<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹேமந்த ஹேரத் &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%b9%e0%af%87%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b9%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 16:11:24 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>ஹேமந்த ஹேரத் &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தடுப்பூசி நிலையங்கள் தொடர்ந்து இயங்காது!!!! &#8211; அமைச்சு அறிவுறுத்து</title>
		<link>https://tamilnaadi.com/news/local/vaccination-centers-will-not-continue-to-operate/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/vaccination-centers-will-not-continue-to-operate/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 06:16:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Dr. Hemantha Herath]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Limitation]]></category>
		<category><![CDATA[ministry of health]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Vaccine]]></category>
		<category><![CDATA[கொவிட் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணியாளர்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11175</guid>

					<description><![CDATA[எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சுகாதார சேவைகள் பணியாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்துக்குள் தடுப்பூசியை பெற வேண்டும். அதனால் அருகில் உள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் சென்று தடுப்பூசிகளை பெறுமாறு நட்டு மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த வயதுடையவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு தொடர்ந்து தடுப்பூசி நிலையங்களை இயங்கவைக்க முடியாது. அதன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சுகாதார சேவைகள் பணியாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>அதன்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்துக்குள் தடுப்பூசியை பெற வேண்டும். அதனால் அருகில் உள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் சென்று தடுப்பூசிகளை பெறுமாறு நட்டு மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.</p>
<p>நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>குறித்த வயதுடையவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு தொடர்ந்து தடுப்பூசி நிலையங்களை இயங்கவைக்க முடியாது. அதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டு காலக்கெடு வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.</p>
<p>தற்போது நாட்டில் தடுப்பூசி ஏற்றத் தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் வீடுகளுக்கு அருகில் சென்று தடுப்பூசி போடுவதற்கு பதிலாக ஒரு சில முக்கிய மையங்களில் மட்டுமே தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.</p>
<p>எனவே கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால் தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகளை விரைவில் பெறுமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/vaccination-centers-will-not-continue-to-operate/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மதுபானசாலை திறப்பு! &#8211; சுகாதார அமைச்சு அறிவித்தல் வழங்கவில்லை</title>
		<link>https://tamilnaadi.com/news/bars-open/</link>
					<comments>https://tamilnaadi.com/news/bars-open/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 21:50:24 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Bars]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hemantha herath]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[ministry of health]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[srillanka]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு சட்டம்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[தனிமைப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[திறப்பு]]></category>
		<category><![CDATA[மதுபானசாலைகள்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10335</guid>

					<description><![CDATA[ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை. இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுபான சாலைகள் திறக்கப்பட்டமை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு பொருத்தமான செயற்பாடல்ல. சுகாதார அமைச்சால் இது குறித்து எந்தவித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை.</p>
<p>இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலையில் மதுபான சாலைகள் திறக்கப்பட்டமை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு பொருத்தமான செயற்பாடல்ல. சுகாதார அமைச்சால் இது குறித்து எந்தவித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.</p>
<p>மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புக்களே அதிகமுள்ளன.</p>
<p>ஆகவே உரிய அதிகாரிகள் இது குறித்து அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீண்டுமொரு முறை நாட்டை கொரோனா பரவலுக்கு உள்ளாக்க வாய்ப்பளிக்கக்கூடாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/bars-open/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/widely-identified-black-fungus/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/widely-identified-black-fungus/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Sep 2021 19:51:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Black fungus]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hemantha herath]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[கரும் பூஞ்சை]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9424</guid>

					<description><![CDATA[கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்! நாட்டில் பரவலாக, கரும் பூஞ்சை நோய் தாக்கிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் கொழும்பு தேசிய மருத்துவமனை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் கறுப்பு பூஞ்சை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் நாட்டில் கறுப்பு பூஞ்சை நோயுடன் சிலர் அடையாளம் காணப்பட்டிருப்பினும் இந்த நோய் கொரோனா நோயாளர்கள் மத்தியில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்!</h4>
<p>நாட்டில் பரவலாக, கரும் பூஞ்சை நோய் தாக்கிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போது நாட்டில் கொழும்பு தேசிய மருத்துவமனை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் கறுப்பு பூஞ்சை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p>
<p>இதற்கு முன்னரும் நாட்டில் கறுப்பு பூஞ்சை நோயுடன் சிலர் அடையாளம் காணப்பட்டிருப்பினும் இந்த நோய் கொரோனா நோயாளர்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.</p>
<p>ஆனால் தற்போது கொரோனா நோயாளர்கள் சிலரும் கறுப்பு பூஞ்சை நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p>உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்போது இந்த நோய் அவர்களைத் தாக்குகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தொற்று அல்லாத நோய் உள்ளவர்களுக்கும் இது உருவாக வாய்ப்பு உள்ளது .</p>
<p>முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படின் உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். மருத்துவ ஆலோசனை இன்றி மருந்து பொருள்களை பெற்றுக்கொள்ளக்கூடாது.</p>
<p>எவ்வாறிருப்பினும் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இல்லை &#8211; என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/widely-identified-black-fungus/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/fall-in-deaths-sri-lanka-at-risk/</link>
					<comments>https://tamilnaadi.com/news/fall-in-deaths-sri-lanka-at-risk/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Sep 2021 21:50:29 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hemanda herath]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[warning\]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தொற்றாளர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8167</guid>

					<description><![CDATA[மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை! கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதும் நாட்டில் நாளாந்தம் 2000 &#8211; 3000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, நூற்றுக்கும் அதிகமான மரணங்களும் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கிறது. இந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை!</h4>
<p>கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போதும் நாட்டில் நாளாந்தம் 2000 &#8211; 3000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, நூற்றுக்கும் அதிகமான மரணங்களும் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கிறது.</p>
<p>இந்த அறிகுறி நாடு இன்னும் அபாய நிலைமையில் காணப்படுவதை தெளிவாகக் காட்டுகிறது.</p>
<p>எனவே கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது.</p>
<p>எதிர்வரும் சில நாகளுக்கும் இதேபோன்று நூற்றுக்கும் அதிக மரணங்கள் பதிவாகும் நிலைமையே காணப்படும்.</p>
<p>ஆகவே ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு திறக்கப்பட்டால் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து விலகக்கூடாது என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/fall-in-deaths-sri-lanka-at-risk/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஊரடங்கை நீக்க திட்டங்கள் வேண்டும்! &#8211; சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/need-curfew-removal-plans/</link>
					<comments>https://tamilnaadi.com/news/need-curfew-removal-plans/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Sep 2021 19:56:05 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[curfew]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hemantha herath]]></category>
		<category><![CDATA[lock down]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாளர்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7651</guid>

					<description><![CDATA[நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் அதற்கான சரியான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டை திறக்கும்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கு சென்றால் கொரோனாத் தொற்று முடிவடையாது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார். தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் தற்போதே பொருளாதார நடவடிக்கைகளை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் அதற்கான சரியான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p>
<p>நாட்டை திறக்கும்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கு சென்றால் கொரோனாத் தொற்று முடிவடையாது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் தற்போதே பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரிவினரால் திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இவ்வாறு திட்டம் வகுக்கப்பட்டால் மட்டும் நாட்டை திறக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்க முடியுமென்றும் அவ்வாறு திட்டங்கள் வகுக்கப்படாவிட்டால் நாட்டை திறப்பதில் சிக்கல் ஏற்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/need-curfew-removal-plans/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://tamilnaadi.com/news/disabling-the-country-will-not-control-the-epidemic/</link>
					<comments>https://tamilnaadi.com/news/disabling-the-country-will-not-control-the-epidemic/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Sep 2021 14:07:33 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hemanda herath]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=5873</guid>

					<description><![CDATA[நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! &#8211; சுகாதார அமைச்சு நாட்டை முடக்குவதனால் மட்டும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது, இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டை முடக்குவதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் முடக்கம் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! &#8211; சுகாதார அமைச்சு</h4>
<p>நாட்டை முடக்குவதனால் மட்டும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது, இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என <a href="http://www.health.gov.lk/moh_final/tamil/" target="_blank" rel="noopener">சுகாதார அமைச்சு</a> குறிப்பிட்டுள்ளது.</p>
<p>தற்போது அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டை முடக்குவதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் முடக்கம் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வழியில் மாத்திரமே உதவும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.</p>
<p>சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றாவிடில் நாட்டை முடக்குவது அர்த்தமற்றதாகிவிடும் என்று குறிப்பிட்ட அவர், வீதிகளில் தற்போது பயணிக்கும் வாகனங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/disabling-the-country-will-not-control-the-epidemic/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஒட்சிசனை இறக்குமதி செய்யும் இலங்கை அரசு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Aug 2021 12:11:57 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஒட்சிசன்]]></category>
		<category><![CDATA[பிரதிப் பணிப்பாளர் நாயகம்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=2163</guid>

					<description><![CDATA[ஒட்சிசனை இறக்குமதி செய்யும் இலங்கை அரசு!! கொரோனாத் தொற்றாளர்களுக்குத் தேவையான மருத்துவ ஒட்சிசன் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் தயாரிக்கப்படும் ஒட்சிசன் வசதிகள், கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் ஒட்சிசன் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒட்சிசனை இறக்குமதி செய்வதில் வரம்புகள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஒட்சிசனை இறக்குமதி செய்யும் இலங்கை அரசு!!</h4>
<p>கொரோனாத் தொற்றாளர்களுக்குத் தேவையான மருத்துவ ஒட்சிசன் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டில் தயாரிக்கப்படும் ஒட்சிசன் வசதிகள், கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் ஒட்சிசன் இறக்குமதி செய்யப்படுகிறது.</p>
<p>ஒட்சிசனை இறக்குமதி செய்வதில் வரம்புகள் இருக்கும், வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் திடீரென இறக்குமதியை நிறுத்தலாம். இதனால், ஒட்சிசனை தயாரிக்கும் இயந்திரங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாற்று வழிகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஒட்சிசன் சிலிண்டர்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Aug 2021 09:06:39 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[ஒட்சிசன்]]></category>
		<category><![CDATA[பிரதி சுகாதாரப் பணிப்பாளர்]]></category>
		<category><![CDATA[வெளிநாடு]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=1995</guid>

					<description><![CDATA[ஒட்சிசன் சிலிண்டர்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி! நாட்டில் டெல்டா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒட்சிசன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்ட்டுள்ளது என்று பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போது தேவையான அளவு ஒட்சிசன் சுகாதாரத்தரப்பிடம்  கையிருப்பில் உள்ளது.எனினும் நாட்டில் டெல்டா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படலாம். இதனாலேயே வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதிசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதுள்ள [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஒட்சிசன் சிலிண்டர்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி!</h4>
<p>நாட்டில் டெல்டா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒட்சிசன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்ட்டுள்ளது என்று பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போது தேவையான அளவு ஒட்சிசன் சுகாதாரத்தரப்பிடம்  கையிருப்பில் உள்ளது.எனினும் நாட்டில் டெல்டா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படலாம். இதனாலேயே வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதிசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாட்டில் தற்போதுள்ள நிலைமை மோசமடைந்தால் சுகாதாரத் தரப்பினர் இறுக்கமான கோரிக்கைகளை முன்வைப்பர். இதனால் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர் இத்தகைய சூழ்நிலையில் சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாடு எந்நேரமும்  முடக்கப்படலாம் &#8211; பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Aug 2021 00:25:00 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://news.jeyit.solutions/?p=1888</guid>

					<description><![CDATA[நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் &#8211; பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு நாட்டின் நிலைமைகளைப் பொறுத்து நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானங்கள் மாறலாம். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சுகாதாரத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. &#8211; இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;நாட்டின் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் தீவிர கவனம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் &#8211; பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு</h4>
<p>நாட்டின் நிலைமைகளைப் பொறுத்து நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானங்கள் மாறலாம். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சுகாதாரத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. &#8211; இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.</p>
<p>இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,<br />
&#8220;நாட்டின் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம். கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியில் தொடர்ச்சியாக இந்தக் காரணிகளைச் சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.<br />
ஆனால்,கொரோனா செயலணிக் கூட்டத்தில் நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.<br />
இதற்கு முன்னரும் நாளாந்தம் மூவாயிரத்துக்கும் அதிகமான கொரோனாத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனையடுத்து நாட்டை முடக்குவது குறித்து ஆரம்பத்தில் தீர்மானிக்காதபோதும் இறுதிநேரத்தில் நாட்டை உடனடியாக முடக்கத் தீர்மானிக்கப்பட்டது. தற்போதும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நிலைமையைக் கருத்திற்கொண்டு தீர்மானங்கள் மாற்றப்படலாம். எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்&#8221; &#8211; என்றார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
