<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Badulla District &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/badulla-district/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 15 Dec 2025 15:57:55 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Badulla District &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சீரற்ற காலநிலை: மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் 640 பாடசாலைகள் தவிர மற்ற அனைத்தும் நாளை திறப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/all-schools-to-reopen-tomorrow-except-640-in-central-uva-and-north-western-provinces-due-to-adverse-weather/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2025 15:57:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Adverse Weather]]></category>
		<category><![CDATA[Badulla District]]></category>
		<category><![CDATA[central province]]></category>
		<category><![CDATA[Disaster Recovery]]></category>
		<category><![CDATA[education ministry]]></category>
		<category><![CDATA[Nalaka Kaluwewa]]></category>
		<category><![CDATA[North Western Province]]></category>
		<category><![CDATA[School Closure]]></category>
		<category><![CDATA[School Reopening]]></category>
		<category><![CDATA[Uva Province]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207316</guid>

					<description><![CDATA[சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் நாளை (டிசம்பர் 16) முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள சகல பாடசாலைகளும் நாளைய தினம் மீள திறக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும், ஏனைய மூன்று மாகாணங்களில், 640 பாடசாலைகள் மாத்திரம் நாளைய தினம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அந்த மாவட்டங்களிலுள்ள ஏனைய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் நாளை (டிசம்பர் 16) முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.</p>
<p>அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள சகல பாடசாலைகளும் நாளைய தினம் மீள திறக்கப்படவுள்ளன.</p>
<p>எவ்வாறாயினும், ஏனைய மூன்று மாகாணங்களில், 640 பாடசாலைகள் மாத்திரம் நாளைய தினம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அந்த மாவட்டங்களிலுள்ள ஏனைய பாடசாலைகள் மீள திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>அதன்படி, மத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 524 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 5 பாடசாலைகளும் திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பதுளை மாவட்டத்திலேயே அதிகளவான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, மஹியங்கனை கல்வி வலயத்தில் 3 பாடசாலைகளும், பிபிலை வலயத்தில் ஒரு பாடசாலையும், பசறை வலயத்தில் 88 பாடசாலைகளும், பதுளை வலயத்தில் 112 பாடசாலைகளும், வியலுவ வலயத்தில் 70 பாடசாலைகளும், வெலிமடை வலயத்தில் 110 பாடசாலைகளுக்கு, பண்டாரவளை வலயத்தில் 140 பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.</p>
<p>இந்தநிலையில், திறக்கக்கூடிய நிலையில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர் நாளை தினம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதுளை மாவட்டத்தில் மீண்டும் கனமழை: மக்கள் தற்காலிக முகாம்களிலேயே தங்குமாறு மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/badulla-district-warned-as-heavy-rain-resumes-people-urged-to-remain-in-safety-centers-due-to-landslide-risk/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Dec 2025 18:12:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Badulla District]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Heavy Rain Warning]]></category>
		<category><![CDATA[Landslide Risk]]></category>
		<category><![CDATA[Panduka Sri Prabath Abeywardena (District Secretary)]]></category>
		<category><![CDATA[Safety Centers.]]></category>
		<category><![CDATA[Temporary Shelters]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206776</guid>

					<description><![CDATA[பதுளை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 9) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக மண் சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழும் அபாயம் அதிகமாக உள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது அவர்கள் தங்கியுள்ள பாதுகாப்பு மையங்கள் அல்லது தற்காலிகத் தங்குமிடங்களிலேயே தொடர்ந்து தங்குமாறு மாவட்டச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதுளை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 9) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.</p>
<p>மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக மண் சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழும் அபாயம் அதிகமாக உள்ளது.</p>
<p>அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது அவர்கள் தங்கியுள்ள பாதுகாப்பு மையங்கள் அல்லது தற்காலிகத் தங்குமிடங்களிலேயே தொடர்ந்து தங்குமாறு மாவட்டச் செயலாளர் மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.</p>
<p>மாவட்டத்தின் பல பகுதிகளில் பேரழிவுகளால் அழிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துகளின் இடிபாடுகளை மக்கள் இன்னும் தேடி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், கனமழை காரணமாக ஏற்படும் புதிய அனர்த்தங்களைத் தவிர்க்க, பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாவட்டச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
