<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வர்த்தகர்கள் &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 02:10:23 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>வர்த்தகர்கள் &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு! &#8211; மன்னாரில் சம்பவம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/case-registered-against-traders/</link>
					<comments>https://tamilnaadi.com/news/case-registered-against-traders/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 05:12:09 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[local]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[shops]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[ஏ.எம். அர்மிஸ்]]></category>
		<category><![CDATA[களஞ்சியசாலை]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[சாந்திபுரம்]]></category>
		<category><![CDATA[சீல்]]></category>
		<category><![CDATA[தலைமன்னார்]]></category>
		<category><![CDATA[தாராபுரம்]]></category>
		<category><![CDATA[பெரியகமம்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[வர்த்தகர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11169</guid>

					<description><![CDATA[மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக விலைக்கு விற்றமை மற்றும் காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் நகரப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்றையதினம் சாந்திபுரம், தாராபுரம் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.</p>
<p>மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக விலைக்கு விற்றமை மற்றும் காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>மன்னார் நகரப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்றையதினம் சாந்திபுரம், தாராபுரம் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>இதேவேளை, மன்னார் &#8211; தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் அனுமதி பத்திரமின்றி சிமெந்து மூடைகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/case-registered-against-traders/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வர்த்தகர்கள் மீது சட்டம் பாயும்!!- ரமேஷ் பத்திரண</title>
		<link>https://tamilnaadi.com/news/law-will-be-imposed-on-traders-ramesh-pathirana/</link>
					<comments>https://tamilnaadi.com/news/law-will-be-imposed-on-traders-ramesh-pathirana/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 22:43:08 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[Ramesh Pathirana]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[sugar]]></category>
		<category><![CDATA[traders]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை முடிவு]]></category>
		<category><![CDATA[ரமேஷ் பத்திரண]]></category>
		<category><![CDATA[வர்த்தகர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=5650</guid>

					<description><![CDATA[வர்த்தகர்கள் மீது சட்டம் பாயும்!!- ரமேஷ் பத்திரண நாட்டுக்கு சீனியை இறக்குமதி செய்யும் சில வர்த்தகர்கள் மிகவும் மோசமான வகையில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு செயற்படும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண எச்சரித்துள்ளார். மேலும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே ரமேஷ் பத்திரண இவ்வாறு தெரிவித்தார். சீனி பிரச்சினை தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வர்த்தகர்கள் மீது சட்டம் பாயும்!!- ரமேஷ் பத்திரண</h4>
<p>நாட்டுக்கு சீனியை இறக்குமதி செய்யும் சில வர்த்தகர்கள் மிகவும் மோசமான வகையில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>அவ்வாறு செயற்படும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண எச்சரித்துள்ளார்.</p>
<p>மேலும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9" target="_blank" rel="noopener">ரமேஷ் பத்திரண</a> இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>சீனி பிரச்சினை தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இன்னும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அடுத்த வாரம் இது தொடர்பான தீர்க்கமான தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/law-will-be-imposed-on-traders-ramesh-pathirana/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு?- கேள்வியெழுப்புகிறது ஐ.ம.ச!!</title>
		<link>https://tamilnaadi.com/news/why-the-government-and-the-cabinet-unp-questions/</link>
					<comments>https://tamilnaadi.com/news/why-the-government-and-the-cabinet-unp-questions/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 14:39:34 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Essentials]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[parliment]]></category>
		<category><![CDATA[Rohini Kumari Wijeratne]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[United People's Power]]></category>
		<category><![CDATA[அத்தியாவசிய பொருள்கள்]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[அமைச்சு]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் அதிகார சபை]]></category>
		<category><![CDATA[ரோஹிணி குமாரி விஜேரத்ன]]></category>
		<category><![CDATA[வர்த்தகர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=5551</guid>

					<description><![CDATA[வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? என என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், அத்தியாவசிய பொருள்களின் விலை சடுதியாக அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தூங்கிக் கொண்டிருக்கிறது.அத்துடன், நாட்டில் இதே நிலைமை தொடருமாயின் கொவிட் தொற்றால் மாத்திரமின்றி மக்கள் பட்டினியால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? என என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்.</p>
<p>கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>மேலும், அத்தியாவசிய பொருள்களின் விலை சடுதியாக அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தூங்கிக் கொண்டிருக்கிறது.அத்துடன், நாட்டில் இதே நிலைமை தொடருமாயின் கொவிட் தொற்றால் மாத்திரமின்றி மக்கள் பட்டினியால் சாகும் நிலைமையும் ஏற்படும்.</p>
<p>தற்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விலைகளில் சீனி விற்பனை செய்யப்படுவது எவ்வாறு?<br />
வரிகுறைப்பின்போது இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலை எதற்காக சரமாரியாக அதிகரிக்கப்படுகிறது? வரி சலுகையின் மூலம் நுகர்வோருக்கு நன்மை கிடைத்ததா? நாட்டில் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றபோது நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நித்திரையிலுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/why-the-government-and-the-cabinet-unp-questions/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Aug 2021 20:26:06 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[தண்டம்]]></category>
		<category><![CDATA[நிர்ணய விலை]]></category>
		<category><![CDATA[பந்துல குணவர்தன]]></category>
		<category><![CDATA[வர்த்தகத்துறை அமைச்சர்]]></category>
		<category><![CDATA[வர்த்தகர்கள்]]></category>
		<category><![CDATA[விலை நிர்ணயம்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=2183</guid>

					<description><![CDATA[நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்! அத்தியாவசியப் பொருள்களின் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனைசெய்யும் வர்த்தகர்களுக்கு  ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விற்பனை விலை தொடர்பில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனை செய்ய முடியாது. அவ்வாறு விற்பனை செய்யும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!</h4>
<p>அத்தியாவசியப் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88#:~:text=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D,%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D." target="_blank" rel="noopener">பொருள்களின்</a> நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனைசெய்யும் வர்த்தகர்களுக்கு  ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.<br />
வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விற்பனை விலை தொடர்பில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனை செய்ய முடியாது.</p>
<p>அவ்வாறு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான தண்டம் 2 ஆயிரத்து 500 ரூபா என்று நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் <a href="https://tamilnaadi.com/news/local/2023/05/11/amendment-to-the-land-ordinance-act-presidential-address/">சட்டத்தில்</a> குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டப்பணம் குறைவாக உள்ள காரணத்தால் குற்றங்கள் அதிகவிலும், சாதாரணமாகவும் இடம் பெறுகின்றன.</p>
<p>எனவே தண்டப்பணத்தை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
