<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ashoka sapumal rangwalla &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/ashoka-sapumal-rangwalla/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 21 Dec 2024 19:03:06 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Ashoka sapumal rangwalla &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எம்.பி பதவியை பறிகொடுக்கும் தருவாயில் முன்னாள் சபாநாயகர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ashoka-ranwala-may-lose-his-mp-position/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Dec 2024 08:54:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ashoka sapumal rangwalla]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=182831</guid>

					<description><![CDATA[எம்.பி பதவியை பறிகொடுக்கும் தருவாயில் முன்னாள் சபாநாயகர் முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல(Asoka Sapumal Ranwala ) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார். ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ முன்னாள் சபாநாயகரான அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. தனது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>எம்.பி பதவியை பறிகொடுக்கும் தருவாயில் முன்னாள் சபாநாயகர்</h4>
<p>முன்னாள் சபாநாயகர் அசோக<a href="https://www.parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/3476" target="_blank" rel="noopener"> சபுமல் ரன்வல</a>(Asoka Sapumal Ranwala ) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் உள்ளதாக <a href="https://tamilnaadi.com/uncategorized/2024/11/16/national-peoples-power-npp-2/">தேசிய மக்கள் சக்தி</a>யின் வழக்கறிஞர் அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார்.</p>
<p>ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ முன்னாள் சபாநாயகரான அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.</p>
<p>தனது கல்வி தகைமையை வெளிப்படுத்த நேரம் வழங்குமாறு அசோக ரன்வல கோரியுள்ளார். அதற்கமைய, அவருக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>அதற்குள் அவர் தனது சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும்.” என வழக்கறிஞர் கூறியுள்ளார்.</p>
<p>முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டப்படிப்பு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, அவர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/new-speaker-dr-jagath-wickramaratne/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 12:37:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ashoka sapumal rangwalla]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Polonnaruwa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=182237</guid>

					<description><![CDATA[புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல் கல்விச் சான்றிதழ் தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அசோக ரன்வெல சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய சபாநாயகரை தெரிவு செய்யவேண்டிய நெருக்கடியில் அநுர அரசு சிக்கியுள்ளது. அந்த வகையில் புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் (Jagath Wickramaratne)பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் குழு இன்று (16ம் திகதி) கூடி இறுதி முடிவு எடுக்க உள்ளது. இவர் பொலன்னறுவை(polonnaruwa) மாவட்டத்திலிருந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/12/14/uniform-of-school-students-notification-of-ministry-of-education/">கல்வி</a>ச் சான்றிதழ் தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அசோக ரன்வெல சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய சபாநாயகரை தெரிவு செய்யவேண்டிய நெருக்கடியில் அநுர அரசு சிக்கியுள்ளது.</p>
<p>அந்த வகையில் புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் (Jagath Wickramaratne)பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் குழு இன்று (16ம் திகதி) கூடி இறுதி முடிவு எடுக்க உள்ளது.</p>
<p>இவர் பொலன்னறுவை(polonnaruwa) மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.</p>
<p>புதிய <a href="https://parliament.lk/ta/speakers" target="_blank" rel="noopener">சபாநாயகர்</a> நியமனம் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு இன்று (16ம் திகதி) கூடவுள்ளது.</p>
<p>இதேவேளை, முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின்(ashoka rangwalla) கல்விச் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போலி கல்வித்தகமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டும்: வலியுறுத்தும் நாமல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/asoka-sapumal-ranwala-namal-rajapaksa/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Dec 2024 11:54:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ashoka sapumal rangwalla]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=181700</guid>

					<description><![CDATA[போலி கல்வித்தகமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டும்: வலியுறுத்தும் நாமல் சபாநாயகர் அசோக ரன்வல (Asoka Ranwala) நாடாளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளினால் அவர் சபாநாயகர் தனது பதவியை பதவி விலகல் செய்தமை பாராட்டத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவொன்றை முன்வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>போலி கல்வித்தகமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டும்: வலியுறுத்தும் நாமல்</h4>
<p>சபாநாயகர் அசோக ரன்வல (Asoka Ranwala) நாடாளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளினால் அவர் <a href="https://tamilnaadi.com/uncategorized/2024/12/06/speakers-educational-qualification-questioned/">சபாநாயகர்</a> தனது பதவியை பதவி விலகல் செய்தமை பாராட்டத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.</p>
<p>எக்ஸ் தளத்தில் பதிவொன்றை முன்வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல நேற்றையதினம் (13.12.2024) தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.</p>
<p>இதேவேளை, சபாநாயகர் அசோக ரன்வெல(ashoka rangwalla) தனது பட்ட தகுதியை நிரூபிக்க முடியாமல் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் ஆளும் அநுர அரசின் மற்றுமொரு எம்பியின் பட்ட தகுதி தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.</p>
<p>தேசிய மக்கள் சக்தியில்(npp) இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின்(Kosala Nuwan Jayawira) கல்வித் தகைமை தொடர்பிலேயே சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.</p>
<p>பொதுத் தேர்தல் பிரசாரக் காலத்தில் தன்னைப் பொறியியலாளர் என்று அவர் விளம்பரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/speaker-ashoka-ranvala-resigns/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 14:32:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ashoka sapumal rangwalla]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Speaker Ashoka Ranvala Resigns]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=181428</guid>

					<description><![CDATA[பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர் பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்</h4>
<p>பத்தாவது நாடாளுமன்றத்தின் <a href="https://tamilnaadi.com/uncategorized/2024/12/06/speakers-educational-qualification-questioned/">சபாநாயகர்</a> அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p>
<p>சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.</p>
<p>அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்திருந்ததுடன், பலர் அவரது கல்வித் தகைமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.</p>
<p>அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் உறுப்பினரான தலதா அத்துக்கோரள உள்ளிட்டோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இது தொடர்பான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.</p>
<p>இந்தநிலையில், இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல்ல அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதேவேளை, எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) இன்றையதினம் தெரிவித்திருந்தார்.</p>
<p>மேலும், மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி உறுதியளித்திருந்த நிலையில், சபாநாயகரின் தற்போதைய பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p>
<p>இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட ரன்வல, தான் பொய்யான கூற்றுக்கள் எதனையும் முன்வைக்கவில்லையென்றாலும், சில ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தற்போது தனது கல்விப் பதிவேடுகளை உறுதிப்படுத்த முடியவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.</p>
<p>“நான் முனைவர் பட்டம் பெற்ற ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், தான் பதவி விலகுவதாக தெரிவித்த சபாநாயகர், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சர்ச்சையில் சபாநாயகரின் கலாநிதி பட்டம்: அநுர அரசாங்கம் எடுக்க காத்திருக்கும் முடிவு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/speaker-ashoka-ranwala-education-issue/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 13:21:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ashoka sapumal rangwalla]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=181127</guid>

					<description><![CDATA[சர்ச்சையில் சபாநாயகரின் கலாநிதி பட்டம்: அநுர அரசாங்கம் எடுக்க காத்திருக்கும் முடிவு சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் பல்வேறு அறிக்கைகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பான செய்திகள் உண்மையாக இருந்தால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என என்ற கேள்விக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சர்ச்சையில் சபாநாயகரின் கலாநிதி பட்டம்: அநுர அரசாங்கம் எடுக்க காத்திருக்கும் முடிவு</h4>
<p>சபாநாயகர் அசோக ரன்வல தனது <a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/08/23/raayan-hit-sun-pictures-gifts-cheque-to-dhanushgroup/">கலாநிதி</a> பட்டம் குறித்து வெளிவரும் பல்வேறு அறிக்கைகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p>
<p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அத்தோடு, சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பான செய்திகள் உண்மையாக இருந்தால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சபாநாயகரின் அறிக்கைக்குப் பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.</p>
<p>“சபாநாயகர் தகுதிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட பிறகு பரிசீலிப்போம்.அறிக்கைகள் உண்மையாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும், பொய்யாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும் சொல்கிறேன்” என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த நிலையில், சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைகள் பரவியிருந்தன.</p>
<p>இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் தமக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறினால் அதனை நிரூபித்து காட்டுமாறு சபாநாயகருக்கு சவால் விடுத்திருந்தார்.</p>
<p>மேலும், சமூக ஊடகங்களில் வலம் வரும் குறித்த தகவல்கள் உண்மையாக இருந்தால் சபாநாயகர் பதவி விலக வேண்டுமென்று பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா</title>
		<link>https://tamilnaadi.com/news/local/us-support-for-the-energy-sector/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 11:18:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ashoka sapumal rangwalla]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[Kumara Jayakody]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=181108</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா இலங்கையின்(sri lanka) எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க(us) அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை மிகுந்த நம்பிக்கையளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்(julie chung) தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியை(Kumara Jayakody )இன்று (9) கொழும்பு 7 இல் அமைந்துள்ள எரிசக்தி அமைச்சில் சந்தித்த போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா</h4>
<p>இலங்கையின்(sri lanka) எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க(us) <a href="https://tamilnaadi.com/news/local/2024/12/10/speaker-ashoka-ranwala-education-issue/">அரசாங்கம்</a> தயாராக இருப்பதாகவும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை மிகுந்த நம்பிக்கையளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்(julie chung) தெரிவித்துள்ளார்.</p>
<p>எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியை(Kumara Jayakody )இன்று (9) கொழும்பு 7 இல் அமைந்துள்ள எரிசக்தி அமைச்சில் சந்தித்த போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
<p>இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் சிறப்பு நண்பன் என்ற வகையில் அமெரிக்காவின் நட்புறவையும் ஆதரவையும் தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் <a href="https://www.virakesari.lk/article/201158" target="_blank" rel="noopener">எரிசக்தி</a> அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி இதன்போது தெரிவித்தார்.</p>
<p>இதேவேளை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் அசோக ரன்வலவை சந்தித்தனர்.</p>
<p>தூதுக்குழுவில் அமெரிக்க அபிவிருத்தி முகமையின் (USAID) ஆசிய பணியகத்தின் துணை உதவி நிர்வாகி அஞ்சலி கவுர் மற்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவிற்கான துணைச் செயலாளர் ரொபேட் கப்ரோத் ஆகியோர் அடங்குவர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சபாநாயகரின் சர்ச்சைக்குரிய கலாநிதிப் பட்டம் : நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து மாயம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ashoka-ranwala-educational-qualifications-gov-web/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 10:15:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ashoka sapumal rangwalla]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=181045</guid>

					<description><![CDATA[சபாநாயகரின் சர்ச்சைக்குரிய கலாநிதிப் பட்டம் : நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து மாயம் சபாநாயகர் அசோக ரன்வலவின் (Ashoka Ranwala) கலாநிதிப் பட்டம் தொடர்பான தகவல் நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி (National People&#8217;s Power) அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் போட்டியிட்ட அசோக ரன்வெல , வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சபாநாயகரின் சர்ச்சைக்குரிய கலாநிதிப் பட்டம் : நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து மாயம்</h4>
<p>சபாநாயகர் அசோக ரன்வலவின் (Ashoka Ranwala) கலாநிதிப் பட்டம் தொடர்பான தகவல் நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.</p>
<p><a href="https://tamilnaadi.com/uncategorized/2024/11/16/national-peoples-power-npp-2/">தேசிய மக்கள் சக்தி</a> (National People&#8217;s Power) அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் போட்டியிட்ட அசோக ரன்வெல , வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தார்.</p>
<p>அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னை ஒரு கலாநிதியாக குறிப்பிட்டிருந்தார்.</p>
<p>எனினும் சபாநாயகர் அசோக ரன்வெல குறிப்பிடுவது போன்று அவர் மொரட்டுவை பல்கலைக்கழக பட்டதாரியோ, ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறவோ இல்லை என்று அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன.</p>
<p>குறித்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சபாநாயகர் பதவி விலக வேண்டுமென்று பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தி இருந்தனர்.</p>
<p>இந்நிலையில் நேற்றைய தினம் (09.12.2024) தொடக்கம் நாடாளுமன்ற இணையத்தளத்தில் சபாநாயகரின் விபரங்கள் தொடர்பான பக்கத்தில் அவரது கலாநிதிப் பட்டம் தொடர்பான விபரங்கள் நீக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதுகாலவரையும் கலாநிதி கௌரவ அசோக ரன்வெல என்று குறிப்பிடப்பட்டிருந்த அவர், கலாநிதிப் பட்டம் இன்றி கௌரவ அசோக ரன்வெல என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நீங்கள் பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபியுங்கள் : தொடர் சர்ச்சையில் சபாநாயகர்</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/speakers-educational-qualification-questioned/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Dec 2024 09:39:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Ashoka sapumal rangwalla]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka parliament]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=179921</guid>

					<description><![CDATA[நீங்கள் பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபியுங்கள் : தொடர் சர்ச்சையில் சபாநாயகர் பாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார். தனத முகநூல் பக்கத்தில் பதிவொன்றின் மூலமே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்றும், சபாநாயகர் குறித்த விடயத்திற்கு பதிலளிக்கத் தவறினால், தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நீங்கள் பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபியுங்கள் : தொடர் சர்ச்சையில் சபாநாயகர்</h4>
<p>பாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/25/election-commission-to-reconvene-soon/">தேர்தல்கள்</a> ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார்.</p>
<p>தனத முகநூல் பக்கத்தில் பதிவொன்றின் மூலமே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்றும், சபாநாயகர் குறித்த விடயத்திற்கு பதிலளிக்கத் தவறினால், தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகமை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டுமென சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி (<a href="https://en.wikipedia.org/wiki/Nirmal_Ranjith_Dewasiri" target="_blank" rel="noopener">Nirmal Ranjith Dewasiri</a> ) தெரிவித்துள்ளார்.</p>
<p>தனது கல்வித் தகமை தொடர்பில் மெய்யான தகவல்களை வெளியிடத் தவறினால் அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென பேராசிரியர் கோரியுள்ளார்.</p>
<p>மேலும், அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டுமானால் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டம் தொடர்பில் தேடி அறிந்து, பிழையான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் அவரை பதவி விலகுமாறு வலியுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள நிர்மால் ரஞ்சித், ரன்வல பிழை செய்திருந்தால் அதில் இரண்டு பிழைகள் உள்ளன. இல்லாத பட்டமொன்று இருப்பதாக மக்களிடம் கூறியமை மற்றும் பொய்யான கல்வித் தகமைகயை காண்பித்து முக்கிய பதவி ஒன்றை வகிக்க முடியும் என கருதியமை ஆகிய இரண்டு பிழைகளை செய்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>அசோக ரன்வல தனது இளங்கலை பட்டத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும், கலாநிதி பட்டத்தை ஜப்பானிலும் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இவ்வாறான ஓர் பின்னணியிலேயே சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
