<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Amarapura Maha Nikaya &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/amarapura-maha-nikaya/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 02 Jan 2026 17:01:25 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Amarapura Maha Nikaya &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!</title>
		<link>https://tamilnaadi.com/news/president-anura-kumara-dissanayake-receives-new-year-blessings-from-most-ven-karagoda-uyangoda-maithrimurthi-maha-nayaka-thero/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 17:01:25 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Amarapura Maha Nikaya]]></category>
		<category><![CDATA[Colombo news]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[President Anura Kumara]]></category>
		<category><![CDATA[Presidential New Year Visit.]]></category>
		<category><![CDATA[Religious Blessings 2026]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208663</guid>

					<description><![CDATA[புத்தாண்டை முன்னிட்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கை அமரபுர மகா பீடத்தின் மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். வெள்ளவத்தையில் அமைந்துள்ள அமரபுர மகா பீட பிக்கு தலைமையகம். நேற்று வியாழக்கிழமை (01) பிற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதி, அமரபுர மகா பீடத்தின் மகா நாயக்க தேரர் வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரை நேரில் சந்தித்தார். இதன்போது மகா நாயக்க தேரரின் நலம் குறித்து விசாரித்த ஜனாதிபதி, அவருடன் சிறிது நேரம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>புத்தாண்டை முன்னிட்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கை அமரபுர மகா பீடத்தின் மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். வெள்ளவத்தையில் அமைந்துள்ள அமரபுர மகா பீட பிக்கு தலைமையகம்.</p>
<p>நேற்று வியாழக்கிழமை (01) பிற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதி, அமரபுர மகா பீடத்தின் மகா நாயக்க தேரர் வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரை நேரில் சந்தித்தார்.</p>
<p>இதன்போது மகா நாயக்க தேரரின் நலம் குறித்து விசாரித்த ஜனாதிபதி, அவருடன் சிறிது நேரம் சுமுகமாக உரையாடினார். இந்தச் சந்திப்பின் போது, மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு செத்பிரித் பாராயணம் செய்து, புத்தாண்டிற்கான ஆசீர்வாதங்களை வழங்கினர்.</p>
<p>ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெறும் வழக்கத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருமலை புத்தர் சிலை அகற்றம்: முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விகாரை அகற்றப்பட்டதைக் கண்டித்து அமரபுர மகா நிக்காய தலைமை தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/amarapura-maha-nikaya-chief-prelate-sends-letter-to-president-condemning-removal-of-buddha-statue-from-registered-trincomalee-vihara/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Nov 2025 08:50:01 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Amarapura Maha Nikaya]]></category>
		<category><![CDATA[Chief Prelate]]></category>
		<category><![CDATA[Karagoda Uyana Goda Maitri Murthy]]></category>
		<category><![CDATA[Trincomalee Buddha Statue]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205155</guid>

					<description><![CDATA[திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க தேரர் கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர் அவர்கள், ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி, குறித்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். தலைமை தேரர் அந்தக் கடிதத்தில், திருகோணமலை விவகாரத்தின் உண்மை நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரை 1951 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும், குறித்த விஹாரை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க தேரர் கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர் அவர்கள், ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி, குறித்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.</p>
<p>தலைமை தேரர் அந்தக் கடிதத்தில், திருகோணமலை விவகாரத்தின் உண்மை நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரை 1951 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும், குறித்த விஹாரை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>கடந்த 2014 ஆம் ஆண்டில் விஹாரை அமைந்துள்ள காணியின் உரிமை அப்போதைய ஜனாதிபதியால் வழங்கப்பட்ட மானியப்பத்திரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இந்தச் சூழலில், திருகோணமலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 16) இடம்பெற்ற புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என அமரபுர மகாநிக்காயவின் தலைமை தேரர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>எனவே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு தலைமை தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
