<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ariyakulam &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/ariyakulam/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 18 Jul 2022 17:34:39 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>ariyakulam &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆரியகுளத்தின் நடுவே தமிழன்னைக்கு சிலை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/a-statue-of-a-tamil-woman-in-the-middle-of-ariyakulam/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/a-statue-of-a-tamil-woman-in-the-middle-of-ariyakulam/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Jul 2022 17:30:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[ariyakulam]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Manivannan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[statue]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=57038</guid>

					<description><![CDATA[ஆரியகுளத்தின் நடுவே தமிழன்னைக்கு 25 அடி உயரத்திற்கு குறையாத சிலையொன்றை நிறுவ யாழ் மாநகர சபை திட்டமிட்டுள்ளது. இன்று(18) இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் ஆரியகுளத்தின் நடுவில் தமிழன்னையின் சிலையை நிறுவுவதற்கு உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழன்னையின் சிலையை வடிவமைப்பதற்கான பொறுப்பு கலை பண்பாட்டு குழுவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. யாராவது இதற்கு நிதியுதவி செய்ய முன்வந்தால் அந்த சிலையை வடிவமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆரியகுளத்தின் நடுவே தமிழன்னைக்கு 25 அடி உயரத்திற்கு குறையாத சிலையொன்றை நிறுவ யாழ் மாநகர சபை திட்டமிட்டுள்ளது.</p>
<p>இன்று(18) இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் ஆரியகுளத்தின் நடுவில் தமிழன்னையின் சிலையை நிறுவுவதற்கு உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.</p>
<p>தமிழன்னையின் சிலையை வடிவமைப்பதற்கான பொறுப்பு கலை பண்பாட்டு குழுவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. யாராவது இதற்கு நிதியுதவி செய்ய முன்வந்தால் அந்த சிலையை வடிவமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/a-statue-of-a-tamil-woman-in-the-middle-of-ariyakulam/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழ். மாநகர சபையைக் கலைக்க ஆளுநர் முயற்சி!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/jaffna-municipal-council/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/jaffna-municipal-council/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Tue, 24 May 2022 04:41:42 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[ariyakulam]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Governor of the Northern Province]]></category>
		<category><![CDATA[Jaffna Municipal Council]]></category>
		<category><![CDATA[Jeevan Thiyagaraja]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=51221</guid>

					<description><![CDATA[யாழ். ஆரியகுளத்தில் வெசாக் தோரணங்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தீர்மானித்துள்ளார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் கடந்த சில தினங்களாக அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது. ஆரியகுளத்தில் வெசாக் அலங்காரங்களை அமைப்பதற்கு படையினர், யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆரியகுளத்தில் எந்தவொரு மத அடையாளங்களுக்கும் இடமளிப்பது இல்லை என்று மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ். ஆரியகுளத்தில் வெசாக் தோரணங்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தீர்மானித்துள்ளார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் கடந்த சில தினங்களாக அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.</p>
<p>ஆரியகுளத்தில் வெசாக் அலங்காரங்களை அமைப்பதற்கு படையினர், யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆரியகுளத்தில் எந்தவொரு மத அடையாளங்களுக்கும் இடமளிப்பது இல்லை என்று மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததால் அனுமதி வழங்க முடியாது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதையடுத்து வடக்கு மாகாண ஆளுநர், வெசாக் அலங்காரங்களை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்று மாநகர சபை பதில் மேயரிடம் நேரடியாகக் கோரியிருந்தார். அதற்கு அமைவாக இணையவழியில் மாநகர சபை உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்போது முன்னரே அனுமதி கோரவில்லை என்றும், வேண்டுமென்றே வெசாக் அன்று அனுமதி கோரியதாகவும் குறிப்பிட்ட உறுப்பினர்கள் எழுத்துமூலம் அனுமதி கோரினால் ஆராயலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.</p>
<p>இந்நிலையில், தனது உத்தரவை உதாசீனப்படுத்தியதால், மாநகர சபையை கலைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். அதற்குரிய வழிகாட்டல்கள் கொழும்பைத் தளமாகக் கொண்ட சில தரப்புக்களால் வழங்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.</p>
<p>அதற்கு அமைவாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஒன்றை முன்னெடுக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகின்றது. இதற்காக சில ஓய்வுபெற்ற நீதிபதிகளையும் அவர் அணுகியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/jaffna-municipal-council/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆரிய குளத்தில் அரசியல் செய்வதை நாம் விரும்பவில்லை! &#8211; முதல்வர் மணி தெரிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/we-do-not-want-to-do-politics-in-the-aryan-pool/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/we-do-not-want-to-do-politics-in-the-aryan-pool/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 21 May 2022 17:15:45 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[ariyakulam]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Manivannan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=51032</guid>

					<description><![CDATA[ஆரிய குளத்தில் அரசியல் செய்வதை நாம் விரும்பவில்லை. அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு மையம். மக்களுக்காக கட்டப்பட்ட விடயத்தை மக்களிடம் விட்டுவிடுங்கள். அதை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம் என யாழ் மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆரியகுளம் தற்சமயம் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆரிய குளத்தில் அரசியல் செய்வதை நாம் விரும்பவில்லை. அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு மையம். மக்களுக்காக கட்டப்பட்ட விடயத்தை மக்களிடம் விட்டுவிடுங்கள். அதை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம் என யாழ் மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.</p>
<p>யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>ஆரியகுளம் தற்சமயம் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் மிகச்சிறப்பாகவும் தூய்மையாகவும் அதனைப் பேண வேண்டுமென அவரிடம் கூறியிருக்கின்றோம். அந்த நிபந்தனையின்படி முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>மாநகர சபையின் அனுமதியும் ஆரியகுளத்தில் படகு சேவைக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. நாங்கள் பல நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்திருக்கின்றோம். படகு சேவைக்கான பாதுகாப்பு மற்றும் காப்புறுதிகள் செய்யப்படவேண்டும். நீச்சல் பயிற்சி பெற்ற இரண்டு ஊழியர்கள் தொடர்ச்சியாக கடமையாற்ற வேண்டும். பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டும் அனுமதி வழங்கப்பட்டது.</p>
<p>மேலும் ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்கவெடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் அமைதியின்மையை உருவாக்கி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும்.</p>
<p>பொறுப்பில் இருக்கின்றவர்கள் ஆரியகுளத்தில் அரசியல் செய்வதை நாம் விரும்பவில்லை. அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு மையம். மக்களுக்காக கட்டப்பட்ட விடயத்தை மக்களிடம் விட்டுவிடுங்கள். அதை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம்.இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.</p>
<p>இவ்வாறான ஒரு செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால் பொதுமக்கள் ஜனநாயக ரீதியாக உங்களுடைய எதிர்ப்பினை காட்டி போராட வேண்டும் &#8211; என்றார்.</p>
<p>கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆரியகுளம் தொடர்பாக முன்வைத்த கருத்து தொடர்பாக கேள்வியெழுப்பியபோது,</p>
<p>அவரின் கருத்துக்களை நான் கருத்திலெடுப்பதில்லை. அவரை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். மாநகரசபை ஆரியகுளத்தை புனரமைக்கும் போது அருகிலிருந்த விகாராதிபதியும் நிறுத்தக் கோரி பல்வேறு அழுத்தங்களை வழங்கிக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து கஜேந்திரகுமாரும் எதிராகப் போராடிக்கொண்டிருந்தார். அவரது கருத்தைப் பார்த்து நாம் கோபப்படவில்லை.சிலருடைய கருத்துக்களை நான் புன்னகைத்து விட்டு கடந்து விடுவேன்.</p>
<p>யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கு அருகிலுள்ள புல்லுக்குளம் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டுப்பாட்டிலுள்ள. அது தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எம்மிடம் கையளிக்கப்பட்டால் அந்த குளத்தை புனரமைக்க தயார் &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/we-do-not-want-to-do-politics-in-the-aryan-pool/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வெசாக் கூடு விவகாரம்! &#8211; ஆளுநர் மறுப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/wesak-nest-affair-governors-denial/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/wesak-nest-affair-governors-denial/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 20 May 2022 04:19:30 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ariyakulam]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[jeevan thiyagarajah]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Vesak]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=50848</guid>

					<description><![CDATA[ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ். மாநகரசபை கலைக்கவேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர் இடம் அருகே உள்ள விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ். மாநகர சபை விடயம் தொடர்பில் நான் தற்போது பேச விரும்பவில்லை எனினும் நான் மாநகர சபையை கலைப்பதாக யாரிடமும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ். மாநகரசபை கலைக்கவேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்</p>
<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர் இடம் அருகே உள்ள விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்</p>
<p>யாழ். மாநகர சபை விடயம் தொடர்பில் நான் தற்போது பேச விரும்பவில்லை எனினும் நான் மாநகர சபையை கலைப்பதாக யாரிடமும் கூறவில்லை. எனவே அந்த விடயம் தொடர்பில் நான் பேச வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/wesak-nest-affair-governors-denial/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சிங்களவர் தேவையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் முயற்சி! &#8211; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/northern-governor-tries-to-fulfill-sinhala-demand-report-by-gajendrakumar-ponnambalam/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/northern-governor-tries-to-fulfill-sinhala-demand-report-by-gajendrakumar-ponnambalam/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 16 May 2022 14:10:16 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ariyakulam]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Vesak]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=50464</guid>

					<description><![CDATA[நாகவிகாரை பிக்குவின் கோரிக்கைக்கமையவும் விகாரைக்கு வந்துபோகிறவர்களின் பொழுதுபோக்கு வசதிக்காகவுமே ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது. அதனால் அதன் தேவைகளை நிறைவேற்றவே வட மாகாண ஆளுநர் கேட்கிறார்.இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போது, ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்ட அனுமதிக்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடமாகாண ஆளுநர் எச்சரிக்கை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாகவிகாரை பிக்குவின் கோரிக்கைக்கமையவும் விகாரைக்கு வந்துபோகிறவர்களின் பொழுதுபோக்கு வசதிக்காகவுமே ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது. அதனால் அதன் தேவைகளை நிறைவேற்றவே வட மாகாண ஆளுநர் கேட்கிறார்.இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.</p>
<p>இன்று கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போது, ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்ட அனுமதிக்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடமாகாண ஆளுநர் எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>வடமாகாண ஆளுநரின் கருத்தை நாம் கண்டிக்கின்றோம். அது மிகப் பிழையான கருத்து. யதார்த்தம் என்னவென்றால் இனவெறி கொண்ட ஜனாதிபதி தயவில் இருக்கின்ற ஒருவரின் கருத்துக்கு முண்டு கொடுக்கும் வகையில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு சிங்கள தேசியவாதத்திற்கு முண்டு கொடுத்து அவர்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்க வெளிக்கிட்டு மாட்டுப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதனை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.</p>
<p>யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கு அருகில் இருக்கின்ற குளத்தைப் புனரமைத்து இருக்க முடியும். அது தமிழ் மக்கள் நடமாடக் கூடிய ஒரு மிக முக்கியமான பகுதியில் உள்ள குளம். அதை செய்யாமல் விட்டுவிட்டு இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் செயற்படும் ஒருவரின் நிதியுதவியுடன் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது.</p>
<p>நாகவிகாரை பிக்குவின் கோரிக்கைக்கமையவே ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது. நாக விகாரைக்கு வந்துபோகிறவர்களின் பொழுது போக்கு வசதிக்காகவே அது புனரமைக்கப்பட்டது. அதனை நிறைவேற்றவே ஆளுநர் கேட்கிறார். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இதனை திருத்தியதால் எமக்கு என்ன பயன்? &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/northern-governor-tries-to-fulfill-sinhala-demand-report-by-gajendrakumar-ponnambalam/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆரியகுளத்தில் எந்த மத அடையாளங்களுக்கும் இடமில்லை! &#8211; யாழ். மாநகர சபை விடாப்பிடி!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/there-is-no-place-for-any-religious-symbols-in-ariyakulam-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-municipal-council-hold-on/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/there-is-no-place-for-any-religious-symbols-in-ariyakulam-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-municipal-council-hold-on/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 16 May 2022 05:55:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[ariyakulam]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna Municipal Council]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=50388</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பரிபாலிக்கப்படும் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு படைத்தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை யாழ். மாநகர சபை நிர்வாகம் நிராகரித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமையும், இன்று திங்கட்கிழமையும் வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற நிலையில் நேற்று யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட படை அதிகாரி ஒருவர் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார். எனினும் ஆரியகுளம் பகுதியில் எந்தக் காலத்திலும், எந்த மத அடையாளங்களையும் காட்சிப்படுத்த அனுமதிப்பதில்லை என [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பரிபாலிக்கப்படும் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு படைத்தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை யாழ். மாநகர சபை நிர்வாகம் நிராகரித்துள்ளது.</p>
<p>நேற்று ஞாயிற்றுக்கிழமையும், இன்று திங்கட்கிழமையும் வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற நிலையில் நேற்று யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட படை அதிகாரி ஒருவர் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார். எனினும் ஆரியகுளம் பகுதியில் எந்தக் காலத்திலும், எந்த மத அடையாளங்களையும் காட்சிப்படுத்த அனுமதிப்பதில்லை என யாழ். மாநகர சபையில் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் தீர்மானம் இயற்றப்பட்டிருப்பதனால், சபை அனுமதி இல்லாமல் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என ஆணையாளர் தெரிவித்ததாக்க் கூறப்படுகிறது.</p>
<p>இதனையடுத்து, ஆணையாளருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறும், தவறும் பட்சத்தில் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் மாநகர சபையைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்ததையடுத்து யாழ். மாநகர சபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்று ஆணையாளரினால் நிகழ்நிலையில் நடாத்தப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் விடுமுறையில் வெளிநாடு சென்றிருப்பதனால், பிரதி முதல்வர் து.ஈசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மாநகர முதல்வரும் வெளிநாட்டிலிருந்தவாறே கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.</p>
<p>வெசாக் கொண்டாடப்படும் திகதி நிர்ணயிக்கப்பட்ட ஒரு தினம் ஆகையால் போதிய கால இடைவேளையில்லாமல் வெசாக் தினத்தன்று, அதுவும் தொலைபேசி வாயிலாக அனுமதி கோரப்பட்டமை உறுப்பினர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், முறையான எழுத்து மூல அனுமதி கோரப்படுமிடத்து அதுபற்றி பரிசீலிக்கலாம் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இது பற்றி வடக்கு மாகாண ஆளுநருக்கும், உள்ளூராட்சி ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/there-is-no-place-for-any-religious-symbols-in-ariyakulam-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-municipal-council-hold-on/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆரியகுளத்தில் வெசாக் கூடு! &#8211; மாநகர சபை அனுமதி மறுப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/wesak-nest-in-ariyakulam-denial-of-permission-by-the-municipal-council/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/wesak-nest-in-ariyakulam-denial-of-permission-by-the-municipal-council/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 16 May 2022 05:18:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[ariyakulam]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jaffna Municipal Council]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[wesak]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=50383</guid>

					<description><![CDATA[ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ் மாநகர சபை  நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, &#8220;வெசாக் கூடு ஆரியகுளத்தில் கட்டுவதற்கு அனுமதிக்கப்படாவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும்&#8221; என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கப்பட்டு உடனடியாக அனுமதி கொடுக்குமாறு கட்டளையிட்டார். எனினும் நேற்றைய தினம் அவசர அவசரமாக மாநகர சபை உறுப்பினர்கள் இணைய வழியில் கூடி சபை கலைக்கப்படுவது பற்றி பிரச்சினை இல்லை என்றும், சபை தீர்மானத்தை மீற முடியாது என்றும், முறைப்படி எழுத்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ் மாநகர சபை  நிராகரிக்கப்பட்டது.</p>
<p>இதனையடுத்து, &#8220;வெசாக் கூடு ஆரியகுளத்தில் கட்டுவதற்கு அனுமதிக்கப்படாவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும்&#8221; என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கப்பட்டு உடனடியாக அனுமதி கொடுக்குமாறு கட்டளையிட்டார்.</p>
<p>எனினும் நேற்றைய தினம் அவசர அவசரமாக மாநகர சபை உறுப்பினர்கள் இணைய வழியில் கூடி சபை கலைக்கப்படுவது பற்றி பிரச்சினை இல்லை என்றும், சபை தீர்மானத்தை மீற முடியாது என்றும், முறைப்படி எழுத்து மூல கோரிக்கையை தந்தால் வேறு ஏதாவது வழி இருக்கா என்று பரிசீலனை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.</p>
<p>அதனையடுத்து மாநகர சபை  அனுமதி வழங்காமல் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/wesak-nest-in-ariyakulam-denial-of-permission-by-the-municipal-council/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆரியகுளத்தின் புனிதத்தன்மையை உறுதி செய்க!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/confirm-the-sanctity-of-ariyakulam/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/confirm-the-sanctity-of-ariyakulam/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Jan 2022 11:51:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[ariyakulam]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Sanctity]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=35849</guid>

					<description><![CDATA[வடக்கு &#8211; கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்சநீதிமன்ற வழக்கு ஆவணங்கள் நீண்டகாலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளது. அவற்றை கால தாமதமின்றி விரைவுபடுத்தி தீர்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கையின் பிரதம நீதியரசரிடம் வலியுறுத்துவதற்கு மகஜர் சமர்பிக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் சிரேஸ்ர மனித உரிமை சட்டத்தரணியுமான முடியப்பக றெமீடியஸ் முன்வைத்த யோசனைக்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. யாழ்’ மாநகர சபையின் மாதாந்த அமர்வும் புதிய அண்டின் முதலாவது அமர்வும் இன்று [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">வடக்கு &#8211; கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்சநீதிமன்ற வழக்கு ஆவணங்கள் நீண்டகாலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளது.</p>
<p style="text-align: justify;">அவற்றை கால தாமதமின்றி விரைவுபடுத்தி தீர்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கையின் பிரதம நீதியரசரிடம் வலியுறுத்துவதற்கு மகஜர் சமர்பிக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் சிரேஸ்ர மனித உரிமை சட்டத்தரணியுமான முடியப்பக றெமீடியஸ் முன்வைத்த யோசனைக்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p>
<p style="text-align: justify;">யாழ்’ மாநகர சபையின் மாதாந்த அமர்வும் புதிய அண்டின் முதலாவது அமர்வும் இன்று நடைபெற்றது. இதன்போதே குறித்த முன்மொழிவுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>இது தொடர்டபில் மேலும் கருத்துரைத்த உறுப்பினர் றெமீடியஸ்</strong></p>
<p style="text-align: justify;">வடமாகாணத்திற்கான விஜயமொற்றை முன்னெடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்திற்கு பிரதம நீதியரசர் வருகை தரவுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில், வடக்கு – கிழக்கை சேர்ந்த மேன்முறையீட்டுக்காக சமர்ப்பித்தும், இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது தேங்கியுள்ள வழக்குகளை விரைவுபடுத்துமாறும்,</p>
<p style="text-align: justify;">காலதாமததைத் தவிர்த்து நீதிக்காக காத்திருக்கும் தரப்பினருக்கு விரைவான தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் எமது சபையின் ஊடாக ஒரு முன்மொழிவை நிறைவேற்ற வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அதனை குறித்த ஆவணங்களுடன் அவரிடம் சமர்ப்பித்து வலியுறுத்துவது தொடர்பில் றெமீடியஸ் பிரஸ்தாபித்து அதனை ஒரு முன்மொழிவாக சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் குறித்த யோசனையை சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதுடன் குறித்த ஆவணங்களை பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பில் கடிதம் ஒன்று தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் வரையறை செய்துள்ளது.</p>
<p style="text-align: justify;">அத்துடன் அவ்வாறு ஒழுக்கம் மற்றும் சட்டவரையறையை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு, எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ அல்லது அவரை நீக்கவோ அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் மணிவண்ணனால் தெரிவிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதனிடையே வாகன பகுதியில் ஒரே ஒரு அதிகாரியே இருப்பதால் வாகனங்களில் ஏற்படும் சாதாரண பழுதுகளை கூட உடனடியாக செய்யமுடியாதிருப்பதால், அவரது அதிகாரத்தை மேலும் பலருக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதனிடையே யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் சபையில் விவாதிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக இறுதியாக நடைபெற்ற குறித்த கண்காட்சிக்காக மாநகரசபைக்க செலுத்த வேண்டிய நிதியான 30 இலட்சம் இதுவரை செலுத்தப்படாதிருந்ததாகவும், அதில் 10 இலட்சம் தற்போது குறித்த தரப்பினரால் செலுத்தப்பட்டுள்ளதாகவும். மிகுதிப் பணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">இதேநேரம் இம்முறை இறுக்கமாக வர்த்தக கண்காட்சியில் ஸ்ரோல் ஒன்றின் அறவீடு குறைப்பு. மாநகரசபை இறுக்கமாக இருக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">நுழைவுச் சீட்டு உள்ளிட்ட விடயங்களில் மோசடி இடம்பெறாத வகையில் கண்காணிப்பு இறுக்கமாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.</p>
<p style="text-align: justify;">அவ்வாறு மோசடிகள் காணப்பட்டால் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 3 இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் ஆரியகுளம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அப்பகுதியை புனரமைக்கும் போது, இருந்துவந்த நிலை தற்போது மாறி, பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தேறி வருவதால், அப்பகுதியில் சிசிரிவி பொருத்தல் அவசியம்.</p>
<p style="text-align: justify;">அதன் பாதுகாப்பையும் புனிதத்தன்மையையும் உறுதிசெய்ய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈபிடிபியின் மாநகர சபை இரா.செல்வவடிவேல் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/confirm-the-sanctity-of-ariyakulam/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆரியகுளம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டதா? &#8211; ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மாநகர ஆணையாளருக்கு வடக்கு ஆளுநர் பணிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/is-ariyakulam-under-the-jurisdiction-of-the-municipal-council-task-to-submit-documents/</link>
					<comments>https://tamilnaadi.com/news/is-ariyakulam-under-the-jurisdiction-of-the-municipal-council-task-to-submit-documents/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jan 2022 20:07:37 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[ariyakulam]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna Municipal Council]]></category>
		<category><![CDATA[jeevan thiyakarajah]]></category>
		<category><![CDATA[Manivannan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=33401</guid>

					<description><![CDATA[வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்கு கிடையாது என்று வடக்கு ஆளுநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்கு திடலாக பொதுமக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது. ஆரியகுள புனரமைப்புப் பணிகளின் போது, மதச் சின்னங்களை நிறுவுவதில் இழுபறி நிலை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த கடிதத்தில், யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்கு கிடையாது என்று வடக்கு ஆளுநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்கு திடலாக பொதுமக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது.</p>
<p>ஆரியகுள புனரமைப்புப் பணிகளின் போது, மதச் சின்னங்களை நிறுவுவதில் இழுபறி நிலை தோன்றியிருந்த நிலையில், எந்தவொரு மத அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கட்டமைப்பெதனையும் அமைப்பதில்லை என்று மாநகர சபையில் தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது.</p>
<p>எனினும், அரசியலமைப்பின் படி மத அனுட்டானங்களைத் தடுக்கும் அதிகாரம் சபைக்கு இல்லை என்று சுட்டிக் காட்டியிருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஆரியகுளம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரித்து ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் மாநகர ஆணையாளரைப் பணித்திருக்கிறார்.</p>
<p>இதேவேளை, சமயத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் தன்னைச் சந்திப்பதற்கு ஆலோசனை வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone  wp-image-33402" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/IMG-0353-1-203x300.jpg" alt="IMG 0353 1" width="820" height="1212" title="ஆரியகுளம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டதா? - ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மாநகர ஆணையாளருக்கு வடக்கு ஆளுநர் பணிப்பு 2"></p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/is-ariyakulam-under-the-jurisdiction-of-the-municipal-council-task-to-submit-documents/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆரியகுளம் புனரமைப்பும் &#8211; கருத்துருவாக்க சர்ச்சைகளும்!!</title>
		<link>https://tamilnaadi.com/videos/ariyakulam-reconstruction-conceptual-controversies/</link>
					<comments>https://tamilnaadi.com/videos/ariyakulam-reconstruction-conceptual-controversies/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Dec 2021 12:31:08 +0000</pubDate>
				<category><![CDATA[காணொலிகள்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[ariyakulam]]></category>
		<category><![CDATA[Historical Place]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=29645</guid>

					<description><![CDATA[இலங்கையினுடைய வரலாற்று பின்னணியில் தமிழர்களின் பழமை வாய்ந்த நாகரிகம் கலாசார பண்புகள் என்பன மிக முக்கியமான தாக்கம் வகிக்கக்கூடியவையாக இருக்கின்றன. இலங்கையின் பிரதான இனக்குழுக்களில் ஒன்றாக தமிழர்கள் இருப்பதன் காரணமாக அவர்களது கலை, வழிபட்டு முறைமைகள், உணவுப் பாரம்பரியம், கலாசாசரம் என்பவற்றுடன் அணுகியே ஒரு நாட்டின் வரலாற்றை எடுத்து நோக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது. வடக்கு மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் திகழ்கின்ற நிலையில் குறித்த யாழ். மாவட்டத்தின் ஓர் அங்கமாகவும், அண்மைக்கால மிக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையினுடைய வரலாற்று பின்னணியில் தமிழர்களின் பழமை வாய்ந்த நாகரிகம் கலாசார பண்புகள் என்பன மிக முக்கியமான தாக்கம் வகிக்கக்கூடியவையாக இருக்கின்றன. இலங்கையின் பிரதான இனக்குழுக்களில் ஒன்றாக தமிழர்கள் இருப்பதன் காரணமாக அவர்களது கலை, வழிபட்டு முறைமைகள், உணவுப் பாரம்பரியம், கலாசாசரம் என்பவற்றுடன் அணுகியே ஒரு நாட்டின் வரலாற்றை எடுத்து நோக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.</p>
<p>வடக்கு மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் திகழ்கின்ற நிலையில் குறித்த யாழ். மாவட்டத்தின் ஓர் அங்கமாகவும், அண்மைக்கால மிக முக்கிய பேசுபொருளாக ஆகியிருக்கக்கூடியதுமான ஓர் பகுதி ஆரியகுளம். பல்வேறு கட்ட புனரமைப்பு பணிகளின் பின்னர் கடந்த வியாழக்கிழமை அதாவது டிசம்பர் மாதம் 02ம் திகதி 2021ம் ஆண்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஆரிய குளம் திடலானது இப்போது இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>
<p><img decoding="async" class="alignnone  wp-image-29649" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-08-at-9.44.29-PM-300x225.jpeg" alt="WhatsApp Image 2021 12 08 at 9.44.29 PM" width="989" height="742" title="ஆரியகுளம் புனரமைப்பும் - கருத்துருவாக்க சர்ச்சைகளும்!! 4" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-08-at-9.44.29-PM-300x225.jpeg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-08-at-9.44.29-PM-1024x768.jpeg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-08-at-9.44.29-PM-768x576.jpeg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-08-at-9.44.29-PM-1536x1152.jpeg 1536w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-08-at-9.44.29-PM.jpeg 1600w" sizes="(max-width: 989px) 100vw, 989px" /></p>
<p>ஆரியகுளம் மகிழ் திடலாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள குளமானது ஏறக்குறைய ஓர் அழுக்கடைந்த நீர்த் தேக்கமாகவே அண்மைக்காலமாக காணப்பட்டிருக்கிறது. வெறுமனே குப்பைகள், அழுக்குகள் சேகரிக்கப்பட்ட ஓர் நீர் குப்பையாக காணப்பட்ட இக்குளமானது இப்போது கண்கவர் மகிழ் திடலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமைக்கு யாழ் மாநகர சபை ஓர் மிக முக்கிய காரணம்.</p>
<p>அதாவது இந்த ஆரிய குளத்தின் வரலாற்றுப் பின்னணி என்ன? இந்த பகுதிக்கு உருத்துக் கோரும் அருகதை யாருக்கு உள்ளது? என்பது போன்ற பல கேள்விகளை குறித்த அபிவிருத்தி திட்டம் ஏற்படுத்தியுள்ளது. இவை குறித்த பல காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவற்றுக்கான ஓர் காத்திரமான பதிலாக பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரை அமைகின்றமை வெட்ட வெளிச்சம்.</p>
<p>#Ariyakulam #SriLankaNews #historicalPlace #Karuvulam</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/videos/ariyakulam-reconstruction-conceptual-controversies/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
