந்தக்காரர்கள் பலர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.</p>
<p style="text-align: justify;">பெண் உறுப்பினர்களும் பாதை அபிவிருத்தி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும் போது ஆண் உறுப்பினர்களுடன் முட்டி மோதி முரண்படும் போட்டி சூழல் ஒன்று நிலவுவதை அவதானிக்க முடிகிறது.</p>
<p style="text-align: justify;">அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.  அதில் மாற்றுக் கருத்து இல்லை.</p>
<p style="text-align: justify;">அதே நேரம் சமூகம் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் குறித்தான விடயங்களில் அதிக அக்கறை காட்டுதல் வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மலையகப் பெருந்தோட்டத்துறை நிலையில் அங்கே பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக அல்லது வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களாக உள்ள நிலையில், குடும்ப மட்டத்தில் பல குற்றச் சம்பவங்களும், குடும்ப வன்முறைகளும், உரிமை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இவை குறித்த அக்கறை ஆண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடத்தில் குறைவு.</p>
<p style="text-align: justify;">அதே நேரம் பெண் உறுப்பினர்கள் இந்த விடயங்களில் அதிக அக்கறை காட்டுமிடத்து அது ஆண் உறுப்பினர்கள் உடனான தேவையற்ற போட்டிகளைத் தவிர்ப்பதுடன், சமூக அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் அக்கறை காட்டுவதாகவும் அமையும்.</p>
<p style="text-align: justify;">மலையக அரசியல் தளத்தில் உரையாடல் அரங்கம் ஒன்று எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.</p>
<p style="text-align: justify;">அத்தகைய அரங்கத்தின் இலச்சினையை, அரசியலில் ஆண்- பெண் சமவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைத்துள்ளோம்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் பெண் தலைமைத்துவ முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எமது ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">#SrilankaNews</p>
<p style="text-align: justify;">
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/female-local-body-members-should-show-more-interest-in-community-development-former-member-of-parliament-tilakaraj/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலை மாணவர்கள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/school-students-in-insecure-condition/</link>
					<comments>https://tamilnaadi.com/news/school-students-in-insecure-condition/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Nov 2021 20:29:24 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[academic staff]]></category>
		<category><![CDATA[circular]]></category>
		<category><![CDATA[community]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[health]]></category>
		<category><![CDATA[Money]]></category>
		<category><![CDATA[protection]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Teachers' Union]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=23797</guid>

					<description><![CDATA[மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே, பாடசாலை சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றார்கள் எனவும், இதனால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் வேகமாக பாதிக்கப்பட கூடிய சாத்தியபாடுகள் அதிகமாக காணப்படுவதாக ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர். மேலும், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது.</p>
<p>ஆகவே, பாடசாலை சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றார்கள் எனவும், இதனால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் வேகமாக பாதிக்கப்பட கூடிய சாத்தியபாடுகள் அதிகமாக காணப்படுவதாக ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும், பாடசாலைகளில் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றபடாத நிலையே இதற்கான காரணமாகும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.</p>
<p>ஏனெனில், பாடசாலைகளில் கொரோனா தொற்று நீக்கிகளை வாங்குவதற்காக முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை அத்தோடு தமது சொந்த பணத்தில் கொரோனா பரிசோதனை செய்கின்ற நிலையில் ஆசிரிய சமூகம் காணப்படுகின்றது.</p>
<p>ஆகவே பாடசாலைகளில் கொரோனா பாதுகாப்பு குறித்த சுற்றிக்கை வெளியிடப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/school-students-in-insecure-condition/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆப்கானில் தொடரும் கொலைகள் &#8211; சர்வதேசம் பார்த்துக்கொண்டிருப்பதேன்?</title>
		<link>https://tamilnaadi.com/news/ongoing-killings-in-afghanistan-what-is-the-international-community-watching/</link>
					<comments>https://tamilnaadi.com/news/ongoing-killings-in-afghanistan-what-is-the-international-community-watching/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Nov 2021 06:19:19 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[community]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[killings . international]]></category>
		<category><![CDATA[Taliban]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=20080</guid>

					<description><![CDATA[ஆப்கானில்  மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செயப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதில் தொடபுடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்களின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாளிலிருந்து கொலைகள்,குண்டுவெடிப்புக்கள் என அங்கு மனித சாவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள். ஆனால் இக்கொலைகள் தொடர்பில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆப்கானில்  மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செயப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதில் தொடபுடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்களின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாளிலிருந்து கொலைகள்,குண்டுவெடிப்புக்கள் என அங்கு மனித சாவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.</p>
<p>ஆனால் இக்கொலைகள் தொடர்பில் சர்வதேசம் இன்னும் ஏன் பார்த்துக்கொண்டிப்பது என்பது புரியாத புதிராகவே உள்ளதென சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#world</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/ongoing-killings-in-afghanistan-what-is-the-international-community-watching/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>‘உலகத்தை எவராலும் காப்பாற்ற முடியாது -ஐநா</title>
		<link>https://tamilnaadi.com/news/no-one-can-save-the-world-un/</link>
					<comments>https://tamilnaadi.com/news/no-one-can-save-the-world-un/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Oct 2021 16:50:26 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[community]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[opportunities]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[United Nations]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=18165</guid>

					<description><![CDATA[கொரோனா பேரிடருக்குப் பிறகு உலகை காப்பாற்றும் வாய்ப்புகளை சர்வதேச நாடுகள் தவறி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 மாநாடு இந்த மாத இறுதியில் கிளாஸ்கோவில் ஆரம்பிக்க உள்ளது. காலநிலை மாற்றங்கள் தொடர்பாக உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது, இன் நிலையில் கார்பன் வெளியீடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியாகியுள்ளது. அவ்வறிக்கையில் காலநிலை மாற்றத்துக்கு எதிரான உறுதிமொழிகளை உலகநாடுகள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொரோனா பேரிடருக்குப் பிறகு உலகை காப்பாற்றும் வாய்ப்புகளை சர்வதேச நாடுகள் தவறி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.</p>
<p>காலநிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 மாநாடு இந்த மாத இறுதியில் கிளாஸ்கோவில் ஆரம்பிக்க உள்ளது.</p>
<p>காலநிலை மாற்றங்கள் தொடர்பாக உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது,</p>
<p>இன் நிலையில் கார்பன் வெளியீடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியாகியுள்ளது.</p>
<p>அவ்வறிக்கையில் காலநிலை மாற்றத்துக்கு எதிரான உறுதிமொழிகளை உலகநாடுகள் பின்பற்றாவிட்டால் புவிவெப்பநிலை உயர்வால் ஏற்படப்போகும் பேரிடர்களை தவிர்க்க முடியாது என ஐநா எச்சரித்துள்ளது.</p>
<p>உலகநாடுகள் வழங்கியுள்ள தற்போதைய காலநிலை மாற்றத்திற்கான உறுதிமொழிகளின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் வெறும் 7.5 சதவிகிதம் கார்பன் அளவை மட்டுமே குறைக்க முடியும் என தெரிவித்துள்ள ஐநா புவி வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்க 45 சதவிகித கார்பன் அளவை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p>
<p>தற்போது 100 நாடுகள் இந்த நூற்றாண்டின் மத்தியில் பூஜ்ய கார்பன் வெளியீடு குறித்த உறுதிமொழியை வழங்கியிருந்தாலும் அவர் காலநிலை மாற்றத்தால் உண்டாகும் பேரிடர்களைத் தடுக்க உதவப்போவதில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சூழலியல் திட்டத்தின் இயக்குநர் இங்கர் ஆண்டர்சன், “காலநிலை மாற்றம் என்பது எதிர்கால பிரச்னை அல்ல. அது தற்போது நடந்து வரும் பிரச்னை. புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்க எட்டு வருடங்கள் உள்ளன.</p>
<p>இந்த எட்டு ஆண்டுகளில் சரியான திட்டங்களை உருவாக்கி, கொள்கைகளை வகுத்து, அவற்றைச் செயல்படுத்தினால் காலநிலை மாற்ற பாதிப்பை குறைக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>“கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கங்களின்போது கார்பன் உமிழ்வு சுமார் 5.4% குறைந்தது. ஆனால் பொருளாதார மீட்புக்கான செலவில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே கார்பனை குறைக்கும் முயற்சிகளுக்கு உதவியது.</p>
<p>கொரோனவிற்கு பிறகு உலகத்தை மீட்பதற்கான வாய்ப்புகளை உலக நாடுகள் தவற விட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.</p>
<p>#WORLD</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/no-one-can-save-the-world-un/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
