<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>children &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/children/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 17 Oct 2025 17:06:15 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>children &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் பணம் பறித்த கும்பல் கைது!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/gang-arrested-for-extorting-money-using-photos-of-sick-children/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Oct 2025 17:06:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[financial aid]]></category>
		<category><![CDATA[Money]]></category>
		<category><![CDATA[remand custody]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202512</guid>

					<description><![CDATA[நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபர்கள் மூவரும் ஒபநாயக்க மற்றும் இறக்குவானை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர். புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் புகைப்படங்களை ஃபேஸ்புக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபர்கள் மூவரும் ஒபநாயக்க மற்றும் இறக்குவானை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.</p>
<p>புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் புகைப்படங்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அவர்களுக்குப் பண உதவி வழங்குமாறு கோரி, பொதுமக்களை ஏமாற்றி, வங்கி கணக்கிற்குப் பணம் பெற்று மோசடி செய்து வந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<p>கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவின் அண்டை நாட்டின்மீது திடீர்த்தாக்குதல் நடத்திய ஈரான்: இரண்டு குழந்தைகள் பலி</title>
		<link>https://tamilnaadi.com/news/world/iran-launched-a-surprise-attack-on-indias-neighbor-two-children-were-killed/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jan 2024 12:02:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[children killed]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India's neighbor]]></category>
		<category><![CDATA[iran]]></category>
		<category><![CDATA[killed]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=114313</guid>

					<description><![CDATA[ஈரான், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலியானதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், ஈரான் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி தாக்கியுள்ளதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஈரான் தரப்போ, பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் போராளிக்குழுவான Jaish al-Dhulm என்னும் அமைப்பின் தளங்களை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரான், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.</p>
<p>நேற்று செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.</p>
<p>இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலியானதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், ஈரான் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி தாக்கியுள்ளதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.</p>
<p>ஈரான் தரப்போ, பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் போராளிக்குழுவான Jaish al-Dhulm என்னும் அமைப்பின் தளங்களை அழிப்பதற்காகவே தாங்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக விளக்கமளித்துள்ளது.</p>
<p>இந்த தாக்குதலில் அப்பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் பாதுகாப்பு அலுவலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>ஈரான் அவ்வப்போது தனது எல்லையோரமாக இருக்கும் போராளிகளுடன் சண்டையில் ஈடுபடுவது உண்டு என்றாலும், அது பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் சிறுவர் இல்லத்திலிருந்த சிறுவர்கள் மாயம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/children-from-the-jaffa-childrens-home-are-magical/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/children-from-the-jaffa-childrens-home-are-magical/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Apr 2023 07:11:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[missing]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=72578</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திற்கு சேதம் விளைவித்தனர் என நிர்வாகத்தினரால் பொலிஸாரிடம் பெயர் குறிப்பிட்ட இரண்டு சிறுவர்களை அன்றைய தினம் முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை இன்றைய தினம் சனிக்கிழமை வரையில் காணாமல் இரு சிறுவர்கள் தொடர்பிலும் எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவர் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி குழப்பநிலை ஏற்பட்டது. சிறுவர் இல்ல விடுதி நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், நிர்வாகத்துக்கு எதிராக வாக்குமூலம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திற்கு சேதம் விளைவித்தனர் என நிர்வாகத்தினரால் பொலிஸாரிடம் பெயர் குறிப்பிட்ட இரண்டு சிறுவர்களை அன்றைய தினம் முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>அதேவேளை இன்றைய தினம் சனிக்கிழமை வரையில் காணாமல் இரு சிறுவர்கள் தொடர்பிலும் எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>குறித்த சிறுவர் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி குழப்பநிலை ஏற்பட்டது. சிறுவர் இல்ல விடுதி நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், நிர்வாகத்துக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய விடுதியின் முகாமையாளர் சிறுவர் நீதிமன்றால் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார்.</p>
<p>இதையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், இல்ல நிர்வாக கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தனர்.</p>
<p>இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் என நான்கு பேரினது பெயர்கள் குறிப்பிட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சைவவித்தியா விருத்திச்சங்கத்தின் தலைவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p>
<p>அவ்வாறு பெயர் குறிப்பிட்ட நான்கு பேரில் இருவரே அன்றைய தினம் முதல் காணாமல் போயுள்ளனர்.</p>
<p>சிறுவர் இல்லத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 12 சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தால் சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/children-from-the-jaffa-childrens-home-are-magical/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சிறுவர்களிடையே அதிகரிக்கும் தொழுநோய்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/leprosy-on-the-rise-among-children/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/leprosy-on-the-rise-among-children/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Jan 2023 06:40:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=68846</guid>

					<description><![CDATA[இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார். இன்று (29) அனுசரிக்கப்படும் உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார். தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார்.</p>
<p>இன்று (29) அனுசரிக்கப்படும் உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை என வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/leprosy-on-the-rise-among-children/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் காய்ச்சல்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/fever-spreading-rapidly-among-children/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/fever-spreading-rapidly-among-children/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Nov 2022 09:43:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[fever]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=67025</guid>

					<description><![CDATA[சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக ஒரு வகையான காய்ச்சல் நோய் நிலைமை காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி தீபால் பெரேரா, &#8220;இன்றைய நாட்களில், நம் குழந்தைகளுக்கு பல விதமான காய்ச்சல் நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ,இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் காணப்படும் நோயாளிகள் மற்றும் டெங்கு இன்னும் நமது சுற்றுச்சூழலில் உள்ளது. குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா நோய்க்கான அறிகுறிகளாக, [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக ஒரு வகையான காய்ச்சல் நோய் நிலைமை காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி தீபால் பெரேரா,</p>
<p>&#8220;இன்றைய நாட்களில், நம் குழந்தைகளுக்கு பல விதமான காய்ச்சல் நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ,இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் காணப்படும் நோயாளிகள் மற்றும் டெங்கு இன்னும் நமது சுற்றுச்சூழலில் உள்ளது. குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா நோய்க்கான அறிகுறிகளாக, காய்ச்சலுடன் இருமல், சளி சிலருக்கு வாந்தியும் ஏற்படுகிறது.</p>
<p>எனவே அந்த அறிகுறிகள் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற வைரஸ்களால் ஏற்படலாம், எனவே அந்த அறிகுறிகளைக் கொண்டவர்கள் முடிந்தால் வீட்டிலேயே இருக்குமாறு குறிப்பாகக் கூறப்படுகிறார்கள். அந்த குழந்தைகளை ஓய்வு, திரவ உணவு, ஒரு டோஸ் பாராசிட்டமால் கொடுத்து வீட்டில் வைத்திருந்தால் நல்லது.</p>
<p>அவசர நேரத்தில் வெளியே சென்றால் முகக்கவசம் அணியுங்கள். வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் அணிவது நல்லது. ஏனெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்படலாம். குறிப்பாக ஆரம்ப பாடசாலை, டே கேர் சென்டர்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை வீட்டிலேயே வைத்திருப்பது நல்லது.</p>
<p>இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அது டெங்குவாக இருக்கலாம். உங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், முழு இரத்த பரிசோதனையை செய்யுங்கள். டெங்கு இருந்தால், ரத்தத் தட்டுக்கள் குறைவாக இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள் &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/fever-spreading-rapidly-among-children/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் சுமையை எதிர்கொள்ளும் சிறுவர்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/children-bear-the-brunt-of-sri-lankas-economic-crisis/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/children-bear-the-brunt-of-sri-lankas-economic-crisis/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Sep 2022 04:45:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[economic crisis]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jorge Laria-Adje]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[unicef]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=60693</guid>

					<description><![CDATA[இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிள்ளைகளுக்குப் பிரதான உணவைக் கூட வழங்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கைக்கு அமைய, கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அடிப்படையில் தெற்காசிய பிராந்தியத்தில் மிக உயர்ந்த இடத்தில் இலங்கை ஏற்கனவே உள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர் நிதியத்தின் (UNICEF) தெற்காசியப் பணிப்பாளர் ஜோர்ஜ் லரியா-அட்ஜே அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொருளாதார அதிர்ச்சிகள் இலங்கையை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிள்ளைகளுக்குப் பிரதான உணவைக் கூட வழங்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கைக்கு அமைய, கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அடிப்படையில் தெற்காசிய பிராந்தியத்தில் மிக உயர்ந்த இடத்தில் இலங்கை ஏற்கனவே உள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர் நிதியத்தின் (UNICEF) தெற்காசியப் பணிப்பாளர் ஜோர்ஜ் லரியா-அட்ஜே அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொருளாதார அதிர்ச்சிகள் இலங்கையை தொடர்ந்து உலுக்கி வருவதால், அது மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தரப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பங்கள் வாழ்வதற்கு மிகவும் சிரமமாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் உள்ள சிறுவர் குழுவொன்று தமக்கு அடுத்தவேளை உணவை எங்கிருந்து பெறுவது என்பது தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>“முக்கிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாததால் குடும்பங்கள் அடிப்படை உணவைத் தவிர்த்து வருகின்றன. தெற்காசியாவில் ஏற்கனவே இரண்டாவது மிக அதிகமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாட்டில் &#8211; சிறுவர்கள் பசியுடன் நித்திரைக்குச் செல்கிறார்கள், அவர்களுக்கு அடுத்த உணவு எங்கிருந்து வரும் என தெரியவில்லை.&#8221;</p>
<p>தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டு சிறுவர்கள் எதிர்கொள்ளும் வேறு சில பிரச்சனைகள் குறித்தும் அவர் தனது அறிக்கையில் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>
<p>&#8220;அதிகரிக்கும் பொருளாதார அழுத்தங்கள் காரணமாக சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஏற்கனவே அதிக அறிக்கைகள் வெளிவருகின்றன. இலங்கையில் ஏற்கனவே 10,000ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் நிறுவன பராமரிப்பில் உள்ளனர், முக்கியமாக வறுமையின் விளைவை அது. குடும்பத்தின் பிணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு குழந்தை வளர இத்தகைய நிறுவனங்கள் சிறந்த இடங்கள் அல்ல. ஆனால் தற்போதைய நெருக்கடி அதிகமான குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை இந்த நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லத் தூண்டுகிறது, ஏனெனில் அவர்களால் உணவு உட்பட அவர்களின் தேவைகளை வழங்க முடியாது.”</p>
<p>நிலைமையை மேலும் விளக்கிய ஜோர்ஜ் லரியா-அட்ஜே, பொருளாதார நெருக்கடி இலங்கையில் சிறுவர்களின் கல்வியையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>“இலங்கை சிறுவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே ஏதாவது ஒருவகையில் அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். 4.8 மில்லியன் சிறுவர்களின் கல்வி, ஏற்கனவே இரண்டு வருட கற்றல் தடைப்பட்டதால் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, பாடசாலை வருகை தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதால், அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி சிறுவர்களின் கல்வியை பல வழிகளில் சீர்குலைத்து வருகிறது &#8211; நெருக்கடிக்கு முன்பு அவர்கள் வைத்திருந்த சூடான மற்றும் சத்தான உணவு சிறுவர்களுக்கு இனி கிடைக்காது.<br />
அவர்களிடம் அடிப்படை எழுதுபொருட்கள் இல்லை, அவர்களின் ஆசிரியர்கள் போக்குவரத்து பிரச்சினைகளில் போராடுகிறார்கள்.”</p>
<p>நாட்டிலுள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவர்களில் 11 இலட்சம் பேருக்கு பாடசாலை மதிய உணவுத் திட்டம் இருக்கின்ற போதிலும், ஒரு மாணவனுக்கு ஒதுக்கப்படும் தொகை ஒரு முட்டையின் விலையைவிட குறைவாக காணப்படுவதாக இலங்கையின் பிரதான கல்வி நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>“43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இருக்கிறார்கள், அதில் 11 இலட்சம் பேருக்கு பாடசாலை மதிய உணவுத் திட்டம் இருக்கிறது, ஆனால் அதற்குக் கொடுக்கப்பட்ட தொகை 30 ரூபாய் என்பது முற்றிலும் குழப்பமாக காணப்படுகின்றது.</p>
<p>60 ரூபாயாக உயர்த்தப்பட்டாலும் முட்டையின் விலை 60 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. தற்போதைய பொருளாதார பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அந்த விலையில் சிறுவர்களுக்கு சத்தான உணவை வழங்க முடியாத சூழ்நிலையில், சத்துணவு வழங்குனர்களுக்கும், பாடசாலைகளுக்கும் இடையே உடன்பாடு இல்லாமையால், மதிய உணவு திட்டம் கடும் நெருக்கடியில் உள்ளது,&#8221; என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;நான் இலங்கையில் பார்த்தது தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.&#8221; என யுனிசெப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லரியா-அட்ஜே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>“தெற்காசியா முழுவதும் பரவி வரும் கடுமையான பொருளாதார பாதிப்பு மற்றும் பணவீக்கம் சிறுவர்களின் உயிருக்கு மேலும் அச்சுறுத்தலாக உள்ளது.</p>
<p>உலகளவில் சிறுவர்களின் ஆரோக்கியம், கல்வி மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் கடுமையான வறுமை, ஆழ்ந்த கஷ்டங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றில் ஐந்தில் ஒருவருக்கு இந்த தெற்காசியப் பகுதி ஏற்கனவே தாயகமாக உள்ளது.</p>
<p>சிறுவர்களால் உருவாக்கப்படாத ஒரு நெருக்கடியின் விளைவுகளை அனுபவிக்க விட முடியாது, மேலும் அவர்கள் தங்கள் நாளை பாதுகாக்க இன்றே செயல்பட வேண்டுமென அவரது அறிக்கையின் முடிவில், ஜோர்ஜ் லாரியா &#8211; அட்ஜே வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/children-bear-the-brunt-of-sri-lankas-economic-crisis/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சிறுவர்களிடையே திடீர் காய்ச்சல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sudden-fever-among-children/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sudden-fever-among-children/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Jul 2022 06:32:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[fever]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=58069</guid>

					<description><![CDATA[நாட்டில், சிறுவர்களிடையே காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். கொவிட்-19 டெங்கு அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும். இந்த நிலைமை தொடர்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில், சிறுவர்களிடையே காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.</p>
<p>கொவிட்-19 டெங்கு அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும். இந்த நிலைமை தொடர்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sudden-fever-among-children/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி!</title>
		<link>https://tamilnaadi.com/news/covax-vaccine-for-children/</link>
					<comments>https://tamilnaadi.com/news/covax-vaccine-for-children/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Apr 2022 12:42:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covaxin]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Vaccine]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=47761</guid>

					<description><![CDATA[இந்தியாவில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 6 தொடக்கம் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி அவசர கால பயன்பாட்டுக்காகவே வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனாத் தொற்று பரவல் சடுதியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>6 தொடக்கம் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அனுமதி அவசர கால பயன்பாட்டுக்காகவே வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தியாவில், கொரோனாத் தொற்று பரவல் சடுதியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.</p>
<p>பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த நிபுணர் குழு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>#India</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/covax-vaccine-for-children/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குழந்தைகள் வைத்தியசாலையில் குண்டுவீச்சு &#8211; தாண்டவமாடிய ரஸ்யா!!</title>
		<link>https://tamilnaadi.com/news/childrens-hospital-bombing-thandavamadiya-russia/</link>
					<comments>https://tamilnaadi.com/news/childrens-hospital-bombing-thandavamadiya-russia/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Mar 2022 10:33:14 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[forces]]></category>
		<category><![CDATA[hospital]]></category>
		<category><![CDATA[Mariupol]]></category>
		<category><![CDATA[Russian]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Ukrainian]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=41428</guid>

					<description><![CDATA[உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 17 பேர் காயமடைந்ததுடன் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என ஐ.நா. சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குட்டரெஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது. தமக்கு தொடர்பில்லாத போருக்கு பொதுமக்கள் அதிக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.</p>
<p>இதில் 17 பேர் காயமடைந்ததுடன் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>இந்நிலையில், உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என ஐ.நா. சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதுதொடர்பாக குட்டரெஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது.</p>
<p>தமக்கு தொடர்பில்லாத போருக்கு பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வருகின்றனர். இந்த அர்த்தமற்ற வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.</p>
<p>#WorldNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/childrens-hospital-bombing-thandavamadiya-russia/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவறான முடிவெடுத்த தந்தை!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/father-who-made-the-wrong-decision-not-to-feed-his-children/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/father-who-made-the-wrong-decision-not-to-feed-his-children/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Mar 2022 12:37:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[fatal]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[food]]></category>
		<category><![CDATA[incident]]></category>
		<category><![CDATA[Kalutara]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<category><![CDATA[provide]]></category>
		<category><![CDATA[reported]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[unable]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=40059</guid>

					<description><![CDATA[தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையையிட்டு தந்தை ஒருவர் உயிர்மாய்த்த சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது. தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். 3 நாட்களாக வீட்டில் உணவு ஒன்றுமே இல்லை. பிள்ளைகளுக்கு உணவு வழங்க  பணம் தேடி வருவதாக கூறி சென்றார். அவர் வீட்டிற்கு வராமையினால் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று உணவு வழங்கினேன் என தற்கொலை செய்துக் கொண்ட நபரின் மனைவி தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையையிட்டு தந்தை ஒருவர் உயிர்மாய்த்த சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது.</p>
<p>தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.</p>
<p>3 நாட்களாக வீட்டில் உணவு ஒன்றுமே இல்லை. பிள்ளைகளுக்கு உணவு வழங்க  பணம் தேடி வருவதாக கூறி சென்றார். அவர் வீட்டிற்கு வராமையினால் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று உணவு வழங்கினேன் என தற்கொலை செய்துக் கொண்ட நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/father-who-made-the-wrong-decision-not-to-feed-his-children/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
