<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>BJP &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/bjp/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 07 Oct 2025 16:38:59 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>BJP &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கரூர் துயரம் &#8211; ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/vijay-tvk-moves-supreme-court-for-cbi-probe-into/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 16:38:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[Vijay Tvk Moves Supreme Court For Cbi Probe Into]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202000</guid>

					<description><![CDATA[தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா்.</p>
<p>இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பாக தவெகவினர், அதிமுகவினர், பாஜகவினர் திமுக அரசை குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு திமுக அரசு மறுப்பு தெரிவித்து வருவதுடன், திமுக கூட்டணி கட்சியினர் தவெக மீது கடுமையாக சாடி வருகின்றனர்.</p>
<p>இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.</p>
<p>மேலும் இந்த நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களையும் அரசு கைது செய்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.</p>
<p>இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சி.பி.ஐ.-க்கு மாற்ற மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. நிர்வாகி உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.</p>
<p>இம்மனு வருகிற வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மதுரையில் வைத்து குஷ்புவை கைது செய்த பொலிஸார்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/the-police-arrested-khushbu-in-madurai/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jan 2025 09:33:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anna University]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Kushboo]]></category>
		<category><![CDATA[The Police Arrested Khushbu In Madurai]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=185627</guid>

					<description><![CDATA[மதுரையில் வைத்து குஷ்புவை கைது செய்த பொலிஸார் சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மதுரையில் வைத்து குஷ்புவை கைது செய்த பொலிஸார்</h4>
<p>சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகி <a href="https://tamilnaadi.com/news/local/2025/01/01/social-activist-namal-kumara-arrested-by-cid/">கைது</a> செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.</p>
<p>பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.</p>
<p>இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் பேரணி நடத்தி வருகின்றனர். அப்போது, பேரணியில் கலந்துகொள்ள பாஜக பிரமுகர் குஷ்பு வந்திருந்தார்.</p>
<p>குஷ்பு பேசுகையில், &#8220;இந்த பேரணிக்கு திமுக அனுமதி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. திமுக ஆட்சிக்கு எதிராக யார் போராட்டம், பேரணி நடத்தினாலும் எங்களுக்கு அனுமதி கொடுப்பதே இல்லை.</p>
<p>அதற்கு காரணம் என்னவென்றால் நாங்கள் உண்மையை பேசுவோம் என்று திமுகவுக்கு தெரியும். அதனால் தான் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.</p>
<p>கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை மக்கள் கேட்பதற்கு தயாராக இருக்கிறார்கள்&#8221; என்றார்.</p>
<p>இதையடுத்து, தடையை மீறி தொடர்ந்து பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவின் கோடீஸ்வர பெண்ணிற்கு தேர்தலில் வாய்ப்பளிக்காத பாஜக.., அவர் எடுத்த உடனடி முடிவு</title>
		<link>https://tamilnaadi.com/news/bjp-didnt-give-millionaire-woman-chance-inelection/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Sep 2024 05:25:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Bjp Didnt Give Millionaire Woman Chance Inelection]]></category>
		<category><![CDATA[Haryana]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=163627</guid>

					<description><![CDATA[இந்தியாவின் கோடீஸ்வர பெண்ணிற்கு தேர்தலில் வாய்ப்பளிக்காத பாஜக.., அவர் எடுத்த உடனடி முடிவு நாட்டின் கோடீஸ்வர பெண் சாவித்ரி ஜிண்டால் என்பவருக்கு பாஜக வாய்ப்பளிக்காததால் அவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். இவருடைய மகன் நவீன் ஜிண்டால் என்பவர் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் பாஜக சார்பில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இந்தியாவின் கோடீஸ்வர பெண்ணிற்கு தேர்தலில் வாய்ப்பளிக்காத பாஜக.., அவர் எடுத்த உடனடி முடிவு</h4>
<p>நாட்டின் கோடீஸ்வர பெண் சாவித்ரி ஜிண்டால் என்பவருக்கு பாஜக வாய்ப்பளிக்காததால் அவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.</p>
<p>இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். இவருடைய மகன் நவீன் ஜிண்டால் என்பவர் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.</p>
<p>பின்னர் <a href="https://tamilnaadi.com/news/world/2024/03/25/kangana-ranaut/">பாஜக</a> சார்பில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, தனது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி ஜிண்டால் பிரச்சாரம் செய்தார்.</p>
<p>இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் வரும் ஓக்டோபர் 5 -ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ஹிசார் தொகுதியில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்தார்.</p>
<p>ஆனால், அண்மையில் வெளியிடப்பட்ட 67 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் சாவித்ரி ஜிண்டால் பெயர் இல்லை. அதற்கு மாறாக அந்த தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருக்கும் கமல் குப்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனையடுத்து, சாவித்ரி ஜிண்டாலின் ஆதரவாளர்கள் அவரை தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினார். அதன்படி, தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.</p>
<p>ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிடுவாரா அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சி சார்பில் போட்டியிடுவாராஎன்று தெரியவில்லை.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இரா.சம்பந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/annamalai-to-attend-sampanthan-s-funeral/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jul 2024 15:58:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[K. Annamalai]]></category>
		<category><![CDATA[R. Sampanthan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=149403</guid>

					<description><![CDATA[இரா.சம்பந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் (R. Sampanthan) இறுதி அஞ்சலி நிகழ்வில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை (Annamalai) கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) திருகோணமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன நிலையில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அண்ணாமலை தனது வரவை தன்னிடம் தொலைபேசி மூலம் உறுதிசெய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழக முதல்வர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இரா.சம்பந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்</h4>
<p>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் (R. Sampanthan) இறுதி அஞ்சலி நிகழ்வில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் <a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/05/05/siragadikka-aasai-serial-next-storyline/">அண்ணாமலை</a> (Annamalai) கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) திருகோணமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன நிலையில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இந்நிலையில், அண்ணாமலை தனது வரவை தன்னிடம் தொலைபேசி மூலம் உறுதிசெய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>அதேவேளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் (M.L Stalin), இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளபோதும், அது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் சிறீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவும் பா.ஜ.க!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/bjp-is-helping-sinhala-buddhistization-tamil-areas/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Jun 2024 03:38:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Bjp Is Helping Sinhala Buddhistization Tamil Areas]]></category>
		<category><![CDATA[Selvarajah Kajendren]]></category>
		<category><![CDATA[Sri Lankan political crisis]]></category>
		<category><![CDATA[Sri Lankan Tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=146096</guid>

					<description><![CDATA[தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவும் பா.ஜ.க! இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்(S. Kajendran) தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருகின்றபோது, இந்தியாவின் பா.ஜ.கவின் விரிவாக்கமாக இருக்கின்ற சிவசேனையின் இலங்கை முகவர்கள், தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படுகின்றபௌத்த விகாரைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற செயற்பாடுகளைச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவும் பா.ஜ.க!</h4>
<p>இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் <a href="https://tamilnaadi.com/news/local/2024/06/05/24-year-old-woman-arrested-in-vavuniya/">தமிழர் பகுதி</a>களில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்(S. Kajendran) தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கையில் சிங்கள பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருகின்றபோது, இந்தியாவின் பா.ஜ.கவின் விரிவாக்கமாக இருக்கின்ற சிவசேனையின் இலங்கை முகவர்கள், தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படுகின்றபௌத்த விகாரைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில் இலங்கைக்கு எவ்வாறான நிலைமை காணப்படும் என்று கஜேந்திரன் எம்.பியிடம் சர்வதேச ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>“இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்கு எந்தவித இடையூறும் இல்லை.</p>
<p>இந்தியா சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும், சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்குச் சீனாவிடம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்ற நம்பிக்கையை உருவாக்கி இலங்கையைத் தமது நட்பு சக்தியாக மாற்றுகின்ற செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெறுகின்றது .</p>
<p>மேலும், இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பை இலங்கையில் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>அதற்காக இந்தியா எமது நட்பு சக்தியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.” என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மோடி பதவியேற்கும் திகதியில் மாற்றம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/modi-s-inauguration-on-july-9/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jun 2024 09:03:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Modi S Inauguration On July 9]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=144541</guid>

					<description><![CDATA[மோடி பதவியேற்கும் திகதியில் மாற்றம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்தியாவின் பிரதமராக பாரதீய ஜனதாக்கூட்டணியின் தலைவர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ஆம் திகதியன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார். இதன்படி அவர் தொடர்;ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்கிறார். இதனை பாரதீய ஜனதாக்கட்சி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தநிலையில் அவர் இன்று ஆட்சியமைப்பதற்கான கோரலை குடியரசுத்தலைவரிடம் விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது தமது கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி மற்றும் தமது ஆட்சிக்கு ஆதரவளிக்கும் ஒப்புதல் கடிதங்கள் என்பன சமர்ப்பிக்கப்படவுள்ளன.]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மோடி பதவியேற்கும் திகதியில் மாற்றம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு</h4>
<p>இந்தியாவின் பிரதமராக பாரதீய ஜனதாக்கூட்டணியின் தலைவர் <a href="https://tamilnaadi.com/news/2024/03/04/former-prime-minister-s-opinion-on-modi/">நரேந்திர மோடி</a> எதிர்வரும் 9ஆம் திகதியன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.</p>
<p>இதன்படி அவர் தொடர்;ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்கிறார்.</p>
<p>இதனை பாரதீய ஜனதாக்கட்சி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p>
<p>இந்தநிலையில் அவர் இன்று ஆட்சியமைப்பதற்கான கோரலை குடியரசுத்தலைவரிடம் விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது தமது கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி மற்றும் தமது ஆட்சிக்கு ஆதரவளிக்கும் ஒப்புதல் கடிதங்கள் என்பன சமர்ப்பிக்கப்படவுள்ளன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதவி இழப்பாரா மோடி&#8230;! பா.ஜ.க RSS இடையில் முறுகல்</title>
		<link>https://tamilnaadi.com/news/modi-bjp-rss-conflict-india-election-result-2024/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jun 2024 09:22:10 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Amit Shah]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Modi Bjp Rss Conflict India Election Result 2024]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=144191</guid>

					<description><![CDATA[பதவி இழப்பாரா மோடி&#8230;! பா.ஜ.க RSS இடையில் முறுகல் பா.ஜ.க (BJP) மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த தேர்தலில் அக்கட்சி எதிர்கொண்ட முக்கிய சவால் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். பா.ஜ.கவின் பின்புலம் மற்றும் அதன் முழுமையான ஆதரவுத் தளமே ஆர்.எஸ்.எஸ் தான், கடந்த 10ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை மோடி அரசு மாற்றி அமைத்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. மக்களை வீடு வீடாக சென்று [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பதவி இழப்பாரா மோடி&#8230;! பா.ஜ.க RSS இடையில் முறுகல்</h4>
<p>பா.ஜ.க (BJP) மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த தேர்தலில் அக்கட்சி எதிர்கொண்ட முக்கிய சவால் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.</p>
<p>பா.ஜ.கவின் பின்புலம் மற்றும் அதன் முழுமையான ஆதரவுத் தளமே ஆர்.எஸ்.எஸ் தான், கடந்த 10ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை மோடி அரசு மாற்றி அமைத்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.</p>
<p>மக்களை வீடு வீடாக சென்று சந்திப்பது மற்றும் அவர்களை பா.ஜ.கவிற்கு வாக்களிக்கத் தூண்டுவது போன்ற பணிகளை ஆர்எஸ்எஸ் சிறப்பாக செய்தது.</p>
<p>ஆனால், <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" target="_blank" rel="noopener">ஆர்எஸ்எஸ்</a> அமைப்பின் சித்தாந்தம் ஒரு தனிநபரை சார்ந்தது அல்ல. ஆனால், தற்போது மோடி (Narendra Modi) என்ற தனி நபரின் விம்பத்தில் பா.ஜ.க நகர்வதாக அது மாற்றப்பட்டு விட்டது.</p>
<p>எனவே, இரு தரப்பினருக்கும் இடையில் இந்த <a href="https://tamilnaadi.com/news/world/2024/04/07/india-export-allowed-maldives-thanked-india/">முறுகல் நிலை</a> தோன்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மிகப்பெரிய முடிவுகளை எடுக்கப்போகும் மோடி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/big-decisions-will-be-taken-narendra-modi/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jun 2024 08:48:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Big Decisions Will Be Taken Narendra Modi]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=144027</guid>

					<description><![CDATA[மிகப்பெரிய முடிவுகளை எடுக்கப்போகும் மோடி இந்திய(india) மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக(bjp) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தமது 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி(narendra modi) தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று(04) நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் 64 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மிகப்பெரிய முடிவுகளை எடுக்கப்போகும் மோடி</h4>
<p>இந்திய(india) மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள <a href="https://tamilnaadi.com/news/2024/03/12/sarathkumar-merged-the-party-with-bjp/">பாஜக</a>(bjp) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தமது 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி(<a href="https://en.wikipedia.org/wiki/Narendra_Modi" target="_blank" rel="noopener">narendra modi</a>) தெரிவித்துள்ளார்.</p>
<p>டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று(04) நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>மக்களவைத் தேர்தலில் 64 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருந்திரளாக வாக்களித்து உலகத்துக்கு உண்மை நிலவரத்தை உணர்த்தி உள்ளனர்.</p>
<p>இந்த நேரத்தில் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p>
<p>மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறை ஆட்சி அமைப்பதற்காக மக்கள் தீர்ப்பளித்து உள்ளனர். இது, அரசமைப்பு சாசனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்துகிறது.</p>
<p>பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்திருப்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. பாஜக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
<p>கடந்த 1962-ம் ஆண்டுக்குப் பிறகு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ச்சியாக 3-வது முறையாக பதவியேற்க உள்ளது. இது வரலாற்று சாதனை ஆகும்.</p>
<p>தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம். உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு துறை உற்பத்தியில் தன்னிறைவை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய பொதுத் தேர்தல் 2024 &#8211; உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா</title>
		<link>https://tamilnaadi.com/news/india-lok-sabha-elections-2024-to-begin-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Apr 2024 06:06:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India Lok Sabha Elections 2024 To Begin Tomorrow]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Rahul Gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=133861</guid>

					<description><![CDATA[இந்திய பொதுத் தேர்தல் 2024 &#8211; உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் (Election) நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் ஆரம்பமாகவுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று (19.4.2024) பொதுத் தேர்தல் (Election) நடைபெறவுள்ளதுடன் இரண்டரை மாதங்களுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அத்துடன் ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் (Indian election) ஆணையம் அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இந்திய பொதுத் தேர்தல் 2024 &#8211; உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா</h4>
<p>உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் (Election) நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் ஆரம்பமாகவுள்ளது.</p>
<p>543 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று (19.4.2024) பொதுத் <a href="https://tamilnaadi.com/news/local/2024/04/18/ranil-mster-mind-president-elecsions/">தேர்தல்</a> (Election) நடைபெறவுள்ளதுடன் இரண்டரை மாதங்களுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.</p>
<p>அத்துடன் ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் (Indian election) ஆணையம் அறிவித்துள்ளது.</p>
<p>பொதுத் தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன்15 மில்லியன் தேர்தல் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெளிவுபடுத்தியுள்ளது.</p>
<p>இந்திய நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (லொக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.</p>
<p>முதல் கட்ட தேர்தல் இன்று (19.4.2024) , 2ஆவது கட்டம் ஏப்ரல் 26ஆம் திகதியும், மூன்றாம் கட்டம் மே 7ஆம் திகதியும், நான்காம் கட்டம் மே 13ஆம் திகதியும், ஐந்தாம் கட்டம் மே 20ஆம் திகதியும், ஆறாம் கட்டம் மே 25ஆம் திகதியும், ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் திகதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்தநிலையில் ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்த பொதுத் தேர்தலில் 970 மில்லியன் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு (Inida) வலுவான தலைமையை வழங்கி வரும்நிலையில் மோடியின் பாஜக தங்களுக்கு நட்பான அரசியல் கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்துள்ளது.</p>
<p>இந்தப் பொதுத் தேர்தலில் மோடியின் பாஜக தனித்து 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/bjp-candidate-who-kissed-a-woman-explain/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Apr 2024 08:27:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[All India Trinamool Congress]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[BJP candidate who kissed a woman explain]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=132052</guid>

					<description><![CDATA[ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்</h4>
<p>மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் <a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/03/28/trisha-old-video-now-viral/">முத்தம்</a> கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.</p>
<p>இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் அங்கு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.</p>
<p>அங்கு, இந்தியா கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளது.</p>
<p>மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் &#8211; இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.</p>
<p>மேற்கு வங்கத்தின் மால்டா வடக்கு சிட்டிங் எம்.பியாக இருக்கும் ககென் முர்மு பா.ஜ.க சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், அந்த பகுதியில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.</p>
<p>இந்நிலையில், பிரச்சாரம் செய்ய சென்ற இடத்தில் அங்கிருந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும், வீடியோக்களையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பரப்பி பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.</p>
<p>இந்நிலையில் ககென் முர்மு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, &#8220;அந்த பெண் என்னுடைய உறவினர் என்றும், அவர் எனக்கு குழந்தை மாதிரி எனவும் கூறியுள்ளார். மேலும், குழந்தையை முத்தமிடுவது தவறில்லை, பெண்களை நான் தாயாக நினைக்கிறேன். அனைத்து பெண்களையும் பாஜக மதிக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
