<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>camera &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/camera/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 05 May 2025 14:59:06 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>camera &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் : அதிர்ச்சியில் பெண்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/lecturer-arrested-for-installing-camera-in-toilet/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 05 May 2025 14:59:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[camera]]></category>
		<category><![CDATA[Lecturer Arrested For Installing Camera In Toilet]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196206</guid>

					<description><![CDATA[பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பொலிஸ் காவலில் இருந்து குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். வடமேற்கு பல்கலைக்கழகத்தின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து பீடத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்த 34 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>பன்னல பொலிஸ் காவலில் இருந்து குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p>
<p>வடமேற்கு பல்கலைக்கழகத்தின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து பீடத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்த 34 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.</p>
<p>சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பொலிஸார், பி அறிக்கை மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.</p>
<p>சந்தேக நபர் உட்பட 7 பெண் விரிவுரையாளர்கள் மற்றும் 9 ஆண் விரிவுரையாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறை அமைப்பில் மின்சார கட்டணங்களுடன் இணைக்கப்பட்டு முகம் கழுவும் தொட்டியின் கீழ் ரகசியமாக பொருத்தப்பட்ட ஒரு சிறிய கமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஒரு பெண் விரிவுரையாளர் அதைக் கவனித்து நிர்வாக மேற்பார்வையாளருக்கு தகவல் அளித்த பின்னர், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>சந்தேக நபரின் மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை வழக்குப் பொருளாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>
<p>மறைக்கப்பட்ட கமரா சம்பவம் அம்பலமான நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தப்பிச் செல்லும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக கூறி, சந்தேக நபருக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் சார்பாக ஆதாரங்களை முன்வைத்த வழக்கறிஞர், இந்த விடுதி வளாகத்தில் தற்போது 9 விரிவுரையாளர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 7 பேர் பெண்கள் என்று சுட்டிக்காட்டினார்.</p>
<p>விரிவுரையாளர்களில் ஒருவர் முகம் கழுவிக் கொண்டிருந்த இடத்தில், தொட்டியின் அடியில் இருந்து கறுப்பு நிற கம்பி தொங்குவதைக் கவனித்ததை அடுத்து, சந்தேகமடைந்து சக விரிவுரையாளரிடம் தெரிவித்ததாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.</p>
<p>ஆய்வு செய்ததில், அது வைபை சின்னத்துடன் கூடிய மிகச் சிறிய, உயர் தொழில்நுட்ப கமரா என அடையாளம் காணப்பட்டது. பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வேறு இடத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.</p>
<p>குறித்த கழிப்பறையை அங்கு பணியாற்றும் விரிவுரையாளர்களின் பிள்ளைகளும் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த வீடியோக்கள் மூன்றாம் தரப்பினருக்கு கசிந்துவிடும் அபாயம் உள்ளதென வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.</p>
<p>இந்த நிலையில் அவருக்கு பிணை வழங்க முடியாதென கூறிய நீதிபதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/ayodhya-security-10000-cctvs-ai-equipped-drones/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jan 2024 14:35:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Artificial Intelligence]]></category>
		<category><![CDATA[Ayodhya]]></category>
		<category><![CDATA[Ayodhya Ram Mandir]]></category>
		<category><![CDATA[camera]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=115076</guid>

					<description><![CDATA[அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்தாயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் AI சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. RAF, ATS, மத்திய படைகள் மற்றும் உ.பி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல மொழித் திறன் கொண்ட காவலர்கள் பாதுகாப்புப் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டத்தை சாதாரண உடையில் காவலர்கள் கண்காணிகின்றனர். தரம்பத், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு</h4>
<p>ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>பத்தாயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் AI சார்ந்த <a href="https://tamilnaadi.com/articles/tech/2023/07/26/google-new-ai-news-writer-tamil/">தொழில்நுட்பம்</a> பயன்படுத்தப்படுகிறது.</p>
<p>RAF, ATS, மத்திய படைகள் மற்றும் உ.பி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல மொழித் திறன் கொண்ட காவலர்கள் பாதுகாப்புப் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>பொதுமக்கள் நடமாட்டத்தை சாதாரண உடையில் காவலர்கள் கண்காணிகின்றனர். தரம்பத், ரம்பத் ஹனுமான் கர்ஹி பகுதி மற்றும் அஷர்பி பவன் தெருக்களில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு படை (ATS) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் எதிர்பாராத பூகம்பங்களைச் சமாளிக்க பல தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் (NDRF), SDRF பயன்படுத்தப்படுகின்றன.</p>
<p>உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) பணியாளர்கள் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். இரண்டு NSG குழுக்களின் ஸ்னைப்பர்கள் கூரைகள் மற்றும் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>அயோத்தியில் பல சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழிப்போக்கர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.</p>
<p>அயோத்தி மாவட்டம் சிவப்பு மற்றும் மஞ்சள் மண்டலத்தில் உள்ளது. சரயு நதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.</p>
<p>போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், அதிகப்படியான போக்குவரத்தை திசை திருப்பவும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெண் மாணவர்களின் கழிப்பறையில் டிஜிட்டல் கமெரா!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/area/digital-camera-in-the-toilet-of-female-students/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/area/digital-camera-in-the-toilet-of-female-students/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2022 13:13:29 +0000</pubDate>
				<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[camera]]></category>
		<category><![CDATA[Gampaha]]></category>
		<category><![CDATA[incident]]></category>
		<category><![CDATA[installed]]></category>
		<category><![CDATA[investigations]]></category>
		<category><![CDATA[modern]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Suspicion]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[technology]]></category>
		<category><![CDATA[tuition]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39650</guid>

					<description><![CDATA[கம்பஹா நகரில் உள்ள பிரபல மேலதிக வகுப்பு நிலையத்தின் பெண்களுக்கான கழிவறையில் நவீன தொழில்நுட்ப கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் தெற்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மேலதிக வகுப்பு நிலையத்தின் உரிமையாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் குறித்த மேலதிக வகுப்பு நிலையத்தைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #srilankaNEws &#160; &#160;]]></description>
										<content:encoded><![CDATA[<p>கம்பஹா நகரில் உள்ள பிரபல மேலதிக வகுப்பு நிலையத்தின் பெண்களுக்கான கழிவறையில் நவீன தொழில்நுட்ப கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் தெற்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>மேலும் மேலதிக வகுப்பு நிலையத்தின் உரிமையாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.</p>
<p>இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் குறித்த மேலதிக வகுப்பு நிலையத்தைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>#srilankaNEws</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/area/digital-camera-in-the-toilet-of-female-students/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரயில் வரும்போது பெண்ணைத் தள்ளிவிட்ட ஆண் (வைரல் வீடியோ)</title>
		<link>https://tamilnaadi.com/news/the-man-who-pushed-the-woman-away-when-the-train-arrived/</link>
					<comments>https://tamilnaadi.com/news/the-man-who-pushed-the-woman-away-when-the-train-arrived/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 10:25:19 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Brussels]]></category>
		<category><![CDATA[camera]]></category>
		<category><![CDATA[Caught]]></category>
		<category><![CDATA[MetroRail]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[train]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[WorldNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=35456</guid>

					<description><![CDATA[பெண் ஒருவரை வேண்டுமென்று, ரயில் வரும் நேரம் பார்த்து, நபர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ள சம்பவமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இச்சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது. ஆனால் தெய்வாதீனமாக, அவசரகால பிரேக் இழுக்கப்பட்டமையால், அப்பெண்ணின் மீது ஏறாமல் மிக நெருக்கமாக வந்து நிறுத்தப்பட்டது, இதனால் அதிர்ஷ்டவசமாக அப் பெண் காயமின்றி உயிர் தப்பினார். குறித்த இந்த வீடியோக் காட்சியில், ரயிலின் முன் அப்பெண்ணை தள்ளுவதற்கு முன், அந்த நபர் பிளாட்பாரத்தில் ஓய்வில்லாமல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">பெண் ஒருவரை வேண்டுமென்று, ரயில் வரும் நேரம் பார்த்து, நபர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ள சம்பவமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இச்சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆனால் தெய்வாதீனமாக, அவசரகால பிரேக் இழுக்கப்பட்டமையால், அப்பெண்ணின் மீது ஏறாமல் மிக நெருக்கமாக வந்து நிறுத்தப்பட்டது, இதனால் அதிர்ஷ்டவசமாக அப் பெண் காயமின்றி உயிர் தப்பினார்.</p>
<p style="text-align: justify;">குறித்த இந்த வீடியோக் காட்சியில், ரயிலின் முன் அப்பெண்ணை தள்ளுவதற்கு முன், அந்த நபர் பிளாட்பாரத்தில் ஓய்வில்லாமல் நடந்து திரிந்துள்ளார். அதற்குப்பின்னரே இச்சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதை சிசிரிவிக் காட்சிகள் தெளிவுபடுத்துகிறது</p>
<p>#WorldNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/the-man-who-pushed-the-woman-away-when-the-train-arrived/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
