<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Arrest Warrant &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/arrest-warrant/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 15 Mar 2026 11:31:27 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Arrest Warrant &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/court-issues-arrest-warrant-against-mp-asoka-ranwala/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Mar 2026 11:31:27 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Arrest Warrant]]></category>
		<category><![CDATA[Asoka Ranwala]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Mahara Magistrate Court]]></category>
		<category><![CDATA[NPP Parliamentarian]]></category>
		<category><![CDATA[Sapugaskanda accident]]></category>
		<category><![CDATA[Sri Lanka Legal News.]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=214575</guid>

					<description><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (மார்ச் 15) பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைக் கருத்திற்கொண்டே, நீதவான் இந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p data-path-to-node="1">தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (மார்ச் 15) பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைக் கருத்திற்கொண்டே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p>
<p data-path-to-node="2">கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி சப்புகஸ்கந்த, டெனிமுல்ல சந்திப்பிற்கு அருகில் அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர், அவரது சிறு குழந்தை மற்றும் மற்றொரு பெண் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். விபத்து நடந்த காலப்பகுதியில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அசோக ரன்வல கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p>
<p data-path-to-node="3">இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அசோக ரன்வலவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவும், அவர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்த அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையைப் பரிசீலித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும், இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p data-path-to-node="4">விபத்து தொடர்பான விசாரணைகளைச் சரியாக முன்னெடுக்கத் தவறியதாகச் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் சில பொலிஸ் அதிகாரிகள் மீது முன்னதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது குறித்த மேலதிக விசாரணைகளைச் சிறப்புப் பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இது குறித்த மேலதிக சட்ட நடவடிக்கைகள் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p data-path-to-node="6">
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/warrant-issued-and-travel-ban-imposed-on-ambitiwe-sumana-ratana-thero-for-anti-tamil-hate-speech/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2025 03:56:55 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ambitiwe Sumana Ratana Thero]]></category>
		<category><![CDATA[Arrest Warrant]]></category>
		<category><![CDATA[Batticaloa Magistrate's Court]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Hate Speech]]></category>
		<category><![CDATA[Incitement to Violence]]></category>
		<category><![CDATA[Travel ban]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207372</guid>

					<description><![CDATA[&#8216;வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்&#8217; என வன்முறையான கருத்தை வெளியிட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 15) பிடிவிறாந்து (Warrant) பிறப்பித்துள்ளதுடன், அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8216;வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்&#8217; என வன்முறையான கருத்தை வெளியிட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 15) பிடிவிறாந்து (Warrant) பிறப்பித்துள்ளதுடன், அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.</p>
<p>கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.</p>
<p>இதையடுத்து தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.</p>
<p>இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறித்தல் வழங்கியது.</p>
<p>இந்தநிலையில் குறித்த வழக்கு கடந்த 8-12-205 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.</p>
<p>இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15 ஆம் திகதி முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.</p>
<p>இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டபோது தேரர் முன்னிலையாகாத நிலையில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் முன்னிலையாகி, மட்டு தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்னலையாகி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று முன்னிலையாக முடியவில்லை எனவும் குறித்த தேரர் தங்கியிருக்கும் மற்றும் மறைந்திருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றுள்ளதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து அவர் வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதித்து கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டு எதிர்வரும் ஜனவரி 26 திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!</title>
		<link>https://tamilnaadi.com/news/court-orders-arrest-of-ampitiye-sumanarathana-thero-over-controversial-statement-inciting-violence-against-tamils/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Nov 2025 17:47:27 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Ampitiye Sumanarathana Thero]]></category>
		<category><![CDATA[Arrest Warrant]]></category>
		<category><![CDATA[Batticaloa Magistrate's Court]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Hate Speech]]></category>
		<category><![CDATA[ICCPR Act]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205859</guid>

					<description><![CDATA[&#8216;வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்&#8217; என்று பொதுவெளியில் பேசியதாகக் கூறப்படும், அம்பிட்டிய சுமணரத்ன தேரரைக் (Ampitiye Sumanarathana Thero) கைது செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (நவம்பர் 25) உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின் (International Covenant on Civil and Political Rights) அடிப்படையில், சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்பவரால் கடந்த 2023/10/23 அன்று இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது. மட்டக்களப்பில் உள்ள அம்பிட்டிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8216;வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்&#8217; என்று பொதுவெளியில் பேசியதாகக் கூறப்படும், அம்பிட்டிய சுமணரத்ன தேரரைக் (Ampitiye Sumanarathana Thero) கைது செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (நவம்பர் 25) உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>
<p>ICCPR சட்டத்தின் (International Covenant on Civil and Political Rights) அடிப்படையில், சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்பவரால் கடந்த 2023/10/23 அன்று இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.</p>
<p>மட்டக்களப்பில் உள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரர், &#8220;வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்&#8221; என்று பகிரங்கமாகத் தெரிவித்தமை தொடர்பாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p>
<p>இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் தேரரைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைச் சட்டத்தரணி தனுக ரணஞ்சக தனது முகநூல் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.</p>
<p>அடுத்த விசாரணை: குறித்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>ICCPR சட்டத்தின் கீழ், ஒரு சமூகத்தின் அல்லது மதத்தின் மீதான வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!</title>
		<link>https://tamilnaadi.com/news/warrant-issued-for-arrest-of-former-national-lotteries-board-director-thusitha-halloluwa-in-false-complaint-case/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Nov 2025 08:30:55 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Arrest Warrant]]></category>
		<category><![CDATA[Colombo Magistrate's Court]]></category>
		<category><![CDATA[False Complaint]]></category>
		<category><![CDATA[National Lotteries Board]]></category>
		<category><![CDATA[Thusitha Halloluwa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=204707</guid>

					<description><![CDATA[தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று வியாழக்கிழமை (நவம்பர் 13) பிடியாணை பிறப்பித்துள்ளார். நாரஹேன்பிட்டிய பகுதியில் ஒரு குழுவினர், தான் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொய்யான முறைப்பாடு அளித்த சம்பவத்தில் துசித ஹல்லொலுவ சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்தார். குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை (நவ13) விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபர் துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று வியாழக்கிழமை (நவம்பர் 13) பிடியாணை பிறப்பித்துள்ளார்.</p>
<p>நாரஹேன்பிட்டிய பகுதியில் ஒரு குழுவினர், தான் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொய்யான முறைப்பாடு அளித்த சம்பவத்தில் துசித ஹல்லொலுவ சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்தார்.</p>
<p>குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை (நவ13) விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபர் துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதன் காரணமாகவே, நீதவான் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
