<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Batticaloa Magistrate Court &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/batticaloa-magistrate-court/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 17 Jan 2026 15:16:02 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Batticaloa Magistrate Court &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மட்டக்களப்பில் இளைஞன் உயிரிழப்பு: பொலிஸ் கைது குறித்து பெற்றோர் சந்தேகம் – வழக்கு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/parents-raise-suspicion-over-youths-death-in-police-custody-batticaloa-court-adjourns-case-to-february-27/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Jan 2026 15:16:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Batticaloa Custodial Death]]></category>
		<category><![CDATA[Batticaloa Magistrate Court]]></category>
		<category><![CDATA[Human Rights Violation Allegation]]></category>
		<category><![CDATA[Police Arrest Suspicion 2026]]></category>
		<category><![CDATA[Sri Lanka Police Investigation]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=210230</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைது: ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 2025 டிசம்பர் 02-ஆம் திகதி குறித்த இளைஞன் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். விளக்கமறியலில் இருந்தபோது திடீர் சுகவீனமுற்ற இளைஞன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p>
<p>கைது: ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 2025 டிசம்பர் 02-ஆம் திகதி குறித்த இளைஞன் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p>
<p>விளக்கமறியலில் இருந்தபோது திடீர் சுகவீனமுற்ற இளைஞன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைஞனின் பெற்றோர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.</p>
<p>தனது மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகப் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>இன்றைய நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இளைஞனின் தாய், &#8220;எனது மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்&#8221; எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இன்றைய விசாரணைகளைத் தொடர்ந்து, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27-ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மட்டக்களப்பு நீதிமன்றத்தில் செவ்வந்தி பாணியில் மோசடி: போலி சட்டத்தரணி விளக்கமறியல் நீடிப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/fake-lawyer-who-posed-as-an-attorney-in-batticaloa-court-remanded-until-december-15/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 13:42:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Batticaloa Magistrate Court]]></category>
		<category><![CDATA[Cheating Public]]></category>
		<category><![CDATA[Fake Lawyer]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Fraud]]></category>
		<category><![CDATA[Judicial Custody.]]></category>
		<category><![CDATA[Ondachimadam]]></category>
		<category><![CDATA[Remand Order]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206614</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு, பொதுமக்கள் பலரிடம் இலட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போலிச் சட்டத்தரணியை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 8) உத்தரவிட்டார். குறித்த போலிச் சட்டத்தரணி கடந்த நவம்பர் 8ஆம் திகதி ஒந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த வீடு ஒன்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு, பொதுமக்கள் பலரிடம் இலட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போலிச் சட்டத்தரணியை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 8) உத்தரவிட்டார்.</p>
<p>குறித்த போலிச் சட்டத்தரணி கடந்த நவம்பர் 8ஆம் திகதி ஒந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த வீடு ஒன்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p>
<p>இவர் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். பொதுமக்களிடம் வழக்காடித் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.</p>
<p>அத்துடன், சில சட்டத்தரணிகளையும் அவர் ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் இன்று சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், அவரை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
