<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Cabinet Spokesman &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/cabinet-spokesman/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 06 Nov 2025 04:36:23 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Cabinet Spokesman &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஏற்றுமதி கஞ்சா திட்டம்: &#8216;உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது&#8217; – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!</title>
		<link>https://tamilnaadi.com/news/cannabis-cultivation-only-for-export-in-investment-zones-local-market-entry-impossible-cabinet-spokesman-nalintha-jayatissa-clarifies-amidst-controversy/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Nov 2025 04:36:23 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Cabinet Spokesman]]></category>
		<category><![CDATA[Cannabis Cultivation]]></category>
		<category><![CDATA[Export Purposes]]></category>
		<category><![CDATA[Investment Zones]]></category>
		<category><![CDATA[Nalintha Jayatissa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=204098</guid>

					<description><![CDATA[இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான சர்ச்சை குறித்து, அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (நவ 5) தெளிவுபடுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திரச் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தின் கொள்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். &#8220;ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே முதலீட்டு மண்டலங்களில் கஞ்சா பயிர்ச்செய்கை செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் கஞ்சா [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான சர்ச்சை குறித்து, அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (நவ 5) தெளிவுபடுத்தினார்.</p>
<p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திரச் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தின் கொள்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.</p>
<p>&#8220;ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே முதலீட்டு மண்டலங்களில் கஞ்சா பயிர்ச்செய்கை செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் கஞ்சா உள்ளூர் சந்தையில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், &#8220;நாங்கள் தேவையான பாதுகாப்பை வழங்கியுள்ளோம்&#8221; என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.</p>
<p>ஒருபுறம் கஞ்சா பயிர்ச்செய்கையை அனுமதித்து, மறுபுறம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த அரசாங்கத்தின் கொள்கை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கஞ்சா பயிர்ச்செய்கை கடுமையான பாதுகாப்பின் கீழ் செய்யப்படுவதால், இந்தக் கஞ்சா பயிர்ச்செய்கையையும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.</p>
<p>முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் ஹன்சக விஜேமுனி, இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த கஞ்சா பயிர்ச்செய்கைத் திட்டத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்குப் பங்கேற்கும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகச் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நீதிபதி இளஞ்செழியன் சேவை நீடிப்பு: திட்டமிட்டு மறுக்கப்படவில்லை, நடைமுறைக் காரணங்களே பின்னணி – அமைச்சரவைப் பேச்சாளர்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/former-justice-ilancheliyans-service-extension-not-denied-deliberately-says-cabinet-spokesman-nalintha-jayatissa/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Nov 2025 02:00:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet Spokesman]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Justice Ilancheliyan]]></category>
		<category><![CDATA[Nalintha Jayatissa]]></category>
		<category><![CDATA[Service Extension Denial]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203999</guid>

					<description><![CDATA[முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் தமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது என்றும், திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (நவம்பர் 4) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் தமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது என்றும், திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (நவம்பர் 4) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.</p>
<p>முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், தனக்கான சேவை நீடிப்பு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 சந்தர்ப்பங்களில் கடிதம் அனுப்பியதாகவும், அவற்றில் ஒன்றுக்கேனும் பதில் கிடைக்கவில்லை என்றும் அண்மையில் கவலை வெளியிட்டிருந்தார்.</p>
<p>அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, நீதிபதியின் சேவைகளைப் பாராட்டிய அதேவேளையில், சேவை நீடிப்பு மறுக்கப்பட்டதற்கான காரணத்தையும் விளக்கினார்:</p>
<p>இவரைப் போன்று பல அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர். நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்புக்கள் வழங்கப்படும் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.</p>
<p>சில சந்தர்ப்பங்களில் நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் அடுத்தடுத்த நிலைகளுக்குப் பதவியுயர்வு பெற வேண்டியவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படக் கூடும். அவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கலாம்.</p>
<p>மாறாக, திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருக்கவில்லை. இது வழமையான நடைமுறையாகும்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
