<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>appointments &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/appointments/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Mar 2022 06:27:27 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>appointments &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ்.ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் இல்லை !!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/politics-local/no-new-appointments-in-jaffna-coordinating-committee/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/politics-local/no-new-appointments-in-jaffna-coordinating-committee/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 06:27:27 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointments]]></category>
		<category><![CDATA[Committee]]></category>
		<category><![CDATA[Coordinating]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=40368</guid>

					<description><![CDATA[யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படவில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் விளக்கமளித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாகவே இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதி ஒருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம் பெற்றுள்ளது என்பதையும் அது தொடர்பான கடிதம் நமக்கு கிடைத்துள்ளது என்பதையும் தெளிவு படுத்துகிறோம் எனவே யாழ் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படவில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் விளக்கமளித்துள்ளார்.</p>
<p>தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாகவே இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p>
<p>யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதி ஒருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம் பெற்றுள்ளது என்பதையும் அது தொடர்பான கடிதம் நமக்கு கிடைத்துள்ளது என்பதையும் தெளிவு படுத்துகிறோம்</p>
<p>எனவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிய நியமனம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை.</p>
<p>அத்தோடு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு எதிரான முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளன என்ற செய்தி அறிக்கையிடல்களும் போலியானவை.</p>
<p>ஒருசில சுயலாப ஊடகவியலாளர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகளை ஏனைய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பிரசுரிப்பது அவர்களின் ஊடகத்துக்கு விரோதமான செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்கெதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதற்கமைய பிரதமர் அலுவலக பிரதிநிதியாக காசிலிங்கம் கீதநாத் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்ருந்தன.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/politics-local/no-new-appointments-in-jaffna-coordinating-committee/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/area/attention-preschool-teachers-make-reasonable-requests/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/area/attention-preschool-teachers-make-reasonable-requests/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Feb 2022 09:09:18 +0000</pubDate>
				<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointments]]></category>
		<category><![CDATA[demanding]]></category>
		<category><![CDATA[district]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Northern]]></category>
		<category><![CDATA[Permanent]]></category>
		<category><![CDATA[pre]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<category><![CDATA[province]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[staged]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[teachers]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39726</guid>

					<description><![CDATA[வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரியும் நிரந்தர நியமனம் வழங்கக்கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவும் அதற்கு உட்பட்ட காலப்பகுதியிலும் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றியிருந்தவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக ரூபா 6000 மாத்திரமே வழங்கப்படுவதாகவும் சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டும் எனக்கோரி குறித்தஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரியும் நிரந்தர நியமனம் வழங்கக்கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.</p>
<p>யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p>
<p>கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவும் அதற்கு உட்பட்ட காலப்பகுதியிலும் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றியிருந்தவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக ரூபா 6000 மாத்திரமே வழங்கப்படுவதாகவும் சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டும் எனக்கோரி குறித்தஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது</p>
<p>குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆதரவு வழங்கினர் ஆர்ப்பாட்டக்காரர்களின் இடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.</p>
<p>அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரிடம் முன்பள்ளி ஆசிரியர்களால் மகஜர் கையளிக்கப்பட்டது.</p>
<p>அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>வடக்கு மாகாண ஆளுநர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு வவுனியாவிற்குச் சென்றதன் காரணமாக இன்றைய தினம் சந்திக்க முடியாது என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தெரிவித்ததாக ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்ற முன்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.</p>
<p>இருப்பினும் ஆளுநரின் செயலாளர் தம்மைச் வந்து சந்திக்க வேண்டும் எனக்கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/area/attention-preschool-teachers-make-reasonable-requests/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
