<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>border &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/border/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 24 Feb 2022 03:50:32 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>border &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எல்லை தாண்டிய 22 இந்திய மீனவர்கள் கைது!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/22-indian-fishermen-arrested-for-crossing-border/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/22-indian-fishermen-arrested-for-crossing-border/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 03:50:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[boats]]></category>
		<category><![CDATA[border]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[Fisheries]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[fishing]]></category>
		<category><![CDATA[harbor]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Mylitty]]></category>
		<category><![CDATA[navy]]></category>
		<category><![CDATA[point pedro]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39824</guid>

					<description><![CDATA[எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 22 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்படவுள்ளனர். மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.</p>
<p>பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட 22 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்படவுள்ளனர்.</p>
<p>மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>#SrilankaNEws</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/22-indian-fishermen-arrested-for-crossing-border/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உக்ரேனுக்கு ரஸ்யா 48 மணித்தியால காலக்கெடு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/russia-48-hour-deadline-for-ukraine/</link>
					<comments>https://tamilnaadi.com/news/russia-48-hour-deadline-for-ukraine/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Feb 2022 10:26:55 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[airstrikes]]></category>
		<category><![CDATA[border]]></category>
		<category><![CDATA[deployment]]></category>
		<category><![CDATA[Dmytro Kuleba]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[foreign]]></category>
		<category><![CDATA[lakh]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[russia]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[Ukrainian]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39273</guid>

					<description><![CDATA[உக்ரேன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் துருப்புகளை நிறுத்தியிருப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கே பேச்சுக்கு வருமாறு உக்ரேன் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் Dmytro Kuleba உத்தியோகபூர்வமாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். மேற்குலக நாடுகள் ரஷ்யா எந்நேரமும் வான் தாக்குதலுடன் உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என எச்சரித்துள்ள நிலையில் ரஷ்யா இதனை மறுத்துள்ளது. பன்னிரண்டுக்கு மேற்பட்ட நாடுகள் தமது பிரஜைகளை உக்ரேனிலிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளதுடன் தமது தூதரகங்களையும் தலைநகரில் இருந்து வேறிடங்களுக்கு மாற்றியுள்ளன. ரஷ்யாவுக்கு உக்ரேனை ஆக்கிரமிக்கும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உக்ரேன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் துருப்புகளை நிறுத்தியிருப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கே பேச்சுக்கு வருமாறு உக்ரேன் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.</p>
<p>உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் Dmytro Kuleba உத்தியோகபூர்வமாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். மேற்குலக நாடுகள் ரஷ்யா எந்நேரமும் வான் தாக்குதலுடன் உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என எச்சரித்துள்ள நிலையில் ரஷ்யா இதனை மறுத்துள்ளது.</p>
<p>பன்னிரண்டுக்கு மேற்பட்ட நாடுகள் தமது பிரஜைகளை உக்ரேனிலிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளதுடன் தமது தூதரகங்களையும் தலைநகரில் இருந்து வேறிடங்களுக்கு மாற்றியுள்ளன.</p>
<p>ரஷ்யாவுக்கு உக்ரேனை ஆக்கிரமிக்கும் நோக்கமில்லா விட்டால் வான் பாதுகாப்பை ரஷ்யா உறுதிப்படுத்த வேண்டும் அத்துடன் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டுமென உக்ரேன் கூறியுள்ளது.</p>
<p>உக்ரேன் ஜனாதிபதி ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிக்கும் என்பதற்கான எந்தவித ஆதரமுமில்லையென தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyக்குமிடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிக்கும் பட்சத்தில் அமெரிக்கா உக்ரேனுக்கு தோள் கொடுக்கும் என பைடன் தெரிவித்துள்ளார். உக்ரேன் ஜனாதிபதி பைடனின் கூற்றுக்கு நண்றி தெரிவித்துள்ளார்.</p>
<p>#WorldNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/russia-48-hour-deadline-for-ukraine/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உக்ரைன் மோதல் &#8211; ரஷ்யா அமெரிக்காவுக்கு இடையிலானதா?</title>
		<link>https://tamilnaadi.com/news/ukraine-conflict-is-russia-between-the-us/</link>
					<comments>https://tamilnaadi.com/news/ukraine-conflict-is-russia-between-the-us/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jan 2022 14:28:44 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[.]]></category>
		<category><![CDATA[border]]></category>
		<category><![CDATA[denmark]]></category>
		<category><![CDATA[Eastern European]]></category>
		<category><![CDATA[European countries]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Foreign commentators]]></category>
		<category><![CDATA[Ireland]]></category>
		<category><![CDATA[military presence]]></category>
		<category><![CDATA[NATO]]></category>
		<category><![CDATA[russia]]></category>
		<category><![CDATA[Russia-Ukraine]]></category>
		<category><![CDATA[Russian military]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Troops]]></category>
		<category><![CDATA[Ukrainian border]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<category><![CDATA[United States]]></category>
		<category><![CDATA[Warships]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=36671</guid>

					<description><![CDATA[உக்ரைனில் ரஷ்ய &#8211; உக்ரைன் எல்லை பிரச்சனை தற்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான மோதலாக மாறியுள்ளதாக வெளிநாட்டு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை அண்மைய நாட்களாக குவித்து வருகின்றது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது. அதேபோல இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. அப்படி நடந்தால் கடும் விளைவுகள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[
<p>உக்ரைனில் ரஷ்ய &#8211; உக்ரைன் எல்லை பிரச்சனை தற்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான மோதலாக மாறியுள்ளதாக வெளிநாட்டு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.<br /><br />உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை அண்மைய நாட்களாக குவித்து வருகின்றது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.<br /><br />அதேபோல இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.<br /><br />அப்படி நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அயர்லாந்து நாட்டின் கடற்கரைக்கு 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் ரஷ்ய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.<br /><br />இதற்கு அயர்லாந்து தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அயர்லாந்துக்கு ஆதரவாக கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்திற்கு கூடுதல் படைகளை அனுப்பி வருகின்றது. <br /><br />அங்கு தங்களது படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள நேட்டோ பால்டிக் கடல் பிராந்தியத்தில் கூடுதல் படைகள் மற்றும் போர் தளவாடங்கள், போர் கப்பல்கள் என்பவற்றினையும் அனுப்பியுள்ளது.<br /><br />இதேவேளை அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ படையில் உள்ள டென்மார்க் நவீன போர் விமானங்களை சோனியாவுக்கு அனுப்புகின்றது. ஸ்பெயின் நாடு பல்கேரியாவுக்கு போர்க்கப்பல்கள் விமானங்களை அனுப்புகின்றது. <br /><br />அதேபோல பிரான்ஸ் தனது கூடுதல் படைகளை அனுப்ப தயார் நிலையில் வைத்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளை விரிவுபடுத்த கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தும் நிலையில் அங்கு நேட்டோவின் கப்பல்கள் விரைந்துள்ளமை சர்வதேச நாடுகள் மத்தியில் போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />#WorldNews<br /><br /><br /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/ukraine-conflict-is-russia-between-the-us/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எல்லைப்பகுதியில் சாவடைந்த  அகதிகள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/refugees-killed-at-the-border/</link>
					<comments>https://tamilnaadi.com/news/refugees-killed-at-the-border/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Nov 2021 10:13:01 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[border]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[killed]]></category>
		<category><![CDATA[poland]]></category>
		<category><![CDATA[refugees]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=21918</guid>

					<description><![CDATA[பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போலந்து, பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலந்து, பெலாரஸ் நாடுகளின் எல்லையை தாண்டும் முயற்சியில் கொட்டும் பனியால் 8 அகதிகள் சாவடைந்துள்ளனர். இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. போலந்து எல்லையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் புகலிடம் கோர எத்தணிக்கும் அகதிகள் முகாமிட்டு காத்திருக்கின்றனர். குறிப்பாக போலந்தின் Kuznica கிராமம் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையவே அவர்கள் முயன்று வருகின்றனர். மற்றொரு புறம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>போலந்து, பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>போலந்து, பெலாரஸ் நாடுகளின் எல்லையை தாண்டும் முயற்சியில் கொட்டும் பனியால் 8 அகதிகள் சாவடைந்துள்ளனர்.</p>
<p>இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.</p>
<p>போலந்து எல்லையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் புகலிடம் கோர எத்தணிக்கும் அகதிகள் முகாமிட்டு காத்திருக்கின்றனர்.</p>
<p>குறிப்பாக போலந்தின் Kuznica கிராமம் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையவே அவர்கள் முயன்று வருகின்றனர்.</p>
<p>மற்றொரு புறம் பெலாரஸ் எல்லையில் போடப்பட்ட முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுடன் பாதுகாப்பு படை வீரர்கள் மோதலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#world</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/refugees-killed-at-the-border/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
