<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Attorney General of Sri Lanka &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/attorney-general-of-sri-lanka/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 24 Feb 2025 18:09:22 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Attorney General of Sri Lanka &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சிக்குவாரா நாமல்.! இறுதி கட்டத்தை நெருங்கும் வழக்கு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/case-against-namal-attorney-general-seeks-reason/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 13:28:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Attorney General of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Case Against Namal Attorney General Seeks Reason]]></category>
		<category><![CDATA[Law and Order]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[slpp]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=192183</guid>

					<description><![CDATA[சிக்குவாரா நாமல்.! இறுதி கட்டத்தை நெருங்கும் வழக்கு வழக்கு ஒன்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (13 )அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக சம்பாதித்த ரூ.15 மில்லியனை, NR Consultancy என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சிக்குவாரா நாமல்.! இறுதி கட்டத்தை நெருங்கும் வழக்கு</h4>
<p>வழக்கு ஒன்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்<a href="https://tamilnaadi.com/uncategorized/2024/11/18/sri-lanka-podujana-peramuna-namal-rajapaksa/"> நாமல் ராஜபக்ச</a> (Namal Rajapaksa) உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>குறித்த விடயம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (13 )அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக சம்பாதித்த ரூ.15 மில்லியனை, NR Consultancy என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பணியாற்றிய நித்ய சேனானி சமரநாயக்க, சுஜானி போகல்லாகம மற்றும் சுதர்ஷன கணேகொட ஆகியோருக்கு எதிராக, முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p>
<p>இந்த நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, ​​சந்தேக நபரான நாமல் மற்றும் பலர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p>
<p>அதன்போது, முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.</p>
<p>இதன்படி, வழக்கை ஓகஸ்ட் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபர் நியமனம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/32nd-attorney-general-of-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Jul 2024 07:35:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[32Nd Attorney General Of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Attorney General of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Law and Order]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=150645</guid>

					<description><![CDATA[இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபர் நியமனம் இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபராக பரிந்த ரணசிங்க (Parinda Ranasinghe) அரசியலமைப்பு பேரவையால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் 31 ஆவது சட்ட மா அதிபராக சேவையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக்காலம் கடந்த மாதம் 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், அவரது சேவைக்காலத்தை ஆறு மாதங்களால் நீடிக்குமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) இரண்டு தடவைகள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபர் நியமனம்</h4>
<p>இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபராக பரிந்த ரணசிங்க (Parinda Ranasinghe) அரசியலமைப்பு பேரவையால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இலங்கையின் 31 ஆவது சட்ட மா அதிபராக சேவையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக்காலம் கடந்த மாதம் 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.</p>
<p>இந்த நிலையில், அவரது சேவைக்காலத்தை ஆறு மாதங்களால் நீடிக்குமாறு சிறிலங்கா அதிபர் <a href="https://tamilnaadi.com/news/local/2023/12/30/rani-world-best-leader-vajira/">ரணில் விக்ரமசிங்க</a>வால் (Ranil Wickremesinghe) இரண்டு தடவைகள் முன்வைக்கப்பட்ட யோசனையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.</p>
<p>இந்த பின்னணியில், இன்று பரிந்த ரணசிங்க சிறிலங்காவின் 32 ஆவது சட்ட மா அதிபராக அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிக்குமாறு கோரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/hrcsl-asked-ag-to-investigate-white-van/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 15 May 2024 05:59:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Attorney General of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Hrcsl Asked Ag To Investigate White Van]]></category>
		<category><![CDATA[Human Rights Commission of Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=139709</guid>

					<description><![CDATA[வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிக்குமாறு கோரிக்கை இலங்கையில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளை வான் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது. சட்ட மா அதிபரிடம் இது தொடர்பிலான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரும் ஹொரவத்பொத்தான பகுதியைச் சேர்ந்த கபில குமார டி சில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கடத்தி இரகசியமாக இந்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிக்குமாறு கோரிக்கை</h4>
<p>இலங்கையில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளை வான் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு <a href="https://tamilnaadi.com/news/local/2023/05/23/sri-lanka-human-rights-commissions-recommendation-to-the-president-regarding-the-express-pearl-ship-disaster/">இலங்கை மனித உரிமை ஆணைக்குழு</a> கோரியுள்ளது.</p>
<p>சட்ட மா அதிபரிடம் இது தொடர்பிலான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரும் ஹொரவத்பொத்தான பகுதியைச் சேர்ந்த கபில குமார டி சில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>சட்டவிரோதமாக கடத்தி இரகசியமாக இந்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி கபில குமார காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>விசேட அதிரடிப்படையினரே தமது மகனை அழைத்துச் சென்றனர் என கபிலவின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.</p>
<p>பின்னர் மார்ச் 29ம் திகதி விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கபிலவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.</p>
<p>பின்னர் ஏப்ரல் மாதம் 12ம் திகதி கபிலவை தாங்கள் தடுத்து வைக்கவில்லை என விசேட அதிரடிப்படையினர் அறிவித்தனர்.</p>
<p>எவ்வாறெனினும் ஏப்ரல் மாதம் 22ம் திகதி கபில பிட்டிகல பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p>
<p>இந்த விடயத்தை அறிந்து கொண்ட மனித உரிமை ஆணைக்குழு காலி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கபிலவை சந்தித்துள்ளனர்.</p>
<p>இதன் போது தம்மை பலவந்தமாக கடத்தியதாகவும் பொலிஸார் எனக் கூறிக்கொண்ட நபர்களே தம்மை கடத்தியதாகவும் வெள்ளை வானில் கடத்திச் சென்று தாக்கியதாகவும் கபில, மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.</p>
<p>கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 20ம் திகதி வரைியல் கபிலவை யார் தடுத்து வைத்திருந்தனர் என்பது குறித்து எந்தவொரு அரசாங்க நிறுவனமும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை.</p>
<p>இவ்வாறான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதனை தடுக்க வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு சட்ட மா அதிபரிடம் கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>காணாமல் போனதாக கூறப்படும் நபர் ஒர் கொலைக் குற்றச்செயல் சந்தேகநபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முல்லைத்தீவு நீதிபதி : அரச தரப்பு அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/mullaitivu-judge-saravanarajah-issue/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/mullaitivu-judge-saravanarajah-issue/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Sep 2023 04:48:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Attorney General of Sri Lanka]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Mullaitivu Judge Saravanarajah Issue]]></category>
		<category><![CDATA[Northern Province of Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=96548</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு நீதிபதி : அரச தரப்பு அடுக்கும் குற்றச்சாட்டுக்கள் முல்லைத்தீவு நீதிபதியின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அபத்தமானவை என்றும் அவர் தற்போது தொழில் நியதிகளுக்கு புறம்பாக செயற்பட்டுள்ளார் எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, &#8221;சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அழைத்து உத்தரவினை மாற்றுமாறு சட்டமா அதிபர் தம்மிடம் கோரியதாக நீதவான் சுமத்தும் குற்றச்சாட்டு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>முல்லைத்தீவு நீதிபதி : அரச தரப்பு அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/09/30/mullaitivu-judge-saravanarajah-has-resigned-2/">முல்லைத்தீவு</a> நீதிபதியின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அபத்தமானவை என்றும் அவர் தற்போது தொழில் நியதிகளுக்கு புறம்பாக செயற்பட்டுள்ளார் எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.</p>
<p>முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, &#8221;சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அழைத்து உத்தரவினை மாற்றுமாறு சட்டமா அதிபர் தம்மிடம் கோரியதாக நீதவான் சுமத்தும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.</p>
<p>மேல்முறையீட்டு நீதிமன்றில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று மனுக்களில் குறிப்பிட்ட நபர் நபர் பிரதிவாதியாக அவரது அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட ரீதியான அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.</p>
<p>எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நீதி சேவைகள் ஆணைக் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.</p>
<p>தமக்கு உதவுமாறும், தம் சார்பில் முன்னிலையாகுமாறும் அவர் அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.</p>
<p>மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதவான் சார்பில் முன்னிலையாகுமாறு நீதி சேவைகள் ஆணைக்குழு இந்த கடிதத்தின் ஊடாக சட்டமா அதிபரிடம் கோரியுள்ளது.</p>
<p>இவ்வாறான ஒரு பின்னணியில் சட்டமா அதிபர், நீதவானுடன் சில விவரங்களை கலந்துரையாட தீர்மானித்தார்.</p>
<p>கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி உரிய அதிகாரிகளின் அனுமதியுடன் இந்த ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டது.</p>
<p>எனவே முதலாவதாக சட்டமா அதிபர் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக நீதவானை, சட்டமா அதிபர் திணைகளத்திற்கு அழைக்கவில்லை.</p>
<p>எனினும் அவர் நீதவான் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் குழுவிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக அவர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.</p>
<p>இந்த சந்திப்பானது சட்டத்தரணி கட்சிக்காரர் என்ற உறவின் அடிப்படையிலான சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.</p>
<p>தனக்கு நன்றாக தெரிந்த ஒரு விடயம் தொடர்பிலான கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று அதன் பின்னர் போலி குற்றச்சாட்டுகளை சுமத்துவது அபத்தமானது.</p>
<p>சந்திப்பின் மெய்யான நோக்கத்தை மூடி மறைத்து திரிபுபடுத்தி பிழையான தகவலை வெளிப்படுத்துவது நியதிகளுக்கும் அல்ல இது அவரின் தொழில்முறைமைக்கும் புறம்பானது.</p>
<p>குறிப்பாக மேலே கூறப்பட்ட இந்த விடயங்களை உண்மையில் இந்த சம்பவத்தின் சரியான பின்னணியாகும்&#8221; என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.</p>
<p>குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே பதவி விலகியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.</p>
<p>குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் என ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.</p>
<p>அண்மையில் தனக்கான பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாகவும், புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்ததாகவும் நீதிபதி ரீ.சரவணராஜா தெரிவித்திருந்தார்.</p>
<p>மேலும், சட்டமா அதிபர், என்னை அவரது அலுவலகத்தில் (21.09.2023)ஆம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.</p>
<p>குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.</p>
<p>இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன் என கவலை வெளியிட்டிருந்தார்.</p>
<p>இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த (23-09-2023) அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன் என்றும் ரி. சரவணராஜா கூறியிருந்தார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/mullaitivu-judge-saravanarajah-issue/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
