<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>21st Amendment &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/21st-amendment/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 20 Jun 2022 07:04:21 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>21st Amendment &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/cabinet-approves-21st-amendment/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/cabinet-approves-21st-amendment/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jun 2022 07:04:21 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[21st Amendment]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[thamilnaadi]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=53471</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை இன்று (20) அனுமதி வழங்கவுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கமென என பெயரிடப்பட்டுள்ள தற்போதைய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று (20) மாலை நடைபெறவுள்ளது. இதன்போது உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கவுள்ளது. இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார். 21 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை இன்று (20) அனுமதி வழங்கவுள்ளது.</p>
<p>சர்வக்கட்சி அரசாங்கமென என பெயரிடப்பட்டுள்ள தற்போதைய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று (20) மாலை நடைபெறவுள்ளது.</p>
<p>இதன்போது உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கவுள்ளது. இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.</p>
<p>அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.</p>
<p>21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இழுபறி நிலையில் உள்ள சரத்துகள் தொடர்பில் இதன்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டு, சட்டமூலத்துக்கு மொட்டு கட்சியின் இணக்கப்பாடு பெறப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு அவசியம். எனினும், 21 இல் உள்ள சில சரத்துகளுக்கு அக்கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையிலேயே சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>சர்வக்கட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், கட்சிகளின் ஆலோசனைகளை, திருத்தங்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு, இரு தடவைகள் சர்வக்கட்சி கூட்டமும் நடத்தப்பட்டது.</p>
<p>அதன்பின்னர் திருத்தப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. உள்ளடக்கங்கள் தொடர்பில் கலந்துரையாட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே இது விடயம் சம்பந்தமாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.</p>
<p>ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிப்பதற்கும், நாடாளுமன்ற அனுமதியுடன் பிரதமரை பதவி நீக்குவதற்கும் 21 இல் இடமளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.</p>
<p>அமைச்சரவை அனுமதியின் பின்னர், சட்டமா அதிபரின் சான்றுரை கிடைக்கப்பெற்ற பின்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும். அதன்போதே உள்ளடக்கங்கள் தொடர்பில் தெளிவான விளக்கத்தை பெறக்கூடியதாக இருக்கும்.</p>
<p>வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதனை சவாலுக்குட்படுத்த 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இக்காலப்பகுதியில் உயர்நீதிமன்றத்தை நாடலாம்.</p>
<p>உயர்நீதிமன்றத்தில் சட்ட விளக்கம், யோசனைகள் என்பன மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டு, சட்டம் இயற்றும் பணி இடம்பெறும்.</p>
<p>ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 73 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.</p>
<p>ஆர்.சனத்</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/cabinet-approves-21st-amendment/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>21 திருத்த சட்டம் தேவையற்றது! &#8211; கூறுகிறார் பஸில்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-21st-amendment-act-is-unnecessary-says-basil/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-21st-amendment-act-is-unnecessary-says-basil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jun 2022 08:29:14 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[21st Amendment]]></category>
		<category><![CDATA[Basil Rajapaksa]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=52741</guid>

					<description><![CDATA[&#8220;அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நான் எதிர்க்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து.&#8221; &#8211; என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார். &#8220;21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பிரதமருடன் பேச்சு நடத்தினோம். அதில் உள்ள சரத்துகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியது யாரென தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் சிறு அளவிலான திருத்தங்கள் தேவையில்லை. முழுமையான அரசமைப்பு மறுசீரமைப்பே [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நான் எதிர்க்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து.&#8221; &#8211; என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.</p>
<p>ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>&#8220;21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பிரதமருடன் பேச்சு நடத்தினோம். அதில் உள்ள சரத்துகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியது யாரென தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் சிறு அளவிலான திருத்தங்கள் தேவையில்லை. முழுமையான அரசமைப்பு மறுசீரமைப்பே அவசியம்.&#8221; என்வும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.</p>
<p>அதேவேளை, தேர்தலை எதிர்கொள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாரெனவும் அவர் அறிவித்தார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-21st-amendment-act-is-unnecessary-says-basil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>21வது திருத்தசட்டம்! &#8211; 8ஆம் திகதி  தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/21st-amendment-tamil-progressive-alliance-results-on-the-8th/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/21st-amendment-tamil-progressive-alliance-results-on-the-8th/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jun 2022 10:55:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[21st Amendment]]></category>
		<category><![CDATA[Colombo - Nugegoda]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Mano Ganesan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=52512</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தமது நிலைப்பாட்டை எதிர்வரும் 08 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது. கூட்டணியின் அரசியல் குழு, கொழும்பு நுகேகொடை செயலகத்தில் 08 ஆம் திகதி கூடவுள்ளது. &#8220;நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, ஜனாதிபதி வகிக்க கூடிய அமைச்சுக்கள், பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அமைச்சர்களை நியமிப்பதற்கான பிரதமரின் அதிகாரம், இரட்டை குடியுரிமை, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுயாதீனம் உட்பட்ட விவகாரங்களை ஆராயும். அதேவேளை இவற்றை விட இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தமது நிலைப்பாட்டை எதிர்வரும் 08 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.</p>
<p>கூட்டணியின் அரசியல் குழு, கொழும்பு நுகேகொடை செயலகத்தில் 08 ஆம் திகதி கூடவுள்ளது.</p>
<p>&#8220;நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, ஜனாதிபதி வகிக்க கூடிய அமைச்சுக்கள், பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அமைச்சர்களை நியமிப்பதற்கான பிரதமரின் அதிகாரம், இரட்டை குடியுரிமை, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுயாதீனம் உட்பட்ட விவகாரங்களை ஆராயும்.</p>
<p>அதேவேளை இவற்றை விட இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பக்க விளைவாக விகிதாசார தேர்தல் முறைமைக்கும், 13ம் திருத்தம் மூலமான மாகாணசபை முறைமைக்கும் உடனடியாகவோ, காலம் கழித்தோ வரக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அவதானத்தை கொண்டுள்ளது.&#8221; என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/21st-amendment-tamil-progressive-alliance-results-on-the-8th/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>21வது திருத்தச்சட்டம் இன்று முன்வைப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/21st-amendment-presentation-today/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/21st-amendment-presentation-today/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jun 2022 04:20:54 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[21st Amendment]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=52446</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பிற்கான உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவையில் இன்று (06) முன்வைக்கப்படவுள்ளது. உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். குறித்த சட்டமூலத்தை கட்சி தலைவர்களுக்கு பகிர்ந்தளித்து, கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் யோசனைகளை உள்வாங்கி, இறுதிப்படுத்தப்பட்ட சட்டமூலத்தை ஜுன் 06 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில் இரு தடவைகள் சர்வக்கட்சி கூட்டமும் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையிலேயே இறுதிப்படுத்தப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டமூலம், ஜனாதிபதி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலமைப்பிற்கான உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவையில் இன்று (06) முன்வைக்கப்படவுள்ளது.</p>
<p>உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.</p>
<p>குறித்த சட்டமூலத்தை கட்சி தலைவர்களுக்கு பகிர்ந்தளித்து, கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் யோசனைகளை உள்வாங்கி, இறுதிப்படுத்தப்பட்ட சட்டமூலத்தை ஜுன் 06 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.</p>
<p>இதற்கிடையில் இரு தடவைகள் சர்வக்கட்சி கூட்டமும் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.</p>
<p>இந்நிலையிலேயே இறுதிப்படுத்தப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டமூலம், ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றத்தில் பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனையில் திருத்தம் உள்வாங்கப்படவில்லை.</p>
<p>ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு பதவியை மட்டும் வகிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதிக்கு தனது இஷ்டப்படி பிரதமரை, பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அனுமதியுடனேயே பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கலாம் என்ற ஏற்பாடு உள்வாங்கப்பட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/21st-amendment-presentation-today/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>21 இன் தலைவிதி இன்று நிர்ணயம்!</title>
		<link>https://tamilnaadi.com/articles/the-fate-of-21-is-determined-today/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/the-fate-of-21-is-determined-today/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jun 2022 06:26:52 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[21st Amendment]]></category>
		<category><![CDATA[executive president]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Peramuna]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=52247</guid>

					<description><![CDATA[பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், 21 இலும் தொடர வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர், தனக்கு தேவையான நேரத்தில் பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடு &#8217;20&#8217; ஆவது திருத்தச்சட்டம் ஊடாக மாற்றியமைக்கப்பட்டது. பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கைகளுக்குள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், 21 இலும் தொடர வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.</p>
<p>நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர், தனக்கு தேவையான நேரத்தில் பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.</p>
<p>இந்த ஏற்பாடு &#8217;20&#8217; ஆவது திருத்தச்சட்டம் ஊடாக மாற்றியமைக்கப்பட்டது. பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கைகளுக்குள் சென்றது.</p>
<p>நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான உத்தேச 21 ஆவது  திருத்தச்சட்டமூலத்தில், பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை. 20 இல் இருந்த அந்த ஏற்பாடு உள்வாங்கப்படவில்லை.</p>
<p>நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி,  நாடாளுமன்றத்துக்கான அதிகாரங்களை பலப்படுத்துவதே &#8217;21&#8217; இன் பிரதான நோக்கமாக உள்ள நிலையில், தனக்கு தேவையான நேரத்தில் பிரதமரை, ஜனாதிபதி பதவி நீக்கலாம் என்ற ஏற்பாடு, அந்த நோக்கத்துக்கு பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்படுகின்றது.</p>
<p>எனவே, அந்த ஏற்பாடு உள்வாங்க்கப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், 20 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்தவாறு , குறித்த ஏற்பாடு &#8217;21&#8217; இலும் தொடர வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>அத்துடன், ஜனாதிபதியால் பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிக்க முடியும் என்ற ஏற்பாடும் 21 இற்குள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் எடுத்துரைத்துள்ளனர்.</p>
<p>நாடாளுமன்றத்தில் மொட்டு கட்சி வசமே, பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே , அக்கட்சியின் இணக்கப்பாடின்றி &#8217;21&#8217; ஐ நிறைவேற்றுவதும் சவாலுக்குரிய விடயமாகும்.</p>
<p>அதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>பிரதமர் தலைமையில் இன்று  (02) கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.</p>
<p>இதன்போது 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் 21 ஐ முன்வைக்க இருப்பதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் , பொதுத் தேர்தலொன்றின் பின்னர் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான நாளில் இருந்து நான்கரை வருடங்கள் முடிவடைந்த பிறகே நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.</p>
<p>இந்த கால எல்லை இரண்டரை வருடங்களென &#8217;20&#8217; இல் குறைக்கப்பட்டது. &#8217;21&#8217; இலும் அந்த வரையறை தொடர்கின்றது. எனவே, ஜனாதிபதி தான் நினைத்தால் 2023 பெப்ரவரியில் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம்.</p>
<p>2023 பெப்ரவரியில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலொன்றுக்கு செல்வதற்காகவே, அந்த ஏற்பாட்டில் திருத்தம் செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>ஆர்.சனத்</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/the-fate-of-21-is-determined-today/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அனைவரும் இணங்கும் அரசியலமைப்பு விரைவில்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/constitution-that-everyone-agrees-on-soon/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/constitution-that-everyone-agrees-on-soon/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jun 2022 06:41:21 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[21st Amendment]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=52159</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அனைத்துத் தரப்பினரும் இணங்கக் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியுமென நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 21ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் நிறைவேற்றப்படுவதையடுத்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உத்தேச 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா ராமான்ய மகா நாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள், 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அனைத்துத் தரப்பினரும் இணங்கக் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியுமென நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.</p>
<p>21ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் நிறைவேற்றப்படுவதையடுத்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>உத்தேச 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா ராமான்ய மகா நாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள், 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது நீதியமைச்சரால் மகாநாயக்க தேரருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,</p>
<p>2015ஆம் ஆண்டு 19ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p>சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன. அதற்கமைய 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் போது அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுவதுடன் அதன்மூலம் ஜனநாயகத்தையும் பலப்படுத்த முடியும்.</p>
<p>அந்தவகையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதற்கு இடைப்பட்ட நாட்களில் அச் சட்டமூலம் தொடர்பில் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>அதேவேளை, அரசியல் செய்வதற்கு நாடு ஒன்று அவசியமாகும். அந்த வகையில் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அனைவரும் கட்சி, அரசியல் பேதங்களின்றி ஒன்றிணைவது அவசியம் என்றும் இதன்போது மகாநாயக்க தேரர் நீதியமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/constitution-that-everyone-agrees-on-soon/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>21வது திருத்தச் சட்டம் &#8211; 6ம் திகதி முன்வைப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/21st-amendment-act-presentation-on-6th/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/21st-amendment-act-presentation-on-6th/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jun 2022 04:52:21 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[21st Amendment]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[metting]]></category>
		<category><![CDATA[Peramuna]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=52144</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 6 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படும் &#8211; என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளை (03) சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பையடுத்து 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகன்றது. அதன்பின்னர் திங்களன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும். அதேவேளை ,மொட்டு கட்சி எம்.பிக்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 6 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படும் &#8211; என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.</p>
<p>21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளை (03) சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.</p>
<p>இச்சந்திப்பையடுத்து 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகன்றது. அதன்பின்னர் திங்களன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும்.</p>
<p>அதேவேளை ,மொட்டு கட்சி எம்.பிக்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/21st-amendment-act-presentation-on-6th/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>21வது திருத்தச் சட்டம்! &#8211; ஆளுங்கட்சிக்குள் மோதல்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/21st-amendment-act-conflict-within-the-ruling-party/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/21st-amendment-act-conflict-within-the-ruling-party/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 31 May 2022 05:31:28 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[21st Amendment]]></category>
		<category><![CDATA[Basil Rajapaksa]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Peramuna]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=51949</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச உட்பட மொட்டு கட்சியின் பல எம்.பிக்களும் சந்திப்பில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p>
<p>ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.</p>
<p>பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.</p>
<p>மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச உட்பட மொட்டு கட்சியின் பல எம்.பிக்களும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.</p>
<p>இதன்போது உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் உணவு பஞ்சம் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.</p>
<p>அவ்வேளையில் 21 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு முன்னர், பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>பொருளாதார பிரச்சினை தீர வேண்டுமெனில், அரசியல் உறுதிப்பாடும் அவசியம். எனவே, இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p>
<p>எனினும், உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. எதிர்வரும் வியாழன் அன்று, மொட்டு கட்சி எம்.பிக்கள், நிதி அமைச்சருடன், 21 தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளனர். அதன்பின்னரே கட்சியின் உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/21st-amendment-act-conflict-within-the-ruling-party/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பேசுபொருள் ஆகும் &#8216;அரசியலமைப்பு பேரவை’</title>
		<link>https://tamilnaadi.com/articles/the-talk-is-constituent-assembly/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/the-talk-is-constituent-assembly/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 30 May 2022 04:19:39 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[21st Amendment]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Maithiripala Srisena]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=51826</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை, இறுதிப்படுத்துவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், அதில் ஓர் அங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ள ‘அரசியலமைப்பு பேரவை’யும் பேசுபொருளாக மாறியுள்ளது. எனவே, அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன, அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார், அப்பேரவை ஊடாக முன்னெடுக்கப்படும் பணிகள் எவை, 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் அது எந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர். அது பற்றிய ஓர் சுருக்கமான விளக்கம். அரச சேவையில், அரசியல் தலையீடுகளை தவிர்த்து, சுயாதீனத்தன்மையை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை, இறுதிப்படுத்துவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், அதில் ஓர் அங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ள ‘அரசியலமைப்பு பேரவை’யும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p>
<p>எனவே, அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன, அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார், அப்பேரவை ஊடாக முன்னெடுக்கப்படும் பணிகள் எவை, 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் அது எந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர். அது பற்றிய ஓர் சுருக்கமான விளக்கம்.</p>
<p>அரச சேவையில், அரசியல் தலையீடுகளை தவிர்த்து, சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பிரதான நோக்கிலேயே அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கியிருந்தாலும், 18 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அந்த ஜனநாயக ஏற்பாட்டுக்கு மஹிந்த ராஜபக்சவால் சமாதி கட்டப்பட்டது.</p>
<p>2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கும்,<br />
நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் அரசியலமைப்பு பேரவையும் மீள ஸ்தாபிக்கப்பட்டது.</p>
<p>அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இதன் தலைவராக சபாநாயகர் செயற்படுவார். (19 அமுலானபோது சபாநாயகராக கருஜயசூரிய பதவி வகித்தார். அவர் தலைவராக செயற்பட்டார்)<br />
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையை பெற்றிருப்பர்.<br />
அதாவது மேற்படி பதவிகளை வகிப்பவர்கள் பதவிநிலை அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள்.</p>
<p>ஜனாதிபதியின் பிரதிநிதியொருவர் இடம்பிடித்திருப்பார், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மேலும் இருவரின் பெயரை முன்மொழியலாம். அதற்கு மேலதிகமாக மூன்று சிவில் பிரதிநிதிகளுக்கு (கட்சிசாராத) இடமளிக்கப்பட வேண்டும்.<br />
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சாராத கட்சி உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும். ( 19 அமுலில் இருந்தபோது ஜே.வி.பியின் சார்பில் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார்)</p>
<p><img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> தேசிய தேர்தல் ஆணைக்குழு<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> அரச சேவை ஆணைக்குழு<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> தேசிய பொலிஸ் ஆணைக்குழு<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> மனித உரிமைகள் ஆணைக்குழு<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> இலஞ்சம் , ஊழல் ஆணைக்குழு<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> நிதி ஆணைக்குழு<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> எல்லை நிர்ணய ஆணைக்குழு<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> கணக்காய்வு ஆணைக்குழு<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> தேசிய பெறுகை ஆணைக்குழு</p>
<p>மேற்படி ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை, அரசியலமைப்பு பேரவையே ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்.</p>
<p><img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />பிரதம நீதியரசர்,<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />உயர்நீதிமன்ற நீதியரசர்கள்,<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதிகள்<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />சட்டமா அதிபர்,<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />பொலிஸ்மா அதிபர்,<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />கணக்காய்வாளர் நாயகம்,<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />ஒம்புட்ஸ்மன்,<br />
<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />நாடாளுமன்ற செயலாளர் நாயகம்</p>
<p>ஆகியவற்றுக்கான நியமனங்கள், அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே ஜனாதிபதி நியமிக்க வேண்டும். ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் முடிவெடுப்பதை, இந்த ஏற்பாடு தடுத்தது.</p>
<p>20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அரசியலமைப்பு பேரவை இல்லாதொழிக்கப்பட்டது. அதற்கு பதிலாக நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டது.<br />
பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஐவர் அதில் அங்கம் வகித்தனர்.<br />
அரசியலமைப்பு பேரவைபோல் இதற்கு அதிகாரம் இருக்கவில்லை. ஜனாதிபதியின் நியமனம் குறித்து பரிந்துரை முன்வைக்கலாம், அதனை சவாலுக்குட்படுத்த முடியாது. ஒரு வாரத்துக்குள் பரிந்துரை முன்வைக்காவிடின், ஜனாதிபதியால் தன்னிச்சையான முறையில் நியமனம் வழங்கலாம்.<br />
கணக்காய்வு ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு தவிர ஏனைய ஆணைக்குழுக்கள் பாதுகாக்கப்பட்டன. எனினும், நியமனம் ஜனாதிபதி வசம் இருந்தது.</p>
<p>உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் 19 இல், அரசியலமைப்பு பேரவைக்கு இருந்த அதிகாரங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய வங்கி ஆளுநர் நியமனத்தையும் அரசியலமைப்பு பேரவை கையாள வேண்டும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது. நிதிச்சபை உறுப்பினர்களின் நியமனத்தையும் இப்பேரவை கையாள்வது பற்றி தற்போது பரீசிலிக்கப்பட்டுவருகின்றது.</p>
<p>(21ஆவது திருத்தச்சட்டமூலம் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுவருகின்றன. ஏனைய விடயங்களில் மாற்றங்கள் வந்தாலும், அரசியலமைப்பு பேரவையில் பாரிய மாற்றங்கள் வராது அதாவது 19 இல் இருந்த நிலை மாறாது என்றே நம்பப்படுகின்றது.)</p>
<p>ஆர்.சனத்</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/the-talk-is-constituent-assembly/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>21வது சட்டமூலம்! &#8211; மொட்டுக்குள் மோதல் ஆரம்பம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/21st-bill-the-beginning-of-the-conflict-within-the-bud/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/21st-bill-the-beginning-of-the-conflict-within-the-bud/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 28 May 2022 07:56:42 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[21st Amendment]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Peramuna]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=51731</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமருக்கு பகிர்வது தொடர்பிலேயே இவ்வாறு முரண்பாடு உருவாகியுள்ளது. குறிப்பாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி. பதவியை இழக்கும், ஏற்பாட்டை &#8211; ஸ்ரீலங்கா பஸிலின் சகாக்கள் எதிர்க்கின்றனர். ஜனாதிபதி அமைச்சு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.</p>
<p>கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.</p>
<p>இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமருக்கு பகிர்வது தொடர்பிலேயே இவ்வாறு முரண்பாடு உருவாகியுள்ளது.</p>
<p>குறிப்பாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி. பதவியை இழக்கும், ஏற்பாட்டை &#8211; ஸ்ரீலங்கா பஸிலின் சகாக்கள் எதிர்க்கின்றனர்.</p>
<p>ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்க முடியாது என்ற ஏற்பாட்டை ஜனாதிபதிக்கு சார்பான மொட்டு கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கின்றனர். இதனால் வாக்கெடுப்பின்போது பிளவு வெளிப்படையாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மொட்டு கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். 21 ஐ இறுதிப்படுத்தும் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/21st-bill-the-beginning-of-the-conflict-within-the-bud/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
