<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ceylon Electricity Board &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/ceylon-electricity-board/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 08 Oct 2025 08:24:41 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Ceylon Electricity Board &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/pucsl-consultations-on-ceb-tariff-hike-conclude/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 08:24:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Pucsl Consultations On Ceb Tariff Hike Conclude]]></category>
		<category><![CDATA[Sri Lanka Electricity Prices]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202075</guid>

					<description><![CDATA[இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான பொது ஆலோசனைகள் இன்றுடன் முடிவடைகின்றன. செப்டம்பர் 18ஆம் திகதி தொடங்கி அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய ஆலோசனை செயல்முறை, மேற்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு இன்று அதன் இறுதி அமர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு 20ஆம் எண் கொண்ட இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30இன் படி, இலங்கை மின்சார சபை 2025 ஓகஸ்ட் 27ஆம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான பொது ஆலோசனைகள் இன்றுடன் முடிவடைகின்றன.</p>
<p>செப்டம்பர் 18ஆம் திகதி தொடங்கி அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய ஆலோசனை செயல்முறை, மேற்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு இன்று அதன் இறுதி அமர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>2009ஆம் ஆண்டு 20ஆம் எண் கொண்ட இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30இன் படி, இலங்கை மின்சார சபை 2025 ஓகஸ்ட் 27ஆம் திகதி ஒக்டோபர்-டிசம்பர் 2025 காலாண்டை உள்ளடக்கிய கட்டண மறுஆய்வு முன்மொழிவை சமர்ப்பித்தது.</p>
<p>உற்பத்தி, விநியோகம் மற்றும் நிதி ஆகியவற்றில் அதிகரித்து வரும் செலவுகளைக் காரணம் காட்டி, CEB 6.8 வீத கட்டண உயர்வைக் கோரியதாக PUCSL கூறுகிறது. ஜூன் 2025இல் நடத்தப்பட்ட முந்தைய கட்டண மதிப்பாய்வு, ஜூன் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது.</p>
<p>அதே நேரத்தில் தற்போதைய மதிப்பாய்வு ஒக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது.</p>
<p>இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அனைத்து கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், PUCSL தனது இறுதி முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/srilanka-electricity-bill-3/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 17:37:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board]]></category>
		<category><![CDATA[Public Utilities Commission of Sri Lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Electricity Prices]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=199690</guid>

					<description><![CDATA[2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவு தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெற்ற பின், அதன் மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்காக இலங்கை மின்சார சபை முன்வைத்த மின்சாரக் கட்டண [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன், இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவு தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெற்ற பின், அதன் மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்காக இலங்கை மின்சார சபை முன்வைத்த மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு, அதாவது 18.3% உயர்வு முன்மொழிவு தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனை செயல்முறை நடைபெற்றது.</p>
<p>அந்த ஆலோசனை செயல்முறையின் போது பொதுமக்களால் வழங்கப்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி கருத்துக்கள், முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, அது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அத்துடன், முன்மொழிவு கட்டண முறைமையுடனான இணக்கத்தன்மை குறித்த மீளாய்வு நடவடிக்கைகளும் இறுதிக் கட்டத்தில் உள்ளன.</p>
<p>எனவே, பெரும்பாலும் இந்த வாரத்திற்குள், அடுத்த பாதிக்கு செயல்படுத்தப்படவுள்ள மின்சாரக் கட்டணங்கள் எவை, அவை எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வாரத்திற்குள் பெரும்பாலும் இதன் இறுதி முடிவை அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வவுனியாவின் பல பகுதிகளில் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/frequent-power-outages-in-many-parts-of-vavuniya/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 29 May 2025 17:03:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board]]></category>
		<category><![CDATA[Northern Province of Sri Lanka]]></category>
		<category><![CDATA[vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=198783</guid>

					<description><![CDATA[வவுனியாவின் பல பகுதிகளில் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். வவுனியாவில் இன்று (29.05) பல பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது. இதனால் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் என்பன பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதுடன், மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். வவுனியாவில், வவுனியா நகரம், கடை வீதி, கற்குழி, வைரபுளியங்குளம், பண்டாரிக்குளம், மன்னார் வீதி, உக்குளாங்குளம், சூடுவெந்தபுலவு, இராசேந்திரங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்தது. அதிலும், பல [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வவுனியாவின் பல பகுதிகளில் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.</p>
<p>வவுனியாவில் இன்று (29.05) பல பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது.</p>
<p>இதனால் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் என்பன பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதுடன், மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p>
<p>வவுனியாவில், வவுனியா நகரம், கடை வீதி, கற்குழி, வைரபுளியங்குளம், பண்டாரிக்குளம், மன்னார் வீதி, உக்குளாங்குளம், சூடுவெந்தபுலவு, இராசேந்திரங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்தது.</p>
<p>அதிலும், பல பகுதிகளில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி மின் தடை ஏற்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>20 வீத மின் கட்டண குறைப்பிற்கான வழி தொடர்பில் வெளியான தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/electricity-price-in-sri-lanka-3/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 20 May 2025 14:25:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board]]></category>
		<category><![CDATA[Electricity Price In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Public Utilities Commission of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Electricity Prices]]></category>
		<category><![CDATA[Sri Lankan rupee]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197753</guid>

					<description><![CDATA[இலங்கையில் மின்சார கட்டணத்தை 20 சதவீதம் வரையில் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சார சபை கடந்த 2023ஆம் ஆண்டு 57 பில்லியன் ரூபாவையும், 2024ஆம் ஆண்டு 144 பில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 22 சதவீத கட்டணக் குறைப்பைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபையின் 200 பில்லியன் ரூபாவில் இருந்து 51 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் மின்சார கட்டணத்தை 20 சதவீதம் வரையில் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சார சபை கடந்த 2023ஆம் ஆண்டு 57 பில்லியன் ரூபாவையும், 2024ஆம் ஆண்டு 144 பில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியது.</p>
<p>இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 22 சதவீத கட்டணக் குறைப்பைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபையின் 200 பில்லியன் ரூபாவில் இருந்து 51 பில்லியன் ரூபாவை ஆறு மாத காலத்திற்குப் பயன்படுத்த அனுமதித்தது.</p>
<p>எனினும் 18 பில்லியன் ரூபாவை மாத்திரமே மின்சாரசபை பயன்படுத்திய போதிலும் சுமார் 183 பில்லியன் ரூபா மீதமுள்ளது.</p>
<p>இந்நிலையில் எதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என கோரியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அடுத்த மாதம் இறுதி முடிவு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/call-for-public-opinion-on-electricity-tariff/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 18 May 2025 15:36:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Call For Public Opinion On Electricity Tariff]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board]]></category>
		<category><![CDATA[Public Utilities Commission of Sri Lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Electricity Prices]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197648</guid>

					<description><![CDATA[பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் மின்கட்டணம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களின் கருத்துக் கோரும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் மின்கட்டணம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களின் கருத்துக் கோரும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>அத்துடன், மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் மாற்றுப் பரிந்துரை தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கோரும் நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.</p>
<p>9 மாகாணங்களையும் உள்ளடக்கி 23 ஆம் திகதி முதல் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அனைத்து பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/electricity-tariff-should-be-increased-ceb/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 17 May 2025 15:15:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board]]></category>
		<category><![CDATA[Economy of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Electricity Tariff Should Be Increased Ceb]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Money]]></category>
		<category><![CDATA[Sri Lanka Economic Crisis]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197609</guid>

					<description><![CDATA[செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி, மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இவ்விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு,இதற்கான முன்மொழிவை மின்சார சபை சமர்ப்பித்துள்ள நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்னும் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காது போனாலும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.</p>
<p>அதன்படி, மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இந்தநிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இவ்விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.</p>
<p>அத்தோடு,இதற்கான முன்மொழிவை மின்சார சபை சமர்ப்பித்துள்ள நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்னும் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.</p>
<p>பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காது போனாலும் மின்கட்டணத்தை அதிகரிக்கும் நிலைப்பாட்டில் மின்சார சபை உறுதியாக உள்ளது.</p>
<p>உற்பத்திச் செலவை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் மின்கட்டணத்தைக் குறைந்தது 18.3 வீதத்தினால் அதிகரித்தே ஆகவேண்டும் என்று மின்சார சபை வலியுறுத்தியுள்ளது.</p>
<p>மின்சக்தியின் உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையிலான கட்டண அதிகரிப்பொன்றை மேற்கொள்ளாது போனால் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் தவணை வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையின் பின்னணியிலேயே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.</p>
<p>இதேவேளை, இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெரும் நட்டத்தை சந்தித்த இலங்கை மின்சார சபை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ceylon-electricity-board-suffers-huge-loss/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 17 May 2025 09:04:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board Suffers Huge Loss]]></category>
		<category><![CDATA[Economy of Sri Lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197534</guid>

					<description><![CDATA[இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளது. 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 84.67 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியிருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது, 121.8 சதவீதமாக இலங்கை மின்சார சபையின் இலாபம் சரிவடைந்துள்ளது. அத்துடன், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5 காலாண்டுகள் மின்சார சபை இலாபத்தை ஈட்டியிருந்தது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளது.</p>
<p>2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 84.67 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியிருந்தது.</p>
<p>இதனுடன் ஒப்பிடும் போது, 121.8 சதவீதமாக இலங்கை மின்சார சபையின் இலாபம் சரிவடைந்துள்ளது.</p>
<p>அத்துடன், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5 காலாண்டுகள் மின்சார சபை இலாபத்தை ஈட்டியிருந்தது.</p>
<p>இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டில், இலங்கை வரலாற்றில் ஒரு வருடத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச இலாபமான 144 பில்லியன் ரூபாவை மின்சார சபை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/wimal-says-electricity-bill-will-increase/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 16 May 2025 06:39:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board]]></category>
		<category><![CDATA[Sri Lanka Electricity Prices]]></category>
		<category><![CDATA[Wimal Says Electricity Bill Will Increase]]></category>
		<category><![CDATA[Wimal Weerawansa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197458</guid>

					<description><![CDATA[அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு தொழில்துறை அமைப்பும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இலாபம் ஈட்டிய மின்சாரசபை, 7 மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்தது என்றும் விமல் வீரவன்ச [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு தொழில்துறை அமைப்பும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p>
<p>கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>2024 ஆம் ஆண்டின் இறுதியில் இலாபம் ஈட்டிய மின்சாரசபை, 7 மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்தது என்றும் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.</p>
<p>மேலும், மின்சார சபையை அகற்றி விற்பனை செய்யும் பணி அடுத்த மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில், மின் கட்டணம் இன்னும் அதிகரிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/important-announcement-from-the-electricity-board/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 11 May 2025 13:21:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board]]></category>
		<category><![CDATA[Important Announcement From The Electricity Board]]></category>
		<category><![CDATA[Public Utilities Commission of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Economic Crisis]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196892</guid>

					<description><![CDATA[மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் உள்ள இலங்கை, மின்சாரத்திற்கான செலவு &#8211; பிரதிநிதித்துவ விலையை சமர்ப்பிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளபடி மின்சார கட்டணத்தை முப்பத்து மூன்று சதவீதம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அடுத்த கடன் தவணை வெளியிடப்படுவதற்கு முன்பு, மின்சார செலவு காண்பிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.]]></description>
										<content:encoded><![CDATA[<p>மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் உள்ள இலங்கை, மின்சாரத்திற்கான செலவு &#8211; பிரதிநிதித்துவ விலையை சமர்ப்பிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளபடி மின்சார கட்டணத்தை முப்பத்து மூன்று சதவீதம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.</p>
<p>அடுத்த கடன் தவணை வெளியிடப்படுவதற்கு முன்பு, மின்சார செலவு காண்பிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேர்தலுக்குப் பின் மின் கட்டணத்தில் திடீர் அதிகரிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/npp-government-increase-electricity-bill-namal/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 15:48:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceylon Electricity Board]]></category>
		<category><![CDATA[Fuel Price In World]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[National People's Power - NPP]]></category>
		<category><![CDATA[Npp Government Increase Electricity Bill Namal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=195865</guid>

					<description><![CDATA[தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்தோடு, அரசாங்கத்தில் உள்ள சிலர் பணம் ஈட்டும் நோக்கில் தற்போது டீசல் மாஃபியாவை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலவ்வ பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பி அரசாங்கம் 76 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற வேலைத் திட்டங்களைச் சீரழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதே தவிர, புதிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்தோடு, அரசாங்கத்தில் உள்ள சிலர் பணம் ஈட்டும் நோக்கில் தற்போது டீசல் மாஃபியாவை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அலவ்வ பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பி அரசாங்கம் 76 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற வேலைத் திட்டங்களைச் சீரழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதே தவிர, புதிய வேலைத் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.</p>
<p>பல இடங்களில் உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறி வருகின்றனர். தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும்.</p>
<p>அதே போன்று, அரசாங்கம் டீசல் மாஃபியாவை உருவாக்கும் வேலைத் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது. எனவே, இதன் பாதிப்பு பொதுமக்களையே சென்றடையும்.</p>
<p>இவ்வாறான மாஃபியா நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாதென அரசாங்கத்திடம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
