<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>லொஹான் ரத்வத்த &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%b2%e0%af%8a%e0%ae%b9%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:33:44 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>லொஹான் ரத்வத்த &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>லொஹான் விவகாரம்! &#8211; நீதிபதி நியமனம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-lohan-affair-appointment-of-judge/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-lohan-affair-appointment-of-judge/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 17:39:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ali Sabri]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Dalus azhakaperuma]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அநுராதபுரம் சிறை]]></category>
		<category><![CDATA[அலி சப்ரி]]></category>
		<category><![CDATA[சி.ஐ.டி]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப் பெரும]]></category>
		<category><![CDATA[நீதிபதி நியமனம்]]></category>
		<category><![CDATA[மனித உரிமை ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11289</guid>

					<description><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதி சென்ற லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பவுள்ளன. இவ்வாறு வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நீதியமைச்சர் அலி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதி சென்ற லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பவுள்ளன.</p>
<p>இவ்வாறு வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நீதியமைச்சர் அலி சப்ரி,</p>
<p>அநுராபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றது எனக் கூறப்படும் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்படத்தக்கவை. அவை நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும்.</p>
<p>மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க உயிர்நீதிமன்றில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.</p>
<p>இவை தொடர்பில் சி.ஐ.டியினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகாரசபை ஆகியவை விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.</p>
<p>சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது &#8211; என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-lohan-affair-appointment-of-judge/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை! &#8211; சபையில்  கஜேந்திரன்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sexual-torture-of-tamil-prisoners/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sexual-torture-of-tamil-prisoners/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 12:38:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Lohan Ratwatte]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Selvarasa Gajendran]]></category>
		<category><![CDATA[Sexual torture]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[செல்வராசா கஜேந்திரன்]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கைதிகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டம்]]></category>
		<category><![CDATA[பாலியல் சித்திரவதை]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11207</guid>

					<description><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.. 2009 ஆம் ஆண்டளவில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர். தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புக்கள் மிகக் கேவலமான முறையில் சோதனை செய்யப்படுகின்றன எனவும் இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.</p>
<p>இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்..</p>
<p>2009 ஆம் ஆண்டளவில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.</p>
<p>தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புக்கள் மிகக் கேவலமான முறையில் சோதனை செய்யப்படுகின்றன எனவும் இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>அண்மையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலை சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>ஆனால் இதுவரை லொஹான் ரத்வத்த புரிந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவரின் மற்றைய அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படவில்லை.அவரிடமிருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு நாடாளுமன்றிலிருந்து அவரை வெளியேற்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.</p>
<p>பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 12 தமிழ் இளைஞர்கள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி அந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த இளைஞர்களை 29ஆம் திகதி நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளனர்.</p>
<p>540 நாள்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை பல்வேறுவிதமான கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sexual-torture-of-tamil-prisoners/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? &#8211; சிறீதரன் சபையில் சீற்றம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/is-it-fair-for-the-killers-to-investigate-the-murder/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/is-it-fair-for-the-killers-to-investigate-the-murder/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 07:31:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[justice]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[missing people]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[parliment]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[Sreedharan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[இழப்பீடு தொகை]]></category>
		<category><![CDATA[ஐ நா மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோர்]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[சிறீதரன்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கைதி]]></category>
		<category><![CDATA[நீதி]]></category>
		<category><![CDATA[மரண சான்றிதழ்]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11281</guid>

					<description><![CDATA[கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? &#8211; சிறீதரன் சபையில் சீற்றம் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை தொடர்பில் விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம்? இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கி இழப்பீட்டை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா மனித [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? &#8211; சிறீதரன் சபையில் சீற்றம்</h4>
<p><a href="https://www.mfa.gov.lk/wp-content/uploads/2018/09/OMP-Report-and-Recommendation-Tamil-Version.pdf" target="_blank" rel="noopener">இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர்</a> தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை தொடர்பில் விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம்?</p>
<p>இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.</p>
<p>காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கி இழப்பீட்டை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலாளரிடம் கூறியுள்ளார்.</p>
<p>இறுதிப்போரின் போது ஓமந்தையில் வைத்து தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதா?</p>
<p>அவ்வாறெனின் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனரா? ஒப்படைக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் என உறுதியளித்தவர்கள் தற்போது இழப்பீட்டு தொகையை பரிந்துரை செய்கின்றனர்.</p>
<p>ஒப்படைக்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என அவர்களது உறவுகள் காத்திருக்கிறார்கள்.</p>
<p>உள்ளகப் பிரச்சினை தொடர்பில் ஆராய உள்ளக விசாரணைக்கு தமிழர்கள் தயாராக வேண்டும் எனவும் அரசு கூறுகிறது. கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா?</p>
<p>உள்ளக விசாரணையை நாம் ஏற்கமாட்டோம். நாங்கள் சுயாதீனமான தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய நேர்த்தியான சர்வதேச விசாரணையையே கேட்கிறோம்.</p>
<p>கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலை சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட வைத்து அவர்களை சுட்டுக் கொள்வேன் என தனது சப்பாத்துக்களை நக்க சொல்லியுள்ளார். அத்துடன் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.</p>
<p>சாதாரண ஒருவரிடத்தில், துப்பாக்கி அல்லது வெடிபொருள்கள் இருந்து கைப்பற்றப்பட்டால் அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பார்கள். ஆனால், லொஹானின் விவகாரத்தில் அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை.</p>
<p>அவரிடமிருக்கும் சகல அதிகாரங்களை பறித்து, அவரை கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால் அவ்வாறு நீதி வழங்கப்படவில்லை. இந்த கொலை அச்சுறுத்தல் சம்பவமானது தற்போதைய அரசின் ஏதேச்சதிகாரத்தையே எடுத்துக்காட்டுகிறது.</p>
<p>இலங்கை வரலாற்றில் சிறைகளில் சிறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் அனுசரணையில் ஏராளமான படுகொலைகள் இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொடூரமான சித்திரவதைகளும் இடம்பெறுகின்றன.</p>
<p>எனவே உள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. இது தொடர்பில் ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனங்களும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் &#8211; என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/is-it-fair-for-the-killers-to-investigate-the-murder/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி மறுப்பு???</title>
		<link>https://tamilnaadi.com/news/local/denial-of-permission-to-go-to-jail/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/denial-of-permission-to-go-to-jail/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 21:04:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Kavinda Jayawardena]]></category>
		<category><![CDATA[lohan]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[mano ganeshan]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[Rohana Bandara]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம் சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கைதிகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிமுனை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்]]></category>
		<category><![CDATA[மனோகணேசன்]]></category>
		<category><![CDATA[மிரட்டல்]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10221</guid>

					<description><![CDATA[அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறைச்சாலை சென்று கைதிகளை பார்வையிட்ட மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில், அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.</p>
<p>இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பில் சிறைச்சாலை சென்று கைதிகளை பார்வையிட்ட மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,</p>
<p>அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர், லோஹான் ரத்வத்த தன் முன்னால் துப்பாக்கி நீட்டி மிரட்டினார் என தெரிவித்துள்ளார். சற்று பிசகினாலும் அது வெடித்திருக்கும். அது வெடித்திருந்தால் நாங்கள் அனைவரும் புலிச் சந்தேகநபர்கள் என்பதால் அவரை கொலை செய்ய முயன்றோம் என தெரிவித்திருப்பார்கள்.</p>
<p>பதிலுக்கு அவர் சுட்டதால் கலவரம் ஏற்பட்டது என கதை கட்டி திரிபுபடுத்தி கூறியிருப்பார்கள் என கைதிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்,</p>
<p>இராஜாங்க அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்கு சென்று சிறைக் கைதிகளை அச்சுறுத்தியுள்ளமைஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது &#8211; என்றார்.</p>
<p>கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி மண்டியிட வைத்த சம்பவம் நாட்டில் அனைத்து தரப்பினர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த நிலையில் குறித்த கைதிகளை பார்வையிடுவதற்காக மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/denial-of-permission-to-go-to-jail/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! &#8211; சிங்கள ராவய</title>
		<link>https://tamilnaadi.com/news/justice-must-be-upheld/</link>
					<comments>https://tamilnaadi.com/news/justice-must-be-upheld/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 12:26:00 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அக்மீமன தயாரத்தன தேரர்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[கைதி கைத்துப்பாக்கி]]></category>
		<category><![CDATA[சிங்கள ராவய அமைப்பு]]></category>
		<category><![CDATA[சிறைச்சலை]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10112</guid>

					<description><![CDATA[நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! &#8211; சிங்கள ராவய கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் மேற்படி தெரிவித்துள்ளார் மேலும், இராஜாங்க அமைச்சர்ரொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள கைதிகளை துப்பாக்கிமுனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரும் குற்றச்செயல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! &#8211; சிங்கள ராவய</h4>
<p>கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.</p>
<p>கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் மேற்படி தெரிவித்துள்ளார்</p>
<p>மேலும், இராஜாங்க அமைச்சர்ரொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள கைதிகளை துப்பாக்கிமுனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரும் குற்றச்செயல் ஆகும்.</p>
<p>குற்றம் செய்தவர் பதவி விலகினால் மட்டும் போதாது. அவர் மிகப்பெரும் குற்றம் புரிந்துள்ளார். குறித்த இராஜாங்க அமைச்சர் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுத்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.</p>
<p>இது போன்ற செயற்பாடுகளில் அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருமாயின் எதிர்காலத்தில் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டி ஏற்படும். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியே அரசு அழிய வேண்டி ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/justice-must-be-upheld/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>லொஹான் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரி! – வீரவன்ச புகழாரம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/lohan-is-the-best-role-model-for-the-country/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/lohan-is-the-best-role-model-for-the-country/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 08:53:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Lohan Ratwatte]]></category>
		<category><![CDATA[Political prisoner]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[Wimal Weerawansa]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<category><![CDATA[விமல் வீரவன்ச]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10096</guid>

					<description><![CDATA[லொஹான் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரி! – வீரவன்ச புகழாரம் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தன் மேல் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ள சம்பவமானது நாட்டுக்கு முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளைஅச்சுறுத்தியதுடன் துப்பாக்கி முனையில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுக்காது, தனது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>லொஹான் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரி! – வீரவன்ச புகழாரம்</h4>
<p>இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தன் மேல் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ள சம்பவமானது நாட்டுக்கு முன்னுதாரணமான செயற்பாடாகும்,</p>
<p>இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளைஅச்சுறுத்தியதுடன் துப்பாக்கி முனையில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த குற்றச்சாட்டை மறுக்காது, தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ள லொஹான் ரத்வத்த, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமை அவரது சிறந்த பண்பை எடுத்துக்காட்டுகிறது.</p>
<p>எமது நாட்டில் இதுவரை இவ்வாறு குற்றமிழைத்த எவரும் தாமாக முன்வந்து இவ்வாறான செயற்பாட்டை  இதற்கு முன்னர் மேற்கொள்ளவில்லை, எனவே அவரது இந்த செயற்பாடு பாராட்டத்தக்கது &#8211; என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/lohan-is-the-best-role-model-for-the-country/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>புலிகளை கண்டு அஞ்சியவர் அப்பாவி கைதிகளை மிரட்டுவது வீரமில்லை! &#8211; பொன்சேகா</title>
		<link>https://tamilnaadi.com/news/the-intimidation-of-innocent-prisoners-by-those-who-feared-the-ltte-was-not-heroic/</link>
					<comments>https://tamilnaadi.com/news/the-intimidation-of-innocent-prisoners-by-those-who-feared-the-ltte-was-not-heroic/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 14:02:21 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Lohan Ratwatte]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம் சிறைச்சலை]]></category>
		<category><![CDATA[சரத் பொன்சேகா]]></category>
		<category><![CDATA[தமிழீழ விடுதலை புலிகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கைதிகள்]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9947</guid>

					<description><![CDATA[புலிகளை கண்டு அஞ்சியவர் அப்பாவி கைதிகளை மிரட்டுவது வீரமில்லை! &#8211; பொன்சேகா முன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சிய லொஹான் ரத்வத்த, தற்போது அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டுவது வீரம் கிடையாது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேற்படி தெரிவித்துள்ளார். மேலும், லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள சட்ட நடவடிக்கை தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் தகுதி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>புலிகளை கண்டு அஞ்சியவர் அப்பாவி கைதிகளை மிரட்டுவது வீரமில்லை! &#8211; பொன்சேகா</h4>
<p>முன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சிய லொஹான் ரத்வத்த, தற்போது அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டுவது வீரம் கிடையாது.</p>
<p>இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேற்படி தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள சட்ட நடவடிக்கை தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். போதைப்பொருள் வர்த்தகர்களையும், துப்பாக்கிகளை காட்டி மிரட்டுபவர்களையும் அமைச்சுப் பதவியில் வைத்திருந்தால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.</p>
<p>லொஹான் ரத்வத்தவின் நடவடிக்கைகள் இன்று எல்லோராலும் விமர்சிக்கப்படுகின்றன, போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளை பார்த்து ஓடி ஒளிந்திருப்பார். அவ்வாறு மரண பயத்திலிருந்த நபர்,</p>
<p>ஆனால் தற்போது நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி முன்னாள் போராளிகளை முழந்தாளிட செய்து அவர்களின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார். இது சண்டித்தனமான செயல் அல்ல ,</p>
<p>இவ்வாறான காரியத்தை எந்த தைரியசாலிகளும் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/the-intimidation-of-innocent-prisoners-by-those-who-feared-the-ltte-was-not-heroic/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கைதிகளை அச்சுறுத்த எனக்கு பைத்தியமில்லை -லொஹான் பல்டி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/i-am-not-crazy-to-threaten-prisoners/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/i-am-not-crazy-to-threaten-prisoners/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 06:48:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[govenment]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[lohan]]></category>
		<category><![CDATA[Lohan Ratwatte]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[welikada]]></category>
		<category><![CDATA[அநுராதபுரம் சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கைதி]]></category>
		<category><![CDATA[லொஹான்]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<category><![CDATA[வெலிக்கட சிறை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9874</guid>

					<description><![CDATA[அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டினேன் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுக்கிறேன் என சிறைச்சாலை மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். சிறைகளில் நடைபெறுகின்ற குற்றங்களை நான் தடுப்பதனால் இது போன்ற குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துகின்றனர். எனினும் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நேரில் சென்று எனது விளக்கத்தை அளிக்கவுள்ளேன். அந்த சிறையில் உள்ள கைதிகளை அச்சுறுத்தவில்லை. அங்கு கண்காணிப்பு விஜயத்தையே மேற்கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டினேன் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுக்கிறேன் என சிறைச்சாலை மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.</p>
<p>சிறைகளில் நடைபெறுகின்ற குற்றங்களை நான் தடுப்பதனால் இது போன்ற குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துகின்றனர்.</p>
<p>எனினும் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நேரில் சென்று எனது விளக்கத்தை அளிக்கவுள்ளேன்.</p>
<p>அந்த சிறையில் உள்ள கைதிகளை அச்சுறுத்தவில்லை. அங்கு கண்காணிப்பு விஜயத்தையே மேற்கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்.</p>
<p>அமைச்சர் என்ற அடிப்படையில் என்னால் எவ்வேளையிலும் சிறைகளுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ள முடியும்.  அதற்கு எவருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை. எனது பொறுப்பில் 29 சிறைச்சாலைகளும் இரண்டு மறுவாழ்வு நிலையங்களும் உள்ளன. நான் இரவு பகல் என எந்தச் சந்தர்ப்பத்திலும் அங்கு சென்று நிலைமைகளை கண்காணிக்க முடியும்.</p>
<p>சிறைகளுள் என்ன நடைபெறுகின்றன என்பதை கண்காணிக்க திடீரென விஜயம் செல்வேன்.<br />
அத்துடன் எந்தக் கைதிகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மண்டியிட வைத்து கொலை அச்சுறுத்தல் விடுக்கவில்லை. அவ்வாறு செய்ய எனக்கு பைத்தியமில்லை.</p>
<p>நான் ஒரு பெண்ணுடன் வெலிக்கட சிறைக்கு சென்றேன் எனக் கூறப்படும் கதைகள் போலியானவை. இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெளிவுபடுத்துவேன்’’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/i-am-not-crazy-to-threaten-prisoners/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>லொஹான் விவகாரம்! &#8211; அரசு நடவடிக்கை எடுக்கும்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/lohan-affair-the-government-will-take-action/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/lohan-affair-the-government-will-take-action/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 00:28:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Lohan Ratwatte]]></category>
		<category><![CDATA[Mahinda Amaraweera]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அநுராதபுரம் சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[அரசு]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9738</guid>

					<description><![CDATA[லொஹான் விவகாரம்! &#8211; அரசு நடவடிக்கை எடுக்கும் அநுராதபுரம் சிறைச்சாலை சென்று அரசியல் கைதிகளை கொலைமிரட்டல் விடுத்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுவாழ்வளிப்பு அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கைதிகளை நோக்கி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>லொஹான் விவகாரம்! &#8211; அரசு நடவடிக்கை எடுக்கும்</h4>
<p>அநுராதபுரம் சிறைச்சாலை சென்று அரசியல் கைதிகளை கொலைமிரட்டல் விடுத்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுவாழ்வளிப்பு அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன் கைதிகளை நோக்கி கைத்துப்பாக்கியை காட்டி மண்டியிட முயற்சித்திருப்பாராயின் அவரையும் சிறையில் வைக்க வேண்டும்.</p>
<p>ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் மனித உரிமைகள் குறித்து விவாதித்து வரும் இந்த நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. இதற்குரிய நடவடிக்கையை அரசு விரைவில் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/lohan-affair-the-government-will-take-action/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>லொஹான் விவகாரத்தில் அரசு கண்துடைப்பு நாடகம்!  &#8211; விக்னேஸ்வரன் காட்டம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/government-inventive-play/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/government-inventive-play/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Sep 2021 18:29:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[CV Vigneswaran]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[govenment]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Lohan Ratwatte]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[அநுராதபுரம் சிறை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சி.சி.ரி.வி காணொலி]]></category>
		<category><![CDATA[சி.வி.விக்னேஸ்வரன்]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9759</guid>

					<description><![CDATA[லொஹான் விவகாரத்தில் அரசு கண்துடைப்பு நாடகம்! &#8211; விக்னேஸ்வரன் காட்டம் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுத்த கொலைமிரட்டல் அச்சுறுத்தல் தொடர்பில் அரசின் செயற்பாடானது கண்துடைப்பு நாடகமே.  உண்மையில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை. இதனை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் குற்றங்கள் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப்போவதில்லை. அவர்கள் மிகக் கேவலமான குற்றங்களைப் புரிந்துவிட்டு தமது பதவியை இராஜினாமா செய்து எதுவும் நடக்காதது போல [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>லொஹான் விவகாரத்தில் அரசு கண்துடைப்பு நாடகம்! &#8211; விக்னேஸ்வரன் காட்டம்</h4>
<p>லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுத்த கொலைமிரட்டல் அச்சுறுத்தல் தொடர்பில் அரசின் செயற்பாடானது கண்துடைப்பு நாடகமே.  உண்மையில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை.</p>
<p>இதனை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த நாட்டில் குற்றங்கள் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப்போவதில்லை. அவர்கள் மிகக் கேவலமான குற்றங்களைப் புரிந்துவிட்டு தமது பதவியை இராஜினாமா செய்து எதுவும் நடக்காதது போல சுதந்திரமாக சுற்றி திரிவர்.</p>
<p>ஹெலிகொப்டர் மூலம் கடந்த 12 ஆம் திகதி அநுனநராதபுரம் சிறைக்கு பயணம் செய்து நன்றாக குடித்துவிட்டு சிறைக் கைதிகளை சிறைக் கூண்டுக்கு வெளியே வரச் சொல்லி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் லொஹான் ரத்வத்த. சிறைக் கைதிகளை வெளியே அழைத்து எந்தத் தீங்கும் விளைவிக்கலாம் என்றாகிவிட்டது.</p>
<p>இது தமிழ் மக்களை இழிவுபடுத்தும் செயற்பாடாகும். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் இடையே பிளவு ஏற்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. லொஹான் ரத்வத்த உடன் கைது செய்யப்பட வேண்டும் உடனே சம்பந்தப்பட்ட சி.சி.ரி.வி காணொலி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.</p>
<p>லொஹான் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டாலும் விசாரணைகளின் போது தமிழ் அரசியல் கைதிகள் சாட்சிகளாக உண்மை கூறினாலும் அவர்களின் சாட்சியம் பக்கச் சார்புடையது எனத் தெரிவித்து அவரை விடுதலை செய்யும் வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன என அவரது யறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/government-inventive-play/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
