<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Chess &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/chess/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 12 May 2025 04:57:19 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Chess &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை : தலிபான் விடுத்த உத்தரவு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/taliban-bans-chess-in-afghanistan/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 12 May 2025 04:57:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[Chess]]></category>
		<category><![CDATA[sports]]></category>
		<category><![CDATA[Taliban]]></category>
		<category><![CDATA[Taliban Bans Chess In Afghanistan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196987</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து அரசாங்க விளையாட்டுத் துறை செய்தித் தொடர்பாள அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. இது நாட்டின் &#8220;நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்&#8221; படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன. இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதுகுறித்து அரசாங்க விளையாட்டுத் துறை செய்தித் தொடர்பாள அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.</p>
<p>இது நாட்டின் &#8220;நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்&#8221; படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன.</p>
<p>இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.</p>
<p>எனினும், இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.</p>
<p>முன்னதாக பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கத் தலிபான் அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சொந்த மண்ணில் கார்ல்சனை வீழ்திய பிரக்ஞானந்தா</title>
		<link>https://tamilnaadi.com/news/praggnanandhaa-who-fell-carlson/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 31 May 2024 09:23:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chess]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Norway]]></category>
		<category><![CDATA[Praggnanandhaa Who Fell Carlson]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=142822</guid>

					<description><![CDATA[சொந்த மண்ணில் கார்ல்சனை வீழ்திய பிரக்ஞானந்தா நோர்வே நாட்டில் இடம்பெற்றுவரும் செஸ் சம்பியன்ஷிப் தொடரின் பக்கம் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது. சர்வதேச செஸ் தரப்படுத்தலின் முதன்மை வீரரான கார்ல்சனை இந்திய இளம் வீரரான பிரக்ஞானந்தா வீழ்த்தியமையே இதற்கு காரணமாகும். இதற்கு முன்பாக கார்ல்சனை சில முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தாலும், ’கிளசிக்கல் கேம்’ என்று சொல்லப்படும் செஸ் விளையாட்டின் சிறப்பு பகுதியில் முதல் முறையாக கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். நோர்வே நாட்டில் நேற்று [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சொந்த மண்ணில் கார்ல்சனை வீழ்திய பிரக்ஞானந்தா</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/world/2023/09/23/sri-lankan-father-daughter-win-norwegian-elections/">நோர்வே</a> நாட்டில் இடம்பெற்றுவரும் செஸ் சம்பியன்ஷிப் தொடரின் பக்கம் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது.</p>
<p>சர்வதேச செஸ் தரப்படுத்தலின் முதன்மை வீரரான கார்ல்சனை இந்திய இளம் வீரரான பிரக்ஞானந்தா வீழ்த்தியமையே இதற்கு காரணமாகும்.</p>
<p>இதற்கு முன்பாக கார்ல்சனை சில முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தாலும், ’கிளசிக்கல் கேம்’ என்று சொல்லப்படும் செஸ் விளையாட்டின் சிறப்பு பகுதியில் முதல் முறையாக கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.</p>
<p>நோர்வே நாட்டில் நேற்று இடம்பெற்ற செஸ் கிளசிக்கல் கேம் தொடரானது பெரும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்திருந்தது.</p>
<p>செஸ் விளையாட்டில் கிளசிக்கல் கேம் என்பது மற்ற விளையாட்டு முறைகளை விட அதிக நேரம் எடுத்துக் விளையாடும் முறையாகும்.</p>
<p>இதற்கு முன்பாக ரேபிட், பிளிட்ஸ் போன்ற செஸ் ஆட்ட முறையில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.</p>
<p>இந்நிலையில் இடம்பெற்ற ஆட்டத்தில், வெள்ளை காய்களுடன் கார்ல்சனை எதிர்த்த அவர் போட்டியை தன்வசப்படுத்தியிருந்தார்.</p>
<p>இந்த தோல்வியானது கார்ல்சனை 5ஆவது இடத்திற்கு பின்தள்ளியுள்ளது.</p>
<p>உலக தமிழ் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் செஸ் விளையாட்டு என கூறும்போது கடந்த காலங்களில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் பெயர் நினைவுக்கு வருவதுண்டு.</p>
<p>ஆனால் தற்போது இளம் வீரரான பிரக் என்றழைக்கப்படும் பிரக்ஞானந்தா சர்வதேசத்தின் பேசுபொருளாகியுள்ளார்.</p>
<p>18 வயதான பிரக்ஞானந்தா, சமீபத்தில் அசர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலக கோப்பை போட்டியில் பங்கேற்றதன் மூலம், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் உலகின் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.</p>
<p>2002ம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் உலக கோப்பையை வென்ற பிறகு, இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கு பெற்ற இந்தியர் மற்றும் தமிழ் வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியிருந்தார்.</p>
<p>பிரக்ஞானந்தா தனது பத்தாவது வயதில் செஸ் வரலாற்றில், இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீரரானார். இரண்டு ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டில், உலகின் அப்போதைய இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.</p>
<p>கனடாவில் இந்தாண்டு நடைபெற்ற கேண்டிடேட்ஸ் டோர்னமண்ட் போட்டியில் பங்கேற்ற மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.</p>
<p>சென்னை பாடி பகுதியில் பிறந்த பிரக்ஞானந்தா எளிமையான குடும்ப பின்னணி கொண்டவராவார்.</p>
<p>ஒரு ஊடக சந்திப்பில் கடன் வாங்கியே போட்டிகளுக்கு தன் மகனை அனுப்பவேண்டி இருந்தமை தொடர்பில் அவரது தாய் வெளிப்படையாக பேசியிருந்தார்.</p>
<p>தனது சகோதரியான வைஷாலி செஸ் விளையாடுவதினை பார்த்து ஆர்வம் கொண்ட அவர் செஸ் விளையாட ஆரம்பித்துள்ளார்.</p>
<p>உலக கோப்பை போட்டியில் அவர் கார்ல்சனிடம் தோல்வியை தழுவினாலும், அவரது அசாத்திய ஆட்டத்தால் பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் செஸ் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளார்.</p>
<p>விஸ்வநாதன் ஆனந்த் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற போது, செஸ் குறித்த பேச்சும் முக்கியத்துவமும் எப்படி அதிகரித்ததோ அதேபோன்ற நிலை தற்போது உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் இளைஞன்!</title>
		<link>https://tamilnaadi.com/news/sports/chess-world-cup-2023-final-live-updates/</link>
					<comments>https://tamilnaadi.com/news/sports/chess-world-cup-2023-final-live-updates/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Aug 2023 05:40:47 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chess]]></category>
		<category><![CDATA[Chess World Cup 2023 Final Live Updates]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Rameshbabu Praggnanandhaa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=90249</guid>

					<description><![CDATA[உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் இளைஞன்! தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இந்தியாவுக்காக செஸ் உலகக்கோப்பையில் களமிறங்கியுள்ளார். உலக செஸ் இரசிகர்கள் மத்தியில் மேக்னஸ் கார்ல்சன் என்றாலே ஒருவித புத்துணர்ச்சி பெருகிவிடும். பிரக்ஞானந்தா, அத்தகைய முதன்மை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு முதல் இரண்டு சுற்றுகளையும் டிராவில் முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது டை-பிரேக்கர் சுற்றில் வெற்றி வாகை சூடி கோப்பையைக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் இளைஞன்!</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/world/2023/07/21/who-is-india-s-first-richest-mla-top-20-mla/">தமிழ்நாட்டை</a> சேர்ந்த பிரக்ஞானந்தா, செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இந்தியாவுக்காக செஸ் உலகக்கோப்பையில் களமிறங்கியுள்ளார்.</p>
<p>உலக செஸ் இரசிகர்கள் மத்தியில் மேக்னஸ் கார்ல்சன் என்றாலே ஒருவித புத்துணர்ச்சி பெருகிவிடும். பிரக்ஞானந்தா, அத்தகைய முதன்மை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு முதல் இரண்டு சுற்றுகளையும் டிராவில் முடித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் தற்போது டை-பிரேக்கர் சுற்றில் வெற்றி வாகை சூடி கோப்பையைக் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது. இது இந்திய செஸ் இரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த இறுதி சுற்றின் மூன்றாவது போட்டி இன்று(24.08.2023) அஜர்பைஜானில் நடைபெறவுள்ளது.</p>
<p>பதினெட்டு வயதான பிரக்ஞானந்தா, திங்கட்கிழமையன்று டை-பிரேக்கரில் உலகின் 3ஆம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மேக்னஸ் கார்ல்சன், நிஜாத் அபாசோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.</p>
<p>சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் 32 வயதான மேக்னஸ் கார்ல்சன் விளையாடுவது இதுவே முதல்முறை.</p>
<p>இந்த மாத தொடக்கத்தில்தான் 18 வயதை எட்டிய பிரக்ஞானந்தா, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் மிக இளம் வயதினர் ஆவார்.</p>
<p>உலக சாம்பியன் பட்டத்திற்கான சவாலை தீர்மானிக்க அடுத்த ஆண்டு நடைபெறும் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற உலகின் மூன்றாவது இளைய நபர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.</p>
<p>கார்ல்சன் மற்றும் அமெரிக்க செஸ் மேதை பாபி ஃபிஷ்ஷர் இருவரும் 16 வயதாக இருந்தபோது இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றார்கள்.</p>
<p>பிராக் என்று செஸ் உலகில் பிரபலமாக அறியப்படும் பிரக்ஞானந்தா, இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய செஸ் வீரர்களில் ஒருவர்.</p>
<p>இந்த விளையாட்டின் வரலாற்றிலேயே இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் ஆனபோது அவருக்கு 10 வயதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2018ஆம் ஆண்டில் அவர் உலகின் இரண்டாவது இளைய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.</p>
<p>பட மூலாதாரம்,FIDE இந்த விளையாட்டின் வரலாற்றிலேயே இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் ஆனபோது அவருக்கு 10 வயதுதான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டில் அவர் உலகின் இரண்டாவது இளைய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.</p>
<p>கடந்த ஆண்டு, ஆன்லைன் ரேபிட் போட்டியான ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் கார்ல்சனை அவர் தோற்கடித்தார்.</p>
<p>அதுமட்டுமின்றி, நார்வே கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவையே சேரும். செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு செஸ் உலகக்கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியரும் இவரே.</p>
<p>பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியபோது, அவருக்கு விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் முன்னாள் உலக சாம்பியன்களான சூசன் போல்கர், கேரி காஸ்பரோவ் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.</p>
<p>திங்கட்கிழமையன்று தனது வெற்றி குறித்து பேசிய பிரக்ஞானந்தா, “கார்ல்சனுக்கு எதிராக விளையாடுவேன் என எதிர்பார்க்கவில்லை. நான் எனது சிறந்த விளையாட்டைக் கொடுக்க முயல்வேன், பிறகு போட்டி எவ்வாறு செல்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பேன்,” என்று கூறினார்.</p>
<p>செஸ் உலகை கலக்கும் பிரக்ஞானந்தா யார்?<br />
சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, நெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம். எளிமையான முகத்தோற்றத்துடன் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச் சிறிய புன்னகையை வெளிப்படுத்துகிறார்.</p>
<p>பிரக்ஞானந்தாவின் சாதனையை இரண்டு வழிகளில் பார்க்கலாம், ஒருபுறம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வேகமாக முத்திரை பதிக்கிறான்.</p>
<p>இவரது தந்தை ரமேஷ்பாபு போலியோவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருபவர்.</p>
<p>தற்போது சென்னை கொரட்டூர் கிளையின் மேலாளராக உள்ளார். இது ஒரு அம்சம்.</p>
<p>பிரக்ஞானந்தாவின் வாழ்க்கையின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அவரது நான்கு வயது மூத்த சகோதரி வைஷாலி ரமேஷ் பாபுவும் செஸ் உலகில் நன்கு அறியப்பட்ட வீராங்கனை மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர் என்பதுதான்.</p>
<p>அதாவது பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டில் முன்னேறுவதற்கான வசதி, வாய்ப்புகளை அவரது சகோதரி வீட்டிலேயே செய்து கொடுத்திருக்கிறார். இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இவர்களின் தந்தை ரமேஷ் பாபுவுக்கும் செஸ் விளையாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.</p>
<p>அப்படியிருக்க தனது மகன் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் என்ற கதையை பிரக்ஞானந்தா 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றபோது அவரது தந்தை பகிர்ந்துள்ளார்.</p>
<p>“எனது மகள் வைஷாலியை செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன். அவள் நன்றாக விளையாடினாள். ஆனால், செஸ் போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டும்.</p>
<p>குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு என் மகனை செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்று திட்டமிட்டேன்.” என கூறியுள்ளார்.</p>
<p>பிரக்ஞானந்தா, தனக்கு 4 வயது இருக்கும் போதே அக்காவுடன் செஸ் விளையாட்டில் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளார்.</p>
<p>தன் வயது சிறுவர்களுடன் நேரத்தைச் செலவிடாமல் செஸ் போர்டில் இருக்கும் அந்த 64 கட்டங்களின் மீது அவர் கொண்டிருந்த காதல் ரமேஷ் பாபுவின் மனதை மாற்றியது.</p>
<p>தன்னைவிட நான்கு வயது மூத்தவரான அவரது அக்காவிடம் இருந்துதான் செஸ் விளையாட்டின் அடிப்படையை பிரக்ஞானந்தா கற்றுக்கொண்டார்.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88#:~:text=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20(Chennai)%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C,%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81." target="_blank" rel="noopener">சென்னை</a> புறநகரில் நான்கு அறை கொண்ட ரமேஷ் பாபுவின் வீட்டில் அதிகமுள்ள பொருட்கள் கோப்பைகளே.</p>
<p>பெரும்பாலானவை சர்வதேச போட்டிகளில் அக்காவும் தம்பியும் வென்ற கோப்பைகள்.</p>
<p>பிரக்ஞானந்தா, எட்டு வயதுக்கு உட்பட்டோர், பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலக இளம் செஸ் சாம்பியன்ஷின் போட்டியில் 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.</p>
<p>ஐந்து வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியவர், 2016ஆம் ஆண்டு உலகின் இளம் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற புகழை அடைந்தார். இன்னும் தொடர்ந்து புகழின் உச்சியை நோக்கி வளர்ந்துகொண்டே இருக்கிறார்.</p>
<p>இந்நிலையில் இன்றைய நாள்(24.08.2023) செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், அது அவருடைய வெற்றி என்பதுக்கு அப்பால் இந்தியாவின், உலக வாழ் தமிழர்களின் வெற்றியாகவே பார்க்கப்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/sports/chess-world-cup-2023-final-live-updates/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
