<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Commemoration &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/commemoration/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 07 Aug 2023 02:54:27 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Commemoration &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/warning-for-women-who-use-face-cream-2/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/warning-for-women-who-use-face-cream-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Sat, 20 May 2023 07:57:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Commemoration]]></category>
		<category><![CDATA[italy]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=76337</guid>

					<description><![CDATA[இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்! 18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்டு வரும் தமிழ் மக்கள் நினைவாக இத்தாலியில் Palermo, Biella மாற்று Reggio Emilia நகரங்களில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. அவ் வகையில் Biella நகரில் சென்ற ஆண்டு Valdilana வில் Piazza XXV Aprile எனும் இடத்தில் நடுகையிட்ட மரம் மற்றும் நினைவு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!</h4>
<p>18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்டு வரும் தமிழ் மக்கள் நினைவாக <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF" target="_blank" rel="noopener">இத்தாலியில்</a> Palermo, Biella மாற்று Reggio Emilia நகரங்களில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.</p>
<p>அவ் வகையில் Biella நகரில் சென்ற ஆண்டு Valdilana வில் Piazza XXV Aprile எனும் இடத்தில் நடுகையிட்ட மரம் மற்றும் நினைவு தடத்திற்கு முன்னராக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. Valdilana நகரசபையின் முதல்வர் Mario Carli மற்றும் தமிழ்த் தேசிய கட்டமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் Valdilana வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன. வணக்கநிகழ்வுகளைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவிதைகள், தமிழின அழிப்பு தொடர்பாக இளையோர்களின் கருத்துகள், முதல்வர் மாரியோ கார்லியின் சிறப்புரை மற்றும் தமிழின அழிப்பு நாள் சிறப்புரை என்பன இடம்பெற்றிருந்தன. நிகழ்வின் இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, &#8220;நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்&#8221; என்ற பாடல் இசைக்கப்பட்டதுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.</p>
<p>#world</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/warning-for-women-who-use-face-cream-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நினைவேந்தல் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்! &#8211; கிளிநொச்சியில் மாவை</title>
		<link>https://tamilnaadi.com/news/judgment-received-for-the-commemoration-of-the-hero-mavai-senathirajah/</link>
					<comments>https://tamilnaadi.com/news/judgment-received-for-the-commemoration-of-the-hero-mavai-senathirajah/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Nov 2021 19:56:17 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Commemoration]]></category>
		<category><![CDATA[favorable]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[judgment]]></category>
		<category><![CDATA[Kilinochchi court]]></category>
		<category><![CDATA[Mavai Senathirajah]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=24542</guid>

					<description><![CDATA[திட்டமிட்டபடி மாவீரர் நினைவேந்தல் நடைபெறும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நகர்த்தல் பிரேரணையின் வழக்கு நடைபெற்றது. இவ் வழக்கைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மாவீரர் நினைவேந்தலை நீதிமன்றம் தடுத்தது போன்று தெரயவில்லை. வழக்கின் முடிவு அஞ்சலி செய்வதற்கான சாதகமாகன தீர்ப்பிணையே கொண்டுள்ளது – என்றார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் மாவீரர்களுக்கான அஞ்சலியை அவர்கள் தடுக்கவில்லை என கருதுகிறேன். ஆனால் ஏனைய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>திட்டமிட்டபடி மாவீரர் நினைவேந்தல் நடைபெறும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.</p>
<p>கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நகர்த்தல் பிரேரணையின் வழக்கு நடைபெற்றது.</p>
<p>இவ் வழக்கைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>மாவீரர் நினைவேந்தலை நீதிமன்றம் தடுத்தது போன்று தெரயவில்லை. வழக்கின் முடிவு அஞ்சலி செய்வதற்கான சாதகமாகன தீர்ப்பிணையே கொண்டுள்ளது – என்றார்.</p>
<p>தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,</p>
<p>நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் மாவீரர்களுக்கான அஞ்சலியை அவர்கள் தடுக்கவில்லை என கருதுகிறேன். ஆனால் ஏனைய நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராகவே காணப்படுகிறது.</p>
<p>இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நினைவேந்தலுக்கு தடை வழங்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே அஞ்சலி நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/judgment-received-for-the-commemoration-of-the-hero-mavai-senathirajah/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆயர்களால் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை தனியாக நினைவுகூருவதைத் தடுக்க வேண்டும்</title>
		<link>https://tamilnaadi.com/news/the-bishops-should-prevent-the-commemoration-of-those-who-died-during-heroes-week-alone/</link>
					<comments>https://tamilnaadi.com/news/the-bishops-should-prevent-the-commemoration-of-those-who-died-during-heroes-week-alone/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Nov 2021 08:58:31 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Commemoration]]></category>
		<category><![CDATA[FatherM.Sakthivel]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=21569</guid>

					<description><![CDATA[ஆயர்கள் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை தனியாக நினைவுகூருவதை தடுக்க வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை இதோ; இவ்வருடம், வடக்கு, கிழக்கு ஆயர்கள் வெளியிட்டுள்ள &#8220;மதம் கலந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்&#8221; எனும் ஊடக அழைப்பு, விடுதலை அரசியல் செயற்பாட்டு தேச சிந்தனைகளை தகர்த்து, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, அறிவுக்கு வித்திட்டு, அரசியல் இலாபம் தேடும் ஞானசார தேரரின் இன்னும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">ஆயர்கள் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை தனியாக நினைவுகூருவதை தடுக்க வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை இதோ;</p>
<p style="text-align: justify;">இவ்வருடம், வடக்கு, கிழக்கு ஆயர்கள் வெளியிட்டுள்ள &#8220;மதம் கலந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்&#8221; எனும் ஊடக அழைப்பு, விடுதலை அரசியல் செயற்பாட்டு தேச சிந்தனைகளை தகர்த்து, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, அறிவுக்கு வித்திட்டு, அரசியல் இலாபம் தேடும் ஞானசார தேரரின் இன்னும் ஒரு வடிவமாக அமைந்து விடக்கூடாது என்பதுவே தமது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">&#8220;தமிழர்களை அடக்கி அவர்களின் அரசியல் பூண்டோடு தகர்த்து விட்டோம்&#8221; என வருடந்தோறும் வெற்றி விழா எடுப்பவர்கள்; முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத சிந்தனையை கொம்பு சீவி அவர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிட்டனர்.</p>
<p style="text-align: justify;">இதில் ஞானசார தேரரின் பங்கு மிக அதிகமானது எனவும் அதில் அரசியல் குளிர்காய்ந்ததோ வேறு சிலர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">&#8220;இவர்களின் அடிவருடிகளுக்கு, வடக்கு, கிழக்கில் உள்ள இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவித்து உள்ளக வன்முறையை தூண்டிவிடும் நோக்கமும் உள்ளது.</p>
<p style="text-align: justify;">தேச விடுதலை அரசியல் செயற்பாட்டு பயணத்தை சிதைக்க வேண்டும் என்பதே, இதன் உள்நோக்கமாகும்.</p>
<p style="text-align: justify;">இதற்காக முன்னெடுத்த முயற்சிகளில் தோல்வி கண்ட நிலையில் தமிழர்களின் உயிரோடு கலந்த மாவீரர் வாரத்தில் கைவைத்து விட்டனரோ என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.</p>
<p style="text-align: justify;">&#8220;அண்மையில், ஞானசார தேரர் மடு பிரதேசத்தில் மக்களின் காணிப் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி சென்றபோது அவர் வரும் வழியில் மலர் தூவி வரவேற்றனர். இது, மதங்களுக்கிடையிலான முரண்பாட்டை மலர் தூவி வரவேற்பதற்கு ஒப்பாகும்.</p>
<p style="text-align: justify;">அதனைத் தொடர்ந்தே, ஆயர்கள், மதம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம் என்று தனித்து முடிவெடுத்து, அதனை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர். இது ஞானசார தேரரின் இன்னுமொரு முகமாகவே தோற்றமளிக்கின்றது.</p>
<p style="text-align: justify;">&#8221; எனவே, வடக்கு, கிழக்கு ஆயர்கள், வெளி சக்திகளின் அரசியல் தேவைகளுக்கு இடமளிக்காது, ஊடக அறிக்கை அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனை, அரசியல் ரீதியான உளவியல் தாக்கம், மாவீரர்களுடைய குடும்பத்தினரின் கவலை என்பவற்றை கருத்திற்கொண்டு, மக்களின் குரலுக்கு செவிமடுத்து மக்களோடு பயணிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/the-bishops-should-prevent-the-commemoration-of-those-who-died-during-heroes-week-alone/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு</title>
		<link>https://tamilnaadi.com/news/commemoration-event-of-slain-uncle-nadaraja-raviraj/</link>
					<comments>https://tamilnaadi.com/news/commemoration-event-of-slain-uncle-nadaraja-raviraj/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Nov 2021 08:18:50 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Commemoration]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Massacre]]></category>
		<category><![CDATA[NadarajaRaviraj]]></category>
		<category><![CDATA[Remembrance]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=20648</guid>

					<description><![CDATA[சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.</p>
<p style="text-align: justify;">சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone  wp-image-20649" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/IMG-20211110-WA0014-300x225.jpg" alt="IMG 20211110 WA0014" width="837" height="628" title="படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு 2" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/IMG-20211110-WA0014-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/IMG-20211110-WA0014-768x576.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/IMG-20211110-WA0014.jpg 854w" sizes="(max-width: 837px) 100vw, 837px" /></p>
<p style="text-align: justify;">இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.</p>
<p style="text-align: justify;">இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/commemoration-event-of-slain-uncle-nadaraja-raviraj/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21ஆவது ஆண்டு நினைவேந்தல்</title>
		<link>https://tamilnaadi.com/news/commemoration-of-the-21st-anniversary-of-the-assassination-of-mayilvaganam-nimalarajan/</link>
					<comments>https://tamilnaadi.com/news/commemoration-of-the-21st-anniversary-of-the-assassination-of-mayilvaganam-nimalarajan/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Oct 2021 08:35:57 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Commemoration]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Killded]]></category>
		<category><![CDATA[Massacre]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=17140</guid>

					<description><![CDATA[படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்திற்கு யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோசும் இணைந்து மலர் மாலை அணிவித்தார். அதனையடுத்து யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.</p>
<p style="text-align: justify;">தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார்.</p>
<p style="text-align: justify;">யாழ்.ஊடக அமையத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்திற்கு யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோசும் இணைந்து மலர் மாலை அணிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அதனையடுத்து யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் ஊடகவியலாளர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.</p>
<p style="text-align: justify;">ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.</p>
<p style="text-align: justify;">2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.</p>
<p>அன்று மாலையில், நாகர்கோவிலில் விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கியிருந்தார்.</p>
<p>பின்னர் நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.</p>
<p>அதையடுத்து, அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/commemoration-of-the-21st-anniversary-of-the-assassination-of-mayilvaganam-nimalarajan/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
